search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "start"

    • மதுரையில் 34 மின்வாரிய அலுவலகங்களில் ஆதார் இணைக்கும் பணி தொடங்கியது.
    • இதை மதுரை மேற்கு கோட்ட செயற்பொறியாளர் பழனி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    மதுரை

    தமிழகத்தில் உள்ள வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புதாரர்கள் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைக்கும் பணி, மத்திய அரசின் ஒப்புதல் பெற்று மாநிலம் முழுவதும் நடந்து வருகிறது.

    பொதுமக்கள் இணைய தளம் மூலம் ஆதார் எண்ணை மின் இணைப்பு நம்பருடன் இணைத்தனர். ஒரே நேரத்தில் பெரும்பா லானோர் மின் இணைப்பு எண்ணுடன் ஆதாரை இணைக்க முயன்றதால், மின்வாரிய இணைய தளத்தின் சர்வர் முடங்கியது.

    இதனால் வாடிக்கை யாளர்கள் சிரமப்பட்டனர். இந்த நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் அறிவிப்பு வெளி யிடப்பட்டது. அதில் 'பொதுமக்கள் மின் கட்டணம் செலுத்தும் போது ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் வகையில், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மாநில அளவில் 2 ஆயிரத்து 811 அலுவலங்களிலும் இன்று(28-ந் தேதி) முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவித்தது.

    அதன்படி மதுரை மாவட்டத்தில் உள்ள 34 மின்வாரிய அலுவல கங்களிலும் சிறப்பு முகாம் தொடங்கி நடந்து வருகிறது. பண்டிகை தினங்கள் தவிர ஞாயிறு உட்பட அனைத்து நாட்களிலும் காலை 10.30 மணி முதல் மாலை 5.15 வரை இந்த முகாம் செயல்படும்.

    பொதுமக்கள் சிறப்பு முகாம்கள் மூலம் மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைப்ப தற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வரிசையில் நின்று மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்து வருகின்றனர்.

    மதுரை அரசரடியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் இன்று ஆதார் எண்ணை இணைப்பதற்காக கூட்டம் அலைமோதியது. இதை மதுரை மேற்கு கோட்ட செயற்பொறியாளர் பழனி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

    ஆதார் எண்ணை இணைக்கும் போது தற்போதைய மின் இணைப்பு உரிமைதாரர்கள் பற்றிய விவரம் அரசுக்கு கிடைக்கும். பெயர் மாற்றமும் செய்ய இயலும். மின் இணைப்பு எண்ணை ஆதாருடன் இணைப்பதால், வீடுகளுக்கு வழங்கப்பட்டு வரும் 100 யூனிட் இலவச மின்சாரத்தில் எந்த மாற்றமும் வராது.

    அதேபோல கைத்தறி மற்றும் விசைத்தறியாளர்களுக்கான மானியமும் தொடர்ந்து வழங்கப்படும். குடிசை மற்றும் விவசாய மின் இணைப்புகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரமும் தொடரும் என்று தமிழக அரசு ஏற்கனவே தெரிவித்துள்ளது.

    • மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக சேலம் கிழக்கு கூட்டத்தில் தபால்காரரும், தாத்தா பாட்டியும் என்ற தலைப்பில் பிரசாரம் மட்டும் போட்டி நடைபெற உள்ளது.
    • குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை சேமிக்க முடியும்.

    சேலம்:

    சேலம் கிழக்கு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை அனைத்து தரப்பினருக்கும் கொண்டு சேர்க்கும் விதமாக சேலம் கிழக்கு கூட்டத்தில் தபால்காரரும், தாத்தா பாட்டியும் என்ற தலைப்பில் பிரசாரம் மட்டும் போட்டி நடைபெற உள்ளது.

