என் மலர்
நீங்கள் தேடியது "Tirupattur"
வேலூர் மாவட்டத்தை 3-ஆக பிரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார். #Vellore #MinisterVeeramani
வேலூர்:
வேலூர் மண்டலத்திற்கு ரூ.6 கோடி மதிப்பில் ஒதுக்கப்பட்ட 24 பஸ்களில் 16 பஸ்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது.
இதில் மேலும், 8 புதிய பஸ்கள் இயக்க நிகழ்ச்சி வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு கொடியசைத்து புதிய பஸ்களை தொடங்கி வைத்தார்.
இதில் சென்னையிலிருந்து வேலூர் வழியாக ஓசூருக்கு 3 பஸ்களும், வேலூரிலிருந்து திருச்சிக்கு ஒரு பஸ்சும், வேலூரிலிருந்து ஈரோட்டுக்கு ஒரு பஸ்சும், ஆம்பூரிலிருந்து அம்பத்தூருக்கு ஒரு பஸ்சும், பேரணாம்பட்டிலிருந்து ஆவடிக்கு ஒரு பஸ்சும், குடியாத்தத்திலிருந்து சோழிங்கநல்லூருக்கு ஒரு பஸ்சும் இயக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அமைச்சர் கே.சி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்:- ‘‘வேலூரை 2 மாவட்டமாக பிரிக்க ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் வேலூர் மாவட்டத்தை வேலூர், அரக்கோணம், திருப்பத்தூர் என 3 மாவட்டமாக பிரித்தால் சிறப்பாக இருக்கும் என்ற கருத்தை முதல்- அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளேன். நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்து உள்ளார். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார். #Vellore #MinisterVeeramani
வேலூர் மண்டலத்திற்கு ரூ.6 கோடி மதிப்பில் ஒதுக்கப்பட்ட 24 பஸ்களில் 16 பஸ்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக தொடங்கி வைக்கப்பட்டது.
இதில் மேலும், 8 புதிய பஸ்கள் இயக்க நிகழ்ச்சி வேலூர் புதிய பஸ் நிலையத்தில் நடந்தது. கலெக்டர் ராமன் தலைமை தாங்கினார். அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு கொடியசைத்து புதிய பஸ்களை தொடங்கி வைத்தார்.
இதில் சென்னையிலிருந்து வேலூர் வழியாக ஓசூருக்கு 3 பஸ்களும், வேலூரிலிருந்து திருச்சிக்கு ஒரு பஸ்சும், வேலூரிலிருந்து ஈரோட்டுக்கு ஒரு பஸ்சும், ஆம்பூரிலிருந்து அம்பத்தூருக்கு ஒரு பஸ்சும், பேரணாம்பட்டிலிருந்து ஆவடிக்கு ஒரு பஸ்சும், குடியாத்தத்திலிருந்து சோழிங்கநல்லூருக்கு ஒரு பஸ்சும் இயக்கப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அமைச்சர் கே.சி.வீரமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில்:- ‘‘வேலூரை 2 மாவட்டமாக பிரிக்க ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் வேலூர் மாவட்டத்தை வேலூர், அரக்கோணம், திருப்பத்தூர் என 3 மாவட்டமாக பிரித்தால் சிறப்பாக இருக்கும் என்ற கருத்தை முதல்- அமைச்சரிடம் வலியுறுத்தி உள்ளேன். நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்து உள்ளார். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார். #Vellore #MinisterVeeramani
மாநில அளவிலான 3 நாட்கள் வாலிபால் போட்டி திருப்பத்தூர் அரசு பூங்கா சாலையில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் தொடங்கியது.
திருப்பத்தூர்:
திருப்பத்தூரில் மாநில அளவிலான 3 நாட்கள் வாலிபால் போட்டி திருப்பத்தூர் அரசு பூங்கா சாலையில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் மின்னொளியில் நேற்று தொடங்கியது.
போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் இந்தியன் வங்கி வருமான வரி துறை அணி, கஸ்டம்ஸ் அணி உள்பட பிற அணிகளும், இதேபோல் பெண்களுக்கான அணியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அணி, ஈரோடு அணி விளையாட்டு மேம்பாட்டு துறை அணி உட்பட பிற அணிகளும் மோதுகின்றன.
இந்த போட்டியை திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா, வேலூர் மாவட்ட பிஷப் டாக்டர் சவுந்தரராஜன், திருப்பத்தூர் தொகுதி நல்லதம்பி எம்.எல்.ஏ., அ.ம.மு.க. ஞானசேகர், தொழிலதிபர் கணேஷ்மல் உட்பட பலர் போட்டியை தொடங்கி வைத்தனர்.
வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம் உட்பட பல்வேறு பரிசுகளை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார். இந்த போட்டியை காண திருப்பத்தூரில் இருந்து ஏராளமானோர் வந்து பார்த்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி வாலிபால் முன்னாள் மாணவர்கள் மற்றும் அப்பூனிஸ் கிளப் செய்திருந்தனர்.
திருப்பத்தூரில் மாநில அளவிலான 3 நாட்கள் வாலிபால் போட்டி திருப்பத்தூர் அரசு பூங்கா சாலையில் உள்ள சப்-கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள மைதானத்தில் மின்னொளியில் நேற்று தொடங்கியது.
போட்டியில் ஆண்களுக்கான பிரிவில் இந்தியன் வங்கி வருமான வரி துறை அணி, கஸ்டம்ஸ் அணி உள்பட பிற அணிகளும், இதேபோல் பெண்களுக்கான அணியில் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் அணி, ஈரோடு அணி விளையாட்டு மேம்பாட்டு துறை அணி உட்பட பிற அணிகளும் மோதுகின்றன.
இந்த போட்டியை திருப்பத்தூர் சப்-கலெக்டர் பிரியங்கா, வேலூர் மாவட்ட பிஷப் டாக்டர் சவுந்தரராஜன், திருப்பத்தூர் தொகுதி நல்லதம்பி எம்.எல்.ஏ., அ.ம.மு.க. ஞானசேகர், தொழிலதிபர் கணேஷ்மல் உட்பட பலர் போட்டியை தொடங்கி வைத்தனர்.
வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ரூ.2 லட்சம் உட்பட பல்வேறு பரிசுகளை அமைச்சர் கே.சி.வீரமணி கலந்து கொண்டு பரிசுகளை வழங்குகிறார். இந்த போட்டியை காண திருப்பத்தூரில் இருந்து ஏராளமானோர் வந்து பார்த்தனர். போட்டிக்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி வாலிபால் முன்னாள் மாணவர்கள் மற்றும் அப்பூனிஸ் கிளப் செய்திருந்தனர்.