search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tractor"

    • மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
    • சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையிலான போலீசார் காங்கேயம்பேட்டை முனியப்பா கோவில் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக டிராக்டரில் மணல் கடத்தி வந்த ஒருவர், போலீசாரை கண்டதும் டிராக்டரை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டார். இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்து போலீஸ் நிலையம் கொண்டு வந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 8 பயனாளிகளுக்கு ரூ.44 ஆயிரத்து 640 மதிப்பில் தையல் எந்திரம் வழங்கினார்.
    • பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 112 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    நாட்டின் 75 -வது சுதந்திர தின விழா இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    அதன்படி தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கி தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் மூவர்ணத்தில் பலூன்களை பறக்க விட்டார். தொடர்ந்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு ரவளிப்பிரியா ஆகியோர் திறந்தவெளி ஜீப்பில் சென்று போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை பார்வை–யிட்டனர். முன்னதாக சுதந்திர போராட்ட தியாகிகளை கலெக்டர் கவுரவித்தார்.

    இதையடுத்து நலத்திட்ட உதவிகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

    பல்வேறு திட்ட பணியில் சிறப்பாக பணிபுரிந்து மாவட்ட நிர்வாகத்திற்கு பேரு உதவி புரிந்த 25 பேருக்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கினார். தொடர்ந்து 8 பயனாளிகளுக்கு ரூ.44 ஆயிரத்து 640 மதிப்பில் தையல் இயந்திரம் வழங்கினார். பயனாளிகள் ஐந்து பேருக்கு இரண்டு பெண் குழந்தைகளுக்கான வைப்பு நிதியாக ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வழங்கினார். நெல் பயிர் விளைச்சல் போட்டியில் வென்ற நான்கு பேருக்கு ரூ.40 ஆயிரம் வழங்கி கௌரவித்தார். சமூகநல பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாதாந்திர விரைவு உதவித்தொகை, மாற்றுத்திறனாளி உதவி தொகை, முதியோர் உதவி தொகை பெறும் 20 பயனாளிகளுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்பட்டது. தாட்கோ மூலம் 18 பயனாளிகளுக்கு ரூ.29 லட்சத்து 50 ஆயிரம் வழங்கப்பட்டது. போர், போரை ஒத்த நடவடிக்கையில் உயிரிழந்த மற்றும் ஊனமுற்ற படைவீரர்களுக்கான வருடாந்திர குடும்ப பராமரிப்பு மானியம் 2 பேருக்கு ரூ.75 ஆயிரம் வழங்கினார். விவசாயிகளுக்கு டிராக்டர் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    இதே போல் பல்வேறு திட்டத்தின் கீழ் பயனாளி–களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். மொத்தம் 84 பயனாளிகளுக்கு ரூ.1,00,36,964 (ரூ. 1 கோடியே 36 ஆயிரத்து 964) மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இது தவிர பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 112 பேருக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    இதையடுத்து பள்ளி மாணவ- மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நாட்டுப்புற பாடல், கிராமிய நடனம், நம்ம ஊரு தஞ்சாவூர் கிராமிய பாடல், பரதம் மற்றும் கிராமிய பாடல், நாட்டுப்புற நடனம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளி மாணவ- மாணவிகளின் இந்த கலைநிகழ்ச்சியை அனைவரும் பார்த்து ரசித்தனர். நிகழ்ச்சியின் முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் கூடுதல் கலெக்டர்கள் சுகபுத்திரா, ஸ்ரீகாந்த், சரக டி.ஐ.ஜி. கயல்விழி, வருவாய் கோட்டாட்சியர் ரஞ்சித், தாசில்தார் மணிகண்டன் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள், போலீசார்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • பாஜக சார்பில் கிணத்துக்கடவில் டிராக்டர் பேரணி,டிராக்டர் அணி வகுப்பு நடைபெற்றது.
    • டிராக்டர் 75 என்ற வடிவில் அணி வகுத்துநிறுத்தப்பட்டது.

    பொள்ளாச்சி:

    75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜக சார்பில் கிணத்துக்கடவில் டிராக்டர் பேரணி,டிராக்டர் அணி வகுப்பு நடைபெற்றது. 75 டிராக்டர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்றன.

    75வது சுதந்திர தினத்தை குறிக்கும் டிராக்டர் 75 என்ற வடிவில் அணி வகுத்துநிறுத்தப்பட்டது. நிகழ்ச்சியை மாநில பொதுச்செயலாளர் ஏ.பி.முருகானந்தம்தொடங்கி வைத்தார். மாவட்டத்தலைவர் வசந்தராஜன் தலைமை வகித்தார்.

