search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Toyota"

    • டொயோட்டா நிறுவனத்தின் புதிய தலைமுறை பார்ச்சூனர் மாடல் TNGA-F பிளாட்பார்மில் உருவாக்கப்படுகிறது.
    • 2024 பார்ச்சூனர் மாடல் முற்றிலும் புதிய டக்கோமா பிக்கப் டிரக்-ஐ தழுவி உருவாக்கப்படும் என்று தெரிகிறது.

    டொயோட்டா நிறுவனம் தனது மூன்றாம் தலைமுறை பார்ச்சூனர் மாடலை அடுத்த ஆண்டு துவக்கத்தில் அறிமுகம் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சர்வதேச வெளியீட்டை தொடர்ந்து, புதிய பார்ச்சூனர் மாடல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. எனினும், இது பற்றி டொயோட்டா சார்பில் இதுவரை எந்த தகவலும் இல்லை.

    புதிய 7 சீட்டர் எஸ்யுவி பற்றிய விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது. இதில் 2024 பார்ச்சூனரின் முற்றிலும் புதிய டிசைன் பற்றிய விவரங்களும் இடம்பெற்று உள்ளது. அதன்படி 2024 பார்ச்சூனர் மாடல் முற்றிலும் புதிய டக்கோமா பிக்கப் டிரக்-ஐ தழுவி உருவாக்கப்பட்டு இருக்கும் என்று தெரியவந்துள்ளது.

     

    கோப்புப் படம்

    கோப்புப் படம்

    அதன்படி இந்த காரின் முன்புறம் ஹெக்சகோன் வடிவம் கொண்ட கிரில் பகுதி, மூன்றடுக்கு க்ரோம் கிலில் ஸ்லாட்கள், நடுவில் டொயோட்டா பேட்ஜ் இடம்பெற்று இருக்கிறது. இத்துடன் கூர்மையான எல்இடி ஹெட்லேம்ப் கிளஸ்டர், எல்இடி டிஆர்எல்கள், பம்ப்பரில் அகலமான ஏர் இன்டேக், ஸ்கிட் பிலேட் காணப்படுகிறது.

    பக்கவாட்டில் புதிய டிசைன் கொண்ட அலாய் வீல்கள், உயரமான பில்லர்கள், பின்புறத்தில் முற்றிலும் புதிய ராப்-அரவுன்ட் எல்இடி டெயில் லேம்ப்கள் வழங்கப்படுகிறது. புதிய தலைமுறை பார்ச்சூனர் மற்றும் ஹிலக்ஸ் மாடல்கள் TNGA-F பிளாட்பார்மில் உருவாக்கப்படுகின்றன. இதே பிளாட்பார்மில் ஏற்கனவே டுன்ட்ரா, லேன்ட் குரூயிசர் மற்றும் லெக்சஸ் LX போன்ற மாடல்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

    இவைதவிர புதிய தலைமுறை பார்ச்சூனர் மாடலில் மைல்டு ஹைப்ரிட் சிஸ்டம் மற்றும் தற்போது வழங்கப்பட்டு இருக்கும் 2.8 லிட்டர் GD சீரிஸ், நான்கு சிலின்டர்கள் கொண்ட டீசல் என்ஜின் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த யூனிட் முதற்கட்டமாக ஹிலக்ஸ் மாடலில் வழங்கப்படும் என்றும் தெரிகிறது. இதில் 48 வோல்ட் பேட்டரி மற்றும் சிறிய எலெக்ட்ரிக் மோட்டார் ஜெனரேட்டர் வழங்கப்படலாம்.

    • டொயோட்டா ஹிலக்ஸ் துவக்க விலை ரூ. 30 லட்சத்து 40 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.
    • ஹிலக்ஸ் டாப் எண்ட் விலை ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது.

    டொயோட்டா நிறுவன விற்பனையாளர்கள் ஹிலக்ஸ் பிக்கப் டிரக்-க்கு அதிரடி சலுகைகளை வழங்கி வருகின்றனர். பிரீமியம் பிரிவில் நிலை நிறுத்தப்பட்டு இருக்கும் டொயோட்டா ஹிலக்ஸ் மாடலின் விலை ரூ. 30 லட்சத்து 40 ஆயிரம் என்று துவங்குகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் டொயோட்டா ஹிலக்ஸ் விற்பனைக்கு வந்தது.