    அதன்படி அனைத்து தபால் பட்டுவாடா ஊழியர்களும், மூத்த குடி மக்களுக்கு உதவி செய்யும் விதமாக குறைந்த பட்சம் ஒரு மாதத்தில் ஒரு மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு கணக்கு தொடங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    சிறப்பாக செயல்படும் கிழக்கு கோட்டத்தைச் சேர்ந்த தபால் பட்டுவாடா ஊழியர்களின் பணி திறனை பாராட்டும் வகையில் துணைக்கோட்டம் கோட்டம் மண்டல வாரியாக பரிசுகள் வழங்கப்படும்.

    இந்த சேமிப்பு கணக்கினை 60 வயது பூர்த்தி அடைந்த முதியவர்கள் மற்றும் 50 வயது பூர்த்தி அடைந்த பாதுகாப்பு பணியாளர்கள், மேலும் 55 வயது பூர்த்தி அடைந்த விருப்ப ஓய்வு பெற்றவர்கள் தொடங்கலாம். குறைந்தபட்சம் ரூ.1000 முதல் அதிகபட்சம் ரூ.15 லட்சம் வரை சேமிக்க முடியும். இதற்கு ஆண்டுக்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஒன்றிய மற்றும் மாநில அரசு தலா, 2.40 லட்சம் நிதி வழங்கி, 74 வீடுகள் கட்ட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது.
    • ஆனால், குடியிருப்பு கட்டிட பணி துவங்கப்படாமல் இருந்து வந்தது.

    சங்ககிரி:

    சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 22 ஊராட்சி மன்றங்களில், பிரதம மந்திரி ஊரக குடியிருப்பு திட்டத்தின் கீழ், 2021–22 நிதியாண்டில், ஒன்றிய மற்றும் மாநில அரசு தலா, 2.40 லட்சம் நிதி வழங்கி, 74 வீடுகள் கட்ட நிர்வாக அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், குடியிருப்பு கட்டிட பணி துவங்கப்படாமல் இருந்து வந்தது.

    இந்த நிலையில், சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலரும், உட்கட்டமைப்பு மற்றும் ஊராட்சி ஒன்றியத்தின் மண்டல அலுவலருமான நக்கீரன் தலைமையில் சங்ககிரி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராஜகணேஷ், பி.டி.ஓ .முத்து, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா ,பணி மேற்பார்வையாளர் குமார் ஆகியோர் நேரில் சென்றனர். அங்கு பயனாளிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி முதல் கட்டமாக கத்தேரி, புள்ளாக்கவுண்டம்பட்டி ஊராட்சியில், 10 வீடுகள் கட்ட அளவீடுகள் செய்து பணிகளை தொடங்கினர்.

    • அகில இந்திய அளவிலான ஆண், பெண் மின்னொளி கபடி போட்டி இன்று தொடங்கி 14-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.
    • போட்டியை அமர்ந்து பார்க்க வசதியாக கேலரி அமைக்கப்பட்டுள்ளது.

    திசையன்விளை:

    முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 69-வது பிறந்தநாளை முன்னிட்டு திசையன்விளையை அடுத்து உள்ள அப்புவிளை வி.எஸ்.ஆர்.விளையாட்டு மைதானத்தில் அகில இந்திய அளவிலான ஆண், பெண் மின்னொளி கபடி போட்டி இன்று தொடங்கி 14-ந் தேதி வரை 4 நாட்கள் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட பஞ்சாயத்து தலைவரும், ராதாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளருமான வி.எஸ்.ஆர். செய்துள்ளார்.

    போட்டியில் மராட்டியம், உத்தரபிரதேசம், அரியானா, குஜராத், டெல்லி, மும்பை, ஆந்திரா, கேரளா, கர்நாடகா தமிழ்நாடு உள்பட 80 அணிகள் கலந்துகொண்டு விளையாடுகிறது.

    போட்டியை அமர்ந்து பார்க்க வசதியாக கேலரி அமைக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். ஜெகதீஸ் பார்வையிட்டார்.

