search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "thirunallar temple"

    • சனிப்பெயர்ச்சி விழா இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20-ந்தேதி நடக்கிறது.
    • இந்த ஆண்டு முழுவதும் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.

    காரைக்காலை அடுத்துள்ள திருநள்ளாறில் உலகப் புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இ்ங்கு சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 20-ந்தேதி நடக்கிறது. அன்றைய தினம் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார். இதையொட்டி இந்த ஆண்டு முழுவதும் பக்தர்களின் வருகை அதிகமாக இருக்கும்.

    இந்தநிலையில் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டதாலும், நேற்று சனிக்கிழமை என்பதாலும் புதுச்சேரி, சென்னை, கோவை, திருச்சி, காஞ்சீபுரம், சேலம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் திருநள்ளாறில் குவிந்தனர்.

    அதிகாலை முதலே வந்த பக்தர்கள் கோவில் அருகே உள்ள நளன் குளத்தில் புனித நீராடி சனீஸ்வரரை நீண்ட வரிசையில் நின்று, அர்ச்சனை, அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர்.

    கோடை வெயில் தாக்கி வருவதால் பக்தர்கள் வெயிலை சமாளிக்க, நளன்குளத்தில் நீண்ட நேரம் புனித நீராடினர். கோவில் ஊழியர்கள், போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    • மே 16-ந் தேதி கொடியேற்றம் நடக்கிறது.
    • தேரோட்டம் மே 30-ந் தேதி நடக்கிறது.

    காரைக்காலை அடுத்த திருநள்ளாற்றில் உலக புகழ் பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வார்கள்.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா 18 நாட்கள் சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான பிரம்மோற்சவ விழா நேற்று பந்தல்கால் முகூர்த்தம் நிகழ்ச்சியுடன் நேற்று தொடங்கியது.

    விழாவையொட்டி கொடிக்கம்ப விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து பந்தலுக்கான கம்பத்திற்கு அபிஷேக ஆராதனை நடத்தப்பட்டு, பந்தல்கால் முகூர்த்த நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள், திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் சிங்காரவேலு மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    பிரமேற்சவ விழா கொடியேற்றம் அடுத்த மாதம் (மே) 16-ந் தேதியும், தேரோட்டம் மே 30-ந் தேதியும், சனீஸ்வர பகவான் தங்க காக வாகனத்தில் திருவீதியுலா நிகழ்ச்சி மே 31-ந் தேதியும், தெப்ப உற்சவ விழா ஜூன் 1-ந் தேதியும் நடைபெற உள்ளது.

    • 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடப்பது வழக்கம்.
    • திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது.

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து சாமி தரிசனம் செய்கிறாா்கள்.

    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் 2½ ஆண்டுகளுக்கு ஒரு முறை சனிப்பெயர்ச்சி விழா சிறப்பாக நடப்பது வழக்கம். தற்போது மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு சனிப்பெயர்ச்சி விழா வருகிற டிசம்பர் மாதம் 20-ந் தேதி (புதன்கிழமை) நடக்கிறது.

    இக்கோவிலில் வாக்கிய பஞ்சாங்கம்படி, இந்த ஆண்டு வருகிற டிசம்பர் மாதம் 20-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறுகிறது என்றும், அன்று மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் பிரவேசிக்கிறார் என அதிகாரப்பூர்வமாக தேதி, நேரம் அறிவிக்கப்பட்டது.

    இதையொட்டி திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தொடங்கியுள்ளது.

    ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வாக்கிய பஞ்சாங்கப்படி வருகிற டிசம்பர் தான் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.
    • சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலக புகழ்பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    அந்த வகையில் இக்கோவிலில், சனிப்பெயர்ச்சி விழா 2½ ஆண்டுகளுக்கு ஒருமுறையும், சமயத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் நடைபெறுவது வழக்கம்.