    ஹிலக்ஸ் மாடல் இதுவரை சுமார் 1300 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. அறிமுகத்தின் போது டொயோட்டா ஹிலக்ஸ் மாடல் விலை ரூ. 33 லட்சத்து 90 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. பிறகு சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்ட டொயோட்டா ஹிலக்ஸ் துவக்க விலை ரூ. 30 லட்சத்து 40 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டது.

    என்ட்ரி லெவல் மாடல்களின் விலை குறைக்கப்பட்ட நிலையில், டாப் எண்ட் மாடல்களின் விலை உயர்த்தப்பட்டது. அதன்படி ஹிலக்ஸ் டாப் எண்ட் மேனுவல் வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 35 ஆயிரமும், ஆட்டோமேடிக் வேரியண்ட் விலை ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டது.

    தற்போதைய தகவல்களின் படி டொயோட்டா ஹிலக்ஸ் மாடலுக்கு குறைந்தபட்சம் ரூ. 6 லட்சம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சில விற்பனையாளர்கள் அதிகபட்சம் ரூ. 8 லட்சம் வரையிலான தள்ளுபடி வழங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவை ஹிலக்ஸ் மாடல் மற்றும் வேரியண்டிற்கு ஏற்ப வேறுபடுகிறது.

    டொயோட்டா ஹிலக்ஸ் மாடலில் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 204 ஹெச்பி பவர், 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. பாதுகாப்பிற்கு ஹிலக்ஸ் மாடலில் ஏழு ஏர்பேக் வழங்கப்பட்டு உள்ளது.

    • புதிய தலைமுறை பேட்டரி பேக் முழு சார்ஜ் செய்தால் 1000 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும்.
    • டொயோட்டா நிறுவனம் குறைந்த விலையில் லித்தியம் அயன் பாஸ்ஃபேட் பேட்டரியை அறிமும் செய்ய இருக்கிறது.

    டொயோட்டா நிறுவனம் பேட்டரி தொழில்நுட்பங்கள் சார்ந்த திட்டங்கள் பற்றி அறிவித்து இருக்கிறது. அதன்படி டொயோட்டா நிறுவனம் எலெக்ட்ரிக் வாகனங்கள் பிரிவில் அதிக கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது. புதிய தலைமுறை எலெக்ட்ரிக் வாகனங்களை உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக அந்நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இவை 2026 ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளன.

    எலெக்ட்ரிக் வாகன துறையில் களமிறங்கும் அதே வேளையில், டொயோட்டா நிறுவனம் தனது லித்தியம் நிக்கல் கோபால்ட் மங்கனீசு (NCM) பேட்டரியை மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. புதிய தலைமுறை பேட்டரி பேக்குகள் முழு சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 1000 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்கும் என்று டொயோட்டா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

     

    அதிக ரேன்ஜ் மட்டுமின்றி இவை தற்போதைய பேட்டரிகளை விட கட்டணத்தை 20 சதவீதம் வரை குறைக்கிறது. புதிய தலைமுறை பேட்டரி பேக் அதிக திறன் வெளிப்படுத்துவதோடு, bZ4X மாடலில் உள்ளதை விட மேம்பட்ட ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை வழங்குகிறது.

    புதிய தலைமுறை NCM பேட்டரிகள் தவிர, டொயோட்டா நிறுவனம் குறைந்த விலையில் லித்தியம் அயன் பாஸ்ஃபேட் பேட்டரியை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்து இருக்கிறது. புதிய தலைமுறை பேட்டரி பைபோலார் பேட்டரி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, அதிக ரேன்ஜ் வழங்கும் திறன் கொண்டிருக்கிறது.

    இவை எதிர்கால எலெக்ட்ரிக் வாகனங்கள் ரேன்ஜ்-ஐ 20 சதவீதம் அதிகப்படுத்துவதோடு, தற்போதைய எலெக்ட்ரிக் வாகனங்களை விட 40 சதவீதம் குறைந்த விலையில் கிடைக்கும் என்று டொயோட்டா நிறுவனம் கருதுகிறது. 

