என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tree"
- பசுமை குழுவின் விதிப்படி ஒரு மரத்தை வெட்டினால் 10 செடிகளை புதிதாக நட்டு வளர்க்க வேண்டும்.
- தங்கள் கண் முன்னாலேயே அந்த மரங்கள் வெட்டப்பட்டதை பார்த்த உள்ளூர் மக்கள் வேதனையடைந்தனர்.
சென்னை:
திருநின்றவூரில் இருந்து தாமரைப்பாக்கம் வரையிலான நெடுஞ்சாலை வெளிவட்ட சாலையாக அகலப்படுத்தப்படுகிறது.
இரு வழிச்சாலையாக இருக்கும் இந்த சாலை 4 வழிச்சாலையாக விரிவு படுத்தப்படுகிறது.
இதற்காக பாக்கம் புதுக்காலனி பகுதியில் 374 மரங்கள் வெட்டப்பட்டுள்ளது. இந்த மரங்கள் அனைத்தும் 50 முதல் 60 ஆண்டுகள் வயதானவை.
ரோட்டின் இரு பக்கமும் வரிசையாக நின்ற புளி, வேம்பு, ஆலமரங்கள், அரச மரங்கள் நிழல் தரும் மரங்களாக நீண்ட காலமாக நின்றிருந்தன. இந்நிலையில் தங்கள் கண் முன்னாலேயே அந்த மரங்கள் வெட்டப்பட்டதை பார்த்த உள்ளூர் மக்கள் வேதனையடைந்தனர்.
நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, திருவள்ளூர் மாவட்ட பசுமை குழு மரங்களை வெட்ட அனுமதி வழங்கி உள்ளது. அதேபோல் வனத்துறை ஒப்புதல் பெற்று மதிப்பீடுகள் தயார் செய்து முறைப்படி டெண்டர் விடப்பட்டு மரங்கள் வெட்டப்பட்டன.
இந்த சாலை விரிவாக்க பணி கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கியது. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்துக்குள் முடிக்க வேண்டும் என்றனர்.
பசுமை குழுவின் விதிப்படி ஒரு மரத்தை வெட்டினால் 10 செடிகளை புதிதாக நட்டு வளர்க்க வேண்டும். ரோடு பணிகள் நிறைவடைந்ததும் புதிய மரங்கள் நடும் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இறைவழிபாட்டுக்கு என பொதுவான மலர்கள் பல உள்ளன.
- பல பூக்களை வழிபாட்டுக்கு இப்போது நாம் பயன்படுத்துவதில்லை.
மங்களம் தரும் மலர்கள்
இறை வழிபாடு மனிதனிடம் என்று தோன்றியதோ, அன்றே இறைவனுக்கு மலர்களை படைத்து வழிபடும் பழக்கமும் தோன்றி விட்டது.
சங்க காலத்தில் வாழ்ந்த தமிழர்கள் இறைவனுக்கு வித, விதமான மலர்களை சூடி அழகு பார்த்தனர். அர்ச்சனை செய்தனர். இதை பழங்கால பாடல்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
இறை மூர்த்தங்கள் மலர்கள் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதில் நம் மூதாதையர்கள் உறுதியுடன் இருந்தனர். இதன் காரணமாகவே ஆலயங்கள் அருகே தீர்த்த குளத்தையும், நந்தவனத்தையும் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி இருந்தனர்.
சில குறிப்பிட்ட மலர்கள், அறிவியல் பூர்வமாக மனித குலத்துக்கு நன்மை செய்வதை ஆதி தமிழர்கள் அறிந்து இருந்தனர். தாமரை மலர்த்தண்டு குளோரின் வாயு உற்பத்தி செய்வதை கண்டுபிடித்திருந்தனர்.
எனவே குறிப்பிட்ட மலர்களை இறை வழிபாடு தவிர வேறு எதற்கும் பயன்படுத்தக்கூடாது என்று நம் முன்னோர்கள் வரையறுத்து வைத்தனர்.
