search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Suicide"

    • மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அருகே கொரநாட்டுகருப்பூர் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வினோத்குமார் (வயது 38).

    விவசாய கூலி தொழிலாளி.

    இவருக்கு கயல்விழி (30) என்ற மனைவியும், 4 பெண் குழந்தைகளும், ஒரு மகனும் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று மதியம் வினோத்குமார் மற்றும் அவரது மனைவிக்கு இடையே குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால் வினோத்குமார் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதில் மனமுடைந்த அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கும்பகோணம் அரசு தலைமை ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

    • ஜெயபெருமாளுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
    • மனமுடைந்த ஜெயபெருமாள் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை அருகே உள்ள முனைஞ்சிபட்டியை அடுத்த காரியாண்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஜெயபெருமாள் (வயது 50). விவசாயி.

    இவருக்கு குருவம் மாள்(45) என்ற மனைவியும், சுடலை மணி (18) என்ற மகனும், முத்தரசி (16) என்ற மகளும் உள்ளனர். ஜெயபெருமாளுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவர் வேலைக்கு செல்லாமல் சுற்றி வந்துள்ளார்.

    மேலும் அவர்களுக்கு சொந்தமான விவசாய நிலங்களை சரியாக பரா மரிக்காமலும் இருந்துள்ளார். இதனை அவரது குடும்பத்தினர் கண்டித்துள்ளனர்.

    இதில் மனமுடைந்த ஜெயபெருமாள் நேற்று மாலை தோட்டத்திற்கு சென்று அங்கிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி விழுந்துள்ளார்.

    இதனிடையே இரவு வெகு நேரமாகியும் தந்தையை காணாததால் அவரது மகன் சுடலைமணி தோட்டத்திற்கு தேடிச்சென்றுள்ளார். அப்போது அருகில் விஷப்பாட்டிலுடன் ஜெயபெருமாள் மயங்கி கிடந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

    உடனடியாக அங்கு வந்த உறவினர்கள் அவரை மீட்டு முனைஞ்சிப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக் காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் செல்லும் வழியி லேயே ஜெய பெருமாள் பரிதாபமாக இறந்தார். இது குறித்து விஜயநாராயணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கரீப் சாப் என்பவர் கறிக்கடை நடத்தி வந்தார். கடையில் கிடைக்கும் வருமானம் அவருக்கு போதுமானதாக இல்லை.
    • கரீப் சாப் தனக்கு தெரிந்தவர்களிடம் மீட்டர் வட்டிக்கு ரூ.1 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.

    கர்நாடக மாநிலம் தும்கூர் சதாசிவா நகரை சேர்ந்தவர் கரீப் சாப் (32). இவரது மனைவி சுமையா (30). இவர்களுக்கு ஹாஜிரா (14) என்ற மகளும், முகமது சுபான் (10), முகமது முனீப் (8) ஆகிய 2 மகன்களும் உள்ளனர்.

    கரீப்சாப் அந்த பகுதியில் கறிக்கடை நடத்தி வந்தார். கடையில் கிடைக்கும் வருமானம் அவருக்கு போதுமானதாக இல்லை. இதனால் குடும்பத்தை நடத்த கஷ்டப்பட்டு வந்தார். இந்த நிலையில் கரீப் சாப் தனக்கு தெரிந்தவர்களிடம் மீட்டர் வட்டிக்கு ரூ.1 லட்சம் கடன் வாங்கி இருந்தார்.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக வியாபாரம் சரியாக நடக்காததால் கரீப் சாப்பால் வாங்கிய கடனுக்கு சரியாக வட்டி செலுத்த முடியவில்லை. இதனால் பணம் கொடுத்தவர்கள் திருப்பி கேட்டு அவருக்கு தொல்லை கொடுத்தனர். பணத்தை செலுத்த முடியாத கரீப் சாப் தனது மனைவியிடம் இதுகுறித்து தெரிவித்து உள்ளார். பின்னர் கணவன், மனைவி 2 பேரும் குழந்தைகளை கொன்றுவிட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

    அதன்படி சம்பவத்தன்று இரவு கரீப்சாப் மற்றும் அவரது மனைவி சுமையா ஆகியோர் உணவில் விஷம் கலந்து தனது 3 குழந்தைகளுக்கும் கொடுத்தனர். உணவில் விஷம் கலந்திருப்பது தெரியாமல் சாப்பிட்ட 3 குழந்தைகளும் படுக்க சென்றனர். பின்னர் தூக்கத்திலேயே அவர்கள் பலியானார்கள்.

