search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "stop"

    • மின் பாதையில் நெடுஞ்சாலை துறையின் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளது.
    • காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் திருவையாறு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது :-

    திருவையாறு துணை மின் நிலையத்திலிருந்து விளாங்குடி 11 கி.வோ மின்னோட்டம் செல்லும் மின் பாதையில் நெடுஞ்சாலை துறையின் சாலை விரிவாக்க பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே சாலையின் அருகில் உள்ள விளாங்குடி 11 கி.வோ மின் பாதையில் உள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது.

    இதனால் நாளை ( 11-ந் தேதி) மற்றும் 15, 17-ந் தேதி என 3 நாட்களும் பெரும்புலியூர், புனவாசல், விளாங்குடி, திங்களூர், பெரமூர், ஓலத்தேவராயன் பேட்டை, சீனிவாச நகர் ஒக்கக்குடி, மடம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கடந்த 23-ம் தேதியுடன் தண்ணீர் நிறுத்தப்பட்டது.
    • சுற்றுலா பயணிகள் சிறிதளவு ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரில் இறங்கி குளித்து மகிழ்கின்றனர்.

    பூதலூர்:

    காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இந்திய சுதந்திரத்திற்கு பின்னர் வழக்கமான ஜூன் 12 தேதிக்கு முன்னதாக மே மாதம் 24 ஆம் தேதி திறக்கப்பட்டது.

    இதனால் காவேரி டெல்டா மாவட்டங்களில் இலக்கை விஞ்சி குருவை மற்றும் சம்பா சாகுபடி நடைபெற்றது பருவம் தப்பிய மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு நிவாரணம் வழங்கியது.

    248 நாள் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வழக்கமான நடைமுறைப்படி ஜனவரி மாதம் 28ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

    கல்லணையில் இருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாயில் விவசாயிகளின் தேவைக ளுக்கு ஏற்ப குறைந்த அளவில் தண்ணீர் அவ்வப்போது மாறி மாறி விடப்பட்டது.

    மேட்டூர் அணை மூடப்பட்ட பின்னர் பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி வரை கல்லணையில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், காவிரி வெண்ணாறு ஆகிய ஆறுகளில் முழுவதுமாக தண்ணீர் விடுவது பிப்ரவரி மாதம் 23ஆம் தேதி மாலையுடன் நிறுத்தப்பட்டது.

    தற்போது கல்லணை முழுவதுமாக வறண்டு போய் மணல் வெளியாக காட்சியளிக்கிறது.

    சிறிய அளவில் தண்ணீர் வந்து கொண்டுள்ளது. சிறிய அளவில் வரும் தண்ணீர் கொள்ளிடம் மணல் போக்கி பகுதியில் திறந்து வெளியேறி கொண்டு உள்ளது.

    காவேரி வெண்ணாறு ஆகிய பாலங்களின் கீழ் பகுதியில் முழுவதுமாக தண்ணீர் இன்றி காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.

    கல்லணையை காண வரும் சுற்றுலா பயணிகள் கொள்ளிடம் ஆற்றில் சிறிதளவு ஓடிக்கொண்டிருக்கும் தண்ணீரில் இறங்கி குளித்து மகிழ்கின்றனர்.

    கல்லணை பாலங்களின் மேல் நடந்து கல்லணையை ரசித்து வருகின்றனர்.

    சிறுவர் பூங்காவில் உள்ள விளையாட்டு அரங்குகளில் சிறுவர்கள் விளையாடி மகிழ்கின்றனர்.

    காவிரி ஆற்றின் பாலங்களின் கீழ் இறங்கி மதகுகளை பார்த்து வியந்து சுற்றுலா பயணிகள்வருகின்றனர்.

    • கொளத்தூர் அருகே கோவிந்தபாடி பகுதியை சேர்ந்த மீனவர் காரவடையான் என்கிற ராஜா கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • இதனால் கர்நாடக மாநிலத்தில் இருந்து மேட்டூர், சேலம், ஈரோடு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த கர்நாடக அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன.

