search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "teenagers"

    • சிறுபாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதை பார்வையிடுவதற்காக கலெக்டர் அருண் தம்புராஜ் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
    • கலெக்டர் கார் டிரைவர் சாதுர்த்தியமாக மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் ஓரமாக நிறுத்தினார்.

    கடலூர்:

    நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதிகளில் நடைபெறும் திட்டப்பணிகள் மற்றும் நகராட்சி அலுவலகத்தை இன்று காலை கலெக்டர் அருண் தம்புராஜ் நேரில் வந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது முள்ளிகிராம் பட்டு சாலையில் புதிதாக சிறுபாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதை பார்வையிடுவதற்காக கலெக்டர் அருண் தம்புராஜ் வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது அவ்வழியாக கலெக்டர் காரின் எதிர்புறத்தில் அதிவேகமாக 2 வாலிபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென்று கலெக்டர் காரில் மோதுவது போல் வந்தனர். அப்போது கலெக்டர் கார் டிரைவர் சாதுர்த்தியமாக மோட்டார் சைக்கிள் மீது மோதாமல் ஓரமாக நிறுத்தினார். அப்போது காரில் இருந்த போலீஸ் மற்றும் அதிகாரி உடனடியாக கீழே இறங்கி அந்த 2 வாலிபர்களை பிடித்தனர்.

    அப்போது அவர்கள் அதிவேகமாக வந்ததற்கு அதிகாரியிடம் மன்னிப்பு கேட்டனர். இருந்தபோதிலும் போலீஸ் மற்றும் அதிகாரிகள் 2 பேரையும் கடும் எச்சரிக்கை செய்து பாதுகாப்பாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்கள். இதனை தொடர்ந்து மீண்டும் ஆய்வு பணிகளில் கலெக்டர் அருண் தம்புராஜ் ஈடுபட்டார். இதன் காரணமாக சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

    • 1990-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், உடல் பருமன் கொண்ட பெண்கள் எண்ணிக்கை இரு மடங்காகவும், ஆண்கள் எண்ணிக்கை சுமார் 3 மடங்காகவும் அதிகரித்துள்ளது.
    • கடந்த 1990-ம் ஆண்டுக்கும், 2022-ம் ஆண்டுக்கும் இடையே குறைந்த எடை பாதிப்பு கொண்ட பெரியவர்கள் எண்ணிக்கை பாதியாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

    புதுடெல்லி:

    உலக அளவில் விஞ்ஞானிகளை கொண்ட 'என்.சி.டி.' என்ற அமைப்பும், உலக சுகாதார அமைப்பும் இணைந்து உடல் பருமன் குறித்து ஒரு ஆய்வில் ஈடுபட்டன. அதன் முடிவுகள், 'லான்செட்' பத்திரிகையில் வெளிவந்துள்ளன.

    கடந்த 1990-ம் ஆண்டுக்கும், 2022-ம் ஆண்டுக்கும் இடையே உடல் பருமனும், குறைந்த எடை பாதிப்பும் எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பதை கண்டறிவதே இதன் நோக்கம் ஆகும். 5 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் இளம் வயதினராகவும், 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெரியவர்களாகவும் வகைப்படுத்தப்பட்டனர். இந்தியா உள்பட 190 நாடுகளில் 22 கோடி பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இப்பணியில் 1,500 ஆய்வாளர்கள் ஈடுபட்டனர். எடை, உயரத்தை பயன்படுத்தி, 'பாடி மாஸ் இன்டெக்ஸ்' கணக்கீடு அடிப்படையில், உடல் பருமன் கணக்கிடப்பட்டது.

    அதன்படி, 2022-ம் ஆண்டு உலக அளவில், 15 கோடியே 90 லட்சம் சிறுவர்கள் மற்றும் இளம்வயதினரும், 87 கோடியே 90 லட்சம் பெரியவர்களும் உடல் பருமனுடன் வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது. அதாவது, 100 கோடிக்கு மேற்பட்டோர் உடல் பருமன் கொண்டவர்களாக உள்ளனர்.