    விவசாய அணி மாவட்டத்தலைவர் தர்மபிரகாஷ் வரவேற்றார். மாவட்ட பார்வை யாளர்மோகன்மந்தராச்சலம், நிர்வாகிகள் குமரேசன், ஆனந்த், மகேஷ், ரவி உட்பட பலர்பங்கேற்றனர்.

    • மணல் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த 2 டிராக்டர்களில் ஒரு டிராக்டர் வாலிபர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
    • முத்துப்பேட்டை போலீசார் விபத்து ஏற்படுத்திய இரண்டு டிராக்டர்களையும் பறிமுதல் செய்து ஓட்டி வந்தவரை கைது செய்தனர்.

    முத்துப்பேட்டை:

    திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த செம்படவன்காடு கிழக்கு கடற்கரை சாலையில் சிக்கன் கார்னர் உள்ளது. இதில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் ஹாஜா நகரை சேர்ந்த ஹபிபுல்லா மகன் பயாஸ் அகமது (வயது 22), அதிராம்பட்டினம் சின்ன நெசவுதெருவை சேர்ந்த அப்துல் காதர் மகன் ஷகீல் அகமது(18) ஆகிய இருவரும் வேலை பார்த்து வந்தனர்.

    இந்தநிலையில் நேற்றிரவு வழக்கம்போல் கடையை மூடிவிட்டு மோட்டார் சைக்கிளில் இருவரும் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது முத்துப்பேட்டை அருகே பாமணி ஆற்று பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரே அனுமதியில்லாமல் மணல் ஏற்றிக்கொண்டு வேகமாக வந்த 2 டிராக்டர்கள் ஒன்றோடு ஒன்று போட்டிபோட்டுக்கு கொண்டு முன்னே சென்றபோது இதில் ஒரு டிராக்டர் வாலிபர்கள் இருவரும் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இதில் பயாஸ் அகமது, ஷகீல் அகமது ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். இதனைக்கண்ட அப்பகுதியினர் இருவரையும் மீட்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த முத்துப்பேட்டை போலீசார் விபத்து ஏற்படுத்திய இரண்டு டிராக்டரையும் பறிமுதல் செய்து அதனை ஓட்டி வந்த முத்துப்பேட்டை கொய்யா தோப்பு பகுதியை சேர்ந்த டிரைவர் கார்த்தி(38) என்பவரை கைது செய்தனர். மற்றொரு டிரைவரை தேடி வருகின்றனர்.

    • சேலம் கருப்பூர் அருகே சிமெண்ட் ஏற்றி வந்த டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • விபத்தில் படுகாயம் அடைந்த டிரைவர் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள நான்கு கால் காலம் பகுதியில் ெரயில்வே மேம்பால பணி நடந்து வருகிறது.

    இதற்காக சேலம் கருப்பூர் பகுதியில் இருந்து ஒரு டிராக்டரில் சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிய ஒரு டிராக்டர் புறப்பட்டது. இந்த டிராக்டரை முருகேசன் (வயது 24)என்பவர் ஓட்டி சென்றார்.

    கருப்பூர் கோகுல் கிரானைட் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் இருந்த வேகத்தடையில் டிராக்டர் ஏரி இறங்கிய போது நிலை தடுமாறி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் சிமெண்ட் மூடிகளுக்குள் சிக்கிய முருகேசன் பலத்த காயமடைந்தார் .அவரை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    அங்கு உயிருக்கு போராடிய நிலையில் தீவிர சிகிச்சையில் அவர் உள்ளார். இதனை அறிந்த உறவினர்கள் கதறி துடித்தனர் .சம்பவம் குறித்து கருப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதனை அறிந்த உறவினர்கள் கதறி துடித்தனர் .சம்பவம் குறித்து கருப்பூர் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • டிராக்டர் ஒன்று பின்னோக்கி வந்து கொண்டிருக்கும்போது குழந்தை மீது மோதியது.
    • குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தாராபுரம் :

    தாராபுரம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் கோழிப்பண்ணை உள்ளது. இங்கு அசாம் மாநிலத்தை சேர்ந்த அன்சாய் பசு மாட்டாரி அவரது மனைவி ஆசாரி ஆகியோர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 2 வயதில் புஞ்சா என்ற ஆண் குழந்தை உள்ளது.

