search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tiger"

    • ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர்.
    • தற்போது புலி நலமாக உள்ளது. அதை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்துள்ளோம்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் பேச்சி பாறை அருகே சிற்றார் ரப்பர் கழக தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் கடந்த ஜூலை மாதம் 3-ந்தேதி ஆடு ஒன்றை புலி கடித்துக் கொன்றது. அடுத்தடுத்து 6 ஆடுகள் மற்றும் 2 மாடுகளை புலி கொன்றதால் பொது மக்கள் அச்சமடைந்தனர். அட்டகாசம் செய்யும் புலியை பிடிக்க வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இதையடுத்து ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வந்த புலியை பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டனர். புலி நடமாட்டம் உள்ள பகுதியாக கருதப்பட்ட இடங்களில் கூண்டு மற்றும் கண்காணிப்பு கேமிராக்கள் அமைத்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. ஆனால் புலி சிக்கவில்லை.

    ட்ரோன் கேமரா, எலைட்படையினர் மூலமாகவும் தேடுதல் வேட்டை நடத்தினர். 10 நாட்களுக்கு மேலாக தேடியும் புலியை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்த எலைட் படையினரும், மருத்துவ குழுவினரும் திரும்பி சென்றனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பத்துகாணி அருகே ஒரு நூறாம் வயல் பகுதியில் குடியிருப்புக்குள் புகுந்து 4 ஆடுகளை புலி கடித்துக் கொன்றது. இதுபற்றிய தகவல் வனத்துறைக்கு தெரிவிக்கப்பட்டது.

    மாவட்ட வன அலுவலர் இளையராஜா தலைமையிலான குழுவினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். அங்கேயே முகாமிட்டு புலியை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். முதுமலை புலிகள் சரணாலயத்தில் இருந்து வனத்துறையை சேர்ந்த பழங்குடியினர் வரவழைக்கப்பட்டு தேடும் பணி நடந்தது.

    இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் கல்லறைவயல் பகுதியில் புலி நடமாட்டத்தை வனத்துறையினர் பார்த்தனர்.

    இதைத்தொடர்ந்து புலியை தொடர்ந்து கண்காணித்தனர். அப்போது புலி அந்த பகுதியில் உள்ள குகைக்குள் சென்றது. புலியை பொருத்தமட்டில் பகல் நேரங்களில் ஓய்வு எடுக்கும். இரவு நேரங்களில் மட்டுமே வெளியே சுற்றி தெரியும்.

    பகல் நேரத்தில் புலி குகைக்குள் சென்றதால், அது வெளியே வருவதற்கு நீண்ட நேரமாகும், அங்கேயே ஓய்வெடுக்கும் என்று வனத்துறையினர் கருதினார்கள். இதைத்தொடர்ந்து அந்த குகையின் வெளியே வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இரண்டு மணி நேரமாக புலியை பிடிக்க வியூகங்கள் வகுக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து மயக்க ஊசி மூலமாக புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. புலி இருந்த குகைக்குள் மயக்க ஊசி செலுத்தினார்கள். அதில் புலி மயக்கமடைந்தது. பின்னர் சிறிது நேரத்துக்கு பிறகு வனத்துறையினர் குகைக்குள் சென்று புலியை பிடித்தனர்.

    பிடிபட்ட புலியை வனத்துறையினர் பொதுமக்கள் உதவியுடன் சாலை பகுதிக்கு தூக்கி வந்தனர். தொடர்ந்து புலியை கூண்டுக்குள் அடைத்து டெம்போவின் ஏற்றி பேச்சிப்பாறை சோதனை சாவடிக்கு கொண்டு வந்தனர். அங்கு மருத்துவ குழுவினர் மீண்டும் புலியை பரிசோதனை செய்தனர். புலி பிடிபட்டது குறித்து அந்த பகுதியில் உள்ள பழங்குடி மக்களுக்கு தெரியவந்தது. இதைக் கேட்டு அவர்கள் நிம்மதி அடைந்தனர்.

    பிடிபட்ட புலி கடந்த 37 நாட்களாக வனத்துறையினருக்கு சவால் விடும் வகையில் சுற்றி திரிந்தது. சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் வனத்துறையினர் தேடுதல் வேட்டை நடத்தியதையடுத்து அதன் எதிர்புறம் உள்ள பத்துகாணி பகுதிக்கு புலி வந்துள்ளது. சுமார் 7 கிலோ மீட்டர் சுற்றளவிலேயே புலி சுற்றி திரிந்தபடி இருந்துள்ளது.

