search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student arrest"

    நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் 10-ம் வகுப்பு மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த பிளஸ்-2 மாணவனை போலீசார் போக்சோ பிரிவின் கீழ் கைது செய்துள்ளனர்.
    நெல்லை:

    நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் அரசு மேல்நிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆலங்குளம் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த மாணவன் பிளஸ்-2 படித்து வந்தான். அதே பள்ளியில் ஆலங்குளம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த மாணவி 10-ம் வகுப்பு படித்து வந்தாள்.

    பள்ளிக்கூடத்துக்கு வரும் போதும், மாலை வேளைகளிலும் அந்த மாணவனும், மாணவியும் அடிக்கடி சந்தித்து பேசி பழகி வந்தனர். இதில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது. நேற்று முன்தினம் மாணவி-மாணவிகளுக்கு காலாண்டு தேர்வு தொடங்கியது.

    10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்புக்கு காலையில் தேர்வு முடிந்ததும், பிற்பகல் பள்ளிக்கூடம் முடிந்தது. அப்போது பிளஸ்-2 மாணவன் 10-ம் வகுப்பு மாணவியை தனது வீட்டுக்கு வா என்று அழைத்துசென்றான்.

    மாணவன் வீட்டில் பெற்றோர்கள் வேலைக்கு சென்று விட்டதால், வீட்டில் வேறு யாரும் இல்லை. இது காதலர்களுக்கு வசதியாகி விட்டது. தனிமையில் இருந்த காதலர்கள் கட்டிப்பிடித்து காமலீலைகளில் புகுந்தனர்.

    அந்த மாணவி, மாணவனின் வீட்டுக்கு செல்வதை மாணவியின் உறவினர் ஒருவர் பார்த்து உள்ளார். அவர்கள் நீண்ட நேரம் வெளியே வராததால், அவர் மாணவன் வீட்டில் வேறு யாரும் உள்ளனரா என்று அறிய கதவை தட்டினார்.

    அப்போது வீட்டில் இருந்து மாணவி அழுது கொண்டே வெளியே ஓடி வந்துள்ளார். மேலும் மாணவன் தன்னை வலுக்கட்டாயமாக சில்மி‌ஷம் செய்ததையும் கூறியுள்ளார்.

    இது குறித்து அந்த உறவினர், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். மாணவியின் பெற்றோர் கேரளாவில் வேலை செய்து வருவதால், மாணவியை பராமரித்து வந்த பெரியப்பா மற்றும் உறவினர்கள், மாணவியை அழைத்துக் கொண்டு ஆலங்குளம் மகளிர் போலீஸ் நிலையத்துக்கு சென்று புகார் செய்தனர்.

    மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து 12-ம் வகுப்பு மாணவனை கைது செய்தனர். இந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    தேவதானப்பட்டி அருகே காரில் ரூ.3 லட்சம் மதிப்பிலான போதை பொருட்களை கடத்தி வந்த கல்லூரி மாணவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் தலைமையிலான போலீசார் காட்ரோடு பிரிவில் தனியார் பள்ளி அருகே நேற்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

    அப்போது மின்னல் வேகத்தில் வந்த ஒரு காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் இருந்தவர்கள் முன்னுக்கு பின் முரனான தகவலை தெரிவித்தனர். இதனையடுத்து காரில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் இருந்தது தெரிய வந்தது.

    போலீசார் அவர்களிடம் மேலும் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலையில் இருந்து கம்பத்திற்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிய வந்தது. காரில் வந்த விருதுநகர் மாவட்டம் அள்ளம்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (வயது35), அஜய் (22) ஆகிய2 பேரையும் கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.

    இவர்கள் இதேபோல் பல ஊர்களுக்கு போதை பொருட்களை சப்ளை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து புகையிலை பொருட்களையும் காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பிடிபட்ட அஜய் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட 2 பேரிடமும் போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதலிப்பதாக கூறி 17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக பாலிடெக்னிக் மாணவர் கைது செய்யப்பட்டார்.
    பேரையூர்:

    திருமங்கலம் அருகே உள்ள கட்றாம்பட்டியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, திருமங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

    அதில் அதே பகுதியைச் சேர்ந்த முருகேசன் மகன் ஆனந்த் (வயது 20) காதலிப்பதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாகவும், தற்போது திருமணம் செய்ய வலியுறுத்தியபோது ஆனந்த்தும், அவரது குடும்பத்தினரும் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

    இது குறித்து விசாரணை நடத்திய போலீசார், ஆனந்த், அவரது தாய் காமாட்சி, உறவினர்கள் சுந்தரம், பிரியா, அர்ஜூன், அலெக்ஸ் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இதில் ஆனந்த் கைது செய்யப்பட்டார். இவர் திண்டுக்கல்லில் உள்ள பாலிடெக்னிக்கில் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    ×