என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » storm warning
நீங்கள் தேடியது "Storm warning"
நாகை துறைமுகத்தில் தற்போது 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து மீனவர்கள் நேற்று முதல் கரை திரும்பி வருகின்றனர். #Stormwarning
நாகப்பட்டினம்:
வங்கக்கடலில் இன்று (14-ந்தேதி) புதிய புயல் உருவாகி உள்ளது.
இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை பெய்யும் என்றும், எனவே 15, 16 ஆகிய நாட்களில் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவேண்டாம். ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனே கரைக்கு திரும்பவேண்டும். வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
மேலும் இந்த புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்து வருவதாகவும், அப்போது 50 முதல் 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளது.
இதையொட்டி நாகை துறைமுகத்தில் தற்போது 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஆழ்கடல் சென்று மீன் பிடித்த நாகை மீனவர்கள் நேற்று முதல் கரை திரும்பி வருகின்றனர்.
புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட பொதுமக்களும், விவசாயிகளும், மீனவர்களும் புதிய புயல் என்ன சேதத்தை ஏற்படுத்துமோ? என்ற கலக்கத்தில் உள்ளனர். இதையொட்டி நாகை மாவட்ட புயல் பாதுகாப்பு மையங்களில் பொதுமக்கள் தங்க மாவட்ட நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. #Stormwarning
வங்கக்கடலில் இன்று (14-ந்தேதி) புதிய புயல் உருவாகி உள்ளது.
இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் நாளையும், நாளை மறுநாளும் கனமழை பெய்யும் என்றும், எனவே 15, 16 ஆகிய நாட்களில் தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவேண்டாம். ஆழ்கடலுக்கு மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் உடனே கரைக்கு திரும்பவேண்டும். வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.
மேலும் இந்த புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்து வருவதாகவும், அப்போது 50 முதல் 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும் தெரிவித்துள்ளது.
இதையொட்டி நாகை துறைமுகத்தில் தற்போது 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வானிலை மையம் எச்சரிக்கை விடுத்ததை தொடர்ந்து ஆழ்கடல் சென்று மீன் பிடித்த நாகை மீனவர்கள் நேற்று முதல் கரை திரும்பி வருகின்றனர்.
புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட பொதுமக்களும், விவசாயிகளும், மீனவர்களும் புதிய புயல் என்ன சேதத்தை ஏற்படுத்துமோ? என்ற கலக்கத்தில் உள்ளனர். இதையொட்டி நாகை மாவட்ட புயல் பாதுகாப்பு மையங்களில் பொதுமக்கள் தங்க மாவட்ட நிர்வாகம் தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளது. #Stormwarning
அந்தமான் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாற வாய்ப்பு உள்ளதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. #IMD #IMDChennai #TNRains
சென்னை:
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை மற்றும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை குறைந்துள்ளது. புயல் சின்னம் இருப்பதால் நாளை முதல் 13-ம் தேதி வரை அந்தமான் கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 7 செமீ, நன்னிலத்தில் 5 செமீ, குடவாசலில் 4 செ.மீ மழை பதிவானது.
இவ்வாறு அவர் கூறினார். #IMD #IMDChennai #TNRains
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மத்திய அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை நிலவி வருகிறது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்து புயலாக மாற வாய்ப்பு உள்ளதால் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை மற்றும் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
தென் தமிழகத்தில் மிதமான மழை பெய்யலாம். நெல்லை, தூத்துக்குடியில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யலாம். சென்னையில் தற்போதைக்கு மழை வாய்ப்பு குறைவு. புயல் நெருங்கும் போது மழையை எதிர்பார்க்கலாம்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சீர்காழியில் 7 செமீ, நன்னிலத்தில் 5 செமீ, குடவாசலில் 4 செ.மீ மழை பதிவானது.