    ராதாபுரம் மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் ஜோசப் பெல்சி, அப்புவிளை பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர். சுரேஷ், முன்னாள் மாவட்ட பிரதிநிதி ஐ.ஆர்.ரமேஷ், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் ராம் கிஷோர், திசையன்விளை பேரூராட்சி கவுன்சிலர் கண்ணன், திசையன்விளை பேரூர் இளைஞரணி அமைப்பாளர் நெல்சன், தகவல் தொழில்நுட்ப அணி முருகேஷ், புளியடி குமார், எழில் ஜோசப், ஸ்டாலின், முத்தையா மற்றும் பலர் உடனிருந்தனர்.

    இன்று இரவு நடைபெறும் முதல்நாள் போட்டியை சபாநாயகர் அப்பாவு தலைமை தாங்கி தொடங்கிவைக்கிறார்.

    • யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன். முத்தையா பாண்டியன் தொடங்கி வைத்தார்.
    • மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை டி.என்.ஆர்.ஆர். ஐ.எஸ்.திட்டம் 2021 - 22 மூலமாக ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கியது.

    சிவகிரி:

    சிவகிரி குமாரபுரம், தேவிபட்டணம் பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான, தேவிபட்டணத்தில் இருந்து குமாரபுரம் வழியாக சிவகிரி செல்லும் தார்சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது.

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை டி.என்.ஆர்.ஆர். ஐ.எஸ்.திட்டம் 2021 - 22 மூலமாக ரூ.1 கோடியே 5 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணியினை தேவிபட்டணம் பேருந்து நிறுத்தம் தென்புறம் உள்ள பிள்ளையார் கோவில் அருகே யூனியன் சேர்மனும், வாசுதேவநல்லூர் வடக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளருமான பொன். முத்தையா பாண்டியன் தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் தேவிபட்ட ணம் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் ராமராஜ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மனோகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் பாண்டியம்மாள் நீராத்திலிங்கம், தென்மலை முனியராஜ், கிளை செயலாளர் முருகன், பஞ்சாயத்து துணைத் தலைவர் மாடக் கண்ணு, அனைத்து வார்டு கவுன்சிலர்கள், ஜெய பிரகாஷ், துரைராஜ், காளி ராஜ், மணிகண்டன், விக்கி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • களக்காடு அருகே உள்ள மலையடிபுதூர் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தொடங்கும் இறையடிக்கால்வாய் நீண்ட நாட்களாக தூர் வாரப்படவில்லை.
    • கால்வாயில் செடி-கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடந்தது. ஆங்காங்கே மண் திட்டுகளும் ஏற்பட்டிருந்தன. இதனால் கால்வாயில் நீரோட்டம் தடைபட்டது.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள மலையடிபுதூர் மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தொடங்கும் இறையடிக்கால்வாய் நீண்ட நாட்களாக தூர் வாரப்படவில்லை.

    இதனைதொடர்ந்து கால்வாயில் செடி-கொடிகள் முளைத்து புதர் மண்டி கிடந்தது. ஆங்காங்கே மண் திட்டுகளும் ஏற்பட்டிருந்தன. இதனால் கால்வாயில் நீரோட்டம் தடை பட்டது.

    மேலும் மழைக்காலங்களில் கால்வாயில் அதிகளவில் வெள்ளம் கரை புரண்டு ஓடும் போது, அடைப்பு ஏற்பட்டு தண்ணீர் கரைகளை உடைத்து கிராமங்களுக்குள் புகும் அபாயகரமான சூழல் நிலவியது.

    எனவே புதர் மண்டி கிடக்கும் இறையடிக்கால்வாயை சீரமைக்கவும், கரைகளை பலப்படுத்தவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்நிலையில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிவக்குமார் உத்தரவின் பேரில், உதவி செயற்பொறியாளர் மணிகண்டன், உதவி பொறியாளர் பாஸ்கர், பாசன உதவியாளர் ஆனந்தன் மற்றும் பொதுப்பணித்துறையினர் புதர் மண்டி கிடந்த இறையடிக்கால்வாயை நேரில் பார்வையிட்டு அதனை சீரமைக்க நடவடிக்கை எடுத்தனர்.

    அதன்படி கால்வாயில் ஆக்கிரமிப்பு உள்ளதா? என்று அளவீடு செய்யப்பட்டது.

