search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "uraiyur vekkaliamman"

    சித்திரை திருவிழாவையொட்டி உறையூர் வெக்காளியம்மன் கோவில் தேரோட்டம் நடந்தது. தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
    திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா கடந்த 6-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்து வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்வான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. இதற்காக தேர் அலங்கரிக்கப்பட்டிருந்தது. காலை 9 மணி அளவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார்.

    காலை 10.30 மணிக்கு தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். கோவில் வீதியை சுற்றி வந்த தேர் பகல் 11.50 மணி அளவில் நிலைக்கு வந்தது. தேரோட்டத்தை காண திரளான பக்தர்கள் வருகை தந்திருந்தனர். இதனால் பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தப்படி நிலையை வந்தடைந்தது.

    கொளுத்தும் வெயிலில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்த போது சாலையில் வெயிலின் தாக்கம் இருக்காத வகையில் தண்ணீர் ஊற்றப்பட்டது. முன்னதாக தேரோட்டத்தையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் பலர் பால் குடம் எடுத்தும், அக்னி சட்டி ஏந்தியும், அலகு குத்தியும் வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்கள் பய, பக்தியுடன் அம்மனை தரிசித்தனர். விழாவையொட்டி அம்மன் நேற்று இரவு சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தேரோட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பக்தர்களின் வசதிக்காக மத்திய மற்றும் சத்திரம் பஸ் நிலையங்களில் இருந்து உறையூருக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த சித்திரை திருவிழா நாளையுடன் (செவ்வாய்க்கிழமை) முடிவடைகிறது. நாளை இரவு 8 மணிக்கு காப்பு கலைதல், விடையாற்றி விழா நடைபெற உள்ளது. 
    திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருச்சி உறையூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற வெக்காளியம்மன் கோவிலில் ஆண்டு தோறும் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது.

    இதையொட்டி நேற்று அதிகாலை 4.30 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு பூஜைகள், அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து காலை 6 மணிக்கு பூச்சொரிதல் விழா தொடங்கியது. இதில் அம்மனுக்கு பூக்கள் சாற்றப்பட்டது. தொடர்ந்து பக்தர்கள் பூத்தட்டுகளிலும், கூடைகளிலும் பூக்களை எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றினர். பகல் 12 மணி அளவில் சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவையொட்டி கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் பூத்தட்டுகளை ஊர்வலமாக கொண்டு வந்த போது எடுத்த படம்.

    தொடர்ந்து மகா தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோவில் உதவி ஆணையர் ஞானசேகரன் தலைமையில் கோவிலுக்கு பூத்தட்டுகள் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு சாற்றப்பட்டது. இதேபோல மாநகரின் பல்வேறு இடங்களிலும் இருந்தும், புறநகர் பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பூத்தட்டுகளை ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு சாற்றினர்.

    விடிய, விடிய அம்மனுக்கு பூக்கள் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் அம்மன் படத்துடன் பூத்தட்டுகளை பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு வந்தனர். பூ ரதங்கள் அணிவகுத்து வந்த தால் உறையூர் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது. 
    திருச்சி மாநகர மக்களின் காவல் தெய்வமாக விளங்கும் உறையூர் வெக்காளியம்மன் கோவிலில் இன்று பூச்சொரிதல் விழா நடைபெற உள்ளது.
    திருச்சி மாநகர மக்களின் காவல் தெய்வமாக விளங்குவது உறையூர் வெக்காளியம்மன் கோவில். சோழ மன்னர்களின் காலத்தில் மண்மாரியில் இருந்து மக்களை காத்த தெய்வம் என்ற வரலாற்று சிறப்புக்குரிய வெக்காளியம்மன் கோவிலின் மூலஸ்தானத்திற்கு மேற்கூரை கிடையாது. இங்கு வீற்றிருந்து அருள் பாலித்து வரும் அம்மன் மழை, வெயில், காற்று என அனைத்து இயற்கை சீற்றங்களையும் தன்னகத்தே தாங்கி மக்களை பாதுகாத்து வருகிறார் என்பது ஐதீகமாகும்.

    இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் முதல் வாரத்தில் பூச்சொரிதல் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு இன்று (வெள்ளிக்கிழமை) பூச்சொரிதல் விழா நடைபெறுகிறது. காலை 6 மணி அளவில் கோவில் சார்பில் அறநிலைய துறை அதிகாரிகள் அம்மனுக்கு பூத்தட்டுகளை சாற்றி சிறப்பு பூஜை செய்வார்கள்.

    அதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் கொண்டு வரும் பூக்கள் அம்மனுக்கு சாற்றப்படும்.இன்று மாலை 6.30 மணி அளவில் வெக்காளியம்மன் சேவா சங்கம் சார்பில் தில்லைநகர் சாஸ்திரி சாலை சாரதாம்பாள் கோவிலில் இருந்து பூச்சொரிதல் ரதம் புறப்பட்டு கோவிலை அடையும். இதில் முக்கிய பிரமுகர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். 
    ×