என் மலர்

    நீங்கள் தேடியது "tomatoes"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தக்காளி விலை உயர்வு வரும் நாட்களிலும் நீடிக்கும் என்று தெரிகிறது.
    • மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தக்காளி விலை குறைவு தான்.

    போரூர்:

    தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக தக்காளி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இன்று கிலோ ரூ.120-க்கு தக்காளி விற்கப்பட்டது. தொடர்ந்து உச்சத்தில் இருந்து வரும் தக்காளி விலையால் பொதுமக்கள் கவலை அடைந்து உள்ளனர்.

    சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் தக்காளி வரத்து குறைந்ததால் இந்த விலை உயர்வு என்று கூறப்படுகிறது. ஆனால் இதுவரை தக்காளி வரத்து இன்னும் சீராக வில்லை. இதனால் தக்காளி விலை உயர்வு வரும் நாட்களிலும் நீடிக்கும் என்று தெரிகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள சில்லறை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.110-க்கு விற்கப்படுகிறது. வெளிமார்க்கெட் மற்றும் சில்லறை கடைகளில் ரூ.120 முதல் ரூ.130 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    தக்காளி விலையை தொடர்ந்து தற்போது காய்கறி மற்றும் சின்ன வெங்காயத்தின் விலையும் தாறுமாறாக உயர்ந்து உள்ளது. காய்கறிகள் விலை கிலோ ரூ.50-க்கும் கீழ் இருந்த நிலையில் அனைத்து காய்கறிகளின் விலையும் தற்போது எகிறியுள்ளது.

    கோயம்பேடு, காய்கறி மார்க்கெட்டுக்கு இன்று 400 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வந்திருந்தன. மொத்த மர்க்கெட்டில் பீன்ஸ் ஒரு கிலோ ரூ120-க்கும், அவரைக்காய் ஒரு கிலோ ரூ.70-க்கும், ஊட்டி கேரட் ரூ.70-க்கும், சின்ன வெங்காயம் ரூ.120-க்கும் விற்பனை ஆனது.

    பச்சை மிளகாய் ரூ.110-க்கும், உஜாலா கத்தரிக்காய்-ரூ.60-க்கும், முருங்கைக்காய் ரூ.60,வெண்டைக்காய் -ரூ.40, இஞ்சி ஒரு கிலோ ரூ.210-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் காய்கறிகள் விலை தாறுமாறாக அதிகரித்து பீன்ஸ் ஒரு கிலோ ரூ.140வரையிலும், இஞ்சி ஒரு கிலோ ரூ.250-க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ ரூ.150வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதேபோல் பெங்களூர் தக்காளி விலையும் உயர்ந்து உள்ளது. ஒரு கிலோ ரூ.140-க்கு விற்பனை செய்யப்பட்டது.

    சமையலுக்கு தினசரி பயன்படுத்தப்படும் தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது இல்லத்தரசிகள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    தக்காளி விலை உயர்வு குறித்து மொத்த வியாபாரி ஜாபர் அலி சேட் கூறியதாவது:-

    கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்து மட்டுமே தக்காளி விற்பனைக்கு வருகிறது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மொத்த விற்பனையில் ஒரு கிலோ தக்காளி ரூ.7-க்கு விற்கப்பட்டது. ஆனால் அதையும் வாங்கி செல்ல ஆள் இல்லாமல் பல இடங்களில் விவசாயிகள் தக்காளியை குப்பையில் கொட்டும் நிலை ஏற்பட்டது.

    தக்காளிக்கு போதிய விலை கிடைக்காததால் தமிழகத்தில் நடைபெற்று வந்த தக்காளி உற்பத்தியை விவசாயிகள் பலர் நிறுத்தி விட்டனர். ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தற்போது பெய்த மழையால் அங்கு பயிரிடப்பட்டிருந்த தக்காளி செடிகள் கடுமையாக சேதமடைந்து வீணாகிவிட்டது. இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டு தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் தக்காளி விலை குறைவு தான்.

