என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tho festival"
- மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு மூன்று நாள் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
- உப்புப்பாளையம் சாலையைச் சோ்ந்த சிவகுமாா் ரூ. 3 லட்சத்து 81 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்துள்ளாா்.
வெள்ளகோவில் :
வெள்ளக்கோவில் ஸ்ரீ வீரக்குமார சுவாமி கோவில் தோ் திருவிழா கடைகள் ரூ. 3.81 லட்சத்துக்கு ஏலம்போனது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு மூன்று நாள் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.
நடப்பாண்டு தோ் திருவிழா வரும் பிப்ரவரி 19 ந் தேதி தொடங்குகிறது. இதையொட்டி திருவிழாவில் தற்காலிக கடைகள் அமைத்து சுங்க வசூல் செய்யும் உரிமைக்கான பொது ஏலம் கோவில் அலுவலகத்தில் நடத்தப்பட்டது.
திருப்பூா் இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் செல்வராஜ் தலைமை வகித்தாா். காங்கயம் அறநிலையத் துறை ஆய்வாளா் அபிநயா, கோயில் செயல் அலுவலா் ராமநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கோவில் குலத்தவா்கள், பொதுமக்கள் பங்கேற்ற இந்த ஏலத்தில் 5 நபா்கள் கலந்துகொண்டனா். இவா்களில் உப்புப்பாளையம் சாலையைச் சோ்ந்த சிவகுமாா் ரூ. 3 லட்சத்து 81 ஆயிரத்துக்கு ஏலம் எடுத்துள்ளாா்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்