search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "USEmbassyJerusalem"

    அமெரிக்கா தனது புதிய தூதரகத்தை ஜெருசலேமில் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அங்குள்ள தூதர்களை திரும்ப பெறுவதாக பாலஸ்தீன அரசு அறிவித்துள்ளது. #Gaza #USEmbassyJerusalem
    ராமல்லா:

    இஸ்ரேல், பாலஸ்தீன் இடையே நீண்ட நெடுங்காலமாக மோதல்கள் நடந்து வருகின்றன. ஜெருசலேமை இஸ்ரேல் தனது தலைநகராக கருதி வந்தாலும், அதை உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. பாலஸ்தீன், கிழக்கு ஜெருசலேமை தனது எதிர்கால தலைநகர் என கருதி வந்தது.

    கிறிஸ்தவர்கள், யூதர்கள், இஸ்லாமியர்கள் என 3 மதத்தினருக்கும் புனித நகரமாக திகழக்கூடிய ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரித்து கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவிப்பு வெளியிட்டார். அத்துடன் அங்கு அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் எனவும் கூறினார்.

    இந்த நிலையில், திட்டமிட்டபடி நேற்று முன்தினம் ஜெருசலேமில் அமெரிக்க தூதரகம் திறக்கப்பட்டது. இந்த விழாவில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் மகள் இவான்கா டிரம்ப், இவான்காவின் கணவர் ஜாரெட் குஷ்னர் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    இதற்கிடையே இஸ்ரேல் உருவாக்கப்பட்டதின் 70-வது ஆண்டு நினைவு நாளையொட்டி, பாலஸ்தீனர்கள் காசா எல்லைப் பகுதியில் பெருமளவில் திரண்டு வந்து போராட்டங்களை நடத்தினர். அவர்கள், டயர்களை சாலைகளில் கொளுத்திப்போட்டனர்.



    அவர்களுக்கும், இஸ்ரேல் படைகளுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. இஸ்ரேல் படையினர் மீது பாலஸ்தீனர்கள் கல்வீச்சு நடத்தினர்.

    போராட்டக்காரர்களை ஒடுக்கும் விதத்தில் இஸ்ரேல் படையினர் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 59 பாலஸ்தீனர்கள் கொன்று குவிக்கப்பட்டனர். இது நாடுமுழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொடூர தாக்குதலுக்கு உலக தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

    இதற்கிடையில், காஸா தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து துருக்கி தனது நாட்டில் உள்ள இஸ்ரேல் தூதரை வெளியேற உத்தரவிட்டது. அதே போல் இஸ்ரேல் அரசும் தனது நாட்டில் உள்ள துருக்கி தூதரை தற்காலிகமாக வெளியேற்றியது.

    இந்நிலையில், புதிய தூதரகத்தை ஜெருசலேமில் திறந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்காவில் உள்ள பாலஸ்தீன தூதரான குசாம் சோமால்டை திரும்ப வருமாறு பாலஸ்தீன அதிபர் மகமது அப்பாஸ் அறிவித்துள்ளார். #Gaza #USEmbassyJerusalem
    ×