search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vacancy"

    • என்.எ.எஸ்., பி.ஹெச்.எஸ். ஆகிய அனைத்து பதவிகளுக்குமான காலி ப்பணியிடங்களை பணிமூப்பில் குழப்பம் ஏற்படுத்தியது.
    • பாராபட்சமாக ஒரே நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் இரட்டை நிலைபாடு.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை நலத்துக்கு டியில் உள்ள துணை இயக்குநர் சுகாதாரப்பணிகள் அலுவலகம் முன்பு பொது சுகாதாரத்துறை அலுவலக சங்கத்தினர் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இணை செயலாளர் ஆர். பாஸ்கர் தலைமை தாங்கினார்.

    முன்னாள் மாவட்ட பொருளாளர் இராம்மோகன், மாநில பொதுக் குழு உறுப்பினர் ராஜமாணிக்கம், மாவட்ட பொருளாளர் தவபாஸ்கர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுக்குழு உறுப்பினர் செந்தில் வரவேற்றார்.

    மாநில துணைத் தலைவர் வெங்கடேசன் கண்டன உரையாற்றினார்.

    ஆர்ப்பாட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றம் 7.11.2008 அன்று ஒருங்கிணை க்கப்பட்ட சுகாதார ஆய்வாளர்களாக பணிபுரிந்துவந்த அனைவருக்கும் முன்தேதி யிட்டு பதவி நிலையில் நடைமுறை ப்படுத்தாமல் பதவி உயர்வு க்கான தேர்ந்த பட்டியலை திருத்தி வெளியிடும்போது, தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆண்டும், என்.எ.எஸ்., பி.ஹெச்.எஸ். ஆகிய அனைத்து பதவிகளுக்குமான காலி ப்பணியிடங்களை பின்பற்றாமல் மேலோட்ட மாக திருத்திய தேர்ந்த பட்டியலை வெளியிட்டு பணிமூப்பில் குழப்பம் ஏற்படுத்தியதை கண்டித்தும். எம்.டி.எம். சுகாதார ஆய்வாளர்களது ஊதியத்தை ரூ 20000 என உயர்த்தி வழங்கக் கோரியும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டே அரசு ஆணைப்படி 267 -ன் படி 216 பேர் சுகாதார உதவியாளராக ஆக பணிபுரிந்து 1995-ல் சுகாதார ஆய்வாளர் நிலை 1 ஆக பதவி உயர்வு பெற்ற நபர்களுக்கு கடந்த.2016 முதல் பணியில் இளைய நபருக்கு பதவி உயர்வு வழங்கிய அதே தேதியில் பதவி உயர்வு மற்றும் இதர பலன்களை வழங்கியதைப் போன்று வழங்காமல், பாரபட்சமாக ஒரே நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்துவதில் இரட்டை நிலைபாடு மேற்கொண்டதை கண்டித்தும் பணியில் உள்ள அனைவருக்கும் பணி மூப்பு அடிப்படையில் ஹெச்.இ. பி.ஏ.பணியிடங்களுக்கான கவுன்சிலிங் நடத்த ஜியோ வலியுறுத்தியும் இக்கலந்தாய்வு முடிவடைந்த உடன் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை 1 பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்பிட வலியுறுத்தியும் காலியாக உள்ள சுகாதார ஆய்வாளர் நிலை 2 பணியிடங்களை நிரப்பிட வலியுறுத்தப்பட்டது.முடிவில் மாவட்ட பொருளாளர் குணசேகரன் நன்றி கூறினார்.

    • திருப்பூர் மாவட்டத்தில் 1,135 ரேஷன் கடைகள் உள்ளன.
    • கடைகளில் காலியாக உள்ள, 186 விற்பனையாளர்; 54 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில், கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ரேஷன்கடைகளில் 240 காலி பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்காக இதுவரை ஆறாயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.