    இன்று கோயம்பேடு சந்தையில் ஒரு பெட்டி தக்காளி ரூ1200-க்கு விற்கப்படுகிறது. அதே சமயம் தக்காளி உற்பத்தி நடந்து வரும் ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநி லத்தில் ஒரு பெட்டி தக்காளி (14கிலோ) ரூ1600-க்கு விற்கப்படுகிறது. எனவே இந்த விலை உயர்வு தொடர்ந்து நீடிக்க வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கடந்த ஏப்ரல் மாத இறுதியில் தக்காளி விலை சரிந்து, 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
    • திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தை, தென்னம்பாளையம் தினசரி மார்க்கெட்டுக்கும் தக்காளி வரத்து பாதியாக குறைந்துள்ளது.

    திருப்பூர்:

    தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் விரைவில் ஒரு கிலோ விலை 100 ரூபாயை எட்டும் என்ற நிலை உருவாகியுள்ளது.

    ஒரே நேரத்தில் உள்ளூர், வெளிமாநில வரத்து என இரண்டும் குறைந்ததால் திருப்பூர் வடக்கு மற்றும் தெற்கு உழவர் சந்தை, தென்னம்பாளையம் தினசரி மார்க்கெட்டுக்கும் தக்காளி வரத்து பாதியாக குறைந்துள்ளது. தெற்கு உழவர் சந்தைக்கு வழக்கமாக 35 முதல் 38 டன் தக்காளி வரும் நிலையில் தற்போது 25 முதல் 30 டன் தக்காளி மட்டுமே வருகிறது.

    வடக்கு உழவர்சந்தைக்கு 8 டன் வரும் நிலையில், 4 டன் தக்காளி வருவதே அரிதாகியுள்ளது. திருப்பூருக்கான தக்காளி வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் 26 கிலோ தக்காளி டிப்பர் 2,000 ரூபாய்க்கும், 14 கிலோ சிறிய டிப்பர் 1,000 ரூபாய்க்கும் விற்றது. மொத்த விலையில் தக்காளி 70 முதல் 80 ரூபாய்க்கும், சில்லறை விலையில் கிலோ 80 முதல் 85 ரூபாய்க்கும் தக்காளி விற்றது. இதனால் மளிகை கடைகளில் 250 கிராம் தக்காளி 20 முதல் 30 ரூபாய், கிலோ 90 ரூபாய் என விற்கப்படுகிறது.

    தக்காளி விலை திடீர் உயர்வு குறித்து உழவர் சந்தை அலுவலர்கள் கூறியதாவது:-

    கடந்த ஏப்ரல் மாத இறுதியில் தக்காளி விலை சரிந்து, 10 ரூபாய்க்கு விற்கப்பட்டது. செலவு அதிகரித்து வரும் சூழலில் நஷ்டம் ஏற்பட்டு விடுமோ என எண்ணிய விவசாயிகள் பலர் தக்காளி பயிரிடுவதை குறைத்தனர். இதனால் வரத்து குறைந்து தட்டுப்பாடு ஏற்பட்டு விலை உயர்ந்துள்ளது என்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.
    • பச்சை மிளகாய் ரூ.60,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்சந்தை செயல்படுகிறது, வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.

    நேற்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.15, கத்தரிக்காய் ரூ.60, பீர்க்கங்காய் ரூ.60. பெரிய வெங்காயம் ரூ.20 சின்ன வெங்காயம் ரூ. 40. உருளைக்கிழங்கு ரூ.30, பீட்ரூட் ரூ.40, புடலை காய் ரூ.40, முட்டை கோஸ் ரூ.20, பீன்ஸ் ரூ.120, கேரட் ரூ.40, பாவற்காய் ரூ.60,வெண்டைக்காய் ரூ.60, இஞ்சி ரூ.120, அவரைக்காய் ரூ.100, நேரோ காய் ரூ. 40, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.60,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.

    இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • விவசாயிகள் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர்.
    • ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவிலில் ஞாயிறு தோறும் வாரச்ச ந்தை செயல்படுகிறது. வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பயிர் வகைகளை கொண்டு வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் மற்றும் நூல் மில்களில் தங்கி வேலை செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறி மற்றும் மளிகை சாமான்களை வாங்கிச்செல்வார்கள்.