    1990-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், உடல் பருமன் கொண்ட பெண்கள் எண்ணிக்கை இரு மடங்காகவும், ஆண்கள் எண்ணிக்கை சுமார் 3 மடங்காகவும் அதிகரித்துள்ளது. ஆனால், சிறுவர்கள் மற்றும் இளம்வயதினர் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது.

    இந்தியாவை பொறுத்தவரை, 2022-ம் ஆண்டில், 1 கோடியே 25 லட்சம் சிறுவர்கள் மற்றும் இளம்வயதினர் உடல் பருமனுடன் இருந்தனர். இவர்களில், 73 லட்சம்பேர் ஆண்கள், 52 லட்சம்பேர் பெண்கள் ஆவர்.

    மேலும், இந்தியாவில் உள்ள பெரியவர்களில் 4 கோடியே 40 லட்சம் பெண்களும், 2 கோடியே 60 லட்சம் ஆண்களும் உடல் பருமனுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

    1990-ம் ஆண்டில், 1.2 சதவீதமாக இருந்த உடல் பருமன் கொண்ட பெண்கள் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 9.8 சதவீதமாகவும், 0.5 சதவீதமாக இருந்த ஆண்கள் எண்ணிக்கை 5.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.

    அதே சமயத்தில், கடந்த 1990-ம் ஆண்டுக்கும், 2022-ம் ஆண்டுக்கும் இடையே குறைந்த எடை பாதிப்பு கொண்ட பெரியவர்கள் எண்ணிக்கை பாதியாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

    ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான லண்டன் இம்பீரியல் கல்லூரி பேராசிரியர் மஜித் எஸ்சாடி கூறியதாவது:-

    உடல் பருமனும், குறைந்த எடையும் ஊட்டச்சத்து குறைபாட்டின் இரு வடிவங்கள் ஆகும். இரண்டுமே மக்களின் ஆரோக்கியத்துக்கு கெடுதலானவை. இந்த ஆய்வு, கடந்த 33 ஆண்டுகளில் இருவகையான ஊட்டச்சத்து குறைபாடு எந்த அளவுக்கு இருந்துள்ளது என்பதை காட்டுகிறது.

    கடந்த 1990-ம் ஆண்டில், பெரியவர்கள்தான் உடல் பருமனுடன் இருந்தனர். ஆனால், இப்போது, பள்ளி செல்லும் சிறுவர்களும், இளம்வயதினரும் உடல் பருமன் கொண்டவர்களாக மாறியிருப்பது கவலை அளிக்கிறது. இருப்பினும், ஏழை நாடுகளில் இன்னும் கோடிக்கணக்கானோர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவகையான ஊட்டச்சத்து குறைபாட்டையும் கையாள ஆரோக்கியமான, ஊட்டச்சத்து கொண்ட உணவு தாராளமாக கிடைக்க செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதனாம் கெப்ரியசஸ் கூறியதாவது:-

    குழந்தை பருவம் முதலே உடல் பருமனை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு உணர்த்துகிறது. உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, போதிய அக்கறை ஆகியவற்றின் மூலம் உடல் பருமனை தடுக்க வேண்டும். இதில், அரசுகளுக்கு மட்டுமின்றி தனியார் துறையினருக்கும் பொறுப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகளும் உள்ளே செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.
    • மருத்துவமனைக்கு பூட்டு போட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அடுத்த மண்ணாடிப்பட்டை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 21). இவரது உறவினரின் இறுதிச்சடங்கின்போது பட்டாசு வெடித்ததில், ரவிக்குமாருக்கு கையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை அப்பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். அப்போது ஆஸ்பத்திரியில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சில் ரவிக்குமாரை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லுமாறு உறவினர்கள் டாக்டர்களிடம் வற்புறுத்தினர்.

    அப்போது ஆம்புலன்ஸ் ஓட்ட டிரைவர் இல்லை என்றும் தனியாக வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ளுமாறு டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அங்கு நின்றிருந்த வாலிபர்கள் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் ஆஸ்பத்திரியின் மெயின் கேட்டை இழுத்து மூடி பூட்டு போட்டனர்.

    இதனால் டாக்டர்கள், நர்சுகள், வெளியே வரமுடியாமல் தவித்தனர்.

    மேலும் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகளும் உள்ளே செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் திருக்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பூட்டை உடைத்து கதவை திறந்தனர்.