    பிடிபட்ட புலியை வனத்துறையினர் வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைக்க முடிவு செய்தனர். இதையடுத்து இரவோடு இரவாக வன அதிகாரி இளையராஜா தலைமையில் புலியை ஒரு வாகனத்தில் ஏற்றி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு சென்றனர்.

    பலத்த பாதுகாப்புடன் புலி கொண்டு செல்லப்பட் டது. புலியை கொண்டு சென்ற வாகனம் மிகவும் மெதுவாகவே சென்றது. நேற்று மாலை 6 மணிக்கு பேச்சிபாறையிலிருந்து புலியை ஏற்றி புறப்பட்ட வாகனமானது, இன்று காலை 11 மணியளவில் வண்டலூர் உயிரியல் பூங்கா விற்கு சென்றடைந்தது. அங்கு புலியை முறைப்படி ஒப்படைத்தனர்.

    இதுகுறித்து வன அதிகாரி இளையராஜா கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தின் மலையோர பகுதியில் புலி நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் சிற்றாறு சிலோன் காலனி பகுதியில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இரண்டு இடங்களில் கூண்டு மற்றும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டு தேடும் பணியில் ஈடுபட்டோம். ஆனால் புலி சிக்கவில்லை.

    அதே வேளையில் புலியின் கால் தடங்கள் ஒரு சில இடங்களில் கிடைத் தது. அதை வைத்து பார்த்த போது வயதான புலி என்பது தெரிய வந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பத்துகாணி பகுதியிலும் புலி அட்டகாசம் செய்தது. இதனால் தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. நேற்று மதியம் புலி நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது. புலியும் கண்ணில் தென்பட்டது.

    உடனே அதை பின்தொடர்ந்து சென்று கண்காணித்தோம். அப்போது புலி அந்த பகுதியில் உள்ள குகைக்குள் சென்றது. குகைக்குள் சென்ற புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்துள்ளோம். பிடிபட்ட புலிக்கு 13 வயது இருக்கும். தற்போது புலி நலமாக உள்ளது. அதை வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஒப்படைத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வயலுக்குள் டிராக்டர் ஒன்றில் விவசாயி ஒருவர் தனது நிலத்தில் உழுது செய்து கொண்டிருக்கிறார்.
    • ஒரு பயனர், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான நல்லிணக்கத்திற்கு இந்த வீடியோ சரியான எடுத்துக்காட்டு என கூறி உள்ளார்.

    மனிதர்கள்-விலங்குகள் இடையே மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், உத்தரபிரதேசம் மாநிலத்தில் பிலிபித் மாவட்டத்தில் உள்ள ஒரு வயலில் புலி ஒன்று உலா வரும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

    அதில், வயலுக்குள் டிராக்டர் ஒன்றில் விவசாயி ஒருவர் தனது நிலத்தில் உழுது செய்து கொண்டிருக்கிறார். அந்த இடத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் வரிப்புலி ஒன்று சாதாரணமாக நடந்து செல்வதை காண முடிகிறது. இதை மற்றொரு விவசாயி வீடியோவாக பதிவு செய்துள்ளார். அதனை ராஜ்லக்கானி என்பவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். வீடியோவை பார்த்த பயனர்கள் பலரும் புலியையும், மனிதனையும் இவ்வளவு நெருக்கமாக பார்த்ததில்லை என பதிவிட்டுள்ளனர்.

    வீடியோ வெளியான சிறிது நேரத்திலேயே 1 லட்சத்திற்கும் அதிகமானோரால் பார்க்கப்பட்டுள்ளது. 2 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக்ஸ் செய்துள்ளனர். அதில் ஒரு பயனர், விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இடையேயான நல்லிணக்கத்திற்கு இந்த வீடியோ சரியான எடுத்துக்காட்டு என கூறி உள்ளார்.

    • கால்நடைகளை அடித்து கொல்லும் புலி கண்காணிப்பு காமிராவில் சிக்காமல் போக்குகாட்டி வருகிறது.
    • வனத்துறையினர் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    கூடலூர்

    கூடலூர் தாலுகா தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட தேவன்-1 பகுதியில் கடந்த சில வாரங்களாக புலி ஒன்று ஊருக்குள் புகுந்து கால்நடைகளை அடித்து கொன்றது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். மேலும் கூண்டு வைத்து புலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து கூடலூர் கோட்ட வன அலுவலர் கொம்மு ஓம்காரம், உதவி வன பாதுகாவலர் கருப்பையா உத்தரவின்பேரில் வனச்சரகர் ராதாகிருஷ்ணன் தலைமையிலான வனத்துறையினர் தேவன்-1 பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்தினர். மேலும் புலி நடமாட்டத்தை கண்காணிக்க 14 இடங்களில் கேமராக்களை பொருத்தினர். அந்த கேமராக்களை தினமும் ஆய்வு செய்து வருகின்றனர்.