    • டொயோட்டா நிறுவனம் செஞ்சுரி பிரான்டு லிமோசின்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது.
    • டொயோட்டா நிறுவனம் செஞ்சுரி பிரான்டிங்கில் எஸ்யுவி மாடலை உருவாக்கி வருவதாக தகவல்.

    டொயோட்டா நிறுவனம் பல்வேறு விலை பிரிவுகளில், ஏராளமான மாடல்களை விற்பனை செய்து முன்னணி நிறுவனமாக விளங்கி வருகிறது. அந்த வகையில் வழக்கமான டொயோட்டா பிரான்டு, லெக்சஸ் பிரீமியம் பிரான்டு, சீன மற்றும் வட அமெரிக்க சந்தைக்கென முற்றிலும் புதிய கிரவுன் பிரான்டு என டொயோட்டா நிறுவனம் உலகம் முழுக்க பல்வேறு பிரான்டிங்கில் பலதரப்பட்ட வாகனங்களை விற்பனை செய்து வருகிறது.

    எனினும், அல்ட்ரா டாப் என்ட் வாகனங்கள் பிரிவில் டொயோட்டா நிறுவனம் செஞ்சுரி பிரான்டு லிமோசின்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது. தற்போது வரை செஞ்சுரி பிரான்டு ஜப்பானின் உள்நாட்டு சந்தையில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

     

    மேலும் இந்த பிரான்டில் ஒரே மாடல் மட்டுமே உள்ளது. தற்போது ஆட்டோமொபைல் சந்தையில் எஸ்யுவி மாடல்கள் முன்னணியில் இருப்பதை தொடர்ந்து, டொயோட்டா நிறுவனம் செஞ்சுரி பிரான்டிங்கில் எஸ்யுவி மாடலை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய டொயோட்டா செஞ்சுரி எஸ்யுவி மாடல் ரோல்ஸ் ராய்ஸ் கலினன் மற்றும் பென்ட்லி பென்ட்யகா மாடல்களுக்கு போட்டியாக அமையும்.

    செஞ்சுரி மாடலின் இன்டீரியர்கள் மிகவும் விசேஷமாக உருவாக்கப்பட்டு வருகின்றன. இவை ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் பென்ட்லி வாகனங்களுக்கு சற்றும் குறைவில்லாத ஆடம்பர சவுகரிய அனுபவத்தை வழங்கி வருகின்றன. இதன் காரணமாகவே டொயோட்டா செஞ்சுரி மாடல் ஜப்பான் மன்னர், அரச குடும்பத்தை சார்ந்தவர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோரை வாடிக்கையாளர்களாக கொண்டிருக்கிறது.

     

    முதல் முறையாக டொயோட்டா நிறுவனம் செஞ்சுரி பிரான்டு எஸ்யுவி மாடலை உருவாக்குகிறது. மேலும் முதல் முறையாக செஞ்சுரி மாடல் ஜப்பான் மட்டுமின்றி, பல்வேறு உலக நாடுகளிலும் விற்பனைக்கு வர இருக்கிறது. டொயோட்டா செஞ்சுரி மாடல் வட அமெரிக்க ஹைலேன்டர் மோனோக் எஸ்யுவி வடிவில் உருவாக்கப்படுகிறது.

    அதன்படி இந்த எஸ்யுவி எப்படி காட்சியளிக்கும் என்பதை விளக்கும் ரென்டர்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த கார் தோற்றத்தில் 3-பாக்ஸ் டிசைன் கொண்டிருக்கிறது. புதிய செஞ்சுரி எஸ்யுவி மாடல் ரோல்ஸ் ராய்ஸ் கலினனை விட சிறப்பான ஆடம்பர எஸ்யுவி-ஆக இருக்கும் வகையில் உருவாக்கப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது.