    வருகிற 17-ந் தேதி சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் என்று சிலரும், மார்ச் மாதம் நடைபெறும் என சிலரும் வேறு பஞ்சாங்கம் முறைப்படி தவறான தகவல்களை பரப்பி வருவதால், பக்தர்கள் இடையே குழப்பம் ஏற்பட்டு வந்தது. இந்த குழப்பத்தை போக்கும் வகையில், கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் மூத்த சிவாச்சாரியார்கள், நேற்று சனீஸ்வரர் சன்னதி முன்பு அதிகாரப்பூர்வமாக விழா குறித்து அறிவித்தனர்.அப்போது அவர்கள் கூறியதாவது:-

    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில், தினசரி, வாராந்திர, மாதாந்திர மற்றும் வருடாந்திர உற்சவங்கள் யாவும், வாக்கியபஞ்சாங்கம் கணித முறைப்படிதான் நடைபெற்று வருகிறது. அதன்படி, வாக்கிய பஞ்சாங்கப்படி வருகிற டிசம்பர் தான் சனிப்பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது. சனீஸ்வர பகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை கோவில் நிர்வாகம் தொடங்கி உள்ளது.

    சனிப்பெயர்ச்சி விழா நடைபெறும் தேதி மற்றும் நேரம் ஆகியவை பின்னர் அறிவிக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினால் திருநள்ளாறு கோவிலில் சனிப்பெயர்ச்சி விழா எப்போது நடைபெறும் என்ற குழப்பத்தில் இருந்த பக்தர்களுக்கு குழப்பம் தீர்ந்தது.

    • சாமி வீதி உலா புறப்பாடு நடைபெற்றது.
    • சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

    காரைக்காலை அடுத்த திருநள்ளாற்றில் உலக பிரசித்திபெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில், ஆண்டுதோறும் நடைபெறும் ஆருத்ரா தரிசன உற்சவ நிகழ்ச்சி, கடந்த மாதம் (டிசம்பர்) 28-ந் தேதி தேதி தொடங்கியது. நேற்று முன்தினம் இரவு 9-ம் நாள் நிகழ்ச்சியாக பிரணாம்பிகை-தர்பாரண்யேஸ்வரர் பொன்னூஞ்சல் வழிபாடு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிறைவுநாளான நேற்று காலை சிவகாமி அம்பாள் சமேத நடராஜர், பிரம்ம தீர்த்த கரைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடந்தது. முன்னதாக சாமிக்கு சிறப்பு அபிஷேகமும், கோபூஜையும் நடத்தப்பட்டு,அலங்காரம் மற்றும் ஆராதனை செய்யப்பட்டது.

    பின்னர், சாமி வீதி உலா புறப்பாடு நடைபெற்றது. பின்னர் நடராஜர் பிரம்ம தீர்த்தத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்வாரி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சுவாமிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    அதேபோல் காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் நடந்த ஆருத்ரா தரிசனத்தையொட்டி, நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு ஆருத்ரா தரிசனம், தீர்த்தவாரி மற்றும் ஊடல் நிகழ்ச்சி நடந்தது.

    இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் வாரிய தலைவர் வக்கீல் வெற்றிசெல்வன், துணைத் தலைவர் புகழேந்தி, செயலாளர் வக்கீல் பாஸ்கரன், பொருளாளர் சண்முகசுந்தரம், உறுப்பினர் ஜெயபாரதி மற்றும் உபயதாரர்கள் செய்திருந்தனர்.

    • இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    • தர்பாரண்யேஸ்வர், தியாகராஜருக்கு மகா அபிஷேகம் செய்தனர்.

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வரர் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். சோமவாரத்தையொட்டி, ஒவ்வொரு திங்கட்கிழமையும் 108 சங்காபிஷேகம் நடந்து வந்தது. நேற்று சோமவாரம் நிறைவையொட்டி தியாகராஜருக்கு அபிஷேகம் செய்வதற்காக 1008 சங்குகளில் புனித நீர் நிரப்பி, சிறப்பு பூஜைகள் நடந்தது.

    தொடர்ந்து விக்னேஸ்வர பூஜையுடன் 1008 சங்குகளுக்கும் கும்ப பூஜையும், மகா பூர்ணாகுதி தீபாராதனையும் நடந்தது. பின்னர் சிவாச்சாரியார்கள் பிரதான சங்குகளை சுமந்து கோவிலின் உள்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரம் வலம் வந்து தர்பாரண்யேஸ்வர், தியாகராஜருக்கு மகா அபிஷேகம் செய்தனர்.

    இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமிகள் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • இக்கோவிலுக்கு கிரகண தோஷம் கிடையாது என்பது ஐதீகம்.
    • திரளான பக்தர்கள் கலந்து கொணடு சாமி தரிசனம் செய்தனர்.

    சந்திர கிரகணத்தை முன்னிட்டு நேற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான ேகாவில்களின் நடை சாத்தப்பட்டது. மதியம் 2.39 மணிக்கு தொடங்கிய சந்திரகிரகணம் மாலை 6.19 மணி வரை நடந்தது. கிரகணம் தொடங்குவதற்கு முன்பே புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள பல்வேறு கோவில்களின் நடை சாத்தப்பட்டு இருந்தது. சந்திரகிரகணம் முடிந்த பின்னர் மாலை 7 மணி அளவில் நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் நடந்தன.

    இந்த நிலையில் உலகப் புகழ்பெற்ற திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் நடை சந்திர கிரகண நேரத்திலும் திறக்கப்பட்டு வழிபாடுகள் நடந்தன.

    சந்திர கிரகணத்திலும் இக்கோவில் நடை திறந்து இருப்பதற்கு இக்கோவில் மூலவராக தர்பாரண்யேஸ்வரர் அருள்பாலிப்பதே காரணமாகும். தர்ப்பை வனத்தில் சுயம்பு மூர்த்தியாக தர்பாரண்யேஸ்வரர் உருவானதால் இக்கோவிலுக்கு கிரகண தோஷம் கிடையாது என்பது ஐதீகம். இதனால் சந்திரகிரகணத்திலும் வழக்கமான பூஜைகள் நடந்தன.

    இதில் தமிழகம் மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து சந்திரகிரகணம் முடிந்த, பின்னர் கோவிலில் இருந்து அஸ்திர தேவர் பிரம்ம தீர்த்த குளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. மூலவர் தர்பாரண்யேஸ்வரர், சனீஸ்வரருக்கு கிரகண கால அபிஷேகமும் நடந்தன.

    • கடந்த சில நாட்களாக தொன்னையில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.
    • திருமண பந்திகளில் பரிமாறுவது போல், அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் உலக புகழ் பெற்ற சனீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். இதையொட்டி கோவில் நிர்வாகம் சார்பில் வாழை இலை போட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வந்தது. பக்தர்களிடம் சிறப்பான வரவேற்பை பெற்ற இந்த அன்னதான நிகழ்ச்சி கொரோனா பரவல் காரணமாக கடந்த 3 ஆண்டுகளாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

    கொரோனா தொற்று குறைந்த பிறகு கடந்த சில நாட்களாக தொன்னையில் அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது. அது பக்தர்களுக்கு திருப்தியளிக்கவில்லை. இந்நிலையில், புரட்டாசி முதல் சனிக்கிழமையான நேற்று முதல் பக்தர்களை அமரவைத்து, மீண்டும் வாழை இலையில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி தொடங்கியது. திருமண பந்திகளில் பரிமாறுவது போல், அறுசுவை உணவு பரிமாறப்பட்டது.

    • பக்தர்கள் பகவானுக்கு அர்ச்சனைகள், அபிஷேகம் சிறப்பு பூஜைகள் செய்தனர்.
    • எள் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

    காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலக புகழ் மிக்க சனீஸ்வர பகவான் கோவில் உள்ளது, இக்கோவிலில் சனிக்கிழமை தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இன்று சனிக்கிழமை என்பதாலும், தொடர்ந்து ஞாயிறு | சுதந்திர தின விடுமுறை என தொடர் விடுமுறையாக இருப்பதால் இன்று அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் திருநள்ளாறு நளன் குளத்தில் புனித நீராடி சனீஸ்வரனை நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் சில பக்தர்கள் பகவானுக்கு அர்ச்சனைகள், அபிஷேகம் சிறப்பு பூஜைகள் செய்தனர். எள் தீபம் ஏற்றி தங்களது தோஷங்கள் நீங்க வேண்டுதலை நிறைவேற்றி வருகின்றனர். பக்தர்கள் வருகை காரணமாக திருநள்ளாறு பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • பிரமோற்சவ விழா கடந்த மே 26ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • ஜூன் 7ந் தேதி பஞ்சமூர்த்திகள் வாகனரூடராய் சகோபுர வீதியுலா நடைபெற்றது.

