search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "taluk office"

    • கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து வீட்டுமனைப் பட்டா வழங்க கோரிக்கை
    • 30-க்கும் மேற்பட்டோர் மனு

    நெல்லை:

    நெல்லை மாவட்ட தாலுகா அலுவகங்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

    அதன்படி நெல்லை தாலுகா அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி நிகழ்ச்சி நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனு வழங்கினர்.

    கொண்டாநகரம் கிராமப்புற தொழி லாளர்கள் வீட்டுமனை பட்டா கேட்டு இன்று மனு கொடுக்க வந்தனர். அனைத்து இந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர்கள் சங்க பொறுப்பாளர் வேலு என்பவர் தலைமையில் 30-க்கும் மேற்பட்டோர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2 ஆண்டுகளாக கொண்டாநகரம் பகுதியை சேர்ந்த ஏழை தொழிலாளர்களுக்கு வீட்டு மனை பட்டா கேட்டு கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார், கலெக்டர் உள்ளிட்டவர்களிடம் மனு கொடுத்து வருகிறோம். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

    எனவே இன்றைய ஜமாபந்தி நிகழ்ச்சியிலேயே விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள், கணவரால் கைவிடப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளித்து வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    சங்கரன்கோவில் அருகே உள்ள நடுவக்குறிச்சி கிராமத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றகோரி கிராம மக்கள் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.
    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் தாலுகா நடுவக்குறிச்சி காலனி தெருவை சேர்ந்த சுமார் 70க்கும் மேற்பட்ட பொதுமக்கள் புதியதமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் இன்பராஜ் தலைமையில் தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு பின்னர் துணை வட்டாச்சியர் மாரியப்பனிடம்  மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    நடுவக்குறிச்சி காலனி பகுதியில் சுமார் 35 வீடுகளில் 100-க்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அரசு மதுக்கடை ஆரம்பிக்கபட்டது. மது வாங்க வருபவர்களால் இப்பகுதி மக்களுக்கு பாதுகாப்பாற்ற சூழல் உள்ளது. இது தொடர்பாக வழக்குகளும் நிலுவையில் உள்ளது. அதனால் இப்பகுதி பெண்கள் மற்றும் மாணவ- மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மதுக்கடையை  மூட வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

    இதில் ஊர் நாட்டாண்மை மாடசாமி, புதியதமிழகம் கட்சி தொகுதி செயலாளர்கள் ராஜேந்திரன், செல்வராஜ், ஒன்றிய செயலாளர்கள் முருகன், காசிப்பாண்டி, சந்திரன், அழகுமணி, மாணவரணி தங்கம்சுந்தர் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர். மனுவை பெற்று கொண்ட அதிகாரிகள் இது குறித்து மாவட்டநிர்வாகத்திற்கு தகவல் அளித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து கிராமமக்கள் கலைந்து சென்றனர்.
    கொரட்டூர் ஏரியில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடும்பத்துடன் பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அம்பத்தூர்:

    அம்பத்தூர் கள்ளிக்குப்பம் பகுதியில் உள்ள முத்தமிழ் நகர், மூகாம்பிகை நகர், கங்கை நகர்,எஸ்எஸ் நகர் பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கடந்த 25 வருடங்களாக வசித்து வருகின்றனர்.

    இவர்களுக்குமின் இணைப்பு, ரேசன் கார்டு, சொத்துவரி, மெட்ரோ வாட்டர் இணைப்பு உள்ளிட்ட அனைத்து அடிப் படை வசதிகளும் வழங்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் பொதுப் பணிதுறை சார்பில் பகுதி சர்வே எண் 813 இல் உள்ள 589 குடும்பங்கள் கொரட்டூர் ஏரி ஆக்கிரமிப்பில் வருவதாகவும், எனவே அவர்கள் வீடுகளை காலி செய்ய வேண்டும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு நோட்டீஸ் வழங்கினார்.

    இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

    இதற்கிடையே ஆக்கிரமிப்பு வீடுகளில் மின் இணைப்பை துண்டிக்கப் போவதாக அதிகாரிகள் தெரிவிந்ததாக தெரிகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் இன்று காலை குடும்பத்துடன் அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

    கோபி அருகே கல்லூரி வேனும் ஸ்கூட்டரும் மோதிய விபத்தில் தாலுகா அலுவலக ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

    கோபி:

    கோபி ஆஞ்சநேயர் வீதியை சேர்ந்தவர் ராபர்ட் (வயது 57). நம்பியூர் தாலுகா அலுவலக ஊழியர்.

    இவர் நேற்று பணிக்கு சென்றார். பணி முடிந்து மாலையில் தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பி சென்று கொண்டு இருந்தார்.

    கரட்டடிபாளையம் மாரியம்மன் கோவில் அருகே சென்றபோது அந்த வழியாக பின்னால் வந்த கல்லூரி வேனும் ஸ்கூட்டரும் மோதின.

    இதில் ராபர்ட் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந் தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    ஆனால் கொண்டு செல்லும் வழியில் ராபர்ட் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கடத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வேனை ஓட்டி வந்த கந்தசாமி என்பவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

    ×