    புதிய டொயோட்டா செஞ்சுரி எஸ்யுவி மாடலில் 5.0 லிட்டர் ஹைப்ரிட் வி8 என்ஜின் வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. இது அதிகபட்சமாக 425 ஹெச்பி பவர் வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கலாம். 3-rd Gen டொயோட்டா செஞ்சுரி செடான் மாடலிலும் இதே என்ஜின் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. 

    Photo Courtesy: CarScoops 

    • புதிய வெல்ஃபயர் மாடல் மூன்று மீட்டர்கள் நீளமான வீல்பேஸ் கொண்டிருக்கிறது.
    • வெல்ஃபயர் எம்பிவி மாடல் டொயோட்டா நிறுவனத்தின் TNGA-K பிளாட்ஃபார்மில் உருவாகிறது.

    டொயோட்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய வெல்ஃபயர் மாடலின் முதற்கட்ட புகைப்படங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளன. முன்னதாக இந்த புகைப்படங்கள் இணையத்தில் லீக் ஆகி இருந்த நிலையில், தற்போது இவை வெளியாகி உள்ளன. புதிய டொயோட்டா வெல்ஃபயர் மாடல் லெக்சஸ் LM350h எம்பிவி மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.

    முதற்கட்டமாக ஜப்பானில் விற்பனைக்கு வரும் புதிய டொயோட்டா வெல்ஃபயர் மாடல் அதன் பிறகு மற்ற நாடுகளில் வெளியாகும். அடுத்த தலைமுறை வெல்ஃபயர் எம்பிவி மாடல் டொயோட்டா நிறுவனத்தின் TNGA-K பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. புதிய மாடல் பாக்சி ஸ்டைலிங், தற்போதைய மாடலை விட நீளமாக உள்ளது.

    புதிய வெல்ஃபயர் மாடலில் மூன்று மீட்டர்கள் நீளமான வீல்பேஸ் கொண்டிருக்கிறது. இந்த காரின் பாடி ஸ்டைல் லெக்சஸ் LM மாடலில் உள்ளதை போன்றே காட்சியளிக்கிறது. புதிய டொயோட்டா வெல்ஃபயர் மாடல் டர்போசார்ஜ் செய்யப்பட்ட 2.4 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது.

    இந்த என்ஜின் 275 ஹெச்பி பவர், 430 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இத்துடன் 2.5 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட பெட்ரோல் ஹைப்ரிட் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 250 ஹெச்பி பவர் வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

    • ஒட்டுமொத்த விற்பனையில் இன்னோவா க்ரிஸ்டா மட்டும் 25 சதவீத பங்குகளை பெற்றுள்ளது.
    • டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது கார் மாடல் ஆகும்.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் டீசல் என்ஜின் கொண்ட இன்னோவா க்ரிஸ்டா மாடல் மே மாத விற்பனையில் அதிக வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்திய சந்தையில் ஒட்டுமொத்த டொயோட்டா வாகனங்கள் விற்பனையில் இன்னோவா க்ரிஸ்டா மட்டும் 25 சதவீத பங்குகளை பெற்று அசத்தியுள்ளது.

    மே 2023 மாதத்தில் மட்டும் டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் 4 ஆயிரத்து 786 யூனிட்களை விற்பனை செய்துள்ளது. இதன் வருடாந்திர விற்பனை 75 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. கடந்த ஆண்டு மே மாதத்தில் டொயோட்டா நிறுவனம் 2 ஆயிரத்து 737 யூனிட்களை விற்பனை செய்து இருந்தது. இதன் மூலம் டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது கார் மாடல் என்ற பெருமையை இன்னோவா க்ரிஸ்டா பெற்று இருக்கிறது.

     

    கடந்த மே மாதம் அதிகம் விற்பனையான கிளான்சா மாடலை விட இன்னோவா க்ரிஸ்டா 393 யூனிட்களே குறைவாக விற்பனையாகி உள்ளது. சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இன்னோவா ஹைகிராஸ் மாடல் கடந்த மாதத்தில் 2 ஆயிரத்து 990 யூனிட்கள் விற்பனையாகி இருக்கிறது. பழைய மாடல் என்ற வகையிலும் இன்னோவா க்ரிஸ்டா, புதிய எம்பிவி-யான ஹைகிராஸ்-ஐ விற்பனையில் முந்தியுள்ளது.