    சேலம்:

    சேலம் மாவட்டம் கொளத்தூர் அருகே கோவிந்தபாடி பகுதியை சேர்ந்த மீனவர் காரவடையான் என்கிற ராஜா கர்நாடக வனத்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் கர்நாடக மாநிலத்தில் இருந்து மேட்டூர், சேலம், ஈரோடு பகுதிகளுக்கு இயக்கப்பட்டு வந்த கர்நாடக அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. தற்போது இயல்பு நிலை திரும்பினாலும் 5-வது நாளாக கர்நாடக பஸ்கள் கொளத்தூர் அருகே உள்ள தமிழக- கர்நாடக மாநில எல்லையில் உள்ள பாலாறு சோதனைச்சாவடி வழியாக இயக்கப்படவில்லை.

    • 7 ஆண்டுகள் கடந்தும் இதுவரை கூலி உயர்வு வழங்கப்படவில்லை. இதனை கண்டித்தும் கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தியும் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நேற்று விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
    • இதனால் ஆயிரக்கணக்கான தொழிலா ளர்கள் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 30,000-க்கும் மேற்பட்ட விசைத்தறிகள் செயல்பட்டு

    வருகின்றன. தொழிலாளர்க ளுக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு கூலி ஒப்பந்தம் போடப்பட்டது. மேலும் மாவட்ட கலெக்டர் முன்னி லையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கூலி ஒப்பந்தம் போடப்படும் என அப்போது முடிவு செய்யப்பட்டது.

    இந்த நிலையில் 7 ஆண்டுகள் கடந்தும் இதுவரை கூலி உயர்வு வழங்கப்படவில்லை. இதனை கண்டித்தும் கூலியை உயர்த்தி வழங்க வலியுறுத்தியும் குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நேற்று விசைத்தறி தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இதனால் ஆயிரக்கணக்கான தொழிலா ளர்கள் வேலை வாய்ப்பு இழந்துள்ளனர்.

    இது குறித்து விசைத்தறி தொழிலாளர் சங்க பொதுச் செயலாளர் சுப்பிரமணி கூறுகையில், தற்போது ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு அடிப்படையில் 75% கூலி உயர்வு வழங்க வலியுறுத்தி விசைத்தறி தொழிலாளர்கள் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விசைத்தறிகள் முடங்கியுள்ளன. தொழிலா ளர்கள் பாதிக்கப்படும் முன்னர், வட்டாட்சியர் தலைமையில் முத்தரப்பு பேச்சு வார்த்தைக்கு தீர்வு காண வேண்டும். அதுவரை குழு கடன் வசூலிக்க கால அவகாசம் வழங்க உத்தரவிட வேண்டும் என்றார்.

    இதற்கிடையே விசைத்தறி கூட்டு தொழில் சங்கத்தின் சார்பில் பள்ளிபாளையம் பிரிவு சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து ஊர்வலமாக சென்ற தொழிற்சங்கத்தினர், வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர். அப்போது அவர் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததாக தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

    • நன்னிலம் பகுதிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது.
    • சில பஸ்கள் காலை நேரங்களில் பஸ் நிறுத்தங்களில் நிற்காமல் செல்வதாக குற்றச்சாட்டு.

    நன்னிலம்:

    திருவாரூர் மாவட்டம், நன்னிலத்தில் அரசு பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்கள், வங்கிகள் மற்றும் தனியார் நிறுவனங்கள் பல செயல்பட்டு வருகிறது.

    இங்கு கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பலர் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர்.

    அனைத்து வழித்தடங்களில் இருந்தும் நன்னிலம் பகுதிக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது.

    சில நேரங்களில் ஒரு சில வழித்தடங்களில் அதுவும் இயக்கப்படுவதில்லை.

    அதிலும், கூட்டம் அதிகமாக உள்ளதால் மாணவர்கள் படிக்கட்டுகளில் நின்று கொண்டு பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. மனவெளி, சேங்கனூர், அச்சுதமங்கலம், வடக்குடி ஆகிய நிறுத்தங்களில் சில பஸ்கள் காலை நேரங்களில் நிற்காமல் செல்வதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

    இதனால், மாணவ- மாணவிகள், அரசு அலுவலர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

    எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து காலை- மாலை நேரங்களில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருச்சி மாவடி குளத்தில் அமைய இருந்த ஓய்வு நேர படகு சவாரி திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது
    • ஒருங்கிணைப்புக்குழு இல்லாததால் தடுமாற்றம்

    திருச்சி

    திருச்சி மாநகரில் புண்ணிய ஸ்தலங்களைத் தவிர வேறு வகையிலான பொழுதுபோக்கு அம்சங்கள் எதுவும் இல்லை. மாநகர் மக்கள் காவிரி பாலத்தில் நின்று தண்ணீர் செல்லும் அழகை வேடிக்கை பார்ப்பதையே முக்கியமாக கருதி வந்தனர். தற்போது காவிரி பாலம் சீரமைப்பு பணிக்காக மூடப்பட்டுள்ளதால் அதுவும் தடைபட்டுள்ளது.

