search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "summons"

    ரெயில்வே ஓட்டல் வழக்கு தொடர்பாக 1-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு லாலு பிரசாத் யாதவிற்கு டெல்லி கோர்ட்டு சம்மன் வழங்கியுள்ளது. #LaluPrasadYadav #RailwayHotelTender
    புதுடெல்லி:

    ராஷ்ட்ரீய ஜனதாதள தலைவரும், பீகார் மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான லாலு பிரசாத் யாதவ், கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை மத்திய ரெயில்வே மந்திரியாக இருந்தார். அவரது பதவிக்காலத்தில் ரெயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி-க்கு சொந்தமான ஓட்டல்களின் பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை தனியாருக்கு வழங்கியதில் ஊழல் நடந்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன் புகார் எழுந்தது.

    இது தொடர்பாக லாலு பிரசாத் யாதவ், அவரது குடும்பத்தினர் மற்றும் ஐ.ஆர்.சி.டி.சி.யின் அப்போதைய அதிகாரிகள் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு டெல்லியில் உள்ள சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இதில் கடந்த ஏப்ரல் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்த சி.பி.ஐ. அதிகாரிகள், குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போதிய ஆதாரம் இருப்பதாக அதில் கூறியிருந்தனர்.

    இந்த வழக்கில் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 31-ந்தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ரப்ரி தேவி, மகன் தேஜஸ்வி யாதவ் மற்றும் முன்னாள் ரெயில்வே வாரிய உறுப்பினர் அகர்வால் உள்ளிட்டோருக்கு நீதிபதி அரவிந்த் குமார் நேற்று சம்மன் அனுப்பினார்.  #LaluPrasadYadav #RailwayHotelTender #tamilnews
    பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் ஆசாத் துரானி நேரில் ஆஜராகி புத்தகம் தொடர்பான தனது நிலை குறித்து விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பியது. #AsadDurrani #PakistanArmy
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.யின் தலைவராக 1990-1992-ம் ஆண்டுகள் இடையே பணியாற்றியவர், ஆசாத் துரானி இவர், ‘உளவு வரலாற்றுக் கூறு; ரா, ஐ.எஸ்.ஐ. மற்றும் அமைதியின் மாயை’(தி ஸ்பை குரோனிக்கல்ஸ், ரா, ஐ.எஸ்.ஐ. அண்ட் தி இல்லுயூசன் ஆப் பீஸ்) என்னும் புத்தகத்தை இந்திய உளவுப் பிரிவான ‘ரா’வின் முன்னாள் தலைவரான அஸ் துலாத்துடன் இணைந்து எழுதியுள்ளார். இந்த புத்தகம் பாகிஸ்தானில் கடந்த புதன்கிழமை வெளியிடப்பட்டது.

    எதிரி நாட்டின் உளவுத்துறை அதிகாரி ஒருவருடன் இணைந்து உளவு பார்ப்பது குறித்த தகவல்களை எப்படி புத்தகமாக எழுதி வெளியிடலாம்? என்று இதற்கு பாகிஸ்தானில் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது. முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ள கருத்துகளை ஆய்வுக்கு உட்படுத்தவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

    இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் ஆசாத் துரானி நேரில் ஆஜராகி புத்தகம் தொடர்பான தனது நிலை குறித்து விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பியது. அதையடுத்து அவர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அப்போது அவரிடம் இது ராணுவ நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது என்று குற்றம் சாட்டப்பட்டது. அதை ஆசாத் துரானி மறுத்தார்.இது தொடர்பாக பாகிஸ்தான் ராணுவம் அவர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று கருதப்படுகிறது.  #AsadDurrani #PakistanArmy
    ×