இவ்வாறு அவர் கூறினார். #IMD #IMDChennai #TNRains
ஆந்திர மாநிலத்தில் விஜயநகரம்-வால்ட்டைர் பிரிவு இடையே புயல் எச்சரிக்கை விடப்பட்டு இருப்பதால் இன்று இயக்கப்பட இருந்த சென்னை சென்டிரல்-விசாகப்பட்டினம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரத்து செய்யப்பட்டு உள்ளது. #ExpressTrain
சென்னை:
ஆந்திர மாநிலத்தில் விஜயநகரம்-வால்ட்டைர் பிரிவு இடையே புயல் எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக நேற்று இயக்கப்பட இருந்த விசாகப்பட்டினம்-சென்னை சென்டிரல் வாராந்திர எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22801) ரெயில் ரத்து செய்யப்பட்டது.
இன்று (சனிக்கிழமை) இயக்கப்பட இருந்த சென்னை சென்டிரல்-விசாகப்பட்டினம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (22801) ரத்து செய்யப்பட்டு உள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்பட இருந்த திருவனந்தபுரம் சென்டிரல்-சில்சார் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (12515) மற்றும் கவுகாத்தி-பெங்களூரு கன்டோன்மென்ட் எக்ஸ்பிரஸ் (12510) ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #ExpressTrain
ஆந்திர மாநிலத்தில் விஜயநகரம்-வால்ட்டைர் பிரிவு இடையே புயல் எச்சரிக்கை விடப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக நேற்று இயக்கப்பட இருந்த விசாகப்பட்டினம்-சென்னை சென்டிரல் வாராந்திர எக்ஸ்பிரஸ் (வண்டி எண்: 22801) ரெயில் ரத்து செய்யப்பட்டது.
இன்று (சனிக்கிழமை) இயக்கப்பட இருந்த சென்னை சென்டிரல்-விசாகப்பட்டினம் வாராந்திர எக்ஸ்பிரஸ் (22801) ரத்து செய்யப்பட்டு உள்ளது. நாளை (ஞாயிற்றுக்கிழமை) இயக்கப்பட இருந்த திருவனந்தபுரம் சென்டிரல்-சில்சார் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் (12515) மற்றும் கவுகாத்தி-பெங்களூரு கன்டோன்மென்ட் எக்ஸ்பிரஸ் (12510) ரெயில்கள் ரத்து செய்யப்படுகின்றன.
மேற்கண்ட தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. #ExpressTrain
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவுவதால் புதுவை துறைமுகத்தில் தூர புயல் முன்னறிவிப்பு கொடி எண். 1 ஏற்றப்பட்டுள்ளது.
புதுச்சேரி:
வங்க கடல் பகுதியில் திடீர் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவுகிறது. இதனை எச்சரிக்கையாக அறிவிக்கும் பொருட்டு புதுவை துறைமுகத்தில் தூர புயல் முன்னறிவிப்பு கொடி எண். 1 ஏற்றப்பட்டுள்ளது.
இதனால் தமிழகம், புதுவையில் நேரடியாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. இருப்பினும், கடலோர பகுதிகளில் காற்று சற்று அதிகமாக வீசக்கூடும். கடல் சற்று சீற்றமாக காணப்படும்.
புதுவையில் மீன்பிடி தடைக்காலம் வருகிற 15-ந் தேதி வரை நீடிப்பதால் கடலுக்குள் மீன்பிடிக்க மீனவர்கள் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வங்க கடல் பகுதியில் திடீர் காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவுகிறது. இதனை எச்சரிக்கையாக அறிவிக்கும் பொருட்டு புதுவை துறைமுகத்தில் தூர புயல் முன்னறிவிப்பு கொடி எண். 1 ஏற்றப்பட்டுள்ளது.
இதனால் தமிழகம், புதுவையில் நேரடியாக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை. இருப்பினும், கடலோர பகுதிகளில் காற்று சற்று அதிகமாக வீசக்கூடும். கடல் சற்று சீற்றமாக காணப்படும்.
புதுவையில் மீன்பிடி தடைக்காலம் வருகிற 15-ந் தேதி வரை நீடிப்பதால் கடலுக்குள் மீன்பிடிக்க மீனவர்கள் செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வங்க தேசத்துக்கும் வங்கக்கடலுக்கும் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பன் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
ராமேசுவரம்:
கடந்த 4 நாட்களாக ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.