    நேற்று வார சந்தையில் தக்காளி ஒரு கிலோ ரூ.10, கத்தரிக்காய் ரூ.40, பீர்க்கங்காய் ரூ.60, பெரிய வெங்காயம் ரூ.20, சின்ன வெங்காயம் ரூ. 30, உருளைக்கிழங்கு ரூ.30, பீட்ரூட் ரூ.40, புடலங்காய் ரூ.50, முட்டை கோஸ் ரூ.25, பீன்ஸ் ரூ.120, கேரட் ரூ.40, பாவற்காய் ரூ.60,வெண்டை க்காய் ரூ.60, இஞ்சி ரூ.100, அவரைக்காய் ரூ.80, நேரோ காய் ரூ. 30, கோவக்காய் ரூ.40, முள்ளங்கி ரூ. 40, பச்சை மிளகாய் ரூ.60,சுரக்காய் ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டது.இத்தகவலை வாரச்சந்தை காய்கறி வியாபாரி குமார் தெரிவித்தார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • தக்காளி விலை குறைவால் போட்டி போட்டு வாங்கி செல்லும் பொதுமக்கள்.
    • ஆண்டுதோறும் விளைச்சல் இருந்தபோதும், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் தக்காளி விளைச்சல் வழக்கத்தைக் காட்டிலும் 3 மடங்கு அதிகரித்து காணப்படும்.

    நாமக்கல்:

    தருமபுரி, பாலக்கோடு, கிருஷ்ணகிரி, ஓசூர், மணப்பாறை, கரூர், தொட்டியம், நாமக்கல், ராசிபுரம், சேலம், ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் விளைச்சல் இருந்தபோதும், ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்களில் தக்காளி விளைச்சல் வழக்கத்தைக் காட்டிலும் 3 மடங்கு அதிகரித்து காணப்படும்.

    கடந்த சில மாதங்களுக்கு முன் விளைச்சல் சரிவால் ஒரு கிலோ தக்காளி ரூ.120 வரை விற்பனையானது. அதன்பிறகு படிப்படியாக சரிவடைந்தது. தற்போது அனைத்து பகுதிகளிலும் தக்காளி விளைச்சல் வழக்கத்தைக் காட்டிலும் வெகுவாக அதிகரித்துள்ளது.

    இதனால் விவசாயிகள் பழங்கள் அழுகி வீணாவதை தடுக்க குறைவான விலைக்கு கிலோ ரூ.5-க்கு மொத்த வியாபாரிகளிடம் விற்பனை செய்கின்றனர். அவற்றை சரக்கு வாகனங்களில் கொண்டு வரும் விவசாயிகள் கிலோ ரூ.10, 12 என்ற விலையில் மக்களிடம் விற்பனை செய்கின்றனர்.

    சாலையோரங்களிலும், வீதி, வீதியாக சென்றும் ஒரே நாளில் 600 கிலோ வரை தக்காளியை விற்கின்றனர். நாமக்கல் பகுதியில் வெளிமாவட்ட வியாபாரிகள் பலர் சரக்கு வாகனங்களில் தக்கா ளியுடன் முகாமிட்டுள்ளனர்.

    இது குறித்து வியாபாரி கள் கூறுகையில், தக்காளி விளைச்சல் வரும் அக்டோபர் மாதம் வரை அதிகரித்து காணப்படும். ஒரு செடியில் 10 பழங்கள் காய்த்தால், தற்போது 30 பழங்கள் வரை காய்க்கும் பருவமாகும். இதனால் விலை சரிவடைந்துள்ளது. விவசாயிகளிடம் மொத்த மாக கொள்முதல் செய்து பல்வேறு இடங்களுக்கும் சரக்கு வாகனங்களில் எடுத்துச் சென்று 4 கிலோ ரூ.50 என விற்பனை செய்து வருகிறோம் என்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • செங்கோட்டை அருகே உள்ள சிவநல்லூர், இலத்தூர், அச்சன்புதூர், சிவராமபேட்டை, கொடிக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி சாகுபடி நடைபெறுகிறது.
    • தற்போது தக்காளி விளைச்சல் அதிகமாக உள்ளதால் தக்காளி விலை குறைந்து காணப்படுகிறது.