    இதையடுத்து கரீப்சாப் செல்போன் மூலம் ஒரு வீடியோ எடுத்தார். அதில் கடன் கொடுத்தவர்களின் தொல்லையால் விரக்தி அடைந்த நான் 3 குழந்தைகளை விஷம் வைத்து கொன்று விட்டு நானும், எனது மனைவியும் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று தெரிவித்து இருந்தார். மேலும் கடன் கேட்டு தொல்லை கொடுத்த சிலரது பெயர்களையும் தெரிவித்து இருந்தார். 5 நிமிட வீடியோவாக எடுத்து அதை உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். அதோடு இல்லாமல் 2 பக்கத்தில் உருக்கமான கடிதத்தையும் எழுதி வைத்திருந்தார்.

    பின்னர் கரீப் சாப் மற்றும் அவரது மனைவி சுமையா ஆகியோர் வீட்டின் ஹாலில் முகத்தை துணியால் மூடி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தெரிய வந்ததும் திலக்பார்க் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 5 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கரீப் சாப் வெளியிட்ட வீடியோ மற்றும் உருக்கமான கடிதங்களை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ.1 லட்சம் கடன் தொல்லைக்கு பயந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலியான சம்பவம் கர்நாடகாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பொன்னம்மாப்பேட்டை வாய்க்கால் பட்டறை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (44) ஆட்டோ டிரைவர்.
    • கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி சங்கீதா கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.

    சேலம்:

    சேலம் பொன்னம்மாப்பேட்டை வாய்க்கால் பட்டறை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (44) ஆட்டோ டிரைவர். இவருக்கு சங்கீதா என்ற மனைவியும், கல்லூரி 2-ம் ஆண்டு படிக்கும் மகளும், பிளஸ் 2 படிக்கும் மற்றொரு மகளும் உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி சங்கீதா கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டார்.

    இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சுரேஷ் இருதய நோயால் அவதிப்பட்டு வந்தார். பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் குணமாகவில்லை. இதனால் மனம் உடைந்த சுரேஷ் நேற்று இரவு வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இன்று காலை இதை பார்த்த குடும்பத்தினர் கதறி அழுதனர். இந்த சம்பவம் குறித்து அம்மாபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    விரைந்து வந்த போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அவரது வீட்டில் சுரேஷ் கைப்பட எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. அந்த கடிதத்தில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. எனது உடலை அரசு ஆஸ்பத்திரிக்கு தானமாக கொடுத்து விடுங்கள் என எழுதப்பட்டு இருந்தது. இது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    தாய், தந்தை இருவரும் இறந்த நிலையில் 2 மகள்களும் பரிதவிப்பில் உள்ளனர்.

    • சர்க்கரை வியாதியால் அவதியடைந்து வந்தார்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் அடுத்த ஊசூர், ஜி.ஆர்.பாளையத்தை சேர்ந்தவர் அசோக் குமார் (வயது 48). கூலி தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. அசோக் குமாருக்கு சர்க்கரை வியாதி இருந்ததால் அவரது வலது காலில் விரல்கள் துண்டிக்கப்பட்டு இருந்தன.

    இந்த நிலையில் திருமணம் ஆகாத ஏக்கத்தில் இருந்த அசோக் குமார் மதுப்பழக்கத்திற்கு அடிமையானார். இதனால் வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றி வந்தார்.

    கடந்த 16-ந் தேதி அசோக் குமார் மதுவில் விஷம் கலந்து குடித்துவிட்டு மயங்கி கிடந்தார். இதனைக் கண்ட அவரது சகோதரி லலிதா, அசோக் குமாரை மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    கடந்த 10 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அசோக் குமார் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அரியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மெகருன்னிசாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஆலப்புழாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள காயங்குளம் பகுதயை சேர்ந்தவர் ஷபீக் ரகுமான். இவரது மனைவி மெகருன்னிசா (வயது48). இவர் மாவேலிக்கரை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.

    இவர்களது மூத்த மகன் பென்யாமின் கனடா நாட்டில் உயர்கல்வி பயின்று வந்தார். இந்நிலையில் அங்கு நடந்த கார் விபத்தில் சிக்கி பெய்னாமின் பரிதாபமாக இறந்தார். அவர் இறந்தது குறித்து ஆலப்புழாவில் உள்ள அவரது பெற்றோருக்கு தகவல் வந்தது.