    திருப்பூர் மாவட்டத்தில், 1,135 ரேஷன் கடைகள் உள்ளன. இவற்றில், 1,099 கடைகள், கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. இந்த கடைகளில் காலியாக உள்ள, 186 விற்பனையாளர்; 54 உதவியாளர் என, மொத்தம் 240 பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. திருப்பூர் மாவட்டத்தில் இப்பணியிடங்களுக்கு பலரும் மிகுந்த ஆர்வமுடன் விண்ணப்பித்து வருகின்றனர். கூட்டுறவு த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'திருப்பூர் மாவட்டத்தில் காலியாக உள்ள ரேஷன் கடை பணியிடங்களுக்காக, இதுவரை, ஆறாயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். வரும் 14ம் தேதி கடைசிநாள் என்பதால், மேலும் ஏராளமானோர் விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது என்றனர்.

    • திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த பெண் விண்ணப்பதாரராகவும், 45வயதுக்குஉட்பட்டவராகவும் இருக்க வேண்டும்.
    • மாதம் ரூ.30 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூா் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலிப் பணியிடங்களுக்கு தகுதிவாய்ந்த நபா்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இதுகுறித்து திருப்பூா் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாவட்ட சமுக நலத் துறையின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட்டு வரும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மைய நிா்வாகி, மூத்த ஆலோசகா், தகவல் தொழில் நுட்பப் பணியாளா், களப் பணியாளா் மற்றும் பாதுகாவலா், ஓட்டுநா் ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிக தொகுப்பூதியத்தில் பணியாற்ற தகுதிவாய்ந்த நபா்கள் விண்ணப்பிக்கலாம்.

    இதில் மைய நிா்வாகி பணியிடத்துக்கு திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்த பெண் விண்ணப்பதாரராகவும், 45 வயதுக்குஉட்பட்டவராகவும் இருக்க வேண்டும். எம்எஸ்டபிள்யூ அல்லது சட்டப்படிப்பு படித்திருப்பதுடன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளிலிருந்து மீட்பு மற்றும் ஆலோசனை வழங்குதல் தொடா்பான பணியில் குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு மாதம் ரூ.30 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும். அதே போல, மூத்த ஆலோசகா் பணிக்கு மாதம் ரூ.20 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும்.

    தகவல் தொழில்நுட்பப் பணியாளா் பணிக்கு 40 வயதுக்கு மிகாமலும், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவராக இருக்க வேண்டும். சுழற்சி முறையில் 24 மணி நேரம் பணிபுரிய ஆா்வம் உள்ளவராகவும் இருக்க வேண்டும். இந்தப் பணிக்கு பட்டப்படிப்பு முடித்து கணினி அல்லது தகவல் தொழில்நுட்பத் துறையில் டிப்ளமோ முடித்து 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இந்தப் பணிக்கு மாதம் ரூ.18 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.

    களப்பணியாளா் பணிக்கு எம்எஸ்டபிள்யூ படித்தவராகவும், திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்த பெண் விண்ணப்பதாரராகவும், சுழற்சி முறையில் பணிபுரிய ஆா்வம் உள்ளவராகவும், 181 மற்றும் இதர உதவி எண்கள் மூலம் வரும் அழைப்பு தொடா்பான உதவிகளுக்கு தேவை அறிந்து உதவும் எண்ணம் கொண்டவராகவும் இருக்க வேண்டும். பெண்களுக்கு விழிப்புணா்வு மற்றும் ஊக்கப்படுத்தும் வகையில் அரசுத் திட்டங்கள் சென்றடைய செய்ய ஆா்வம் உடையவராக இருக்க வேண்டும். இந்த பணிக்கு மாதம் ரூ.15 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்கப்படும்.

    பாதுகாவலா் மற்றும் ஓட்டுநா் பணிக்கு திருப்பூா் மாவட்டத்தை சோ்ந்தவராகவும் பத்தாம் வகுப்பு தோ்ச்சி மற்றும் தவறியவா்கள் விண்ணப்பிக்கலாம். இந்தப் பணிக்கு குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும். ஆகவே மேற்கண்ட தகுதியுடைய நபா்கள் இதற்கான விண்ணப்ப படிவங்களை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதன் பின்னா் பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட சமூக நல அலுவலா், அறை எண் 35, 36, தரைத்தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூா் என்ற முகவரிக்கு நவம்பா் 10-ந் தேதிக்குள் தபால் மூலமாகவோ மின்னஞ்சல் முகவரிக்கோ அனுப்பிவைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் ஆகிய தொழிற்பிரிவுகளில் காலியிடங்கள் உள்ளன.
    • தகுதியுள்ள பெண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் காலியாக உள்ள இடங்களுக்கு நேரடி சேர்க்கை நடைபெற்று வருகிறது.