    இதற்கிடையே திருச்சி பொன்மலைபட்டியில் 142 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் மாவடி குளத்தில் சுற்றுலா பயணிகளை ஈர்க்க படகு சவாரி கொண்டுவர முடிவு செய்யப்பட்டது. பின்னர் பொதுப்பணித்துறை மூலம் மேம்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டு தூர்வாருதல் மற்றும் கரைகளை பலப்படுத்துதல் ஆகியவை 2021 ஜனவரியில் நிறைவடைந்தன.

    பின்னர் கிழக்குறிச்சி பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் அந்தக் குளத்தில் படகு சவாரியை கொண்டு வர ரூ.1.75 லட்சத்தில் இரண்டு துடுப்பு படகுகள் மற்றும் லைப் ஜாக்கெட்டுகள் வாங்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது திருச்சி நகரின் மிகப்பெரிய நீர்நிலையான மாவடிக்குளம் குளத்தில் உத்தேசிக்கப்பட்ட ஓய்வுநேர படகு சவாரி அதிகாரப்பூர்வமற்ற முறையில் கைவிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

    இதற்கிடையே குளத்தையொட்டி அமைக்கப்பட்ட நடைபாதை இரண்டு ஆண்டுகளில் சேதமடைந்துள்ளது. இங்கு சுமார் 200 மீட்டர் நீளத்துக்கு போடப்பட்ட நடைமேடை, சரியான வாய்க்கால் இல்லாததால், சமீபத்தில் பெய்த மழையில் சேதமடைந்தது. சாலை மற்றும் தெருவிளக்கு உள்கட்டமைப்பும் மோசமாக உள்ளது.

    மேலும் தற்போது நடைபெற்று வரும் பாதாள வடிகால் பணியால் சேதமடைந்த பாதசாரிகளுக்கான பாதையை திருச்சி மாநகராட்சி சீரமைக்க வேண்டும் என்று பொதுப்பணித்துறை கூறினாலும், உள்ளாட்சி அமைப்பு இதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. குளத்தை மேம்படுத்த ஏற்கனவே ரூ.1 கோடியே 92 லட்சம் செலவழித்துள்ளோம். இனிமேலும் நாங்கள் செலவழிக்க தயாராக இல்லை என பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    இதில் மாவட்ட நிர்வாகம் கவனம் செலுத்தி பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்தி பழுதடைந்த நடை பாதையை சீரமைத்து படகு சவாரியை திட்டமிட்டபடி தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் 2வது குடிநீா்த் திட்டத்தின்கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
    • இரண்டாவது குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் விநியோகம் தடைபடும் என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

    திருப்பூர்:

    திருப்பூா் மாநகரில் 2-வது குடிநீா்த் திட்டத்தின்கீழ் விநியோகிக்கப்படும் குடிநீா் விநியோகம் நாளை 30-ந்தேதி நிறுத்தம் செய்யப்படவுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாநகராட்சிப் பகுதிகளில் 2வது குடிநீா்த் திட்டத்தின்கீழ் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், 2வது குடிநீா்த் திட்டத்தில் மேட்டுப்பாளையத்தில் உள்ள பிரதான குழாயில் மின்சார வாரியத்தின் மூலம் சனிக்கிழமை மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதனால் இரண்டாவது குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் விநியோகம் தடைபடும் என தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்தினா் தெரிவித்துள்ளனா்.

