search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Thoothukudi govt hospital"

    தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஆளில்லா விமானம் மூலம் போலீசார் கண்காணித்து வருகிறார்கள்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான 13 பேரில் 7 பேரின் உடல்கள் ஐகோர்ட் உத்தரவுப்படி நேற்று மறுபிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அதனை அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணி நேற்று மாலை தொடங்கி இன்றும் தொடர்ந்து நடந்து வருகிறது.

    உடலை வாங்க கூட்டமாக திரண்டு வரக்கூடாது எனவும், குடும்பத்தினர் மட்டுமே வந்து உடலை பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி உடலை வாங்க வரும் உறவினர்களிடம் மட்டும் ஆஸ்பத்திரி வளாகத்திற்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். மற்றவர்களை போலீசார் அனுமதிக்கவில்லை.

    குடியிருப்பு பகுதியில் பறந்த குட்டி விமானம்.

    மேலும் அரசு ஆஸ்பத்திரி வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தேவையில்லாமல் யாரேனும் கூட்டமாக நிற்கின்றனரா? அல்லது திரண்டு வருகிறார்களா? என்று போலீசார் ரோந்து சுற்றி கண்காணித்து வருகின்றனர். மேலும் கேமிரா பொருத்திய ஆளில்லா குட்டி விமானத்தை பறக்க செய்து அதன் மூலம் வீடியோ எடுத்து கண்காணித்து வருகிறார்கள்.

    அந்த விமானம் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தின் அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளிலும் பறக்கவிடப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. #ThoothukudiGovtHospital

    ×