    ஆனால் இதுவரை புலி நடமாட்டம் கேமராக்களில் பதிவாகவில்லை. அது கேமராக்களில் சிக்காமல் போக்குகாட்டி வருகிறது. இருப்பினும் வனத்துறையினர் தொடர்ந்து அப்பகுதியில் முகாமிட்டு பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர்.

    இதுகுறித்து வனச்சரகர் ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, தேவன்-1 பகுதியில் 14 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. கால்நடைகளை கொன்று அட்டகாசம் செய்து வரும் விலங்கு புலியா அல்லது சிறுத்தையா என அடையாளம் காண திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை கேமராக்களில் எந்த வனவிலங்குகளின் நடமாட்டமும் பதிவாகவில்லை. இருப்பினும் அப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

    • அலிப்பிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு ஆகிய 2 நடைபாதை முழுவதும் இருபுறமும் முழு அளவில் வேலி அமைக்க வேண்டும்.
    • மலைப்பாதை முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும்.

    திருப்பதி:

    திருப்பதி ஏழுமலையான் கோவில் அமைந்துள்ள சேஷாசலம் வனப்பகுதியில் 100-க்கும் மேற்பட்ட சிறுத்தைகள், கரடிகள், யானைகள் போன்ற விலங்குகள் உள்ளன.

    இந்த விலங்குகள் இரவு நேரத்தில் உலாவுகின்றன. இவற்றுக்கான பாதைகளும் வனப்பகுதியில் உள்ளன. அவ்வப்போது இந்த விலங்குகள் இறை தேடி பக்தர்கள் செல்லும் மலை பாதை அருகே நடமாடுகிறது.

    சமீபத்தில் 3 வயது சிறுவனை சிறுத்தை கவ்வி சென்றது. ஆனால் அங்கே இருந்தவர்கள் விரட்டிச் சென்றதால் சிறுத்தை பயந்து போய் சிறுவனை வாயிலிருந்து கீழே போட்டுவிட்டு தப்பியது.

    திருப்பதி அடுத்த கர்நூல் மாவட்டத்தில் நல்ல மலை என்னும் அடர்ந்த வனப்பகுதி உள்ளது. இந்த வனப்பகுதியில் தான் முன்னாள் முதல் அமைச்சர் ஓய்.எஸ்.ஆர் ராஜசேகர ரெட்டி சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி அவர் இறந்தார். இங்கு ஏராளமான புலிகள் உள்ளன.

    நல்லமலை வனப்பகுதியில் இருந்து சேஷாசலம் பகுதிக்கு புலிகளுக்கான பாதை அமைக்க வனத்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நல்லமலையிலிருந்து புலிகள் சேஷாசலம் வனப்பகுதி வரை சுதந்திரமாக சுற்றி வரும் என வனத்துறை அதிகாரி மதுசூதன ரெட்டி தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அரசுக்கு தெரியப்படுத்தி சேஷாசலம் பகுதி வரை புலிகள் செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

    இதனால் திருப்பதி ஏழுமலையான் கோவில் அருகே உள்ள பகுதி வரை புலிகள் வர வாய்ப்புள்ளது.

    இதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சிறுத்தைகள் குழந்தைகளை தாக்கும் சம்பவம் நடந்துள்ளது.

    பெரிய புலிகள் நடமாடினால் பக்தர்களின் கதி என்னாவது என்பதே பீதியாக உள்ளது. முதலில் அலிப்பிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு ஆகிய 2 நடைபாதை முழுவதும் இருபுறமும் முழு அளவில் வேலி அமைக்க வேண்டும். ஆங்காங்கே 24 மணி நேரமும் ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்கள் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.

    மலைப்பாதை முழுவதும் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அப்போதுதான் பக்தர்கள் தைரியமாக திருப்பதி மலைக்கு நடந்து சென்று நேர்த்திக்கடன் செலுத்த முடியும் என வலியுறுத்தியுள்ளனர்.

    • ஒரு புலி திடீரென காட்டுக்குள் இருந்து வெளியே வந்தது.
    • புலியை வெகுஅருகில் பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே முதுமலை புலிகள் காப்பகம் உள்ளது. இது 321 சதுர கி.மீ. பரப்பளவை உள்ளடக்கியது. இங்கு புலி, சிறுத்தை, யானை உள்பட பல்வேறு விலங்குகள் உள்ளன.