    செங்கோட்டை:

    தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள சிவநல்லூர், இலத்தூர், அச்சன்புதூர், சிவராமபேட்டை, கொடிக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி சாகுபடி நடைபெறுகிறது.

    அப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் கார், பிசான சாகுபடிக்கு அடுத்ததாக பூ மகசூலான தக்காளி, கத்தரிக்காய், வெண்டை, பூசணிக்காய், பச்சை மிளகாய் மற்றும் சாம்பார் வெள்ளரி உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.

    இந்நிலையில் தக்காளிக்கு நிலையான விலை இல்லாததால் ஆண்டுதோறும் நஷ்டத்தை சந்தித்து வருவதாக தக்காளி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    தற்போது தக்காளி விளைச்சல் அதிகமாக உள்ளதால் தக்காளி விலை குறைந்து காணப்படுகிறது. விவசாயிகளிடம் இருந்து ஒரு கிலோ தக்காளியை ரூ. 4-க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.

    ஆனால் ஒரு கிலோ தக்காளியை பயிரிட ரூ. 8 வரை செலவாகும் நிலையில் அதில் பாதி அளவில் தான் விற்பனை ஆவதால் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இதனால் செங்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் பொரும்பாலான இடங்களில் விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிடுகின்றனர். அவைகள் செடியிலேயே அழுகும் நிலையில் உள்ளது.

    விளைச்சல் உள்ள காலங்களில் தக்காளியை பாதுகாத்து பற்றாக்குறை காலங்களில் பயன்படுத்த முடியாததே இதற்கு காரணம். என அவர்கள் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக விவசாயிகள் கூறியதாவது: -

    3 மாதங்களுக்கு முன்னர் நடவு செய்து கடந்த ஒரு மாதமாக தக்காளி பறித்து புளியங்குடி மற்றும் கடையநல்லூர், பாவூர்சத்திரம் மார்க்கெட்டில் விற்று வருகிறோம்.

    ஒரு வாரமாக தக்காளி கொள்முதல் விலை சரிந்து வருகிறது. வாரச்சந்தையில் 12 கிலோ தக்காளி கூடை ரூ. 50 முதல் ரூ. 70-க்கு தான் வியாபாரிகள் வாங்கி வருகின்றனர். தக்காளி பயிரிட்டு 2 மாதங்களுக்கு பின்னர் காய் பறிக்கிறோம். 2 முறை உரம் போடுகிறோம். பூச்சி தாக்குதல் இருந்தால் மருந்து அடிக்கிறோம்.

    வாரம் 2 முறை தண்ணீர் பாய்ச்சி ஒரு முறை முழுமையாக களை எடுத்து, மண் அணைத்து தக்காளி பயிர் செய்கிறோம். மேலும் தக்காளியை பறிக்க கூலி, சந்தைக்கு கொண்டு செல்ல பயணக்கட்டணம் என அனைத்தும் சேர்த்து கிலோவுக்கு ரூ. 2 முதல் ரூ. 2.50 வரை செலவாகிறது.ஆனால் ஒரு கிலோ தற்போது ரூ. 4 முதல் ரூ. 5-க்கு விற்பளையாகிறது.இதனால் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது.

    விளைந்த தக்காளியை பறிக்காமல் செடியில் அழுகும்படி விடவும் மனம் இல்லை. வரத்து நாள்தோறும் அதிகளவில் உள்ளதால் விலை ஏறும் என்ற உறுதியும் இல்லாததால் இருப்பு வைக்கவும் முடியாத நிலை உள்ளது.

    இத்தகைய நிலையை மாற்ற தக்காளி சீசன் காலத்தில் சேமித்து வைக்க குளிர்தன கிடங்கு எங்கள் பகுதியில் அமைத்து கொடுக்க வேண்டும். மேலும் தக்காளி ஜூஸ் தயாரிக்கும் தொழிற்சாலை அமைத்து அரசு செலவில் கண்காணிக்கபட்டால் விவசாயத்தை நம்பிய எங்களை போன்ற விவசாயிகள் பயனடைவார்கள். மேலும் மாவட்டத்தில் வேலை வாய்ப்பும் அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • சேலம் மார்க்கெட்டுகளில் தக்காளி ஒரு கிலோ தற்போது 8 ரூபாய்க்கு விற்பனையாகிறது .
    • ஆடி மாதம் என்பதால் முகூர்த்தம் இல்லாததால் தேவை குறைந்ததாலும் இந்த விலை குறைந்துள்ளதாக அதிகாரிகள் ெதரிவித்தனர்.