இதனிடையே வங்க தேசத்துக்கும் வங்கக்கடலுக்கும் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பன் துறைமுகத்தில் இன்று காலை 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடந்த 4 நாட்களாக ராமேசுவரம், தனுஷ்கோடி, பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.
இதனிடையே வங்க தேசத்துக்கும் வங்கக்கடலுக்கும் இடையே குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாம்பன் துறைமுகத்தில் இன்று காலை 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால் ராமேசுவரம், பாம்பன், தனுஷ்கோடியில் கடல் கொந்தளிப்பாக காணப்படுகிறது. 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசப்படும் என்பதால் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாம்பனில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கதேசத்தில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை, கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கீழ்வேளூர்:
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் வீசும் சூறை காற்றில் தஞ்சை நகரில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. திருவையாறு பகுதிகளில் வாழை மரங்கள் முறிந்து சேதமாகி உள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கடந்த 2 நாட்களாக தஞ்சை, நாகை, திருவாரூரில் ஒருசில இடங்களில் மட்டும் மழை பெய்தது. நேற்று வழக்கம் போல் வெயில் சுட்டெரித்தது. அதேநேரத்தில் அனைத்து இடங்களிலும் பலத்த சூறை காற்று வீசிய வண்ணம் இருந்தது.
வங்கதேசத்தில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை, கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்த ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு தொலை தூரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது என்பதை குறிப்பதாகும். இருந்தபோதிலும் நாகை மாவட்டத்தில் வானிலை மாற்றம் ஏதும் ஏற்படவில்லை வெயில் சுட்டெரிக்கிறது. கடல் பரப்பில் காற்று அதிகமாக வீசி வருவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அவசர கதியில் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர்.
நாகை மாவட்டத்தில் கடல்களில் சுமார் 10 அடிக்கு மேல் ராட்சத அலைகள் எழும்பி வருகிறது. மேலும் கடல் கொந்தளிப்புடன் இருப்பதால் இன்றும் 3-வது நாளாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மாவட்டம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வேதனையில் இருந்து வருகின்றனர்.
டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, திருவாரூரில் பலத்த சூறாவளி காற்று வீசி வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் வீசும் சூறை காற்றில் தஞ்சை நகரில் பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. திருவையாறு பகுதிகளில் வாழை மரங்கள் முறிந்து சேதமாகி உள்ளன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
கடந்த 2 நாட்களாக தஞ்சை, நாகை, திருவாரூரில் ஒருசில இடங்களில் மட்டும் மழை பெய்தது. நேற்று வழக்கம் போல் வெயில் சுட்டெரித்தது. அதேநேரத்தில் அனைத்து இடங்களிலும் பலத்த சூறை காற்று வீசிய வண்ணம் இருந்தது.
வங்கதேசத்தில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக நாகை, கடலூர் துறைமுகங்களில் ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்த ஒன்றாம் புயல் எச்சரிக்கை கூண்டு தொலை தூரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளது என்பதை குறிப்பதாகும். இருந்தபோதிலும் நாகை மாவட்டத்தில் வானிலை மாற்றம் ஏதும் ஏற்படவில்லை வெயில் சுட்டெரிக்கிறது. கடல் பரப்பில் காற்று அதிகமாக வீசி வருவதால் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. பைபர் படகில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அவசர கதியில் கரை திரும்பிய வண்ணம் உள்ளனர்.
நாகை மாவட்டத்தில் கடல்களில் சுமார் 10 அடிக்கு மேல் ராட்சத அலைகள் எழும்பி வருகிறது. மேலும் கடல் கொந்தளிப்புடன் இருப்பதால் இன்றும் 3-வது நாளாக வேதாரண்யம் பகுதி மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. மாவட்டம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைக்கு செல்லவில்லை. இதனால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வேதனையில் இருந்து வருகின்றனர்.
வங்கதேசம் அருகே கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
கடலூர்:
இதனால் கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X