    தஞ்சாவூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2022 ஆம் ஆண்டு சேர்க்கைக்கு இரண்டு கட்டங்களாக கலந்தாய்வு முடிந்துள்ளது.

    இதில் மகளிர் பிரிவுகளான இயந்திர மின்னணுவியல் மற்றும் கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர் ஆகிய தொழிற்பிரிவுகளில் காலியிடங்கள் அதிகமாக உள்ளன.

    பொது பிரிவான தொழிற்சாலை வர்ணம் பூசுபவர் தொழிற்பிரிவில் ஒரு சில இடங்கள் காலியாக உள்ளன.

    எனவே இதில் சேர விருப்பம் உள்ள 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நேரடியாக வந்து சேர்ந்து கொள்ளலாம். மாணவர்களுக்கு இலவச பஸ் கட்டண சலுகை, விலையில்லா சைக்கிள், சீருடைகள், காலணி, வரைபடக்கருவி, நோட்டு புத்தகம் போன்றவை வழங்கப்படும்.

    தவிர அனைத்து பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.750 உதவி தொகை, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உதவித்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள பெண் பயிற்சியாளர்களுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும்.

    பயிற்சி முடித்த பயிற்சியாளர்களுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தர உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் விவரங்களுக்கு 7708709988, 9442705428, 9442521649, 9943130145 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ரேசன் கடைகள் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.
    • மண்டல இணைப்பதிவாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் செந்தில்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டில் உள்ள கூட்டுறவுச் சங்கங்க ளால் நடத்தப்படும் நியாயவிலைக்கடைகளில் காலிப்பணியிடங்களாக உள்ள 146 விற்பனையா ளர்கள் மற்றும் 18 கட்டுநர்கள் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து https//www.vnrdrb.net என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் மூலம் மட்டுமே அடுத்த மாதம் (நவம்பர்) 14-ந் தேதி மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

    விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பான விண்ணப்பதார ர்களுக்கான அறிவுரைகள் மற்றும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது எப்படி? போன்ற விவரங்கள் மேற்கண்ட இணையதள முகவரியிலும், https://youtube/G6c5e2ELJD8 என்ற யூடியூப் சேனலிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைமையிடம் மற்றும் அதன் கிளைகளில் விண்ணப்பக் கட்டணங்கள் செலுத்த தேவையான செலான்களை மேற்காண்ட இணைய வழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

    விண்ணப்பிக்கும் முறை குறித்து எழும் சந்தேகங்களுக்கு விண்ணப்பதாரர்கள் www.vnrdrb2022@gmail.com என்ற இ-மெயில் மூலமும், உதவி மைய தொலைபேசி எண்: 04562-290769 வாயிலாகவும் விருதுநகர் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தை அலுவலக வேலை நேரங்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • விண்ணப்பங்களை புகைப்படத்துடன் வருகிற 20-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
    • விண்ணப்பங்களை www.tirupur.nic.in இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலகத்தில் நிறுவனம் சார்ந்த குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், நிறுவனம் சாராத குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், சமூக பணியாளர் (பெண்கள் மட்டும்), ஆற்றுப்படுத்துனர் ஆகிய பணியிடங்கள் காலியாக உள்ளன. இது தற்காலிகமாக ஓராண்டு ஒப்பந்த அடிப்படையிலான பணியாகும். மத்திய, மாநில அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும் திட்டம் என்பதால் இதை அடிப்படையாக கொண்டு அரசு பணி கோர முடியாது. திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    விண்ணப்பங்களை புகைப்படத்துடன் வருகிற 20-ந் தேதி மாலை 5.45 மணிக்குள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்.633, 6-வது தளம், மாவட்ட கலெக்டர் அலுவலகம், திருப்பூர் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0421 2971198 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். விண்ணப்பங்களை www.tirupur.nic.in இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • டூல் அண்டு டை மேக்கர் தொழிற் பிரிவில் ஒரு காலிப்பணியிடம் உள்ளது.
    • வயர்மேன் தொழிற் பிரிவில் ஒரு காலிப்பணியிடம் உள்ளது.