குவளை மலரை பறித்து பயன்படுத்தக் கூடாது என்ற விதி இப்படித்தான் ஏற்படுத்தப்பட்டது. உலகில் உள்ள இயற்கை படைப்புகள் அனைத்தும் இறைவனுக்கே சொந்தம் என்ற அடிப்படையில், மலர்கள் இறைவனுக்கு உகந்தவைகளாக உள்ளன.
இயற்கையின் படைப்பில் மலர்களின் இயல்பைப் பார்த்தால் அவற்றின் தியாகத்தை நாம் புரிந்து கொள்ள முடியும். ஓரிரு நாட்களே ஆயுள் கொண்ட மலர்கள் இறைவனுக்காகவே பூத்ததோ என்று எண்ணத் தோன்றும்.
ஆலயங்களில் நறுமணம் ஏற்படுத்தவும், அலங்காரம் செய்யவும், ஆத்மார்த்தமாக வழிபடவும் மலர்களின் பங்களிப்பு நிகரற்றது. மலர்கள் இல்லாத வழிபாட்டை நினைத்துப் பார்க்க இயலாது.
மகிமைகள் பல நிறைந்த பூக்களை, இறைவழி பாட்டுக்கு சங்க கால தமிழர்கள் பயன்படுத்தியதற்கும், நாம் பயன்படுத்தியதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.
சங்க காலத்தில் 99 வகையான பூக்கள் பயன்பாட்டில் இருந்ததை கபிலர் தனது குறிஞ்சிப்பாட்டில் 261 அடிகள் கொண்ட பாடலில் குறிப்பிட்டுள்ளார்.
அந்த 99 வகை பூக்களில் பல இன்று காணாமல் போய் விட்டன. பல பூக்களை வழிபாட்டுக்கு இப்போது நாம் பயன்படுத்துவதில்லை. மிக சொற்பமான வகை மலர்களையே நாம் பயன்படுத்துகிறோம்.
புராணங்கள் புனையப்பட்ட பிறகு ஒவ்வொரு கடவுளுக்கும், இந்தந்த வகை பூக்களையே பயன்படுத்த வேண்டும் என்ற நியதி உருவாகி விட்டது.
எனவே சில வகை மலர்களின் பயன்பாடு குறைந்து போனது.
என்றாலும் இறைவழிபாட்டுக்கு என பொதுவான மலர்கள் பல உள்ளன. ஒவ்வொரு பருவத்திலும் பூக்கும் இந்த மலர்கள் இன்று இறைவழிபாட்டை அர்த்தமுள்ளதாக, ஆத்மார்த்தமானதாக மாற்றியுள்ளன.
காய்ந்து போன மலர்கள், மனிதர்களால் முகர்ந்து பார்க்கப்பட்ட மலர்களை ஒரு போதும் இறை வழிபாட்டுக்கு பயன்படுத்தக்கூடாது. அது போல் சுத்தம் இல்லாத இடத்தில் உள்ள பூக்களை தொடவே கூடாது.
மலர்களை இறைவனுக்கு படைக்கும்போது கிள்ளி சாத்தக்கூடாது. முழு மலராகவே சாத்தவேண்டும். இலைகளை கிள்ளி சாத்தலாம். வில்வம், துளசி ஆகியவற்றை தளமாகவே படைக்க வேண்டும்.
இந்த வரிசையில் எந்தெந்த மலர்களை, எந்தெந்த தெய்வத்துக்கு, எந்தெந்த நேரத்தில் பயன்படுத்த வேண்டும் என்று நம் முன்னோர்கள் சில முறைகளை வகுத்து வைத்துள்ளனர்.
காலை வழிபாட்டின் போது தாமரை, துளசி, மல்லிகை, நந்தியாவட்டை, முல்லை, மந்தாரை, செண்பகம் ஆகிய மலர்களை கொண்டு வழிபடலாம்.
மதிய நேரத்தில் துளசி, வில்வம், சங்கு புஷ்பம், அரளி, வெண்தாமரை, ஓரிதழ் தாமரை, மருதாணி ஆகியவற்றை கொண்டு பூஜை செய்வது நல்லது.