    இதையடுத்து டாக்டர்கள், ஊழியர்கள் மற்றும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் வெளியே வந்தனர். மருத்துவமனைக்கு பூட்டு போட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • பல ஏக்கர் பரப்பளவில் பச்சை மிளகாய் பயிரிட்டு விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
    • 2 பேரில் ஒருவரை கட்டி வைத்து மற்றொருவரை கட்டப்பட்டவரின் தோள் மீது ஏற்றி நிறுத்தி வைத்து கடுமையாக தண்டித்துள்ளனர்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பச்சை மிளகாய் பயிரிட்டு சாகுபடி செய்து வருகின்றனர். அங்கு விளைவிக்கக் கூடிய பச்சை மிளகாய்க்கு சந்தைகளில் அமோக வரவேற்பு உள்ளதோடு அதிக விலையும் கிடைத்து வருவதால் விவசாயிகள் இதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதனால் பல ஏக்கர் பரப்பளவில் அந்த பகுதிகளில் பச்சை மிளகாய் பயிரிட்டு விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். கடந்த சில தினங்களாக அந்த கிராமத்தில் உள்ள விளை நிலங்களில் பச்சை மிளகாய் அறுவடைக்கு தயாராக இருந்த சூழலில் அவ்வப்பொழுது பச்சை மிளகாய் திருட்டு போய் வந்தது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து விவசாயிகள் பச்சை மிளகாய் பயிரிட்ட தோட்டத்தில் காவல் காத்து வந்தனர்.

    இந்த நிலையில் அதே கிராமத்தை சேர்ந்த வாலிபர்கள் சிவன், மஞ்சுநாத் ஆகியோர் அதிகாலை வேளையில், விளை நிலங்களில் புகுந்து செழிப்பாக விளைந்திருந்த பச்சை மிளகாய்களை பறித்துக் கொண்டு அவர்கள் கொண்டு வந்திருந்த துணிகளில் மூட்டை கட்டிக்கொண்டு திருடி செல்ல முயன்றனர்.

    அப்போது தோட்டத்தில் காவலுக்கு இருந்து வந்த விவசாயிகளில் சிலர், 2 வாலிபர்களையும் சுற்றி வளைத்து கையும் களவுமாக பிடித்து தர்ம அடி கொடுத்தனர். மேலும், திருடிய மிளகாய்களுடன் இருவரையும் கிராமத்தில் தெருத்தெருவாக அடித்து இழுத்துச் சென்றனர். தொடர்ந்து, அந்தப் பகுதியில் இருந்த கோவில் தூணில் அவர்கள் திருடிய மிளகாய்களுடன், 2 பேரில் ஒருவரை கட்டி வைத்து மற்றொருவரை கட்டப்பட்டவரின் தோள் மீது ஏற்றி நிறுத்தி வைத்து கடுமையாக தண்டித்துள்ளனர்.

    இதுபற்றி தகவல் அறிந்து அங்கு வந்த கிராமத்தின் முக்கியஸ்தர்கள் 2 பேரையும் மீட்டு, மீண்டும் இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக் கூடாது என அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர்.

    பச்சை மிளகாய் திருடிய வாலிபர்களை கட்டி வைத்து அடித்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

    • புதுவை கோர்ட்டில் தீர்ப்பு
    • வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், முருகனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தர விட்டார்.

    புதுச்சேரி:

    புதுவையை சேர்ந்த 34 வயது பெண்ணின் செல்போனுக்கு 23.9.2022ல் அழைப்புகள் வந்தது.

    அதில் பேசியவர் முகநூலில் செல்போன் எண் கிடைத்ததாக கூறி ஆபாசமாக பேசினார். தினமும் அழைப்புகள் வந்ததால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் முகநூல் வழியாக சென்று பார்த்த போது, அவரையும், அவர் சகோதரியையும் 8 போட்டோக்கள் ஆபாசமாக மார்பிங் செய்து பதிவேற்றம் செய்யப்பட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். இன்ஸ் பெக்டர் கீர்த்தி தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஆபாசமாக போட்டோக்களை அனுப்பி யது அரியாங்குப்பம் சுப்பையா நகரை சேர்ந்த டிப்ளமோ படித்த முருகன் (வயது.37) என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை கைது செய்தனர். இந்த வழக்கு தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், முருகனுக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தர விட்டார். அரசு தரப்பில் வக்கீல் கணேஷ்ஞான சம்பந்தன் ஆஜரானார்.

