search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tamil Nadu team"

    • தமிழக அணி 709 புள்ளிகளை குவித்து ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
    • பதக்கம் மற்றும் பல சாதனைகளை புரிந்த தமிழக வீரர் , வீராங்கனைகளை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா பாராட்டினார்.

    சென்னை:

    33-வது தென் மண்டல ஜூனியர் தடகள போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் 3 நாட்களாக நடந்தது. 14,16,18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவில் நடந்த போட்டியில் தமிழக அணி சார்பில் 100 சிறுவர்களும் , 98 சிறுமிகளும் ஆக மொத்தம் 198 பேர் பங்கேற்றனர்.

    இதில் தமிழக அணி 709 புள்ளிகளை குவித்து ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மொத்தம் உள்ள 8 பிரிவுகளில் தமிழ்நாடு 6 பிரிவில் முதல் இடத்தை பிடித்து முத்திரை பதித்தது.

    14 வயதுக்குட்பட்ட சிறுமியரில் கேரளாவும், சிறுவர் பிரிவில் தெலுங்கானாவும் முதல் இடத்தை பிடித்தன. மற்ற அனைத்து பிரிவுகளிலும் தமிழகம் ஆதிக்கம் செலுத்தியது.

    பதக்கம் மற்றும் பல சாதனைகளை புரிந்த தமிழக வீரர் , வீராங்கனைகளை தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் சி.லதா பாராட்டினார்.

    • தமிழக அணிகளை தமிழ்நாடு தடகள சங்ச செயலாளர் சி.லதா அறிவித்துள்ளார்.
    • 14, 16, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது.

    சென்னை:

    33-வது தென்மண்டல ஜூனியர் தடகள போட்டி ஆந்திர மாநிலம் குண்டூரில் வருகிற 9-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை நடக்கிறது.

    14, 16, 18 மற்றும் 20 வயதுக்குட்பட்ட பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. இந்தப் போட்டிக்கான தமிழக அணிகளை தமிழ்நாடு தடகள சங்ச செயலாளர் சி.லதா அறிவித்துள்ளார். 98 சிறுமிகளும், 100 சிறுவர்களும் ஆக மொத்தம் தமிழக அணிக்கு 198 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வரும் 67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி நடப்பு சாம்பியனான கேரளாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது. #NationalVolleyball
    சென்னை:

    67-வது தேசிய சீனியர் கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் பிரிவில் நேற்று நடந்த அரையிறுதி ஆட்டங்களில் கேரள அணி 25-18, 25-9, 25-9 என்ற நேர்செட்டில் மேற்கு வங்காளத்தையும், ரெயில்வே அணி 25-19, 25-18, 25-19 என்ற செட் கணக்கில் மராட்டியத்தையும் சாய்த்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

    ஆண்கள் பிரிவில் நடந்த அரையிறுதி ஆட்டம் ஒன்றில் கர்நாடக அணி 25-13, 25-22, 25-20 என்ற நேர்செட்டில் பஞ்சாப் அணியை விரட்டியது. மற்றொரு அரையிறுதியில் தமிழக அணி 25-27, 25-14, 25-18, 25-16 என்ற செட் கணக்கில் நடப்பு சாம்பியனான கேரளாவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. தமிழக அணியில் நவீன்ராஜா ஜேக்கப், உக்கரபாண்டி, வைஷ்ணவ், ஷெல்டன் மோசஸ் ஆகியோரின் ஆட்டம் அருமையாக இருந்தது.

    இன்று மாலை 4 மணிக்கு நடக்கும் பெண்கள் இறுதிசுற்றில் ரெயில்வே-கேரளா அணிகள் மோதுகின்றன. இதைத்தொடர்ந்து நடைபெறும் ஆண்கள் பிரிவு இறுதி ஆட்டத்தில் தமிழ்நாடு-கர்நாடக அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #NationalVolleyball
    தேசிய ஆக்கி போட்டியில் தமிழக அணி 4-2 என்ற கோல் கணக்கில் சி.ஐ.எஸ்.எப்.-ஐ தோற்கடித்து இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியது. #NationalHockey #TamilnaduTeam
    சென்னை:

    9-வது தேசிய சீனியர் ஆக்கி (பி பிரிவு) சாம்பியன்ஷிப் போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் மற்றும் ஐ.சி.எப். மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 41 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. ‘ஜி’ பிரிவில் அங்கம் வகிக்கும் தமிழக அணி தனது முதலாவது லீக்கில் நேற்று மத்திய தொழிலக பாதுகாப்பு படை அணியுடன் (சி.ஐ.எஸ்.எப்.) மோதியது. தமிழக அணியில் எதிர்பார்க்கப்பட்ட முன்னணி வீரர் ஸ்ரீஜேஷ் ஆடவில்லை.

    செந்தில் தலைமையில் களம் கண்ட தமிழக அணி துடிப்புடன் விளையாடியது. ஒரு கட்டத்தில் ஆட்டம் 2-2 என்ற கணக்கில் சமநிலை ஏற்பட்டாலும், பிற்பகுதியில் தமிழக அணி அடுத்தடுத்து இரண்டு கோல்களை திணித்தது. முடிவில் தமிழக அணி 4-2 என்ற கோல் கணக்கில் சி.ஐ.எஸ்.எப்.-ஐ தோற்கடித்து இந்த தொடரை வெற்றியுடன் தொடங்கியது. தமிழக அணியில் ஜோஷ்வா (7-வது நிமிடம்), ராயர் வினோத் (34-வது நிமிடம்), செல்வராஜ் (45-வது நிமிடம்), மணிகண்டன் (58-வது நிமிடம்) ஆகியோர் கோல் போட்டனர்.

    தமிழக அணி அடுத்த ஆட்டத்தில் அசாம் அணியை ஐ.சி.எப். மைதானத்தில் நாளை காலை 7.30 மணிக்கு எதிர்கொள்கிறது.
    ×