search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "statues"

    • விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி ( புதன் கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
    • பாளை சமாதானபுரம், கிருபா நகர், மார்க்கெட் பகுதிகள், சீவப்பேரி சாலை உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி இரவு பகலாக மும்மரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ந் தேதி ( புதன் கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

    இதை முன்னிட்டு இந்து முன்னணி மற்றும் பல்வேறு இந்து அமைப்புகள் சார்பில் பொது இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்வார்கள்.

    தொடர்ந்து வழிபட்ட சிலைகளை கடல், ஆறுகள், குளங்கள் உள்ளிட்ட நீர் நிலைகளில் கரைப்பார்கள்.நெல்லையில் விநாயகர் சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. நகரின் முக்கிய பகுதிகளில் விற்பனைக்காக விநாயகர் சிலைகள் குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    பாளை சமாதானபுரம், கிருபா நகர், மார்க்கெட் பகுதிகள், சீவப்பேரி சாலை உள்ளிட்ட இடங்களில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி இரவு பகலாக மும்மரமாக நடைபெற்று வருகிறது.

    ஒரு அடி உயரம் முதல் 9 அடி உயரம் வரை சிலைகள் வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் குறைந்த பட்சமாக விநாயகர் சிலை ரூ.100 முதலும், அதிக பட்சமாக பெரிய சிலைகள் ரூ.27 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகின்றன.

    பொதுஇடத்தில் விநாயகர் சிலைகள் வழிபாட்டிற்காக பலர் கடந்த மாதமே ஆர்டர்கள் கொடுத்துள்ளனர்.

    சிவன், பார்வதியுடன் கூடிய விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடி வங்களிலும், வண்ணங்களிலும் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது.

    இந்த பகுதிகளில் தயார் செய்யப்படும் சிலைகள் கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கும், திண்டுக்கல், திருச்சி, மதுரை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.

    மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் சிலைகளை செய்வதற்கு அறி வுறுத்தப்ப ட்டுள்ளது. இதனால் காகித கூல், தேங்காய் நார்கள், நீரில் கரையும் வண்ணங்கள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி சிலைகள் செய்யப்படுகிறது.

    சிலைகள் செய்யும் பணியில் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். லெட்சுமி விநாயகர், ராஜ விநாயகர், 3 முகம் கொண்ட விநாயகர், நந்தி விநாயகர், சிவன் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு வடிவங்களில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

    இதேபோன்று தென்காசி, செங்கோட்டை உள்ளிடட தென்காசி மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளிலும் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.

    செஞ்சி அரசூக ஜெயின் கோவிலில் திருடப்பட்ட ஐம்பொன் சிலைகள் காட்டுப்பகுதியில் கிடந்தன. அதை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செஞ்சி:

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள பெரும்புகை கிராமத்தில் பழமை வாய்ந்த பகவான் மல்லிநாதர் ஜெயின் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரு அறையில் பல கோடி மதிப்புள்ள 35 ஐம்பொன் சாமி சிலைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் கடந்த மாதம் 16-ந் தேதி மர்ம மனிதர்கள் சிலர் இந்த கோவிலுக்குள் புகுந்தனர். அங்கிருந்த 6 ஐம்பொன் சிலைகளை கொள்ளையடித்து சென்று விட்டனர். அவற்றின் மதிப்பு ரூ.2 கோடியாகும்.

    இந்த கொள்ளை குறித்து செஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி கொள்ளையர்களை தேடிவந்தனர்.

    இந்த நிலையில் செஞ்சி அருகே அனந்தபுரம் செல்லும் வழியில் அத்தியூர் என்ற காட்டுப்பகுதி உள்ளது. அந்த இடத்துக்கு சுரேஷ் என்பவர் சென்றார். அங்கு சாமி சிலைகள் கிடந்தன. அதனை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.

    உடனே அவர் இது குறித்து அனந்தபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். செஞ்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் சிவராஜ் மணிகண்டன், சப்- இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் காட்டுப் பகுதிக்கு விரைந்து சென்றனர்.

    அங்கு 4 ஐம்பொன் சிலைகள் கிடந்தன. அதில் 3 புத்தர் சிலைகளும், ஒரு காமாட்சி அம்மன் சிலைகளும் இருந்தது. போலீசார் அந்த சிலைகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அந்த சிலைகள் பெரும்புகை ஜெயின் கோவிலில் திருடப்பட்டவை என்பது தெரிய வந்தது. அந்த சிலைகளை காட்டுப்பகுதியில் வீசி சென்றவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ரன்வீர்ஷாவின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் திருவாரூர் பகுதியில் உள்ள கோவில்களில் இருந்து திருடப்பட்டவை என்பது தெரிய வந்துள்ளது. #IdolWingRaids #PonManickavel
    ரன்வீர்ஷாவின் வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் எப்படி? யாரால் திருடப்பட்டது? இவரிடம் விற்பனை செய்தது யார்? என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த சிலை திருட்டுக்கு அரசு அதிகாரிகள் சிலர் உடந்தையாக இருந்ததும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட சிலைகள் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவையாகும்.

    இது தொடர்பாக ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் மாலைமலர் நிருபரிடம் இன்று கூறியதாவது:-

    ரன்வீர்ஷாவுக்கு இந்த சிலைகள் யார் மூலமாக எப்படி வந்தது என்பதை முதலில் கண்டு பிடிக்க வேண்டியுள்ளது. இதன் பின்னணியில் எப்படியும் மிகப்பெரிய நெட்வொர்க் இருக்கும் என்பதால் முழு அளவில் விசாரிக்க முடிவு செய்துள்ளோம்.

    எங்களது கை காசில் இருந்தே சிலைகளை எடுத்துச் சென்றுள்ளோம். வழக்கு செலவுக்காக முதலில் செலவு செய்து விட்டு பின்னர் எழுதி வாங்கும் நிலை போலீசில் மாற வேண்டும்.

    இந்த சிலைகளை ரன் வீர்ஷா கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பே வாங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. இதில் பெரும்பாலான சிலைகளை ரன்வீர்ஷா தனது வீட்டு பூஜை அறையில் வைத்து பூஜை செய்துள்ளார்.

    சிலைகள் அனைத்தையும் கோர்ட்டில் ஒப்படைத்த பின்னர் வழக்கு விசாரணையை தீவிரப்படுத்துவோம். தவறு செய்தவர்கள் தப்ப முடியாது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #IdolWingRaids #PonManickavel
    ×