    இன்னோவா க்ரிஸ்டா மாடலில் 2.4 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட டீசல் என்ஜின் கொண்டிருக்கிறது. இந்த என்ஜின் 145 ஹெச்பி பவர், 343 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் வழங்கப்பட்டு இருக்கிறது.

     

    புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலில் 2.0 லிட்டர், 4 சிலிண்டர் NA பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 172 ஹெச்பி பவர், 205 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இத்துடன் CVT கியர்பாக்ஸ் வழங்கப்படுகிறது. இதன் ஹைப்ரிட் மாடலில் 2.0 லிட்டர், நான்கு சிலிண்டர்கள் கொண்ட அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் மோட்டார் உள்ளது.

    இந்த என்ஜின் 184.8 ஹெச்பி பவர், 206 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. இதன் பெட்ரோல் மாடலில், eCVT கியர்பாக்ஸ் மட்டுமே வழங்கப்படுகிறது. டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடலின் விலை ரூ. 18 லட்சத்து 55 ஆயிரம் என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 29 லடச்த்து 99 ஆயிரம் வரை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    • டொயோட்டா நிறுவனத்தின் ஹைகிராஸ் மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இந்தியாவில் இன்னோவா ஹைகிராஸ் மாடல் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    டொயோட்டா நிறுவனத்தின் முற்றிலும் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் சமீபத்தில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த கார் பெட்ரோல் மற்றும் பெட்ரோல் ஹைப்ரிட் என இருவித வெர்ஷன்களில் மட்டுமே கிடைக்கிறது. டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடல் G-Slf, GX, VX ஹைப்ரிட், VX(O) ஹைப்ரிட், ZX ஹைப்ரிட் மற்றும் ZX(O) ஹைப்ரிட் என மொத்தம் ஆறு வேரியண்ட்களில் கிடைக்கிறது.

    இந்திய சந்தையில் புதிய இன்னோவா ஹைகிராஸ் விலை ரூ. 18 லட்சத்து 55 ஆயிரம், எக்ஸ்-ஷோரூம் என்று துவங்குகிறது. அறிமுகம் செய்யப்பட்டதும் அதிக பிரபலமடைந்த இன்னோவா ஹைகிராஸ் எம்பிவி-யின் காத்திருப்பு காலம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    அதன்படி புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலை வாங்குவோர் அதன் ஹைப்ரிட் வெர்ஷன்களை டெலிவரி எடுக்க 100 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதன் பெட்ரோல் வெர்ஷன்களை பெற முன்பதிவு செய்ததில் இருந்து 30 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும்.

    இதனிடையே மாருதி சுசுகி நிறுவனம் ஹைகிராஸ் மாடலை சார்ந்து புதிய எம்பிவி மாடலை உருவாக்கி இருக்கிறது. மாருதி சுசுகி எம்பிவி மாடல் இன்விக்டோ என்று அழைக்கப்படுகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு அடுத்த வாரம் துவங்குகிறது. விலை மற்றும் வினியோக விவரங்கள் ஜூலை 5-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளன.

    • டொயோட்டா கிரவுன் செடான் கான்செப்ட் மாடலில் சாலிட் ஸ்டேட் பேட்டரி தொழில்நுட்பம் அறிமுகம்.
    • சாலிட் ஸ்டேட் பேட்டரிகள் குறைந்த செலவில், அதிக ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது.

    டொயோட்டா நிறுவனம் தனது கிரவுன் EV ப்ரோடோடைப் மாடல் விவரங்களை அறிவித்து இருக்கிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் துறையில் அடுத்த பெரிய பேசுபொருளாக பைபோலார் சாலிட் ஸ்டேட் பேட்டரிகள் இருக்கும் என்று டொயோட்டா நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

    வாகனங்களின் ரேன்ஜ் பற்றி எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்த போதிலும், எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை ஒவ்வொரு மாதமும் அதிகரித்துக் கொண்டே தான் வருகிறது. அதிநவீன பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் ஏரோ திறன் தற்போது இருப்பதை விட பலமடங்கு எல்லைகளை கடக்க வேண்டியிருக்கிறது. இந்த சூழ்நிலையில், சாலிட் ஸ்டேட் பேட்டரிகள் குறைந்த செலவில், அதிக ரேன்ஜ் வழங்கும் என்று தெரிகிறது.