மாலை நேரத்தில் ஜாதிமுல்லை, துளசி, வில்வம், செந்தாமரை, அல்லி, மல்லிகை, மரிக்கொழுந்து போன்ற பூக்களை இறைவனுக்கு படைத்து வழிபட்டால் மங்களம் உண்டாகும்.
இத்தனை வகை மலர்களில் தாமரைப்பூதான் மிக, மிக சிறப்பானதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. திருமால், மகாலட்சுமியின் மனம் கவர்ந்த தாமரை பூவுக்கு "தெய்வ மலர்" என்றும் ஒரு பெயர் உண்டு.
அதனால்தான் தாமரைப் பூவை பெண்கள் தலையில் சூட அனுமதிக்கப்படுவதில்லை. திருமாலுக்கு தாமரை போல பவளமல்லி, சாமந்தி ஆகிய மலர்களும் மிகவும் பிடித்தமானதாகும்.
சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமானது நாகலிங்கப்பூவும், வில்வவுமாகும். முருகப்பெருமானுக்கு கடம்ப மலர், குறிஞ்சிப் பூ, செவ்வலரி பூ ஆகிய பூக்கள் மிகவும் விருப்பமானவை என்று சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விநாயகருக்கு எருக்கம்பூ, தும்பை, செம்பருத்தி, தாமரை, ரோஜா மலர்கள் மிகவும் பிடித்தமானது. அம்மனுக்கு செவ்வரளி, மல்லிகை மிகவும் உகந்தது. இப்படி ஒவ்வொரு கடவுளுக்கும் பிடித்த பூ எது என்பதை அறிந்து கொண்டு படைக்க வேண்டும்.
அதுதான் இறை அருளை முழுமையாக பெற உதவும்.
இறைவனுக்கு பிடித்தம் இல்லாத, விருப்பம் இல்லாத பூக்களை ஒரு போதும் படைக்க கூடாது.
எனவே எந்தெந்த தெய்வத்துக்கு எந்தெந்த பூக்கள் பிடிக்காது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும். அட்சதை வெள்ளெருக்கு, ஊமத்தை ஆகியவை பெருமாளுக்கு பிடிக்காது.
செம்பரத்தை, தாழம்பு, குடஜமம், ஜபாபுஷ்பம் ஆகியவை சிவபெருமானுக்கு ஆகாதவையாகும். மந்தாரம், அறுகு வெள்ளெருக்கு ஆகியவை அம்மனுக்கு படைக்க உகந்தது அல்ல.
சூரிய வழிபாடு செய்யும் போது மறந்தும் கூட வில்வத்தை படைத்து விடக்கூடாது. அது போல விநாயகருக்கு துளசி ஆகாது. பவளமல்லி சரஸ்வதி தேவிக்கு பிடிக்காத பூவாகும்.
சில பூக்களை எந்த சாமிக்கும், எப்போதும் பயன்படுத்த கூடாது என்று விதி உள்ளது. உதாரணத்துக்கு துலுக்க சாமந்திப்பூவை சாமிக்கு படைக்கக்கூடாது.
அது போல வானகமலர், மாதுளை மலர், பூசணிபூ, மலை ஆலமரப்பூ, பொன்னாங்கண்ணி பூ, விளாபுளி பூ, குமிழம் பூ, குருகத்தி பூ ஆகிய பூக்களை பூஜைக்கு ஒரு போதும் பயன்படுத்தவே கூடாது.
பூஜைக்கு விலக்கப்பட்ட இந்த பூக்களை சில ஊர்களில் ஆலய பிரகார அலங்காரத்துக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
கடம்ப மலர், ஊமத்தை பூக்களை இரவு பூஜைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். தாழம்பூவை அர்த்தசாம பூஜைக்கு மட்டுமே பயன்படுத்துவார்கள்.
பகலில் தாழம்பூவை பயன்படுத்தக்கூடாது. (உத்தரகோசமங்கை தலத்தில் மட்டும் விதி விலக்காக தாழம்பூ பயன்படுத்துகிறார்கள்)
பூக்களின் நிறத்துக்கும் வழிபாட்டுக்கும் கூட தொடர்பு உள்ளது.