    சிறை தண்டனை விதிக்கப்பட்ட முருகன், மனைவி, குழந்தையுடன் வந்து, செய்த தவறுக்கு கண்ணீர் மல்க நீதிபதியிடம் மன்னிப்பு கோரினார்.

    முருகன் மீது இதுவரை எந்த வழக்கும் இல்லாத நிலையில், குற்றவாளிகள் நன்னடத்தை கால சட்டம் பிரிவு 4-ன்கீழ் எந்த தவறுக ளிலும் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனை யுடன், அவர் மன்னித்து விடு விக்கப்பட்டார். மீண்டும் இதே போல தவறு செய்தால் சிறைக்கு செல்ல வேண்டும் என கடுமையாக எச்சரிக்கப்பட்டார்.

    • ராமர் சென்னை நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக பணி செய்கிறார்.
    • ஊழியர் ராமரை தாக்கினர்.

    கள்ளக்குறிச்சி:

    உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள வானாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ராமர் (வயது 35). இவர் உளுந்தூர்பேட்டை நகரப்பகுதியில் உள்ள சென்னை நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் ஊழியராக பணி செய்கிறார். இவர் நேற்று மாலை வாகனங்களுக்கு பெட்ரோல் போடும் பணியை செய்து கொண்டிருந்தார். மாலை நேரம் என்பதால் மோட்டார் சைக்கிள்கள் அணிவகுத்து நின்றன. அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வரிசையில் நிற்காமல் வந்தனர். தங்களின் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போடும் படி கூறினார்கள்.

    அப்போது பணியில் இருந்த ராமர், வரிசையில் வரும்படி கூறினார். இதையடுத்து வரிசையில் வந்து மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் போட்டுக் கொண்டு சென்றனர். பின்னர் இரவு 9 மணியளவில் மீண்டும் பெட்ரோல் பங்கிற்கு வந்த 2 வாலிபர்கள், எங்களையே வரிசையில் வர சொல்கிறாயா எனக் கேட்டு ஊழியர் ராமரை தாக்கினர். 

    இதில் காயமடைந்த ராமரை, அங்கிருந்தவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை க்காக அனுமதித்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் பெட்ரோல் பங்கிற்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்து. 2 வாலிபர்களை அடை யாளம் கண்டனர். இவர்கள் உளுந்தூர்பேட்டையை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களின் பெயர் தெரியவில்லை எனவும் ஊழியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து வழக்கு பதிவு செய்த உளுந்தூர்பேட்டை போலீசார், பெட்ரோல் பங்க் விற்பனையாளரை தாக்கிய 2 வாலிபர்களை தேடி வருகின்றனர்.

    • `டீன்ஏஜ் என்றாலே ஒரு விதமான மகிழ்ச்சியையும், பதற்றத்தையும் தரக்கூடிய வயது.
    • வாழ்வின் நெறிகளை ஆரோக்கியமான முறையில் புரிய வைக்க வேண்டும்.

    `டீன்ஏஜ் என்றாலே ஒரு விதமான மகிழ்ச்சியையும், பதற்றத்தையும் தரக்கூடிய வயது. இளம் பருவத்தில் உடல் அளவிலும், மனதளவிலும் ஏற்படும் மாற்றங்கள் பல்வேறு விதமான எண்ணங்களாலும், சிந்தனைகளாலும் ஆக்கிரமிக்கும். காதலும், காமமும் இரண்டறக் கலந்த எண்ணங்கள், எதிர்பாலினர் மீதோ அல்லது சம பாலினர் மீதோ ஈர்ப்பு ஏற்பட்டு பாலியல் குறித்த தேடலை அதிகரிக்கச் செய்யும்.