    முதுமலை புலிகள் காப்பகத்தில் மாயாறு- சத்தியமங்கலத்தை இணைக்கும் யானை வழித்தடமும் உள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தையொட்டி சிங்காரா வனப்பகுதி உள்ளது. இங்கு சுற்றுலா பயணிகளின் வசதிக்காக போக்குவரத்து சாலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் நேற்று காலை, அந்த பகுதியில் வாகனங்கள் சென்று கொண்டு இருந்தன. அப்போது ஒரு புலி திடீரென காட்டுக்குள் இருந்து வெளியே வந்தது. இதனை பார்த்ததும் அங்கு சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். எனவே அந்த வழியாக சென்ற வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.

    அந்த புலி வாகன போக்குவரத்து பற்றி சிறிதும் கவலைப்படாமல், கம்பீரமாக நடந்து வந்தது. போக்குவரத்து சாலையை மெதுவாக கடந்து காட்டுக்குள் சென்று மறைந்தது. சிங்காரா போக்குவரத்து சாலையில் புலியை வெகுஅருகில் பார்த்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியில் உறைந்தனர். இருந்தபோதிலும் ஒருசிலர் புலியின் ராஜ நடையை, வீடியோ எடுத்து பொதுவெளியில் பகிர்ந்தனர். இது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • சுற்றுலா பயணிகள் தங்களது செல்போன்களில் புலியை வீடியோ எடுத்தனர்.
    • இதுகுறித்து வனத்துறையினர் வனவிலங்குகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்றனர்.

    ஊட்டி,

    ஊட்டி அருகே கல்லட்டி மலைப்பாதையில் வாகனத்தின் முன்பு கண்ணிமைக்கும் நேரத்தில் திடீரென பாய்ந்த புலியால் வாகன ஒட்டிகள் புலியை நேரில் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர்.

    நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளின் நடமாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊட்டியில் இருந்து மசின குடி செல்லும் கல்லட்டி சாலை வனப்பகுதி வழியாக செல்லும் மலை பாதையாகும். இந்த கல்லட்டி மலை பாதையில் 36-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் சுற்றுலா பயணிகள் மலைப்பாதையை வீடியோ பதிவு செய்தபடி வந்த போது சீகூர் பாலம் அருகில் திடீரென வன பகுதியிலிருந்து புலி ஒன்று சாலையை நோக்கி பாய்ந்து, அடுத்த பகுதியில் இருந்த வனப்பகுதிக்கு சென்றது.

    தீடிரென மின்னலை போல் சாலையை கடந்த புலியை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து தங்களது செல்போன்களில் புலியை வீடியோ எடுத்தனர். இந்த காட்சி சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, வனவிலங்குகள் சாலையை கடக்கும் என்பதால் வாகனங்களை வேகமாக இயக்கக் கூடாது. வனவிலங்குகளுக்கு தொந்தரவு செய்யக்கூடாது என்றனர்.

    • புலிகளில் நடமாட்டத்தை கண்டறிய கிராமப் பகுதிகளில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை அமைத்துள்ளனர்.
    • புலிகளை கூண்டு வைத்து பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டம் ஸ்ரீசைலம் புலிகள் காப்பகத்தில் தற்போது 73 புலிகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளில் புலிகளின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.

    இதனால் புலிகள் பல்வேறு ஜோடிகளாக சுற்றி திரிகின்றன.

    சில புலிகள் சரணாலயத்தில் உள்ள அடர்ந்த காடுகளை விட்டு வெளியேற தொடங்கியுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு சரணாலயத்திலிருந்து 2 புலிகள் வெளியே வந்தன.

    வனப்பகுதி எல்லையோர கிராமங்களில் கடந்த சில நாட்களாக 2 புலிகள் நடமாடி வருகிறது.

    கிராமங்களுக்குள் புகுந்து பசுக்களை புலிகள் அடித்து கொன்றது.

    இரவு நேரங்களில் கிராமங்களில் புகுந்து ஆடு, மாடுகளை கொன்று அட்டகாசம் செய்தன.

    இதனால் கிராம மக்கள் பெரும் அச்சத்தில் உறைந்துள்ளனர். புலிகளில் நடமாட்டத்தை கண்டறிய கிராமப் பகுதிகளில் வனத்துறையினர் கண்காணிப்பு கேமராக்களை அமைத்துள்ளனர்.

    மேலும் வன ஊழியர்களும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். புலிகளை கூண்டு வைத்து பிடிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    வனத்துறையினர், வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் மின்சாரத்துறையினர் கிராம மக்களுக்கு செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

    புலிகள் நடமாடுவதால் வனப்பகுதி அல்லது வயல்வெளிகளுக்கு தனியாக செல்ல வேண்டாம் என எச்சரித்துள்ளனர்.