வெண்மை நிறம் கொண்ட பூக்களை அர்ச்சித்து வழிபட்டால் முக்தி உண்டாகும். சிவப்பு வர்ண பூக்கள் வழிபாடு இன்பத்தை தரும்.
மஞ்சள் வண்ண பூக்களை இறைவனுக்கு படைத்தால் எடுத்த காரியங்களில் வெற்றி உண்டாகும். குடும்பத்தில் அமைதியும், செல்வமும் விருத்தி ஏற்படும்.
பொதுவாக அன்று பறித்த மலர்களை அன்றே பூஜைக்கு பயன் படுத்தி விட வேண்டும். சிலர் இரவில் பூ வாங்கி மறுநாள் காலை பூஜைக்கு பயன்படுத்துவார்கள். அதில் எந்த தவறும் இல்லை.
தாமரை பூவை 5 நாட்கள் வரை வைத்து கூட பூஜிக்கலாம். அரளிப்பூக்களை 3 நாட்களுக்குள் பயன்படுத்தி விட வேண்டும். அது போல விஷ்ணு கிரந்தி பூவையும் மூன்று நாட்கள் வரை வைத்திருந்து பயன்படுத்தலாம்.
செண்பகம், சாமந்தி, மல்லி பூக்களை ஒரே நாளில் பயன்படுத்த வேண்டும். இறைவனுக்கு படைக்கும் மலர், இலைகளில் துளசி, வில்வம் இரண்டு மட்டும் விதிவிலக்கு பெற்றவை. விஷ்ணுவுக்கு மிக, மிக பிடித்தமான துளசியை மூன்று மாதங்கள் வைத்திருந்து பயன்படுத்தலாம்.
சிவனுக்கு மிகவும் பிடித்தமான வில்வத்தை 6 மாதம் வரை கூட பயன்படுத்தலாம். வில்வ இலையை எத்தனை தடவை வேண்டுமானாலும் தண்ணீரில் சுத்தம் செய்து பயன்படுத்தலாம்.
சிவன் அதை ஏற்று அருள் புரிவார். வில்வத்துக்கு மட்டும் அந்த சிறப்பை சிவபெருமான் கொடுத்துள்ளார்.
- 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தில் நேற்று இரவில் திடீர் என தீ பற்றியது.
- மரத்தின் அடிப்பகுதி தீயினால் கருகியதால் மரம் எந்த நேரத்திலும் சரிந்து விழும் அபாயமும் எழுந்தது.
களக்காடு:
களக்காடு-சேரன்மகாதேவி சாலையில் பத்மநேரி பெரியகுளத்தின் கரையில் உள்ள 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலமரத்தில் நேற்று இரவில் திடீர் என தீ பற்றியது.
தீயணைக்கும் பணி
காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ மரம் முழுவதும் பரவி பற்றி எரிந்தது. மேலும் மரத்தின் அடிப்பகுதி தீயினால் கருகி சேதமடைந்ததால், மரம் எந்த நேரத்திலும் சரிந்து விழும் அபாயமும் எழுந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் உடனடியாக நாங்குநேரி தீ அணைப்பு நிலையத்திற்கும் நெடுஞ்சாலைதுறை யினருக்கும் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து நிலைய அதிகாரி பாபநாசம் தலைமையில் விரைந்து வந்த தீ அணைப்பு மற்றும் மீட்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். நெடுஞ்சாலைதுறை ஊழி யர்கள் துரிதமாக செயல்பட்டு மரத்தை அப்புறப்படுத்தும் பணியை மேற்கொண்டனர்.
போக்குவரத்து பாதிப்பு
இதையடுத்து களக்காடு-சேரன்மகாதேவி சாலையில் போக்குவரத்து தடைபட்டது. தீ கட்டுப்படுத்தப்பட்டதும் அந்த வழியாக போக்குவரத்து தொடங்கியது.