    நேற்று மாலை அப்பகுதியில் டிராக்டர் ஒன்று பின்னோக்கி வந்து கொண்டிருக்கும்போது புஞ்சை மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. தாராபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து தாராபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • குப்பைகளை அகற்ற சொந்த நிதியில் டிராக்டர் வாங்கிய கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவருக்கு கிராம மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
    • வாகனம் இல்லாததால் துப்புரவு பணியாளர்கள் தள்ளுவண்டியில் கொண்டு சென்று மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கீழக்கடையம் பஞ்சாயத்து புலவனூர், மாதாபுரம் ,கீழக்கடையம் ,கல்யாணபுரம், நரையப்பபுரம், பொன்மலை நகர் உள்ளிட்ட பல்வேறு சிறு கிராமங்களை உள்ளடக்கியது.

    இங்கு போதுமான அளவு குப்பை அள்ளி செல்ல வாகனம் இல்லாததால் துப்புரவு பணியாளர்கள் தள்ளுவண்டியில் கொண்டு சென்று மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். இதனால் குப்பைகளை அகற்றுவதில் சிரமம் ஏற்பட்டது.

    இதையடுத்து உடனடி தீர்வாக கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத் தனது சொந்த நிதியிலிருந்து ,டிராக்டர் ஒன்றை வாங்கி பஞ்சாயத்திற்கு குப்பைகளை அகற்ற வழங்கியுள்ளார்.

    சொந்த நிதியில் டிராக்டர் வாங்கிய கீழக்கடையம் பஞ்சாயத்து தலைவர் பூமிநாத்திற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 

    • குடமுருட்டி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளபடுவதாக வரப்பெற்ற தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
    • அதிலிருந்த ஆட்கள் தப்பி ஓடிவிட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட டிராக்டரை வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    நீடாமங்கலம்:

    வலங்கைமான் தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள் நேற்று இரவுநேர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது இனாம்கிளியூர் என்ற கிராமத்தில், குடமுருட்டி ஆற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளபடுவதாக வரப்பெற்ற தகவலின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

    அப்போது பதிவு எண் இல்லாத ஒரு டிராக்டர் மணலுடன் கைப்பற்றப்பட்டது. அதிலிருந்த ஆட்கள் தப்பி ஓடிவிட்ட நிலையில் கைப்பற்றப்பட்ட டிராக்டரை வலங்கைமான் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தப்பி சென்றவர்களை போலீசார் தேடிவருகின்றனர்.

    கரூர் அருகே வைக்கோல் ஏற்றிச்சென்ற டிராக்டர் தீப்பிடித்து எரிந்ததில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள வைக்கோல் நாசமாயின.
    வேலாயுதம்பாளையம்:

    கரூர் மாவட்டம், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் செந்தில்குமார் ( வயது 45). இவர் தனது டிராக்டரில் அருகாமையில் உள்ள கோவிந்தம் பாளையத்தில் இருந்து வைக்கோல் ஏற்றிக் கொண்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எல்லை என்ற பகுதியில் வந்த போது டிராக்டரில் இருந்த வைக்கோல் தார் சாலையின் மேல் சென்று கொண்டிருந்த மின்சாரக்கம்பியில் உரசி திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதை அறிந்த செந்தில்குமார் டிராக்டரை நிறுத்தி டிப்பரிலிருந்து என்ஜினை கழற்றி வெளியே எடுத்து சென்றார். அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். இருப்பினும் தீயை அணைக்க முடியவில்லை. இதுகுறித்து செந்தில்குமார் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு, தகவல் தெரிவித்தனர்.

    தகவலின் பேரில் நிலைய அலுவலர் திருமுருகன் தலைமையிலான தீயணைப்பு குழுவினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டிப்பர் மற்றும் வைக்கோலில் வேகமாக எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இருப்பினும் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வைக்கோல் தீயில் எரிந்து நாசமாயின. மேலும் டிப்பரின் பாதி பாகம் தீயில் எரிந்தது. #tamilnews
    பெரம்பலூரில் லாரி, டிராக்டர்களில் ரூ.1¼ லட்சம் மதிப்பிலான 12 பேட்டரிகளை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மினி லாரி ஓட்டுனர் உரிமையாளர்கள் சங்கத்தின் மினி லாரிகள் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள பாலக்கரை ஸ்டாண்டில் நிறுத்தப்படுவது வழக்கம். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் டிரைவர்கள் தங்களது லாரிகளை பாலக்கரை ஸ்டாண்டில் நிறுத்தி விட்டு வீட்டிற்கு சென்றனர். பின்னர் அவர்கள் நேற்று காலையில் வந்து பார்த்த போது, அங்கு நிறுத்தப்பட்டிருந்த 7 லாரிகளில் பேட்டரிகள் இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மர்ம நபர்கள் ஸ்டாண்டில் நிறுத்தப்பட்டிருந்த லாரிகளின் பேட்டரிகளை கழற்றி திருடி சென்றது தெரியவந்தது. இதில் ரஞ்சித்குமார் என்பவரின் லாரியில் பேட்டரியை திருடிய மர்ம நபர்கள் டீசல் டேங்கை திறந்து, அதில் இருந்த 200 லிட்டர் டீசலையும் திருடி சென்றுள்ளனர்.