    விபத்தில் மகன் இறந்த தகவலைக்கேட்டு அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மகனின் இறப்பை மெகருன்னிசாவால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அவர் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    மெகருன்னிசா தூக்கு போடுதவற்கு முன்னதாக தனது தோழி ஒருவரிடம் போனில் பேசி, தனது மகன் இறந்துவிட்டதால் தனக்கு வாழ விரும்பமில்லை என்று கூறியிருக்கிறார். அதுபற்றி அவர், மசூதிக்கு சென்றிருந்த மெகருன்னிசாவின் கணவருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

    இதனால் பதட்டமடைந்த அவர் தனது இளைய மகனுடன், மசூதியில் இருந்து வீட்டுக்கு அவசரஅவசரமாக வந்திருக்கிறார். அவர் வீட் டுக்கு வந்து பார்த்த போது மெகருன்னிசா தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து காயம்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மெகருன்னிசாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மகன் இறந்த துக்கத்தில் பெண் டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் ஆலப்புழாவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

    • காதல் மனைவி பெற்றோருடன் சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் பாலமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஒத்தையால் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது இளைய மகன் பாலமுருகன் (வயது 22). ஐ.டி.ஐ. படித்து விட்டு சிவகாசியில் உள்ள தனியார் கார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். அப்போது அதே கம்பெனியில் வேலை பார்த்த சிவகாசி நாரணாபுரத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

    தாங்கள் காதலிப்பது குறித்து அவர்கள் பெற்றோர்களிடம் கூறியுள்ளனர். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இருவரின் பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த நிலையில் தீபாவளிக்கு மறுநாள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறினர். இதையடுத்து அந்தப்பகுதியில் உள்ள ஒரு கோவிலில் அவர்கள் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே இளம்பெண்ணின் தந்தை மகளை கண்டுபிடித்து தருமாறு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், இருவரும் திருமணம் செய்து கொண்டு கோவையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் இருவரையும் சிவகாசி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    அப்போது பெண்ணின் பெற்றோர் தங்களது மகளிடம் பேச விரும்புவதாக கூறியுள்ளனர். அவர்கள் பெண்ணிடம் தனியாக பேசினர். இதையடுத்து அந்த பெண் பாலமுருகனிடம் இருந்து பிரிந்து பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்தார். இதனால் அந்த பெண்ணை போலீசார் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

    போலீஸ் நிலையத்திற்கு மனைவியுடன் சென்ற பாலமுருகன் தனியாக கிராமத்திற்கு வந்துள்ளார். மனமுடைந்த நிலையில் இருந்த அவர் நேற்று இரவு அங்குள்ள கன்னி மாரியம்மன் கோவில் சாமி சிலைக்கு முன்பாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த நிலையில் இன்று காலை அந்த வழியாக சென்றவர்கள் பாலமுருகன் தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து சாத்தூர் தாலுகா போலீசாருக்கு அவர்கள் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பாலமுருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    காதல் திருமணம் செய்து 12 நாட்களில் மனைவி பிரிந்து சென்றதால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    • உடல் பாதிப்படைந்த அதல்பரை உறவினர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுச்சேரி:

    புதுவை குருசுகுப்பம் பத்மினி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் செயின்ட்டு அந்துவான். இவரது மனைவி மரிகிளேர். இவர் அரவிந்தர் ஆசிரம் நூலகத்தில் வேலை செய்து வருகிறார். மகன் அதல்பர் வயது 27) இவர் அதே பகுதியில் உள்ள அத்தை வீட்டில் வசித்து வந்தார்.

    அவ்வப்போது அதல்பர் தனது தாயை சந்தித்து நலன் விசாரித்து செல்வார்.

    அதுபோல் சம்பவத்தன்று இரவு அதல்பர் தனது தாயை சந்திக்க வந்தார். அப்போது மரிகிளேர் வேலைக்கு எதுவும் செல்லா மல் ஊர் சுற்றி வருகிறாயே என அதல்பரை கண்டித்த தாக கூறப்படுகிறது.

    இதனால் மனமுடைந்த அதல்பர் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து எலி மருந்தை எடுத்து தின்று விட்டார்.

    இதில் உடல் பாதிப்படைந்த அதல்பரை உறவினர்கள் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டேன்லி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்து வந்தும் பலனின்றி நேற்று இரவு அதல்பர் பரிதாபமாக இறந்து போனார்.