    திருப்பூா் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உள்பட்ட வாா்டு எண் 1, 13, 14, 3வது மண்டலத்துக்கு உள்பட்ட 44, 45, 50, 51, மற்றும் 4வது மண்டலத்துக்கு உள்பட்ட 52, 55 ஆகிய வாா்டுகளில் வரும் ஞாயிற்றுக்கிழமை குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. அதே வேளையில், வரும் திங்கள்கிழமைமுதல் மேற்கண்ட பகுதிகளில் தங்கு தடையின்றி குடிநீா் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தேவகோட்டையில் இருந்து கோவை செல்லும் அரசு விரைவு பஸ்கள் இயங்கவில்லை.
    • அதிக கட்டணம் கொடுத்து தனியார் பஸ்களில் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையானது முதன்மையான நகராட்சியாகும். இந்த நகரை சுற்றியுள்ள சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அன்றாட தேவைக்காகவும், சென்னை, கோவை, பெங்களூர் மற்றும் வெளிநாடுகளுக்கு செல்ல பஸ் வசதிகளுக்காக வந்து செல்கின்றனர்.

    மாணவ-மாணவிகள் மேல்படிப்புக்காக அதிக அளவில் அரசு பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர். சென்னை, பெங்களூர், கோவை போன்ற நகரங்களுக்கு அரசு விரைவு பஸ்கள் தேவகோட்டை பஸ் நிலையத்தில் இருந்து சென்று கொண்டிருந்தது.

    குறிப்பாக கோவை செல்ல அரசு விரைவு பஸ்கள் காலையில் 2 பஸ்களும், இரவில் 2 பஸ்களும் இயங்கின. சில மாதங்களாக கோவை செல்லும் அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டது. இதனால் வேலைகளுக்கு செல்வோரும், மேற்படிப்புக்கு செல்லும் மாணவ-மாணவிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    கடந்த காலங்களில் தனியார் பஸ்களின் எண்ணிக்கையை விட இப்போது 10-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் அதிகரித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சமூக ஆர்வலர் மணிகண்டன் கூறுகையில், கோவை செல்ல குறைந்த செலவில் இந்த பகுதி கிராம மக்களுக்கும், மாணவ-மாணவிகளுக்கும் அரசு விரைவு பஸ்கள் பயன்பட்டது.

    தற்போது அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படாததால் அதிக கட்டணம் கொடுத்து தனியார் பஸ்களில் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. தேவகோட்டை பஸ் நிலையம் உட்புறமுள்ள அரசு விரைவு பஸ்கள் முன்பதிவு அலுவலகத்தின் அட்டவணையில் கோவை செல்லும் பஸ்களில் நேரம் உள்ளது. அரசு விரைவு போக்குவரத்து கழகம் தனியார் பஸ்களுக்கு சாதகமாக செயல்படுகிறதா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. முதன்மையான நகராட்சியில் இந்த அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படாமல் இருப்பது வேதனையாக உள்ளது என்றார்.

    • பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கப்படுவதால் ேநாய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
    • மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும்.

    நெல்லை:

    நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஷ்ணு கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் நெல்லை மண்டல செயலாளர் அப்துல் ஜப்பார் தலைமையில் மாவட்டச் செயலாளர் ஜமால், நிர்வாகிகள் உமர் பாரூக், நயினார், சுலைமான் மற்றும் பலர் வந்து அளித்த மனுவில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் நெல்லை மாவட்டம் முழுவதும் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    அரசு மஞ்சப்பை திட்டத்தை அறிமுகப்படுத்திய பின்னரும் அதனை நடைமுறைக்கு கொண்டு வராமல் தொடர்ந்து பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தப்படுகிறது.

    அதனை தயாரிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆங்காங்கே பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்பட்டு எரிக்கபடுவதால் ேநாய் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.

    எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறியிருந்தனர்.

    மானூர் யூனியன் கானார்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மெர்சி பிரேம்குமார் தலைமையில் ஊர்மக்கள் அளித்த மனுவில், தங்களது கிராமத்தில் தனியார் பஸ்கள் நின்று செல்வதில்லை.

    இதனால் மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரி செல்லமுடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். இது தொடர்பாக பல ஆண்டுகளாக போராடி வருகிறோம் என கூறியிருந்தனர்.

    • தூத்துக்குடி மாவட்டம் நாரைக்கிணறு ரெயில் நிலையத்தின் மூலமாக மரு தன்வாழ்வு, நாரைக்கிணறு, என்.புதூர், கே.கைலாசபுரம், புளியம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களை சேர்ந்த கிராமமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், உட்பட ஏராளமானவர்கள் பயன் அடைந்து வந்தனர்.
    • கொரோனா காலத்திற்கு முன்பு நின்று சென்ற பாசஞ்சர் ரெயில்கள் ஊரடங்கிற்கு பிறகு நிற்காது என்று தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது.