    மேலும் நண்பர்களின் அழுத்தம், திரைப்பட பாடல்கள், இரட்டை அர்த்தம் உள்ள வசனங்கள் மற்றும் கையிலேயே ஒட்டிக்கிடக்கும் ஆண்ட்ராய்டு இணையதள வசதி கொண்ட மொபைல் போன்கள் பல சந்தேகங்களை அவர்களுக்குள் எழுப்புகிறது. அந்த உந்துதலால்தான் காதல் என்றால் என்ன, தனக்குப் பிடித்தமான ஒரு நபரை பார்க்கும்போது மட்டும் ஏன் இனம்புரியாத ஈர்ப்பும், கிளர்ச்சியும் ஏற்படுகிறது என்ற புரிதலை சில வளரிளம் பருவத்தினர் பெற்றோரிடமே கேட்டுவிடுவார்கள்.

    அந்த கேள்விகளுக்கு சரியான பதில் கிடைக்காத பட்சத்தில் அவர்களுடைய தேடல் அதிகரிக்கத் தொடங்குகிறது. ஆரோக்கியமான முறையில் பாலியல் குறித்த விழிப்புணர்வையும், நமது உடல் அமைப்புகளையும் வளர் இளம் பருவத்தினருக்கு நம் சமூகம், கலாசாரம் மற்றும் பண்பாடு என்ற போர்வையிலும், ஆண், பெண் சமூக பாலின வேறுபாட்டிலும் புதைத்துள்ளது.

    இப்படியான சபலங்களுக்கு ஆளாகும் பிள்ளைகள் பெற்றோர்களின் வளர்ப்பு முறை மற்றும் வழி காட்டுதலாலும், நல்ல நட்பு வட்டத்தின் காரணமாகவும் அதை எளிதில் கடந்துவிடுகின்றனர். ஆனால், இப்படியான சூழல் கிடைக்கப் பெறாத சில பிள்ளைகள், தங்கள் பாலியல் தேவைகள் பூர்த்தியாகுமா என வாய்ப்புக்காக காத்திருக்கும் நேரத்தில் எதிர் பாலினரிடமோ, சம பாலினரிடமோ அல்லது தனிமையிடமோ பதின் பருவத்து ஈர்ப்பில் விழுந்துவிடுகிறார்கள்.

    இன்றைய காலக்கட்டத்தில் சமூகம், ஊடகம், நட்பு, திரைப்பட, கலாசாரம், பண்பாடு என்ற போலியான பிம்பங்கள் மூலமாகவே பாலியல் அறிமுகப்படுத்தப் படுவதால் தான் நம் குழந்தைகள் இப்படியான தடுமாற்றங்களை சந்திக்கிறார்கள். பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன், அரசும் இணைந்து செயல்பட்டால் நம் குழந்தைகளை இப்படியான சிக்கல்களில் இருந்து எளிதில் மீட்டெடுக்க முடியும்.

    பெற்றோர்களின் பங்கு

    பதின் பருவத்து பிள்ளைகளை ஆரோக்கியமான கட்டுபாடுகளுக்கு உள்ளாக்க வேண்டியது அவசியம். தாங்கள் நினைத்ததை செய்யக்கூடிய தைரியம் அவர்களுக்கு வருவதற்குள் வாழ்வின் நெறிகளை ஆரோக்கியமான முறையில் புரிய வைக்க வேண்டும்.

    • சேலம் லயன்மேடு வேலுப்பிள்ளை புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் குமரே சன் இவர் நேற்று இரவு 11.30 மணி அளவில் புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.
    • 2 வாலிபர்கள் திடீரென குமரேசன் கையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

    சேலம்:

    சேலம் லயன்மேடு வேலுப்பிள்ளை புதுத்தெரு பகுதியை சேர்ந்தவர் குமரே சன் (வயது 41). இவர் நேற்று இரவு 11.30 மணி அளவில் புதிய பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள் திடீரென குமரேசன் கையில் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இது குறித்த புகாரின்பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதில், குமரேசனிடம் செல்போனை பறித்த மணியனூர் நேதாஜி தெரு காந்தி நகர் பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் மணிகண்டன் (25), தாதகாப்பட்டி பெருமாள் கோயில் மேடு பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் என்கிற மணி (38) ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலை தனியார் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • காவல் இன்ஸ்பெக்டர் அம்பிகா, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலை தனியார் பள்ளி அருகே கஞ்சா விற்பனை செய்வதாக நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு அமல் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காவல் இன்ஸ்பெக்டர் அம்பிகா, சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

    சோதனையில், வெற்றி விகாஸ் பள்ளி அருகே சந்தேகத்திற்கு இடமாக 2 பேர் நின்று கொண்டி ருந்தனர். அவர்கள் கொண்டு வந்திருந்த பையை சோதனையிட்ட போது பையில் 1.500 கிலோ கிராம் கஞ்சா இருப்பது தெரிய வந்தது.