தீ விபத்து ஏற்பட்ட மரத்தின் அருகே அறுவடை செய்யப்பட்ட வாழைமர குப்பைகளை கொட்டப்பட்டுள்ளது. அதற்கு மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். அந்த தீ மரத்திலும் பற்றியதாக கூறப்படுகிறது.
- ஈரோடு, காங்கேயம், கொடுமுடி உள்ளிட்ட பகுதி களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் டிராவல்ஸ் வேனில் இன்று காலை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.
- கோடாம்பில்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பியது.
கொல்லிமலை:
ஈரோடு, காங்கேயம், கொடுமுடி உள்ளிட்ட பகுதி களை சேர்ந்த 20-க்கும் மேற்பட்டோர் டிராவல்ஸ் வேனில் இன்று காலை நாமக்கல் மாவட்டம் கொல்லிமலைக்கு சுற்றுலா சென்று கொண்டிருந்தனர்.
கொண்டை ஊசி வளைவு
சுமார் 9 மணியளவில் அரியூர்நாடு பஞ்சாயத்து கோடாம்பில்பட்டி பஸ் நிறுத்தம் பகுதியில் உள்ள கொண்டை ஊசி வளைவில் வேன் திரும்பியது. அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் அங்கிருந்த மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. சாலையில் கவிழ்ந்தது.
இதில் வேனில் இருந்த ஒரு குழந்தை உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து அந்த வழியாக வந்தவர்கள் போலீசார் மற்றும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் அளித்தனர்.
சிகிச்சை
விரைந்து வந்த வாழவந்தி நாடு போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு செம்மேடு பகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவர்க ளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் 2 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து வாழவந்திநாடு போலீ
சார் வழக்கு பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி,
கோத்தகிரியை அடுத்த ஒன்னட்டி பகுதியில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி மரம் ஏற்றிய லாரி ஒன்று புறப்பட்டது. லாரி ஒன்னட்டியை அடுத்த எஸ்.கைகாட்டி 2-வது வளைவில் திரும்ப முயன்ற போது அதிக பாரத்தின் காரணமாக லாரியின் வலது பக்க பலகைகள் உடைந்தன. இதனால் லாரியில் இருந்த மரங்கள் அனைத்தும் சாலையில் சரிந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த பகுதியில் வாகனங்கள் எதுவும் வராததால் உயிர் சேதங்கள் ஏற்படவில்லை. சாலையில் மரங்கள் சரிந்து விழுந்ததால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- இடிபாட்டில் சிறுவன் முகம்மது ஜூபைர் சிக்கி படுகாயம் அடைந்தான்.
- மேல் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பணப்புழா ஆலக்காடு வலியப்பள்ளி அருகே உள்ள கல்லடம் பகுதியை சேர்ந்த தம்பதி நாசர்-ஜூபைரியா. இவர்களது மகன் முகம்மது ஜூபைர்(வயது9).
சிறுவன் முகம்மது ஜூபைர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். சம்பவத்தன்று தனது வீட்டின் அருகே உள்ள ஒரு மரத்தை நாசர் வெட்டி அகற்ற முயன்றார். அப்போது அந்த மரம் நாசர் வீட்டின் மீது விழுந்தது.
அந்த இடிபாட்டில் சிறுவன் முகம்மது ஜூபைர் சிக்கி படுகாயம் அடைந்தான். இதையடுத்து அவன் அங்கிருந்து மீட்கப்பட்டு கண்ணூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். பின்பு மேல் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான்.
இருந்த போதிலும் சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக இறந்தான். தந்தை வெட்டிய மரத்தில் சிக்கி மகன் பலியான சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
- கார் தனது கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள மரத்தின் மீது மோதி நின்றது.
- காரில் இருந்தவர்கள் தப்பியோடி விட்டனர்.
சுவாமிமலை:
கும்பகோணத்தில் இருந்து மன்னார்குடி செல்லும் சாலையில் கருவளர்ச்சேரி ஊராட்சி பகுதியில் கும்பகோணத்தில் இருந்து அதிவேகமாக வந்த கார் தனது கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள மரத்தின் மீது மோதி நின்றது.