    சேலம்:

    சேலம் மார்க்கெட்டுகளில் தக்காளி ஒரு கிலோ தற்போது 8 ரூபாய்க்கு விற்பனையாகிறது . கடந்த மாதத்தை விட வரத்து அதிகரித்துள்ளதாvvலும், ஆடி மாதம் என்பதால் முகூர்த்தம் இல்லாததால் தேவை குறைந்ததாலும் இந்த விலை குறைந்துள்ளதாக அதிகாரிகள் ெதரிவித்தனர். மற்ற காய்கறிகளின் விலை ஒரு கிலோவுக்கு வருமாறு-

    உருளைக் கிழங்கு ஒரு கிலோ ரூ.34, சின்ன வெங்காயம் 20, பெரிய வெங்காயம் 26, மிளகாய் 46, கத்திரி 24, வெண்டைக்காய் 16, முருங்கைக்காய் 20, பீர்க்கங்காய் 28, சுைரக்காய் 14, புடலங்காய் 22, பாகற்காய் 36, தேங்காய் 25, முள்ளங்கி 14, பீன்ஸ் 58, அவரை 34, கேரட் 70, மாங்காய் 40, மாம்பழம் 60, வாழைப்பழம் 20, கீரைகள் 18, பப்பாளி 24, கொய்யா கிலோ ரூ.35-க்கும் விற்பனையாகிறது. 

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தக்காளி வரத்து குறைந்ததால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் ஏராளமான ஏக்கர் பரப்பளவில் தக்காளி சாகுபடி செய்து வருகின்றனர். இந்த தக்காளிகள் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்பட்டு நெல்லை, தூத்துக்குடி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை, கோவை மற்றும் கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது கிராமப்பகுதிகளில் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.

    இதனால் வரத்து குறைந்துள்ளது. வடகாடு, பால்கடை, பெத்தேல்புரம், கண்ணனூர், பெரியூர் உள்ளிட்ட மலை கிராமங்களில் இருந்து மட்டும் தக்காளி வரத்து உள்ளது.

    இதன் காரணமாக ஒட்டன் சத்திரம் மார்க்கெட்டுக்கு 700 பெட்டிகள் மட்டுமே வந்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு 14 கிலோ எடை கொண்ட பெட்டி ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையானது. ஆனால் தற்போது ரூ.350 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது.

    குறைந்த அளவே தக்காளிகள் வந்துள்ளதால் உள்ளூர் வியாபாரிகளே வாங்கி சென்று வருகின்றனர். இதனால் வெளியூர்களுக்கு ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்புத்தாண்டு வருகிற 14-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. மேலும் திருவிழாக்களும் உள்ளதால் தக்காளி தேவை அதிகரித்துள்ளது. ஆனால் வரத்து குறைந்துள்ளதால் விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நெல்லை மாவட்டம் பாவூர்சத்திரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பயிரிடப்பட்ட தக்காளி, வெள்ளம் காரணமாக கேரளாவுக்கு அதிகளவு கொண்டு செல்லாததால் கிலோ ஒன்றுக்கு ரூ. 1 முதல் 2 வரை விற்பனையானது.
    பாவூர்சத்திரம்:

    நெல்லை மாவட்டத்தில் கீழப்பாவூர், குறும்பலாப்பேரி, பெத்தநாடார்பட்டி, வெய்க்காலிப்பட்டி, கல்லூரணி, மகிழ்வண்ணநாதபுரம், சுந்தர பாண்டியபுரம், சுரண்டை, மேலப்பாவூர், வெள்ளகால், ராஜபாண்டி, கருமடையூர், மூலக்கரையூர், சாலைப்புதூர், அருணாப் பேரி, ஆவுடையானூர், அரியப்புரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தற்போது பல்லாரி, மிளகாய், தக்காளி, வெண்டை, சோளம் மற்றும் பல்வேறு வகை காய்கறிகள் பயிரிட்டுள்ளன.