    இது குறித்து மரிகிளேர் கொடுத்த புகாரின் பேரில் சோலை நகர் புறக்காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • முதல் மகளுக்கு தேனி அம்மாபட்டியை சேர்ந்தவரை திருமணம் செய்து கொடுத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள முருக்கோடை ராயர்கோட்டையை சேர்ந்தவர் முருகன். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். முதல் மகளுக்கு தேனி அம்மாபட்டியை சேர்ந்தவரை திருமணம் செய்து கொடுத்தனர். அவருக்கு குழந்தை பிறந்ததையடுத்து தனது மனைவியுடன் பேத்தியை பார்க்க புறப்பட்டார்.

    அப்போது 2 வது மகளான 10ம் வகுப்பு படிக்கும் கோபிகா (14) என்பவர் தானும் உடன் வருவதாக கூறி உள்ளார். அதற்கு அடுத்தமுறை செல்லலாம் என்றும், வீட்டிலேயே இருக்குமாறு கூறி விட்டு முருகன் தனது மனைவியுடன் சென்றுவிட்டார்.

    இதனால் மனமுடைந்த கோபிகா தனது உடலில் மண்ணெண்ணை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். பலத்த காயங்களுடன் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வருசநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம், ராஜபுதூர் தெருவை சேர்ந்தவர் முத்துசெல்வம் (வயது45). தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது.
    • முத்துசெல்வம் மது அருந்தும் பழக்கத்தை கைவிட முயற்சி செய்தார். ஆனால் அவரால் மது அருந்தும் பழக்கத்தை கைவிட முடியவில்லை.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள சிதம்பரபுரம், ராஜபுதூர் தெருவை சேர்ந்தவர் முத்துசெல்வம் (வயது45). தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் இவர் அடிக்கடி மது குடித்து விட்டு போதையில் இருந்து வந்ததால் பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதையடுத்து முத்துசெல்வம் மது அருந்தும் பழக்கத்தை கைவிட முயற்சி செய்தார். ஆனால் அவரால் மது அருந்தும் பழக்கத்தை கைவிட முடியவில்லை. இதனைதொடர்ந்து விரக்தி அடைந்த முத்துசெல்வம் வீட்டில் விஷம் குடித்தார். உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    அங்கிருந்து அவர் நெல்லை அரசு மருத்துவமனை யில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுபற்றி அவரது மனைவி தங்கம் (42) களக்காடு போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    • ராஜபாளையத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • பணப்பிரச்சினையில் இந்த விபரீத முடிவு எடுத்ததாக தெரிகிறது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் நகரில் சஞ்சீவி மலையின் பின்புறம் காட்டுப்பகுதி உள்ளது. மேலும் இப்பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் தென்னை, மா, பலா, வாழை ஆகியவை நட்டு விவசாயம் பார்த்து வரு கின்றனர்.

    இந்த நிலையில் விவசாய பகுதிக்கு கூலி வேலைக்கு சென்றவர்கள் நடந்து செல் லும் பகுதியில் அடையா ளம் தெரியாத நிலையில் ஆண் உடல் ஒன்று தீயில் எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த னர்.

    பின்னர் உடனடியாக ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன் பேரில் சம்பவ இடத் திற்கு விரைந்து சென்ற இன்ஸ்பெக்டர் சார்லஸ் தலைமையிலான போலீசார் எரிந்த நிலையில் கிடந்த பிணத்தை கைப்பற்றி விசா ரணை மேற்கொண்ட னர்.

    மேலும் உடல் கிடந்த இடத்தின் அருகே ஒருவர் மட்டும் அமர்ந்து மது அருந்தி யது போன்றும், சில் லறை காசுகள் சிதறிக் கிடப்பதையும் பார்த்த போலீசார் மது அருந்திவிட்டு பிணமாக கிடந்த நபர் உட லில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசார ணையை தொடங்கினர்.

    மேலும் அக்கம்பக்கத்தில் யாராவது காணாமல் போய் இருக்கிறார்களா அல்லது குடும்ப பிரச்சினை காரண மாக வெளியேறினார்களா என்றும் விசாரணை நடத் தப்பட்டது. அதில் சஞ்சீவி மலை அடிவாரப் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ. காலனி சிரஞ்சீவி நகரில் வசித்து வரும் சரவணகுமார் (வயது 48) என்பவர் அதிக மன அழுத்தத்துடன் காலை வீட்டிலிருந்து வெளியேறி யது தெரியவந்தது.