இதைத் தொடர்ந்து காரில் இருந்தவர்கள் தப்பியோடி விட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் நாச்சியார் கோவில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொக்லைன எந்திரம் மூலம் காரை மீட்டு போக்குவரத்தை சீர்செய்தனர்.
இது குறித்து நாச்சியார்கோவில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
- தென்னை மரம் விழுந்து மின்கம்பிகள் அறுந்தன.
- மரம் விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் அருகே இளைஞர்கள் பேசி கொண்டிருந்தனர்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியில் கழுமலை அம்மன் கோயில் உள்ளது.
இந்த கோயில் அருகே இருந்த தென்னை மரம் திடீரென அடியோடு விழுந்தது.
எதிர்ப்புறம் இருந்த மின்கம்பத்தில் தென்னை மரம் விழுந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. உடனடி யாக மின்சார வாரியத்தினர் வருகை புரிந்து மின் இணைப்பைத் தூண்டித்தனர்.
தொடர்ந்து தென்னை மரம் அப்புறப்படுத்தப்பட்டு மின்விநியோகம் வழங்கப்பட்டது.
தென்னை மரம் விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு அதன் அருகே இளைஞர்கள் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
மேலும் ஒரு கார் ஒன்றும் மரம் விழுவதற்கு முன்பு அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
அடுத்த சில நிமிடங்களில் தென்னை மரம் அடியோடு விழுந்தது.
முன்கூட்டியே விழுந்து இருந்ததால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்க கூடும் என சம்பவத்தை பார்த்த மக்கள் அதிர்ச்சி விலகாமல் கூறினர்.
- சாலையின் குறுக்கே மரம் சாய்ந்து அருகில் இருந்த மின்கம்பி அறுந்து விழுந்தது.
- ஜே.சி.பி. எந்திரம் மூலம் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டத்தில் பல பகுதிகளில் நேற்று மாலை திடீரென சூறைகாற்றுடன் மழை பெய்தது.
இதில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் திருப்பாலைத்துறை பகுதியில் சூறை காற்றுடன் பெய்த கனமழையால் தேசிய நெடுஞ்சாலை குறுக்கே மரம் சாய்ந்து அருகில் இருந்த மின்சார கம்பி அறுந்து விழுந்தது.
இதனால் தஞ்சாவூர் கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடனடியாகசம்பவ இடத்திற்கு மின்சார வாரிய அதிகாரிகளும் மின் ஊழியர்களும் விரைந்து வந்து மின்சார விநியோகத்தை நிறுத்திவிட்டு பொதுமக்கள் உதவியுடன் சாலையின் குறுக்கே விழுந்த மரத்தை ஜேசிபி இயந்திரத்தின் மூலம் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர்.
பின்னர் போக்கு வரத்து சீரமைக்கப்பட்டது .
- இரவு 8:00 மணியளவில், இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
- காற்றுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் மரங்கள் முறிந்து ரோட்டில் விழுந்தது.
திருப்பூர் :
காங்கயம் சுற்றுப்பகு தியில், நேற்று முன்தினம் இரவு 8:00 மணியளவில், இடி, மின்னலுடன் கனமழை பெய்தது.
மழையின் வேகம் மிக அதிகமாக இருந்ததால், பல இடங்களில் மரங்கள் முறிந்து சரிந்து விழுந்தது. அதில், நத்தக்காடையூர், ரத்தினபுரியில் விநாயகர் கோவில் அருகே கூலி தொழிலாளி, சுப்பிரமணி, என்பவர் வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்ததில் வீடு சேதமானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயமேற்படவில்லை. இதைப்போல் காங்கயம் - ஈரோடு ரோட்டில் முள்ளிப்புரம் பகுதியிலும், சுந்தராபுரி பகுதியிலும் பலத்த காற்றுக்குத் தாக்குப்பிடிக்க முடியாமல் மரங்கள் முறிந்து ரோட்டில் விழுந்தது. அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் ரோட்டில் கிடந்த மரங்களை அகற்றினர். இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரத்துக்கும் மேல் போக்குவரத்து தடைப்பட்டது.