    இதனையடுத்து 2 பேரையும் கைது செய்து மதுவிலக்கு அமல் பிரிவு நிலையத்திற்கு அழைத்து வந்த விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர்கள் சேலத்தை சேர்ந்த பூபதி (வயது 23), ஸ்ரீராம் (25) ஆகியோர் என்பதும் நாமக்கல் பகுதிக்கு கஞ்சா விற்பனை செய்ய செல்லும் போது இருவரும் பிடிப் பட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

    • கடையில் இருந்து புகை வருவதாக அந்த வழியாக சென்றவர்கள் தகவல் தெரிவித்தனர்.
    • கடையின் உரிமையாளர் வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தார்.

    கோவை,

    பொள்ளாச்சி அருகே உள்ள பணிக்கம்பட்டியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 51). இவர் சூலக்கல் மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பூஜை பொருட்கள் விற்பனை செய்யும் கடை வைத்து நடத்தி வருகிறார். இவரது கடையை கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராய புரத்தை சேர்ந்த கிருஷ்ணவேணி (38) என்ற பெண் கவனித்து வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு கிருஷ்ணவேணி வழக்கம் போல கடையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். கடையில் இருந்து புகை வருவதாக அந்த வழியாக சென்றவர்கள் கிருஷ்ணவேணிக்கு தகவல் தெரிவித்தனர்.

    அவர் உடனடியாக சென்று கடைக்கு சென்று தீயை அணைத்தார். இதில் கடையில் இருந்த வேட்டி, சேலைகள் எரிந்து இருந்தது. அந்த வழியாக சென்ற வயரும் கருகி இருந்தது. எனவே மின் கசிவு காரணமாக தீ பிடித்து இருக்கலாம் என நினைத்து கிருஷ்ணவேணி வீட்டிற்கு சென்றார்.

    அவர் மறுநாள் காலையில் கடையை திறக்க சென்றார். அப்போது கடையில் இருந்த எண்ணை பாக்கெட்டுகள், சூடன், திரி ஆகியவற்றை சேதப்படுத்தி யாரோ மர்ம நபர் தீ வைத்து விட்டு சென்றது தெரிய வந்தது. மேலும் அவர்கள் கடைக்குள் ஆபாச வார்த்தைகளை எழுதி விட்டும் சென்றிருந்தனர்.

    இது குறித்து கடையில் உரிமையாளர் வடக்கிப்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் போலீசார் சந்தேகம்படும்படி சுற்றித்திரிந்த சூலக்கல்லை 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் தான் கடையில் தீ வைத்து ஆபாச வார்த்தைகளை எழுதி இருக்க வேண்டும் என கூறப்படுகிறது.

    • மதுரையில் வெவ்வேறு சம்பவங்களில் வாலிபர்களை தாக்கி பணம் வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    மதுரை

    மதுரை சக்கிமங்கலம் சந்திரலேகா நகரை சேர்ந்த பால்ராஜ் மகன் சரவணன் (வயது22).இவர் ஆரப்பா ளையம் பஸ் நிலையம் அருகே நின்று கொண்டி ருந்தார். அப்போது 2 வாலிபர்கள் அவரை கத்தி முனையில் மிரட்டி ரூ.600-ஐ வழிப்பறி செய்து தப்பினர்.