    உடனடியாக போலீசார் அவரது குடும்ப உறுப்பினர்க ளுக்கு தகவல் தெரிவித்து அடையாளம் கூற அழைத்து வந்த நிலையில் இறந்தவர் குறித்த முழு விவரமும் தெரிய வந்தது. தற்கொலை செய்துகொண்டு இறந்தவர் சரவணகுமார் என்றும், அவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும், சீதாலட்சுமி எனும் கல்லூரியில் படிக்கும் மகளும், விஜய் என்ற மக னும் உள்ளது தெரிய வந் தது.சரவணகுமார் ராஜபா ளையம் மதுரை தேசிய நெடுஞ்சாலையில் மம்சாபு ரம் விலக்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்கில் மேற்பார்வையாள ராக பணியாற்றி வரவு, செலவு கணக்குகளை பார்த்து வந்துள்ளார். இதற் கிடையே கடந்த தீபாவளி தினத்தன்று பெட்ரோல் பங்கில் வரவு செலவு கணக் குகளை சரிபார்க்கும் பொழுது கணக்கில் குளறு படி ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை சரவணகுமார் பெட்ரோல் பங்கிற்கு கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிக மன அழுத்தத்தில் இருந்த சரவணகுமார் தீபாவளி முடிந்த நாளிலிருந்து பணிக்கு செல்லாமல் பெட் ரோல் பங்கிற்கு கட்ட வேண் டிய தொகையை ஏற்பாடு செய்து வந்துள்ளார்.

    வேலைக்கு செல்லாதது குறித்து குடும்ப உறுப்பினர் கள் கேள்வி எழுப்பிய போது ரூ.30 ஆயிரம் பணம் தர வேண்டும் என்பதை மட்டும் கூறியுள்ளார். பின்னர் அவர்கள் உதவியு டன் ரூ.30 ஆயிரம் பணத்தை பெட்ரோல் பங்க் நிறுவ னத்திலும் கட்டியுள்ளார். மீதம் கட்ட வேண்டிய ஒரு லட்சத்து 20 ஆயிரத்தை எப்படி தயார் செய்வது என நண்பர்களிடம் கூறி புலம்பி யுள்ளார்.

    இந்தநிலையில் அதிக மன அழுத்தத்தில் இருந்த சரவணகுமார் நேற்று காலை 6 மணி அளவில் வீட்டை விட்டு வெளியேறி சஞ்சீவி மலை பின்புறம் உள்ள காட்டுப் பகுதிக்கு சென்று மது அருந்திவிட்டு கையில் கொண்டு வந்திருந்த பெட்ரோலை தனது உடலில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

    பணப்பிரச்சினையில் தற் கொலை செய்த கணவர் எரிந்த நிலையில் பிணமாக கிடந்ததை பார்த்து அவரது மனைவி மற்றும் பிள்ளைகள் கதறி அழுதது காண்போர் நெஞ்சை கலங்க வைத்தது.

    • சபரிமலைக்கு மாலை அணிவதாக கூறி ஒகேனக்கல்லுக்கு வந்த கிராம நிர்வாக உதவியாளர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
    • சம்பவம் குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஒகேனக்கல்:

    தருமபுரி மாவட்டம் சோமனஅள்ளி ஆதி திராவிடர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகண்ணன் (வயது 50). இவருக்கு திருமணமாகி சாலம்மாள் (47) என்ற மனைவியும், அருளேஷ் (31), ஜெயசீலன் (24) என்ற மகன்களும், ஜெயகிருபா (26) என்ற மகளும் உள்ளனர்.

    ஜெயகண்ணன் இண்டூர் கிராம நிர்வாக உதவியாளராக வேலை செய்து வந்துள்ளார்.

    ஜெயகண்ணனின் இளைய மகன் ஜெயசீலன் ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனால் ஜெயகண்ணன் மனவேதனையுடன் காணப்பட்டதாக தெரிகிறது.

    இந்த நிலையில் சபரிமலைக்கு மாலை அணிவிப்பதாக கூறிவிட்டு ஒகேனக்கல் வந்திருந்த ஜெயகண்ணன் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து அந்த வழியாக சென்றவர்கள் உடனே ஒகேனக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார் உடனே சம்பவ இடத்திற்கு வந்து ஜெயகண்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து ஒகேனக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயகண்ணன் தனது மகன் காதல் திருமணம் செய்து கொண்டதால் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காக அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×