    கோவில்பட்டி:

    புதிய தமிழகம் கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தென்னக ரெயில்வேயின் மதுரை ேகாட்ட மேலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் நாரைக்கிணறு ரெயில் நிலையத்தின் மூலமாக மரு தன்வாழ்வு, நாரைக்கிணறு, என்.புதூர், கே.கைலாசபுரம், புளியம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரங்களை சேர்ந்த கிராமமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், உட்பட ஏராளமானவர்கள் பயன் அடைந்து வந்தனர்.

    ஆனால், கொரோனா காலத்திற்கு முன்பு நின்று சென்ற பாசஞ்சர் ரெயில்கள் ஊரடங்கிற்கு பிறகு நிற்காது என்று தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்து இருந்தது. இதனால் இந்த ரெயில் சேவையை பயன்படுத்தி வந்த இப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாயினர்

    எனவே பொதுமக்கள், மாணவர்கள் நலன்கருதி இந்த வழித்தடத்தில் நின்று சென்ற அனைத்து பாசஞ்சர் ரெயில்களும் வழக்கம்போல் நாரைக்கிணறு ரெயில் நிலையத்தில் மீண்டும் நின்று செல்ல உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்திடவேண்டும் என்று புதிய தமிழகம் கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டது. இதுதொடர்பாக போரா ட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்திருந்தோம்.

    இந்நிலையில் எங்கள் கோரிக்கையை ஏற்று பயணிகளின் வசதிக்காக வருகிற 1-ந் தேதி முதல் நாரைக்கிணறு ரெயில் நிலையத்தில் தூத்துக்குடி, நெல்லை இடையே இயக்கப்படும் பாசஞ்சர் ரெயில்கள் நின்று செல்லும் என்று தென்னக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

    இதன்படி தூத்துக்குடி-நெல்லை சிறப்பு ரெயில் (வண்டி எண்:06667) மற்றும் நெல்லை-தூத்துக்குடி சிறப்பு ரெயில் (வண்டி எண்:06668) ஆகிய ரெயில்கள் நாரைக்கிணறு ரெயில் நிலையத்தில் இரவு 7.15 மணிக்கும், காலை 8 மணிக்கும் நின்று செல்லும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

    நாங்கள் விடுத்த கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுத்த ரெயில்வே அதிகாரிகளுக்கு புதிய தமிழகம் கட்சி சார்பில் மிகுந்த நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மேலும் நாரைக்கிணறு ரெயில் நிலை யத்தில் பாசஞ்சர் ரெயில்கள் நின்று செல்ல வழிவகுத்த வருவாய்துறையினர், தென்னக ரெயில்வே நிர்வாகத்தினருக்கும், புதிய தமிழகம் கட்சியின் மாவட்டச்செயலாளர் கனகராஜ், மாவட்ட துணைச்செயலாளர் மருத ன்வாழ்வு ரவி, ஒன்றிய செயலாளர்(மேற்கு) ஜே.சி.பி. முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்க ளுக்கு அப்பகுதியினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

    • நெல்லை மாநகராட்சியில் சாலைகள் மற்றும் தெருக்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது.
    • சாலை அமைக்கும் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாநக ராட்சியில் பெரும்பாலான இடங்களில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் பாதாள சாக்கடை மற்றும் கேபிள்கள் பதிக்கும் பணிக்காக சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. இதனால் சாலைகள் மற்றும் தெருக்கள் சிதிலமடைந்து காணப்படுகிறது.

    கடந்த 2019-ம் ஆண்டு சாலைகள் அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டது. இதனிடையே பாதாள சாக்கடை பணிகள் முடிவடையாத காரணத்தி னால் சாலைகள் அமைப்பது தாமதமாகி வந்தது.

    இந்நிலையில் மாநகர பகுதி சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நீண்ட காலமாக மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும் சாலை பணிகள் எதுவும் நடைபெறாததால் மக்கள் அவதி அடைந்து வந்தனர்.