    இதுகுறித்த புகாரின்பேரில் சரவணன் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். வழிப்பறியில் ஈடுபட்ட கரிமேடு பொன்னகரம் 4-வது தெருவை சேர்ந்த பாண்டியராஜன் மகன் மனோஜ் சிவா என்ற மனோஜ் (22), தத்தனேரி களத்துபொட்டல் கண்ணன் மகன் கிருஷ்ணகுமார் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    செல்போன் பறிப்பு

    அவனியாபுரம் பெரியசாமி நகர் 5-வது தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (49). இவர் விளக்குத்தூண் பகுதியில் உமறுப்புலவர் பள்ளி அருகே சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

    அவரை 3 வாலிபர்கள் வழிமறித்து தாக்கினர்.பின்னர் அவரிடம் இருந்த செல்போனை பறித்து கொண்டு தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் விளக்குத்தூண் போலீசார் வழக்குப்பதிவு அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு காமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.

    அதன் அடிப்படையில் 17 வயது சிறுவன், காளவாசல் தமிழ் தென்றல் 3-வது தெரு மோகன் மகன் விமல் (19), அரசரடி சின்ன கண்ணன் மகன் அஜய் பாண்டி (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

    நகை பறிப்பு

    திருமங்கலம் தென்கால் நகரை சேர்ந்த லட்சம் மகன் நிஷாந்தன் (25). இவர் புட்டுத்தோப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தார்.அப்போது அவரது நண்பரிடம் சிலர் வாய்த் தகராறில் ஈடுபட்டனர்.இதை நிஷாந்தன் கண்டித்தார்.

    ஆத்திரம் அடைந்த 4 வாலிபர்களும் நிஷாந்தனை தாக்கினர். மேலும் அவர் அணிந்திருந்த 1¼ பவுன் நகைையயும் பறித்துக் கொண்டு தப்பினர். இது குறித்த புகாரின்பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை பறித்த மேலமாசி வீதி மக்கனார் தோப்பு சந்திரன் மகன் முத்துவேல் (27), வெங்கடசாமிநாயுடு அக்ரகாரம் சரவணன் மகன் ஆகாஷ் (20), சிம்மக்கல் தைக்கால் முதல் தெரு மணிகண்டன் மகன் ஸ்ரீ ராம் (22), நெல்பேட்டை காயிதே மில்லத் நகர் அப்துல் ஜாபர் மகன் முகமது அசாருதீன் (20) ஆகியோரை கைது செய்தனர்.

    • கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களையும், கடை உரிமையாளரையும் திசை திருப்பி உள்ளனர்.
    • கண்காணிப்பு கேமராவை ஊழியர்கள் ஆய்வு செய்தபோது அவர்கள் நகைகள் திருடியது தெரிய வந்தது.

    கும்பகோணம்:

    கும்பகோணத்தில் பெரிய கடை தெருவில் நூற்றுக்கும் மேற்பட்ட நகைக்கடைகள் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இப்பகுதியில் உள்ள ஒரு நகைகடைக்கு நகைகள் வாங்குவது போல மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்துள்ளனர்.

    அவர்கள் நகைகள் வாங்குவது போல ஒவ்வொரு நகைகளையும் எடுத்து பார்த்துள்ளனர். கடையில் வேலை பார்க்கும் ஊழியர்களையும் மற்றும் நகைக்கடை உரிமையாளரையும் திசை திருப்பி உள்ளனர்.

    பின்னர் ஊழியர்களை உரிமையாளரையும் ஏமாற்றி விட்டு கடையின் கல்லாப்பெட்டியில் வைக்கப்பட்டிருந்த தங்க காசு, தங்க மோதிரம் அடங்கிய 134 கிராம் எடையுள்ள தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர்.

    அவர்கள் சென்ற பிறகு கடையில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஊழியர்கள் ஆய்வு செய்தபோது கடையின் கல்லாப்பெட்டியில் இருந்து அவர்கள் நகைகள் திருடி செல்வது தெரிய வந்தது. இது குறித்து கடையின் உரிமையாளர் பாபு கும்பகோணம் கிழக்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

    தகவலறிந்த சம்பவத்திற்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகேசன், குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி வாசன் மற்றும் காவல்துறை யினர்கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை வைத்து தப்பியோடிய கொள்ளையர்கள் தனிப்படை வைத்து தேடி வருகின்றனர்.

    எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதியில் 134 கிராம் நகைகள் கொள்ளைய டிக்கப்பட்டிருப்பது அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

    ×