    தாராபுரம் :

    தாராபுரத்தில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் (ஐடிஐ) கைவினைஞர் பயிற்சி திட்டமாக மாற்றப்பட்ட தொழிற் பிரிவுகளில் இரண்டு முழுநேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. டூல் அண்டு டை மேக்கர் தொழிற் பிரிவில் ஒரு காலிப்பணியிடம் (முழுநேர தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர்) உள்ளது. இந்தப்பணியிடமானது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சீர் மரபினர் - முன்னுரிமையற்றவர் என்ற இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது.

    இதற்கு மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பட்டப்படிப்பு, டிப்ளமோ இன் டூல் அன்ட் டை மேக்கர், 3 வருட தொழில் அனுபவம், என்.ஏ.சி. டூல் அன்ட் டை மேக்கர் பணிக்கு 2 வருட தொழில் அனுபவம் கல்வி தகுதி ஆகும்.

    வயர்மேன் தொழிற் பிரிவில் ஒரு காலிப்பணியிடம் (தற்காலிக முழுநேர, தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர்) உள்ளது. இந்தப் பணியிடமானது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் தவிர) - முன்னுரிமையற்றவர் என்ற இன சுழற்சி அடிப்படையில் நிரப்பப்படவுள்ளது. இதற்கு பட்டப்படிப்பு அல்லது டிப்ளமோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்திருக்க வேண்டும். என்.டி.சி. வயர்மேன் டிரேடு பணிக்கு 3வருட தொழில் அனுபவம், என்.ஏ.சி. வயர்மேன் டிரேடு பணிக்கு 2 வருட தொழில் அனுபவம் கல்வித்தகுதி ஆகும்.

    பத்தாம் வகுப்பு படித்த பின்னர் ஐடிஐ முடித்தவர்களுக்கு வயது வரம்பு 18 முதல் 32 வரை ஆகும். 12ம் வகுப்பு படித்து விட்டு ஐடிஐ முடித்தவர்கள் டிப்ளமோ, டிகிரி முடித்தவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை . தகுதியான தற்காலிக ஒப்பந்த பயிற்றுநர்களுக்கு மாதம் ரூ.20,000 தொகுப்பூதியமாக வழங்கப்படும். தகுதியுடையவர்கள் உரிய சான்றிதழ்களின் ஒளிப்பட நகல்களுடன் தாராபுரம் அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ முதல்வர், அரசினர் தொழிற் பயிற்சி நிலையம், தாராபுரம் - 638657 என்ற முகவரிக்கு வரும் 19.08.2022ம் தேதிக்குள் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என முதல்வர், தாராபுரம் அரசினர் தொழிற் பயிற்சி நிலைய முதல்வர் தெரிவித்துள்ளார். 

    • காலியிடங்களை விட பல மடங்கு விண்ணப்பங்கள் திருப்பூர் கல்வி மாவட்டத்தில் பெறப்பட்டுள்ளன.
    • ஒரு பணியிடத்திற்கு சராசரியாக 10 பேர் வீதம் விண்ணப்பித்துள்ளனர்.

    திருப்பூர் :

    தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் தொகுப்பூதியத்தின் கீழ் நிரப்பப்பட உள்ளன. இதற்காக தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பம் கடந்த 3 நாட்களாக பெறப்பட்டன. ஒருவரே பல பள்ளிகளில் பணியாற்ற விண்ணப்பித்துள்ளதால் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.இதுகுறித்து திருப்பூர் மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    டி.டி.எட்., படித்தவர்கள் துவக்க பள்ளிக்கும், பி.எட்., படித்தவர்கள் நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிக்கும், ஒன்றுக்கும் மேற்பட்ட டிகிரிகளுடன் பி.எட்., மற்றும் எம்.எட்., படித்தவர்கள் உயர்நிலை, மேல்நிலை பள்ளிக்கும் விண்ணப்பித்தனர். ஒருவர் எத்தனை பணியிடங்களுக்கு வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம் என்பதால், காலியிடங்களை விட பல மடங்கு விண்ணப்பங்கள் திருப்பூர் கல்வி மாவட்டத்தில் பெறப்பட்டுள்ளன.