     

    சாலிட் ஸ்டேட் பேட்டரிகளை பயன்படுத்துவதில் முன்னணியில் இருக்க டொயோட்டா விரும்புகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் துறையில் தாமதமாக களமிறங்கியதற்காக சந்தையில் பல்வேறு கேள்விகளுக்கு ஆளான நிலையில், எலெக்ட்ரிக் வாகனங்கள் துறையில் வியாபாரம் மிக முக்கியமானது என்பதை டொயோட்டா நிறுவனம் வெளிக்காட்டி இருக்கிறது.

    டொயோட்டா நிறுவனம் கிரவுன் செடான் கான்செப்ட் மாடலில் அறிமுகம் செய்து இருக்கும் சாலிட் ஸ்டேட் பேட்டரி தொழில்நுட்பம் முழு சார்ஜ் செய்தால் 1353 கிலோமீட்டர்கள் வரையிலான ரேன்ஜ் வழங்குகிறது. இத்துடன் எலெக்ட்ரிக் வாகன துறையில் தனது எதிர்கால திட்டம் பற்றிய தகவல்களை டொயோட்டா அறிவித்து இருக்கிறது.

    டொயோட்டா நிறுவனம் குறைந்த விலை மற்றும் டாப் எண்ட் எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. தனது புதிய அடுத்த தலைமுறை பேட்டரியை BZ4X மற்றும் டொயோட்டா விற்பனை செய்து வரும் எலெக்ட்ரிக் வாகனத்துடன் ஒப்பிடுகிறது. அதன்படி அதிக செயல்திறன் கொண்ட வெர்ஷன்களில் டொயோட்டா நிறுவனம் மோனோபோலார் பேட்டரிகளை பயன்படுத்த இருக்கிறது.

    டொயோட்டாவின் அடுத்த தலைமுறை பேட்டரி 2026 வாக்கில் சந்தையில் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிகிறது. இதன் விலை தற்போதைய BZ4X மாடலில் உள்ள பேட்டரியை விட 20 சதவீதம் அதிகமாக இருக்கும். இதனை 10-இல் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 20 நிமிடங்களே ஆகும். 

    • புதிய பி-செக்மன்ட் கிராஸ்ஒவர் மாடல் பெருமளவு ரிடிசைன் செய்யப்பட்டுள்ளது.
    • டொயோட்டா C-HR கார் பிளக்-இன் ஹைப்ரிட் வடிவில் அறிமுகம் செய்யப்படலாம்.

    டொயோட்டா நிறுவனம் இரண்டாம் தலைமுறை C-HR எஸ்யுவி மாடலுக்கான டீசரை வெளியிட்டது. புதிய C-HR எஸ்யுவி மாடல் ஜூன் 26-ம் தேதி சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக இந்த காரின் ப்ரோலோக் கான்செப்ட் மாடல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சப்-காம்பேக்ட் கிராஸ்ஒவர் மாடலின் ப்ரோடோடைப் டெஸ்டிங் நடைபெற்றது.

    டீசர்களின் படி புதிய எஸ்யுவி மாடலின் பின்புறம் டெயில் கேட் முழுக்க பேரலல் லைன்கள் இடம்பெற்றுள்ளது. இதன் நடுவே டொயோட்டா லோகோவுக்கு மாற்றாக டொயோட்டா C-HR எழுத்துக்கள் காணப்படுகின்றன.

    புதிய பி-செக்மன்ட் கிராஸ்ஒவர் மாடலில் பெருமளவு ரிடிசைன் செய்யப்பட்டு இருப்பதாக டொயோட்டா நிறுவனம் சூசகமாக தெரிவித்து வந்தது. இதுபற்றிய விரிவான விவரங்கள் ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளன. புதிய C-HR மாடலில் சற்றே சிறிய ஒவர்ஹேங்குகள், இன்டீரியரில் அதிக இடவசதி இருக்கும் என தெரிகிறது.