    இதுகுறித்து வினுகொண்டா வனச்சரக அலுவலர் சையத் உசேன் கூறுகையில்:-

    "அலைந்து திரியும் புலிகள் மனிதர்களை கொன்று சாப்பிடக் கூடியது அல்ல. இதனால் கிராம மக்கள் பீதியடைய வேண்டாம். புலிகளை காப்பாற்றுவது அனைவரின் பொறுப்பு".

    புலிகள் காப்பகத்தில் புலிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், புலிகள் தங்கள் வாழ்விடத்தை விட்டு வெளியே வருகின்றன.

    அவற்றை மீண்டும் காட்டுக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

    • வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி திரிவது அதிகமாக காணப்பட்டது.
    • சுற்றுலா பயணிகள் புகைப்படம், வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர்.

    ஊட்டி,

    முதுமலை புலிகள் காப்ப கத்தில் காட்டுயானைகள், புலிகள், மான்கள், காட்டெருமைகள், செந்நாய்கள், சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது.

    கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததாலும், வறட்சி ஏற்பட்டதாலும் வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி குடியிருப்பு பகுதிகளுக்குள் சுற்றி திரிவது அதிகமாக காணப்பட்டது. மேலும் வனவிலங்குகள் வேறு பகுதிக்கும் இடம் பெயர்ந்தும் வந்தன.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக முதுமலை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமானது முதல் கன மழையும் பெய்து வருகிறது. இதனால் வனப்பகுதிகளில் பசுமை திரும்பி உள்ளது.இதன் காரணமாக தற்போது முதுமலை பகுதிகளில் வனவி லங்குகளின் நட மாட்டம் அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் முதுமலை. புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் புலி ஒன்று புல்லில் படுத்து இருந்தது. இதை அவ்வழியாக வாகனங்களில் சென்றவர்கள் வீடியோ எடுத்தனர்.

    நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்து வீடியோவுக்கு போஸ் கொடுத்த புலி, பின்னர் வனப்பகுதிக்குள் சென்றது. இதனை சுற்றுலா பயணிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, தற்போது மழை பெய்துள்ளதால் வனவிலங்குகள் சாலையை யொட்டி வருகின்றனர். எனவே கோடை சீசனை அனுபவிக்க நீலகிரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், முதுமலை சாலைகளில் தங்களது வாகனங்களை அதிவேகமாக இயக்கக்கூடாது. வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி வைக்கக்கூடாது. வனவிலங்குகளை தொந்தரவு செய்ய கூடாது. இதை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.

    • கடந்த 10 நாட்களாக சிறுத்தை புலி எந்த கால்நடையையும் வேட்டையாடவில்லை. மேலும் இப்பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறியும் தெரியவில்லை.
    • கரூர் மாவட்டத்தில் முகாமிட்டு சிறுத்தை புலி பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். தற்போது அந்த பகுதியிலும் கடந்த ஒரு வாரமாக சிறுத்தை புலி நடமாட்டம் தென்படவில்லை. இதனால் பரமத்திவேலூர், கரூர் பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே இருக்கூர் ஊராட்சி செஞ்சுடையாம்பாளையம், வெள்ளாளபாளையம், புளியம்பட்டி மற்றும் சுண்டப்பனை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆடு, கன்று குட்டி, கோழிகள், மயில்கள், நாய் உள்ளிட்டவைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை புலி பொதுமக்க ளுக்கு அச்சுறுத்தலாக இருந்தது.

    இந்த சிறுத்தை புலியை பிடிக்க வனச்சரக அலுவலர் பெருமாள் தலைமையில் வனத்துறை யினர் ட்ரோன், கண்காணிப்பு காமிரா மற்றும் கூண்டு அமைத்து அதன் நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் கடந்த 10 நாட்களாக சிறுத்தை புலி எந்த கால்நடையையும் வேட்டையாடவில்லை. மேலும் இப்பகுதியில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதற்கான அறிகுறியும் தெரியவில்லை.

    அதை உறுதி செய்யும் வகையில், கரூர் மாவட்டம் நொய்யல் அருகே அத்திப்பாளையம்புதூரில் கடந்த 16-ந் தேதி சிறுத்தை புலி 5 ஆடுகளை கடித்து கொன்றது. தகவல் அறிந்த இருக்கூர் சமுதாய கூடத்தில் முகாமில் இருந்த சேலம், நாமக்கல், ஈரோடு, சத்தியமங்கலம், முதுமலை பகுதிகளை சேர்ந்த வனத்துறையினர், கரூர் மாவட்டத்தில் முகாமிட்டு சிறுத்தை புலி பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். தற்போது அந்த பகுதியிலும் கடந்த ஒரு வாரமாக சிறுத்தை புலி நடமாட்டம் தென்படவில்லை. இதனால் பரமத்திவேலூர், கரூர் பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.