    திருப்பூர் தெற்கு, வடக்கு, அவிநாசி மற்றும் ஊத்துக்குளி ஒன்றியங்கள் முறையேஇடைநிலை ஆசிரியர் பணிக்கு ஆயிரத்து 407 விண்ணப்பங்களும், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு 405 விண்ணப்பங்களும், முதுகலை ஆசிரியர் பணிக்கு 401 விண்ணப்பங்களும் பெறபட்டுள்ளன. ஒரு பணியிடத்திற்கு சராசரியாக 10 பேர் வீதம் விண்ணப்பித்துள்ளனர்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்ற (டெட்) பட்டதாரிகளை தற்காலிகமாக நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
    • 67 பள்ளிகளில் 86 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

    திருப்பூர் :

    தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை, பட்டதாரி, மற்றும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்ற (டெட்) பட்டதாரிகளை தற்காலிகமாக நியமிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    திருப்பூர், தாராபுரம், உடுமலை, பல்லடம் உள்ளிட்ட கல்வி மாவட்டங்களில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு மாவட்ட அலுவலகத்தில் கல்வி விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.திருப்பூர் கல்வி மாவட்ட அளவில் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்க பட்டதாரிகள் அலைமோதினர். முதல் நாளான நேற்று முன்தினம் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 106 பேர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 86 பேர், முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு 127 பேர் என மொத்தம் 319 பேரிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.மேலும் திருப்பூரில் தொடக்க கல்வித்துறையின் கீழ், 117 இடைநிலை, 54 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மேலும் 67 பள்ளிகளில் 86 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. விருப்பமுள்ளோர்இன்று மாலை, 5மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • 2014ம் ஆண்டுக்கு பின்னர் புதிய பணியாளர்களே நியமிக்கப்படவில்லை.
    • மகளிருக்கு கட்டணம் இலவசம் என அறிவிக்கப்பட்டதால், கடும் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

    பல்லடம் :

    அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்லடம் அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறியதாவது:- அரசு போக்குவரத்து கழகத்தில்,கடந்த 2014ம் ஆண்டுக்கு பின்னர் புதிய பணியாளர்களே நியமிக்கப்படவில்லை.

    சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த நிலையில் புதிதாக ஆண்டு தோறும் பஸ்கள் வாங்கப்படுகின்றன.ஆனால் அதற்கேற்ப பணியாளர்கள் இல்லாததால் எங்களின் பணிச்சுமை அதிகரிக்கிறது. கடந்த ஆட்சிக்காலத்தின் போது 58ஆக இருந்த ஓய்வு பெறும் வயது 60ஆக உயர்த்தப்பட்டது. இதனால் ஓய்வு பெறும் நிலையில் உள்ளவர்கள் மீண்டும் பணியை தொடர்ந்து செய்து வருகின்றனர். தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதும், மகளிருக்கு கட்டணம் இலவசம் என அறிவிக்கப்பட்டதால், கடும் நிதிப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறுகின்றனர். இதன் காரணமாகவும் புதிதாக பணியாளர்களை நியமிப்பது தாமதமாகி வருகிறது. பணியாளர்கள் அதிகரிக்கப்படாததால், தற்போதுள்ள ஊழியர்களுக்கு பணிச்சுமை அதிகரித்து மன உளைச்சல் ஏற்படுகிறது.

    மேலும் புதிதாக வேலைக்கு சேர காத்திருக்கும் இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் உள்ளது. எனவே தமிழக அரசு அரசு போக்குவரத்து கழகத்தில் உள்ள காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    ×