    இதேபோல் பெரம்பலூர் துறைமங்கலத்தில் உள்ள ஆவின் பால்பண்ணையில் ஒப்பந்த முறையில் இயக்கப்படும் 2 லாரிகளில் பேட்டரி மற்றும் டீசலையும், ஒரு லாரியில் பேட்டரியையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் பாஸ்கர் என்பவர் நடத்தி வரும் டிராக்டர் பழுது பார்க்கும் பட்டறையில் நின்று கொண்டிருந்த 2 டிராக்டர்களின் பேட்டரி களையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

    இது சம்பந்தமாக டிராக்டர், லாரிகளின் உரிமையாளர்கள் பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும், பெரம்பலூர் போலீஸ் நிலையத்திலும் புகார் மனு கொடுத்தனர். அதில், லாரிகளில் பேட்டரி, டீசலையும், டிராக்டர்களில் பேட்டரியையும் திருடிய மர்ம நபர்களை உடனடியாக கண்டுபிடித்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. ஒரே நாளில் 10 லாரிகள், 2 டிராக்டர்களின் பேட்டரிகள் திருடப்பட்டுள்ளதால், அதில் ஈடுபட்ட மர்ம நபர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்றும், அவர்கள் திட்டமிட்டு இந்த திருட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி அந்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். திருடப்பட்ட 12 பேட்டரிகளின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் இருக்கும் என்று டிராக்டர், லாரிகளின் உரிமையாளர்கள் தெரிவித்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெரம்பலூர் நான்கு ரோடு அருகே நிறுத்தப்பட்டிருந்த லாரிகளில் பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடி சென்றது குறிப்பிடத்தக்கது. 
    சோழத்தரம் அருகே டிராக்டரை தனியார் நிறுவனத்தினர் எடுத்து சென்றதால் மனமுடைந்த விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    ஸ்ரீமுஷ்ணம்:

    கடலூர் மாவட்டம் சோழத்தரம் அருகே உள்ள கருணாகரநல்லூரை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 45). விவசாயி. இவர் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு தனியார் நிறுவனத்திடம் இருந்து டிராக்டர் ஒன்று விலைக்கு வாங்கி இருந்தார். அதற்கு மாதந்தோறும் தவணை தொகை செலுத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தமிழரசனால் தவணை தொகையை கட்ட முடியவில்லை. இதனை தொடர்ந்து அந்த நிறுவனத்தினர், தவணை தொகையை உடனே செலுத்துங்கள் என்று கூறியுள்ளனர். ஆனாலும் அவர் பணத்தை செலுத்தாமல் இருந்துள்ளார்.

    மேலும் அவர் டிராக்டரை ஒரு மறைவான இடத்தில் பதுக்கி வைத்திருந்தார். இது பற்றிய தகவல் அறிந்த தனியார் நிறுவனத்தினர் நேற்று தமிழரசனின் வீட்டுக்கு வந்தனர்.

    வீட்டின் அருகே பதுக்கி வைக்கப்பட்டு இருந்த டிராக்டரை எடுத்து சென்று விட்டனர். இதனால் தமிழரசன் மனஉளைச்சல் அடைந்தார்.

    பின்னர் அவர் தவணை தொகையை தன்னால் கட்ட முடியவில்லையே என வேதனை அடைந்த அவர் வீட்டில் இருந்த வி‌ஷத்தை எடுத்து குடித்தார்.

    வீட்டில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு காட்டு மன்னார்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சிதம் பரம் ராஜாமுத்தையா ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் தமிழரசன் இன்று பரிதாபமாக இறந்தார்.

    தவணை தொகையை செலுத்த முடியாததால் தனியார் நிறுவனத்தினர் டிராக்டர் எடுத்து சென்றதால் விவசாயி மனம் உடைந்து வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி யுள்ளது.

    வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட தமிழரசனுக்கு மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    ×