    மேலும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த 40க்கும் மேற்பட்ட வனத்துறையினர், தங்களது கூடாரங்களை காலி செய்து வருகின்றனர். தற்போது 4 பேர் மட்டுமே பணியில் உள்ளனர்.

    இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    பரமத்திவேலூர், கரூர் பகுதிகளில் சிறுத்தை புலியின் நடமாட்டம் தென்படவில்லை. சிறுத்தை புலி ஒரே இரவில் 50 கிலோமீட்டர் வரை கடந்து செல்லும் திறன் உடையது. மேலும் கரூர் மாவட்ட எல்லைப் பகுதியில் இருந்து கொடைக்கானல் மலை, 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இதனால் சிறுத்தை புலி கொடைக்கானல் பகுதிக்கு சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.

    • கடந்த 15 நாட்களாக கால்நடைகள் மற்றும் நாய்களை சிறுத்தை புலி இரவு நேரங்களில் வேட்டையாடி வந்ததால் 50-க்கும் மேற்பட்ட வனத்து றையினர் கால் தடங்களை வைத்து கிராமங்களில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர்.
    • நேற்று இரவு வழக்கம்போல வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து பார்த்த போது 2 ஆடுகளை காண வில்லை. சிறுத்தை புலி வேட்டையாடி இருக்குமோ என்ற சந்தேகத்தில் வனத்துறையினருக்கு காளி பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி தகவல் கொடுத்தார்.

    பரமத்தி வேலூர்:

    பரமத்தி வேலூர் தாலுகா விற்கு உட்பட்ட இருக்கூர், செஞ்சுடையாம்பாளையம், சுண்டப்பனை,வெள்ளாளபாளையம்,ரங்கநாதபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ஆடுகள், கன்றுகள், நாய்கள் மற்றும் மயில்கள் உள்ளிட்டவைகளை கடந்த 15 நாட்களுக்கு மேலாக வேட்டையாடி வந்த சிறுத்தை புலி கடந்த நான்கு நாட்களாக இப்பகுதியில் எந்த கால்நடைகளையும் வேட்டையாடவில்லை.

    கடந்த 15 நாட்களாக கால்நடைகள் மற்றும் நாய்களை சிறுத்தை புலி இரவு நேரங்களில் வேட்டையாடி வந்ததால் 50-க்கும் மேற்பட்ட வனத்து றையினர் கால் தடங்களை வைத்து கிராமங்களில் சிறுத்தை புலி நடமாட்டம் இருப்பதை உறுதி செய்தனர். இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாமலும் விவசாய பணிகளை மேற்கொள்ள முடியாத சூழ்நிலைக்கும் உள்ளாகியுள்ளனர்.

    செஞ்சுடையாம்பா ளையம் பகுதியில் உள்ள கல்குவாரியில் சிறுத்தை புலி வந்து சென்றதற்கான கால்தடங்கள் இருப்பது கண்டறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்பகுதியில் இருந்து இரவில் 30 கிலோமீட்டர் தூரம் வெளியே சென்று வேட்டையாடிவிட்டு மீண்டும் அதன் இருப்பி டத்திற்கு திரும்பி வருவதும் தெரியவந்துள்ளது.

    இந்த நிலையில் மாவட்ட வனசரக அலுவலர் பிரவீன் குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட வனத்து றையினர் சிறுத்தை புலி வந்து செல்லும் இடம் கண்டறியப்பட்ட பகுதியில் மொத்தம் 18 கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி யும், இரண்டு கூண்டுகள் வைத்து சிறுத்தை புலியின்

    நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.மேலும் இரவு நேரங்களில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ட்ரோன் கேமராக்கள் மூலமும் சிறுத்தை புலியை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். ஆனால் கடந்த 4 நாட்களாக இப்பகுதியில் சிறுத்தை புலி எந்த கால்நடைகளையும் பிடிக்க வில்லை என்பதால் இடம் மாறி வேறு பகுதிக்கு சென்று விட்டதா? என வனத்துறையினர் தீவிர மாக கண்காணித்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று பாண்டமங்கலம் அருகே உள்ள கொளக்காட்டுப்பு தூர் பகுதியில் உள்ள தோட்டப் பகுதியில் சிறுத்தை புலியின் கால் தடங்கள் பதிந்து இருப்பதாக வனத்துறையினருக்கு நேற்று தகவல் கிடைத்தது.தகவலின் அடிப்படையில் வனத்துறையினர் கொளக்காட்டுப்புதூர் பகுதியை சேர்ந்த மணி கண்டன் மற்றும் ராமாயி ஆகியோரது தோட்டப் பகுதிக்கு சென்று சிறுத்தை புலியின் கால் தடங்களை ஆய்வு செய்ததில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு

    சிறுத்தை புலி வந்து சென்ற

    தற்கான பழைய கால்த டங்கள் என்பதை உறுதி செய்தனர். மேலும் சிறுத்தை புலியின் நடமாட்டத்தை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் வனத்துறை யினர் தெரிவித்தனர்.