    தக்காளி மட்டும் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் பயிரிட்டுள்ளனர். இங்கு விளைவிக்கப்படும் தக்காளிகள் பாவூர்சத்திரம் காமராஜர் தினசரி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து விவசாயிகள் விற்கின்றனர். அப்படி விற்கப்படும் தக்காளிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா மற்றும் ஆந்திரா மாநிலத்திற்கும் கொண்டு செல்லப்படுகிறது.

    நாற்றுப்பாவி 20 நாட்கள் கழித்து வயல்களில் நடவு நட்டு 60 நாட்கள் கழித்து தக்காளிகள் ஓரளவு விளைச்சல் இருக்கும். ஆனால் தற்போது தென்மேற்கு பருவக்காற்று பலமாக வீசுவதாலும், ஒவ்வொரு நாள் வெயில் மற்றும் சீதோஷ்ண நிலை மாறி வருவதால் கீழப்பாவூர் ஒன்றிய பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள தக்காளி செடியில் இலை கருகல் மற்றும் மொட்டை நோய் ஏற்பட்டு செடிகள் பட்டுப்போய் காணப்பட்டது.

    நோயை கட்டுப்படுத்த விவசாயிகள் பல மருந்துகள் தெளித்து கஷ்டப்பட்டு தக்காளியை விளைவித்தனர். இதனால் தக்காளி மகசூல் தற்போது மிகவும் அதிகளவில் காணப்படுகிறது. ஆனால் மகசூலுக்கு தகுந்தாற்போல் மார்க்கெட்டில் விலை ஒரே நிலையில் இல்லாமல் விற்கப்படுகிறது.

    தற்போது தக்காளி வரத்து அதிகமாக உள்ளது. வழக்கமாக கேரளாவுக்கு அதிகமாக காய்கறிகள் கொண்டு செல்லப்படும். ஆனால் மழை வெள்ளம் காரணமாக கேரளாவில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால் அங்கு வாகனங்கள் செல்ல முடியவில்லை. மேலும் அங்கு இந்த ஆண்டு ஓணம் பண்டிகை கொண்டாடப்படவில்லை.

    இதன் காரணமாக நெல்லை மாவட்டத்தில் இருந்து கேரளாவிற்கு மிக குறைவான அளவிலேயே காய்கறிகள் கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அதில் தக்காளியும் அடங்கும். பாவூர்சத்திரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்பட்ட தக்காளிகள் கேரளாவிற்கு அனுப்பபடாததால் அவை நெல்லை மார்க்கெட்டுகளில் தேக்கமடைந்துள்ளன. கடந்த வாரம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.10 முதல் 15-க்கும் அதிகமாக விற்பனையானது. இந்த விலை விவசாயிகளுக்கு நஷ்டம் இல்லாமல் இருந்தது. நேற்று முன்தினம் 20 கிலோ கொண்ட ஒரு டப்பா தக்காளி ரூ. 30 முதல் ரூ. 40-க்கு விற்பனையானது.

    இந்த விலை இறக்கத்தால் கீழப்பாவூர் வட்டார விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடியிலேயே விட்டுவிட்டனர். இதனால் தக்காளிகள் கனிந்து நிலங்களில் விழுந்து அழுகி பாழாகி போகிறது. இதைத் தொடர்ந்து நேற்று தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ. 1 முதல் 2 வரை விற்கப்பட்டது.

    கடந்த வருடம் நாற்று பாவி, நடுவை நட, களை எடுக்க, மருந்து தெளிக்க ஒரு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வரை செலவானது. ஆனால் இந்த வருடம் தக்காளி பயிரிடப்பட்ட வயல்களில் இலை கருகல் நோயை கட்டுப்படுத்த பல மருந்துகள் தெளித்ததால் இந்த வருடம் ஒரு ஏக்கருக்கு ரூ.60 ஆயிரத்திற்கு மேல் செலவாகி விட்டது. இவ்வளவு பணம் செலவழித்தும் மார்க்கெட்டில் தக்காளிக்கு விலை இல்லாத காரணத்தினால் செலவழித்த தொகையை எடுக்க முடியுமா என அச்சத்தில் உள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×