    காரின் முன்புறம் ஹாமர்ஹெட் என்று அறியப்படும் நிலையில், இதன் டிசைனிங் சமீபத்திய மாடல்களில் உள்ளதை போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. இதன் டிசைன் இளமை மிக்க தோற்றம் மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

    புதிய டொயோட்டா C-HR கார் பிளக்-இன் ஹைப்ரிட் மற்றும் செல்ஃப் சார்ஜிங் ஹைப்ரிட் மாடல் வடிவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று தெரிகிறது. டொயோட்டா C-HR மாடல் இந்த ஆண்டு இறுதியில் ஐரோப்பிய சந்தையில் விற்பனைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

    • டொயோட்டா நிறுவனத்தின் புதிய எலெக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
    • 2022 ஆண்டில் மட்டும் டொயோட்டா நிறுவனம் 21 ஆயிரத்து 650 பேட்டரியால் இயங்கும் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது.

    டொயோட்டா மோட்டார் நிறுவனத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கொஜி சடோ நேரலை நிகழ்வில் நேற்று உரையாற்றியுள்ளார். இதே நிகழ்வில் பேசிய துணை தலைவர் ஹிரோகி நகஜிமா, டொயோட்டா நிறுவனம் 2026 ஆண்டிற்குக்குள் பத்து புதிய எலெக்ட்ரிக் வாகன மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தெரிவித்தார்.

    இதன் மூலம் ஆண்டிற்கு சுமார் 15 லட்சம் வாகனங்களை விற்பனை செய்யும் என தெரிகிறது. பல்வேறு பகுதிகளில் டொயோட்டா நிறுவனம், சாத்தியக்கூறுக்கு ஏற்ப எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்ய இருப்பதாக கொஜி சடோ தெரிவித்தார். உலகளவில் முன்னணி நிறுவனமாக இருக்கும் டொயோட்டா எலெக்ட்ரிக் வாகன விற்பனையில் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது.

     

    டொயோட்டா நிறுவனம் அடுத்த தலைமுறை எலெக்ட்ரிக் வாகனங்களை அறிமுகம் செய்வதற்காக விசேஷ பிரிவு ஒன்றை உருவாக்க இருக்கிறது. இதற்கான உற்பத்தி முதல் வியாபார பொறுப்பு வரை அனைத்திற்குமான தலைமை பொறுப்பு ஒருவருக்கு வழங்கப்பட இருக்கிறது. தலைமை பொறுப்புக்கான நபர் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டார். இவர் அடுத்த மாதம் அறிவிக்கப்படுவார் என கூறப்படுகிறது.

    2022 ஆண்டில் மட்டும் டொயோட்டா நிறுவனம் 21 ஆயிரத்து 650 எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது. இது சந்தையில் 0.3 சதவீதம் ஆகும். கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவின் டெஸ்லா நிறுவனம் 10 லட்சத்து 27 ஆயிரம் யூனிட்களையும், பிஒய்டி நிறுவனம் 8 லட்சத்து 10 ஆயிரத்து 600 யூனிட்களையும் விற்பனை செய்து இருந்தது.

    • டொயோட்டா நிறுவனத்தின் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் இந்திய சந்தையில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடல் 2.0 லிட்டர் பெட்ரோல், 2.0 லிட்டர் ஸ்டிராங் ஹைப்ரிட் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் கிடைக்கிறது.

    டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனத்தின் புதிய இன்னோவா ஹைகிராஸ் மாடலின் டாப் எண்ட் வேரியண்ட் முன்பதிவு நிறுத்தப்பட்டு விட்டது. இன்னோவா ஹைகிராஸ் ZX மற்றும் ZX (O) வேரியண்ட்களின் முன்பதிவு நிறுத்தப்பட்டது. புதிய தலைமுறை இன்னோவா ஹைகிராஸ் மாடல் நவம்பர் 2022 வாக்கில் அறிமுகம் செய்யப்பட்டது.