    இந்நிலையில் பரமத்தி

    அருகே காளிப்பாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது

    38).விவசாயி.அதே பகுதி யில் இவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் ஆடு களை வளர்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம்போல வீட்டிற்கு சென்று விட்டு

    காலையில் வந்து பார்த்த போது 2 ஆடுகளை காண வில்லை. சிறுத்தை புலி வேட்டையாடி இருக்குமோ என்ற சந்தேகத்தில் வனத்துறையினருக்கு காளி பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி தகவல் கொடுத்தார்.

    தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனச்சரகர் பெருமாள் தலைமையிலான வனத்துறையினர் அப்பகுதி யில் பதிவான கால் தடங்கள்

    சிறுத்தை புலி கால் தடமா?

    என ஆய்வு செய்து வருகின்ற

    னர்.இந்நிலையில் பரமத்தி வேலூர் பகுதியில் கால்ந டைகளை தொடர்ந்து வேட்டையாடி வரும் சிறுத்தை புலி கடந்த நான்கு நாட்களாக சிறுத்தைப்புலியின் நட

    மாட்டம் பற்றிய எந்த தடை

    யும் இல்லை. இதனால் சிறுத்தை இடம் மாறி

    இருக்கலாம் என்று

    வனத்துறை நேற்று முன்தினம் தெரிவித்திருந்தனர்.

    அதை உறுதி செய்யும் வகையில் நேற்று கரூர் மாவட்டம் நொய்யல் அருகே அத்திப்பாளையம் புதூர் பகுதியில் சிறுத்த புலி ஆட்டை வேட்டையாடி உள்ளது. பரமத்தி வேலூரில் முகாமில் இருந்த வனத்துறையை சேர்ந்த மலைவாழ் மக்கள் நொய்யல் அருகே அத்திப்பாளையம் புதூர் பகுதிக்கு சென்றுள்ளனர்.இதுகுறித்து வனத்துறையினர் கூறியதாவது:-

    கடந்த நான்கு நாட்களாக சிறுத்தைப்புலி பற்றிய எந்த தடையும் இல்லை. இருக்கூர் சுற்றுவட்டார பகுதியில் வனத்துறையினரின் தேடுதல் வேட்டை அதி கரித்திருப்பதால் பயந்து போன சிறுத்தை புலி இருக்கூர்பகுதியில் இருந்து காவிரி ஆற்றை கடந்து அக்கரையான கரூர் மாவட்டம் நொய்யல் வருகை அத்திப்பாளையம் புதூர் பகுதிக்கு சென்றுள்ளது. ஆனால் நீண்ட காலமாக தான் வசித்த கல்குவாரியை விட்டு போகாது. மீண்டும் இதே பகுதிக்கு திரும்ப வரலாம். அதனால் பொதுமக்கள் அலட்சியமாக இல்லாமல் எச்சரிக்கையுடன் தங்களது கால்நடைகளையும், குழந்தை

    களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

    இருக்கூர் பகுதி மற்றும் கல்குவாரிகளில் புலிகளின் தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    • புலியை கூண்டுக்குள் விட்டு அது வேட்டையாடுவதற்காக கோழி, முயல் போன்றவற்றை விட்டு வேட்டை பயிற்சி அளித்தனர்.
    • அறுவை சிகிச்சைக்கு பின்னர் மருத்துவ குழுவினர் புலியின் உடல்நிலையை சிறப்பாக கண்காணித்து வருகின்றனர்.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள முடீஸ் பஜார் பகுதியில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி உடல் நலமில்லாத நிலையில் புலிக்குட்டி ஒன்று நடமாடியது.

    இதுபற்றி அறிந்ததும் மானாம்பள்ளி வனத்துறையினர் வனக்குழுவினருடன் இணைந்து அந்த புலிக்குட்டியை பிடித்தனர். பின்னர் புலிக்குட்டியை அய்யர்பாடி எஸ்டேட் பகுதியில் இருக்கும் மனித-வனவிலங்கு மோதல் தடுப்பு மற்றும் மீட்பு மையத்தில் வைத்து பராமரித்து வந்தனர்.