    தற்போது ஒரு சில இடங்களை தவிர பெரும்பாலான பகுதிகளில் தோண்டப்பட்ட பள்ளங்கள் நிரப்பப்பட்டு சாலைகள் அமைப்பதற்காக சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் 2019-ம் ஆண்டு டெண்டர் விடப்பட்ட சாலை பணிகளை மீண்டும் தொடங்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது.

    அதனைத் தொடர்ந்து மேலப்பாளையம் மண்டலத்தில் உள்ள சொக்கநாதர் கோவில் தெரு, அரசு மருத்துவமனை ரோடு உள்ளிட்ட பகுதிகளில் டெண்டர் எடுத்தவர்களை சாலை அமைக்கும் பணியை மீண்டும் தொடங்க மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் உத்தரவிடப்பட்டது.

    இதையடுத்து அந்த பகுதியில் சாலை அமைக்கும் பணியை நேற்று ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்டனர். அப்போது அங்கு வந்த மண்டல சேர்மன் சில காரணங்களை கூறி சாலை அமைக்கும் பணிகளை தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஒப்பந்ததாரர் பணியை நிறுத்திவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்று விட்டார். இதனால் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தங்களது பகுதியில் சாலை அமைய உள்ளது என்று மகிழ்ச்சியில் இருந்த அப்பகுதி பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

    நெல்லை மாநகரில் பொதுமக்களுக்கு தேவையான குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் பூர்த்தி செய்து கொடுக்க மாநகராட்சி நிர்வாகம் சமீப காலமாக கடும் முயற்சி எடுத்து நிறைவேற்றி வருகிறது.

    இந்நிலையில் மேலப்பாளையம் மண்டலத்தில் தார் சாலை அமைக்கும் பணிகள் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்தால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    மாநகராட்சி கமிஷனர் மற்றும் மேயர் ஆகியோர் இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து மீண்டும் சாலை பணியை விரைந்து தொடங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை எடுத்துள்ளனர்.

    நெல் அறுவடை தொடங்கி இருப்பதால் 190 நாட்களுக்குப்பின் இன்று மாலை முதல் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது. #MetturDam

    மேட்டூர், ஜன. 28-

    மேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் காவிரி டெல்டா பாச னத்திற்காக ஜூன் மாதம் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப் படுவது வழக்கம்.

    இதன்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு உள்பட 12 மாவட்டங்களில் 16.5 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

    இந்த ஆண்டு ஜூன் 12-ந் தேதி அணையில் குறைவான தண்ணீர் இருந்ததால் தாமதமாக ஜூலை மாதம் 23-ந் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

    இதனால் டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பாதித்தாலும் சம்பா நெல் சாகுபடி முழுமையாக நடந்தது. ஆண்டுதோறும் பாசனத்திற் காக ஜனவரி 28-ந் தேதி வரை தண்ணீர் திறந்துவிடப்படும். தற்போது நெல் அறுவடை தொடங்கி இருப்பதால் 190 நாட்களுக்குப்பின் இன்று மாலை முதல் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்படுகிறது.

    இதுபற்றிய அறிவிப்பு இன்னும் வெளியாக வில்லை. இருந்தாலும் டெல்டா பாச னத்திற்கு தண்ணீர் தேவை என்றால் நீர் திறப்பு இன்னும் சில நாட்கள் நீட்டிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று 70.81 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் வந்தது. இன்று அணைக்கு 150 கன அடி தண்ணீர் வந்து கொண் டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 70.81 அடியாக நீடிக்கிறது. அணையில் இருந்து பாசனத்திற்கான 5 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.

    அணையில் தற்போது நீர்மட்டம் 70 அடியாக உள்ளதால் அணையில் மூழ்கி இருந்த கிறிஸ்தவ ஆலய கோபுரம் மற்றும் நந்தி சிலைகள் படிப்படியாக வெளியே தெரிய தொடங்கி உள்ளது.

    மேட்டூர் அணை மூலம் 12 டெல்டா மாவட்டங்கள் மட்டுமல்லாது வேலூர் மாநகராட்சி பகுதிகளின் குடிநீர் தேவையும் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது போதுமான அளவு தண்ணீர் உள்ளதால் இந்த ஆண்டு கோடை காலத்தில் குடிநீர் தட்டுப் பாடு வராது என்று பொதுப் பணித்துறை அதிகாரி ஒருவர் கூறினார். * * * மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்து வருவதை படத்தில் காணலாம்.

    ×