    புதிய டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் மாடல் 2.0 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் என்ஜின், ஸ்டிராங் ஹைப்ரிட் ஆப்ஷனில் வழங்கப்படுகிறது. புதிய காருக்கான தட்டுப்பாடு அதிகரித்து வருவதால், வினியோக சிக்கல் காரணமாக முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டு இருக்கிறது.

     

    இரு வேரியண்ட்கள் தவிர இன்னோவா ஹைகிராஸ் மாடலின் மற்ற வேரியண்ட்களுக்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. "வினியோக சிக்கல் காரணமாக இன்னோவா ஹைகிராஸ் ZX மற்றும் ZX (O) வேரியண்ட்களின் முன்பதிவு தற்காலிகமாக நிறுத்தப்படுவதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். முன்பதிவு நிறுத்தம் ஏப்ரல் 8 ஆம் தேதி அமலுக்கு வருகிறது."

    "இன்னோவா ஹைகிராஸ் ஹைப்ரிட் மாடலின் இதர வேரியண்ட்களுக்கு தொடர்ந்து முன்பதிவு நடைபெறும். மேலே குறிப்பிடப்பட்டு இருக்கும் வேரியண்ட்களுக்கு விரைவில் முன்பதிவை துவங்குவதற்கான பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம்." என்று டொயோட்டா நிறுவனம் தெரிவித்து உள்ளது.

    • டொயோட்டா ஹிலக்ஸ் மாடலின் ஸ்டாண்டர்டு 4x4 MT வேரியண்ட் விலை அதிரடியாக மாற்றப்பட்டது.

    டொயோட்டா இந்தியா நிறுவனம் ஹிலக்ஸ் பிக்கப் டிரக் விலையை மாற்றியமைத்து இருக்கிறது. ஹிலக்ஸ் ஸ்டாண்டர்டு மற்றும் ஹை வேரியண்ட்களில் கிடைக்கிறது. இதில் ஸ்டாண்டர்டு MT வேரியண்ட் விலை ரூ. 3 லட்சத்து 59 ஆயிரம் குறைக்கப்பட்டு இருக்கிறது. ஹை MT மற்றும் ஹை AT வேரியண்ட்களின் விலை முறையே ரூ. 1 லட்சத்து 35 ஆயிரம் மற்றும் ரூ. 1 லட்சத்து 10 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கிறது.

    விலை மாற்றத்தின் படி டொயோட்டா ஹிலக்ஸ் மாடலின் துவக்க விலை ரூ. 30 லட்சத்து 40 ஆயிரம் என மாறி இருக்கிறது. முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் ஹிலக்ஸ் மாடலின் இரண்டாவது கட்ட யூனிட்களுக்கான முன்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்திய சந்தையில் ஹிலக்ஸ் மாடல் இசுசு டி மேக்ஸ் வி கிராஸ் மாடலுக்கு போட்டியாக அமைகிறது. இதில் டபுள் கேபின், மஸ்குலர் முன்புறம், க்ரோம் ஹைலைட்கள் வழங்கப்பட்டுள்ளன.

     

    ஹிலக்ஸ் மாடலில் ஃபார்ச்சூனரில் வழங்கப்பட்டு இருக்கும் 2.8 லிட்டர் டீசல் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 210 ஹெச்பி பவர், 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டுள்ளது. ஹிலக்ஸ் மாடல் 4-வீல் டிரைவ் ஸ்டாண்டர்டு அம்சமாக வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 6 ஸ்பீடு மேனுவல், 6 ஸ்பீடு ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்களும் வழங்கப்படுகிறது.

    விலை விவரங்கள்:

    டொயோட்டா ஹிலக்ஸ் ஸ்டாண்டர்டு 4x4 MT ரூ. 30 லட்சத்து 40 ஆயிரம்

    டொயோட்டா ஹிலக்ஸ் ஹை 4x4 MT ரூ. 37 லட்சத்து 15 ஆயிரம்

    டொயோட்டா ஹிலக்ஸ் ஹை 4x4 AT ரூ. 37 லட்சத்து 90 ஆயிரம்

    அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

    ×