    மேலும் அங்கு வைத்து புலிக்குட்டிக்கு மருத்துவ சிகிச்சையும் அளித்து வந்தனர். ஆனால் அங்கு வைத்து பராமரிப்பதில் சிரமம் ஏற்பட்டதால் புலியை மானாம்பள்ளி வனப்பகுதியில் உள்ள வனத்துறையினர் தங்கும் விடுதிக்கு கொண்டு சென்று பாதுகாத்து வந்தனர்.

    இந்த நிலையில் புலியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது. இதையடுத்து புலிக்கு தானாகவே வேட்டையாடி சாப்பிடுவதற்கு தேவையான பயிற்சிகளை அளிக்க வனத்துறையினர் முடிவு செய்தனர்.

    இதற்காக தென்னிந்தியாவிலேயே முதல் முறையாக மந்திரிமட்டம் என்ற பகுதியில் ரூ.75 லட்சம் மதிப்பில் அதிநவீன வசதிகளுடன் கூடிய கூண்டு அமைக்கப்பட்டது.

    புலியை கூண்டுக்குள் விட்டு அது வேட்டையாடுவதற்காக கோழி, முயல் போன்றவற்றை விட்டு வேட்டை பயிற்சி அளித்தனர். புலியும் அவைகளை வேட்டையாடி சாப்பிட்டு வந்தது.

    இதற்கிடையே புலியின் உடல்நிலையை கால்நடை டாக்டர்கள் பரிசோதித்தனர். அப்போது புலிக்கு பல் வலி மற்றும் பல் ஈறுகளில் தொற்று இருப்பது தெரியவந்தது.

    உடைந்த பல் துண்டு ஒன்று ஈறுகளில் சிக்கியிருந்ததும் தெரியவந்தது. இதனால் அந்த பல் துண்டை அகற்றுவதற்கு வனத்துறையினர் நடவடிக்கை எடுத்தனர்.

    அதன்படி முதன்மை வனவிலங்கு பாதுகாவலர் உத்தரவின் பேரில் வண்டலூர் உயிரியல் பூங்கா, கால்நடை டாக்டர் ஸ்ரீதரன், ஆனைமலை புலிகள் காப்பகத்தின் கால்நடை டாக்டர் விஜயராகவன், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கால்நடை டாக்டர் சதாசிவம், டாக்டர்கள் கோபிகிருஷ்ணா, ஞானவிபாக்கியம் ஆகியோர் அடங்கிய கால்நடை மருத்துவ குழுவினர் 5 மணி நேரத்திற்கு மேலாக புலிக்கு அறுவை சிகிச்சை செய்து உடைந்த பல் துண்டு அகற்றப்பட்டு அந்த இடத்தில் பையோன்டென்டைன் கொண்டு அடைக்கப்பட்டது.

    அறுவை சிகிச்சைக்கு பின்னர் மருத்துவ குழுவினர் புலியின் உடல்நிலையை சிறப்பாக கண்காணித்து வருகின்றனர். தொடர் கண்காணிப்புக்கு பிறகு மீண்டும் உடல்நிலை மற்றும் பல பரிசோதனை செய்யப்பட்டு மீண்டும் புலியை கூண்டில் விடுவது குறித்து முடிவு எடுக்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


    • எச்.பி.எப். குடியிருப்புப் பகுதி அருகில் உள்ள வனப்பகுதியில் புலி சுற்றித்திரிகிறது
    • கரடி கடந்த சில நாள்களாக அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது.

    ஊட்டி,

    ஊட்டி - கூடலூா் சாலையில் எச்.பி.எப்.பகுதியில் வளா்ப்பு எருமைைய கடந்த புதன்கிழமை வனவிலங்கு வேட்டையாடி, மீதமுள்ள உடலை குடியிருப்பை ஒட்டியுள்ள வனப் பகுதியில் விட்டு சென்றது. இதன் பேரில் அங்கு சென்று வனத் துறையினா் ஆய்வு நடத்தினா். பின்னா் கால்நடை மருத்துவா்கள் வரவழைக்கப்பட்டு எருமையின் உடல் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

    இந்நிலையில், எச்.பி.எப். குடியிருப்புப் பகுதி அருகில் உள்ள வனப்பகுதியில் புலி சுற்றித்திரிவதை அந்த பகுதியைச் சோ்ந்த சிலா் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனா். இதனால் இரவு நேரங்களில் அந்த பகுதியில் நடமாட பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனா்.

    மேலும், அப்பகுதியில் வனத் துறையினா் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனா்.

    ஊட்டி 27-வது வாா்டு தீட்டுக்கல் பகுதியில் பால் பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் கரடி புகுந்து கடந்த சில நாள்களாக அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகிறது. இதனால், அப்பகுதி பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனா்.

    ×