என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Three-phase electricity"
- செங்கோட்டை நகராட்சி 12-வது வார்டு நீராத்துலிங்கம் தெரு பகுதியில் கடந்த 13ஆண்டுகளாக ஒருமுனை மின்சார வசதி (சிங்கிள் பேஸ்) இருந்து வந்துள்ளது.
- நகர்மன்ற உறுப்பினா் இசக்கித்துரை பாண்டியனிடம் அந்த பகுதி பொதுமக்கள் மும்முனை மின்சார வசதி செய்து தரக்கோரி கோரிக்கை வைத்தனா்.
செங்கோட்டை:
செங்கோட்டை நகராட்சி 12-வது வார்டு நீராத்துலிங்கம் தெரு பகுதியில் கடந்த 13ஆண்டுகளாக ஒருமுனை மின்சார வசதி (சிங்கிள் பேஸ்) இருந்து வந்துள்ளது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் தங்கள் பகுதியில் மும்முனை மின்சார வசதி செய்து தரக்கோரி சம்பந்தபட்ட அலுவலகத்தில் மனுக்கள் அனுப்பி வைத்துள்ளனா். ஆனால் இதுவரையில் அந்த பகுதி பொதுமக்களுக்கு மும்முனை மின்சார வசதி செய்து தரப்படாமல் இருந்து ள்ளது. இதனையடுத்து தற்போதைய அந்த வார்டு நகர்மன்ற உறுப்பினா் இசக்கித்துரைப் பாண்டியனிடம் அந்த பகுதி பொதுமக்கள் மும்முனை மின்சார வசதி செய்து தரக்கோரி கோரிக்கை வைத்தனா்.
உடனே இசக்கித்துரைப் பாண்டியன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இந்த பகுதிக்கு மும்முனை மின்சார வசதி செய்து தரக்கோரி கோரிக்கை வைத்தார். இதனையடுத்து செயற்பொறியாளா் கற்பகவிநாயகசுந்தரம் (தென்காசி), உதவி செயற்பொறியாளா் (செங்கோட்டை) குத்தாலிங்கம், மின்பொறியாளா் ஜெயனுலாபுதீன், போர்மேன் ஸ்ரீஜித், மின்பாதை ஆய்வாளா் கருப்பசாமி சுந்தரம் மற்றும் மின் ஊழியா்கள் சம்ப ந்தப்பட்ட நீராத்துலிங்கம் தெரு பகுதிக்கு வந்து மின் பாதைகளை சரி செய்து அப்பகுதிக்கு மும்முனை மின்சார வசதி செய்து கொடுத்தனா்.
இதனையடுத்து தங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டதை அறிந்து அப்பகுதி பொதுமக்கள் 12-வது வார்டு நகர்மன்ற உறுப்பினா் இசக்கித்துரைப்பாண்டியன் மற்றும் மின்சார வாரிய அதிகாரிகள், அலுவலா்கள், மின் ஊழியா்களுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்தனா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்