- திருக்குறுங்குடி பகுதிகளில் நேற்று மாலை இடி-மின்னலுடன் கோடை மழை கொட்டியது.
- காற்றினால் திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் இருந்த 200 ஆண்டு கால பழமை வாய்ந்த மாமரம் சாய்ந்தது.
களக்காடு:
திருக்குறுங்குடி பகுதிகளில் நேற்று மாலை இடி-மின்னலுடன் கோடை மழை கொட்டியது. அப்போது சூறை காற்றும் வீசியது. காற்றினால் திருக்குறுங்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் இருந்த 200 ஆண்டு கால பழமை வாய்ந்த மாமரம் சாய்ந்தது. மரத்தில் கிளைகள் சுகாதார நிலையத்திற்கு செல்லும் பாதையை அடைத்த படி விழுந்தன. இதனால் நோயாளிகள் சுகாதார நிலையத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பாதிப்படைந்து உள்ளனர்.
காற்றில் சாய்ந்த மரத்தின் கீழ் நோயாளிகள் சீட்டு பெற்று காத்திருப்பார்கள். மரம் விழுவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பும் நோயாளிகளும், பொதுமக்களும் மரத்தின் கீழ் அமர்ந்து இருந்தனர். மழை பெய்ய தொடங்கியதும் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். இதனை தொடர்ந்து அதிர்ஷ்டவசமாக நோயாளிகள் உயிர் தப்பினர். காற்றில் சாய்ந்த மரம் களக்காடு யூனியனுக்கு சொந்தமானது ஆகும். மரத்தை அகற்ற உடனடியாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாநகர பகுதிக்கு உட்பட்ட ராயபுரம் பகுதியில் மாநகராட்சி பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் ஏராளமான பழமையான மரங்கள் உள்ளன. மேலும் சிறுவர்கள் விளையாட்டு பொருட்களும், நடைபயிற்சி செல்லும் வகையில் பாதைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு சுமார் 30 ஆண்டு கடந்த ஆலமரமும், வேம்பு,புங்கன் உள்ளிட்ட மரங்களும் உள்ளன.
இந்நிலையில் பூங்காவின் மையப்பகுதியில் உள்ள ஆலமரத்தில் பின்னி பிணைந்து புதைந்த நிலையில் பயணிகள் ஆட்டோ ஒன்றின் முன்பகுதி சிதைவுகளுடன் உள்ளது. இதனை திடீரென பார்க்கும் போது ஆலமரத்தில் ஆட்டோ ஒன்று சிக்கிக்கொண்டு வெளியே வர முயற்சிப்பது போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கிறது.
ஆட்டோவின் முன் பகுதி மரத்தின் கிளைப் பகுதியிலும், டயர் மரத்தின் மைய தண்டுப்பகுதியில் பதிந்த நிலையில் உள்ளது.
இது குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், ஆலமரம் சிறிதாக இருந்தபோது, அதன் அருகே கைவிடப்பட்ட நிலையில் இருந்த ஆட்டோ ஒன்று மரம் பெரிதாக வளரும் போது மரத்தின் மையத் தண்டுப்பகுதியில் சிக்கி கொண்டது. மரம் வளர வளர ஆட்டோவின் பாகங்களும் மரத்தில் புதைந்து அதில் இருந்து பிரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மரம் வளர வளர தற்போது அந்த ஆட்டோவின் பாகங்களும் ஒவ்வொரு பகுதியாக இடம் மாறி வருகிறது. தற்போது அகற்றினால் ஆலமரம் பாதிக்கப்படும் என்பதால் என்ன செய்வது என தெரியவில்லை என்றனர்.
ஆலமரம், ஆட்டோவை கபளிகரம் செய்து விழுங்குவது போல் காட்சி அளிப்பதால் அங்கு வரும் பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து புகைப்படங்களை எடுத்துச் செல்கின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்