    காரைக்கால் அருகே திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க சனீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிக்கிழமைதோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், சனிப்பெயர்ச்சியின் போது லட்சக்கணக்கான பக்தர்களும் வருகை தந்து சாமி தரிசனம் செய்வது வழக்கம்.

    இத்தகைய சிறப்பு வாய்ந்த சனீஸ்வரர் கோவில் பிரமோற்சவ விழா கடந்த மே 26ந் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, ஜூன் 7ந் தேதி பஞ்சமூர்த்திகள் வாகனரூடராய் சகோபுர வீதியுலா நடைபெற்றது.

    முக்கிய நிகழ்வாக இன்று காலை ( 9-ந் தேதி) தேரோட்டம் விமர்சியாக நடைபெற்றது. விழாவில், புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் ஏம்பலம் செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் சந்திரபிரியங்கா திருநள்ளாறு சட்டமன்ற உறுப்பினர் சிவா, மேலும் துனை மாவட்ட ஆட்சியர் ஆதர்ஷ் மற்றும் பலர் மற்றும் பலர் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்கள்.

    தேரோட்ட நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி மேலும் அறங்காவலர் வாரிய உறுப்பினர்கள் ஆலய நிர்வாகிகள், மற்றும் ஏராளமான பக்தகோடிகள் மேலும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறில் பிரசித்திபெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சனிபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார். இங்கு ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக, கோவில் வளாகத்தில் உள்ள கொடி மரத்தில் ஏற்றப்படுவதற்காக சிவ கொடி கோவிலின் நான்கு வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டது. பிறகு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து, தீபாராதனை நடைபெற்றது.

    விழாவில், கோவில் கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் சாமி, கோவில் நிர்வாக அதிகாரி சுந்தர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஜூன் 5-ந் தேதி அடியார்கள் நால்வர் புஷ்ப பல்லக்கு வீதி உலா, ஜூன் 12-ந் தேதி காலை தேரோட்டம், 14-ந் தேதி தெப்ப உற்சவம் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான விக்ராந்த் ராஜா தலைமையில் நிர்வாக அதிகாரி சுந்தர் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.
    திருநள்ளாறு சனீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை காலை 9.10 மணி முதல் 10.10 மணிக்குள் நடக்கிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்கிறார்கள்.
    காரைக்காலை அடுத்த திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற தனி சன்னதியில் சனீஸ்வரர் வீற்றிருக்கும் தர்பாரண்யேசுவரர் கோவில் அமைந்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்து திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றதையடுத்து கும்பாபிஷேகம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

    இதைத்தொடர்ந்த யாகசாலை மண்டபம் அமைத்து வேதமந்திரங்கள் முழங்க யாகசாலை பூஜைகள் தொடங்கி நடந்து வந்தன. நேற்று (ஞாயிற்றுகிழமை) காலை 6-ம் கால பூஜையும், இரவு 7-ம் கால பூஜையும் நடைபெற்றன. தொடர்ந்து இன்று (திங்கட் கிழமை) அதிகாலை 4 மணிக்கு 8ம் கால யாகசாலை பூஜைகள் நிறைவு பெறுகின்றன. இதைத்தொடர்ந்து, காலை 9.10 மணி முதல் 10.10 மணிக்குள் கோபுரக் கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேக விழாவில் வெளி மாநிலங்களில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். இதையொட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள், போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு ஊர்களில் இருந்து பஸ் போக்குவரத்தும் செய்யப்பட்டுள்ளது. எந்த பகுதியில் இருந்து கும்பாபிஷேகத்தை கண்டாலும், பக்தர்கள் மீது ஸ்பிரே முறையில் புனிதநீர் தெளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்தையொட்டி இன்று பக்தர்கள் எந்த கட்டணமும் இன்றி சாமி தரிசனம் செய்யலாம்.
    ×