search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sunlight"

    • ஆண்டுக்கு 2 முறை இந்த கோவில் கருவறையில் உள்ள லிங்க திருமேனி மீது சூரிய ஒளி படும்.
    • பக்தர்கள் மெய்சிலிர்த்து சரண கோஷங்களை எழுப்பி வழிபாடு செய்தனர்.

    அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே காரைக்குறிச்சி சவுந்தரவல்லி தாயார் உடனுறை பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் சோழர் காலத்தில் கட்டப்பட்டது. ஆண்டுக்கு 2 முறை கோவில் கருவறையில் உள்ள லிங்க திருமேனி மீது சூரியன் தனது கதிர்களை பாய்ச்சி வழிபடுவது இந்த கோவிலின் சிறப்பு அம்சமாகும்.

    தமிழ் வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் ஒரு முறையும், பின்னர் 4 மாதங்கள் இடைவெளி விட்டு ஆவணி மாதத்தில் ஒரு முறையும் கருவறையில் உள்ள லிங்க திருமேனி மீது சூரிய கதிர்கள் படும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். தொடர்ந்து 5 நாட்கள் ஒவ்வொரு முறையும் சூரிய கதிர்கள் லிங்கத் திருமேனி மீது படும்.

    இந்த ஆண்டு சித்திரை மாத சூரிய வழிபாடு நடைபெற்ற முடிந்த நிலையில் ஆவணி மாத சூரிய வழிபாடு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. கடந்த 18-ந் தேதி லேசாக சூரிய கதிர்கள் திருமேனி மீதுபட்டது. அடுத்த இரண்டு நாட்கள் மேகமூட்டமாக இருந்ததால் சூரிய வழிபாடு நடைபெறவில்லை. நேற்று காலை 6 மணி 5 நிமிடத்திற்கு சூரிய பகவான் தனது ஆயிரம் கரங்களை நீட்டி காரைக்குறிச்சி பசுபதீஸ்வரர் பாதங்களை சரணாகதி அடைந்த நிகழ்வு நடந்தேறியது. அடுத்த ஐந்து நிமிடங்களில் சிறிது சிறிதாக லிங்கத் திருமேனி மீது முழுவதும் சூரிய கதிர்கள் படர்ந்து லிங்க திருமேனி தங்கத்தை உருக்கி ஊத்தியது போல் தகதகவென மின்னியது.

    இந்த காட்சியை கண்ட பக்தர்கள் மெய்சிலிர்த்து சரண கோஷங்களை எழுப்பி வழிபாடு செய்தனர். பின்னர் சூரிய பகவானுக்கும் பசுபதீஸ்வரர் சவுந்தரநாயகி தாயார் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு மங்கள ஆரத்தி நடைபெற்றது. ஆண்டுக்கு இருமுறை நடைபெறும் இந்த அதிசய நிகழ்வை திரளான பக்தர்கள் கண்டு வழிபட்டு வருகின்றனர்.

    • பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, சீரகசம்பா, கிச்சலி சம்பா, காட்டுயாணம் போன்ற 10 விதமான நெல் ரகங்கள் 30 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.
    • புலி, சிங்கம் இருந்தால் தான் மலைவளம் பாதுகாக்கப்பட்டு நல்ல மழையை பெறமுடியும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை சார்பில் 8 ஆம் ஆண்டு நெல் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    விழாவிற்கு நலம் பாரம்பரிய விவசாய அறக்கட்டளை செயலாளர் சுதாகர் தலைமை வகித்தார். சீர்காழி கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, பள்ளி தலைமைஆசிரியர் அறிவுடைநம்பி, வழக்குரைஞர் சுந்தரய்யா, சாயிராம் கல்விநிறுவன தலைவர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். அறக்கட்டளையை சேர்ந்த கரு.முத்து வரவேற்றார். இயற்கை வேளாண் வல்லுனர்கள் சித்த மருத்துவர் தஞ்சை சித்தர் மரபுவகை உணவு வகைகள் குறித்தும், தமிழர் வேளாண்மை குறித்து ஞாணபிரகாசம், தற்சார்பு பற்றி பாலகிருட்டிணன் இயற்கை உணவு குறித்து சிவகாசி மாறன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

    தொடர்ந்து மரபு நெல் ரகங்களை பயிரிடும் விவசாயிகளுக்காக சம்பா பட்டத்திற்கு தேவையான பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, சீரகசம்பா, கிச்சலி சம்பா, காட்டுயாணம் போன்ற 10 விதமான நெல் ரகங்கள் 30 விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக துணைவேந்தர் கதிரேசன் சிறந்த முறையில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கினார்.

