search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tariff Hike"

    • வீட்டு உபயோக மின் கட்டணத்தை அரசு உயர்த்தியதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
    • மறு பரிசீலனை செய்து உதவ வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்.

    ஈரோடு, 

    தமிழகத்தில் சமீபத்தில் சிறு,குறு தொழில் நிறு வனங்களுக்கு மின் கட்ட ணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மின் கட்டண உயர்வு அறிவிப்பை மறு பரிசீலனை செய்ய வேண்டி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடை பெறும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே. வாசன் எம்.பி. அறிவுறுத்தி இருந்தார்.

    அதன்படி இன்று ஈரோடு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மாநில பொதுச் செயலாளர் விடி யல் சேகர் தலைமையில் நிர்வாகிகள் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

    தமிழகத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வு மற்றும் வைப்பு தொகை 3 மடங்கு உயர்வு ஆகியவற்றை மறு பரிசீலனை செய்ய வேண்டும். கடந்த ஆண்டு வீட்டு உபயோக மின் கட்டணத்தை அரசு உயர்த்தியதால் மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    சில ஆண்டு கால மாகவே கொரோனா தொற்று, மழை,டெங்கு போன்ற பல்வேறு சிர மங்களில் உள்ள மக்களை தமிழக அரசு மென்மேலும் சுமைகளை ஏற்றி வருகிறது.

    ஆகவே அரசு பொது மக்கள் மீது சுமத்தியுள்ள சுமைகளை மறு பரிசீலனை செய்து உதவ வேண்டுமாய் கேட்டு கொள்கிறோம்.

    மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ் டி.சந்திரசேகர், மாநில துணைத் தலைவர் ஆறு முகம், தெற்கு மாவட்ட தலைவர் சண்முகம், கதிர்வேலு, ரபீக் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • தொழில்கள் செய்வோருக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்பதால் கவலையடைந்துள்ளனர்.
    • ஜவுளித் தொழில் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.

    திருப்பூர் :

    தமிழகத்தில் மின் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மற்றும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் செய்வோருக்கு கூடுதல் செலவு ஏற்படும் என்பதால் கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து லகு உத்யோக் பாரதி அமைப்பின் சோமனூர் பகுதி தலைவர் நாராயணசாமி கூறியதாவது:-

    கோவை, திருப்பூர் மாவட்டத்தில் ஜவுளித் தொழில் பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. ஒருபுறம் பஞ்சு விலை உயர்வு, மறுபுறம் துணிக்கு உரிய விலை கிடைப்பது இல்லை. அதிக விலை கொடுத்து நூல்களை வாங்கி துணி உற்பத்தி செய்யும் போது ஆர்டர்கள் இல்லை எனக்கூறி வியாபாரிகள் குறைந்த விலைக்கே துணிகளை கொள்முதல் செய்கின்றனர்.இதனால் மில்களில் உற்பத்தி குறைக்கப்பட்டதால் விசைத்தறிகளும் இயங்குவதில்லை. தற்போது அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வால் ஒட்டு மொத்த ஜவுளி தொழிலும் முடங்கிவிடும். பல லட்சம் பேர் வேலை இழந்து தவிக்க வேண்டியது வரும். அதனால் விசைத்தறி மற்றும் ஜவுளித்தொழில் நலன் கருதி மின் கட்டண உயர்வை அரசு திரும்ப பெறவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • யூனிட் ஒன்றுக்கு 1.40 ரூபாய் மின் கட்டணம் உயர்த்தி அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • குறைந்தபட்ச கூலியை பெற்று தொழில் செய்கிறோம்.

    திருப்பூர் :

    கோவை, திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் சோமனூர் சங்க தலைவர் பழனிசாமி தலைமையில் நடந்தது. அப்போது அவர் கூறியதாவது :-

    8 ஆண்டுகளாக ஒப்பந்த படி, கூலி உயர்வு இல்லாமல் விசைத்தறிகளை இயக்கி வருகிறோம்.நூல் விலை உயர்வால் தொழில் முடங்கியுள்ளது.இந்நிலையில், விசைத்தறிகளுக்கு யூனிட் ஒன்றுக்கு 1.40 ரூபாய் மின் கட்டணம் உயர்த்தி அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறைந்தபட்ச கூலியை பெற்று தொழில் செய்கிறோம். இதை நம்பி பல்லாயிரம் தொழிலாளர்கள் உள்ளனர்.மின் கட்டணத்தை உயர்த்தினால் விசைத்தறி மற்றும் சார்பு தொழில்கள் முடங்கி விடும். மின் கட்டண உயர்வில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்காவிட்டால் வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

    ×