    விழாவில் இயற்கை விவசாயி சிவாஜி பேசுகையில், நம்முடைய பாரம்பரிய நெல் வகைகளை இழந்துவிட்டு தற்போது அயல்நாட்டு ஆங்கிலேய ராசாயன நிறுவனங்களிடம் கையேந்தி நிற்கிறோம்.மருத்துவம் வளர்கிறது என்றால் நாடுவளர்கிறது என அர்த்தமில்லை.நோய்கள் வளர்கிறது என்றே அர்த்தம்.நல்ல நீரை பூமியில் நாம் சேமிக்கவேண்டும்.

    தற்போது தண்ணீரை காசுகொடுத்து வாங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.புலி, சிங்கம் இருந்தால்தான் மலைவளம் பாதுகாக்கப்பட்டு நல்ல மழையை பெறமுடியும். அதனால்தான் புலிகளை காக்க அரசு தற்போது பெரும் முயற்சி செய்கிறது.

    மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழவேண்டும்.நாம் அனுபவிக்கும் நல்லநீர், நல்ல மண்வளத்தை நமது அடுத்த தலைமுறைக்கு நாம் கொடுத்துசெல்லவேண்டும். நம் கண்டுபிடிப்புகள் மனித இனத்தை அழிக்ககூடியதாகவே உள்ளது. மண், நீர்வளத்தை காக்கவேண்டியதன் அவசியத்தை இன்றைய தலைமுறைக்கு பாடதிட்டத்தில் சேர்த்து சொல்லித்தரவேண்டும். குழந்தைகளை சூரியஒளி படும்படி மண்ணோடு விளையாட விட வேண்டும் இயற்கையான எதிர்ப்பு சக்தி உருவாகினால்தான் நோய்கள் ஏற்படாது என்றார்.

    விழாவில் இந்தியாவில் உள்ள ஐந்நூறுக்கு மேற்பட்ட மரபு நெல் ரகங்கள் கண்காட்சியில் காட்சிபடுத்தப்பட்டிருந்தது. நஞ்சில்லா உணவு, பலா பழ அல்வா, பலா பழ ஐஸ் கிரீம், துணி பை, சித்தமருத்துவம், அரிய வகை மூலிகை, பாரம்பரிய தானிய தின்பண்டங்கள், ஆகியவையும் காட்சிப் படுத்தப்பட்டிருந்தது.

    இயற்கை விவசாயத்திற்கு தேவையான அனைத்து ஆலோசனை வழிமுறைகளையும் விவசாயிகளுக்கு வழங்கினர். நாட்டு காய்கறி விதைகள் விற்பனையும் நடைபெற்றது.விழாவில் பங்கேற்ற வர்களுக்கு பாரம்பரிய அரிசியில் செய்யப்பட்ட உணவுகள் வழங்கப்பட்டது.

    பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன்தாகவே வெயில் வாட்டி வதைப்பதால் மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்டத்தில் கோடை காலம் ஆரம்பிப்பதற்கு முன்தாகவே வெயில் வாட்டி வதைக்க தொடங்கி விட்டதே என்றே கூறலாம். அந்த அளவிற்கு பகல் நேரத்தில் வெயில் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் வெளியில் செல்வதை தவிர்த்து பலர் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் சாலையில் நடந்து செல்வோர்கள் குடை பிடித்தபடியும், தலையில் துணியை போட்டுக்கொண்டும், பெண்கள் தங்களது துப்பட்டாவால் தலையை மூடிக்கொண்டு சென்று வருகின்றனர். சாலையில் அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்கு ஆளாகின்றனர்.

    இதனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கூலிங்கிளாஸ் அணிந்து செல்கின்றனர். இந்த வெயில் கொடுமையால் ஏற்படும் தாகத்தை தீர்க்க பொதுமக்கள் பழச்சாறு, கரும்புச்சாறு, நுங்கு, தர்ப்பூசணி, இளநீர், முலாம் பழச்சாறு, மோர், கூழ் போன்றவற்றை கடைகளில் வாங்கி பருகுகின்றனர். இதனால் அந்த கடைகளில் கூட்டம் அலைமோதி, விற்பனையும் சூடுபிடித்துள்ளது. 

    பெரம்பலூர் மாவட்ட பொதுமக்களால் இந்த வெயிலை சமாளிக்க முடியவில்லை. அக்னி நட்சத்திரம் என்கிற கத்தரி வெயில் மே மாதம் 4-ந் தேதி தொடங்க இருக்கிறது. அந்த வெயிலை எவ்வாறு சமாளிக்கப்போகிறோம் என பொதுமக்கள் தற்போதே புலம்பி வருகின்றனர். 
    காவேரிப்பாக்கம் கொங்கணீஸ்வரர் கோவில் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு நடந்தது. இதனை திரளான பொதுமக்கள் கண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    காவேரிப்பாக்கத்தில் கொங்கணர் மகரிஷி வழிபட்ட ஞானகுழலேந்தி உடனுறை கொங்கணீஸ்வரர் கோவில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க இக்கோவில் ஒருகாலத்தில் கோட்டை கோவில் என்றும், ஞானகுழலேந்தி குங்கும வள்ளிஅம்பாள் உடனுறை கொங்கணீஸ்வரர் கோவில் என்றும் அழைக்கப்பட்டு வந்தது.

    கோட்டை கோவில் என்று அழைக்கப்பட்ட இக்கோவில் இன்று அதற்கான அடையாளம் எதுவும் இன்றி மூலவர் விமான கோபுரம், சுற்றுச்சுவர்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது. இப்பகுதியில் உள்ள சைவபுரம் என்று அழைக்கப்படும் கொண்டாபுரம் கிராமம் திருக்குறளை எழுதிய திருவள்ளுவர் மனைவி வாசுகி பிறந்த ஊராகும். கலிங்கம், காந்தாரம், அயோத்தியா, அவந்தியா, பர்மா, பாரசீகம் உள்ளிட்ட 56 தேசங்களை ஆண்ட கொங்கணர் இல்லறத்தை துறந்து கானகம் மேற்கொண்டபோது இந்த ஊருக்கு வந்து இங்குள்ள ஈஸ்வரனை வழிபட்டுள்ளார்.

    அதனால் இக்கோவில் கொங்கணீஸ்வரர் கோவில் என்று அழைக்கப்பட்டது. அவருடன் மனைவி ஞானகிளியாம்பிகை உடன் வந்துள்ளார். பின்னர் கொங்கணர் இங்கு ஆசிரமம் அமைத்து ஈஸ்வரருக்கு பூஜைகள் செய்து தவம் புரிந்துள்ளார். சிறிது காலத்துக்கு பின்னர் அவர் திருப்பதி மலையடிவாரம் சென்று அங்கு ஜீவசமாதி அடைந்ததாக கோவில் வரலாறு கூறுகிறது. இக்கோவிலில் மூலவர் கொங்கணீஸ்வரர் மேற்கு நோக்கியும், குங்குமவள்ளி அம்மன் வடக்குதிசை நோக்கியும் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் இக்கோவிலில் புரட்டாசிமாத மகாளய அமாவாசையன்றும், அதனை தொடர்ந்து 2 நாட்கள் மூலவர் கொங்கணீஸ்வரர் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் மாலை மூலவர் சிவலிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் நிகழ்வு நடந்தது. இக்காட்சியை திரளான பொதுமக்கள் வரிசையாக நின்று தரிசனம் செய்தனர். அப்போது அவர்கள் ஓம் சிவாய நம, தென்னாடு உடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி என்று பக்தி பரவசத்துடன் கோஷங்கள் எழுப்பியபடி சாமி தரிசனம் செய்தனர்.
    ×