    அதனைதொடர்ந்து நேற்று இறையடிக்கால்வாய் தூர் வாரும் பணி தொடங்கியது. பொக்லைன் இயந்திரம் மூலம் கால்வாய் தூர் வாரப்பட்டு வருகிறது.

    • நிகழ்ச்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிளிப்பு திட்டம் மற்றும் அம்ரித்சரோவர் திட்டம் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் பேசினர்.
    • நிகழ்ச்சிக்கு வல்லம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜமீன்பாத்திமா தலைமை தாங்கினார்.

    தென்காசி:

    தென்காசி ஊராட்சி ஒன்றியம் வல்லம் ஊராட்சியில் உள்ள இசக்கி திருத்துக்குளம் பகுதியில் ரூ.9.56 லட்சம் செலவில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் பழைய நீர்நிலைகள் சீரமைப்பு செய்யும் அம்ரித்சரோவர் - 2022 - 23 திட்டப் பணிகள் தொடங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சிக்கு வல்லம் ஊராட்சி மன்றத் தலைவர் ஜமீன்பாத்திமா தலைமை தாங்கினார். துணைத் தலைவர் முருகேசன் முன்னிலை வகித்தார். தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ஹாஜி வல்லம் சேக்அப்துல்லா கலந்துகொண்டு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் தென்காசி ஊராட்சி ஒன்றிய அலுவலர் (வ‌.ஊ) மாணிக்கவாசகம், தென்காசி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஊராட்சி ஒன்றிய பொறியாளர், பணி மேற்பார்வையாளர் ஆகியோர் கலந்து கொண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிளிப்பு திட்டம் மற்றும் அம்ரித்சரோவர் திட்டம் பற்றி விரிவாகவும் விளக்கமாகவும் பேசினர்.

    இந்த நிகழ்ச்சியில் தென்காசி ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர் மல்லிகா சரவணன், வல்லம் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள்சுந்தரி, செல்வி, இசக்கியம்மாள், செய்யது அலி பாத்திமா, செ.சாகுல் ஹமீது, முபாரக் அலி, சங்கீதா, திவான் மைதீன் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்ட ஒருங்கிணைப்பாளர் சேகுமைதீன், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணித்தள பொறுப்பாளர் தெய்வத்தாய், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் வல்லம் ஊராட்சி செயலாளர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

    • இளநிலை பட்டப்படிப்புகளுக்கு ெபாது பல்கலைக்கழக நுழைவுத்தேர்வு அடுத்த மாதம் 15-ந்தேதி தொடங்குகிறது.
    • இதில் 9 லட்சத்து 50 ஆயிரத்து 804 பேர் எழுதுகிறார்கள்.

    சேலம்:

    இந்திய அரசு கல்வித்துறை சார்பாக தேசிய தேர்வு முகமை இளநிலை பட்டப்படிப்புகளில் மாணவர்களை சேர்ப்பதற்கான பொதுபல்கலைக்கழக நுைழவுத் தேர்வு அறிவிப்பு வெளியிட்டது.

    மாணவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பு இந்த தேர்வுக்கு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி, கரூர் உள்பட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் ஏராளமான மாணவ- மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.

    இந்தநிலையில் மாணவ- மாணவிகளின் கோரிக்கையை ஏற்று அவர்களின் நலன் கருதி விண்ணப்பங்களில் திருத்தம் செய்ய மேலும் ஒரு வாய்ப்பு வழங்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது-

    இளநிலை பட்டப்படிப்புகளுக்கு பொது பல்கலைக்கழக நுழைவு தேர்வு (சி.யு.இ.டி. யு.ஜி) -2022 நாடு முழுவதும் 554 நகரங்களிலும், இந்தியாவுக்கு வெளியே 13 இடங்களிலும் நடைபெற உள்ளது.

    43 மத்திய பல்கலைக்கழகங்கள், 13 மாநில பல்கலைக்கழகங்கள், 12 நிகர் நிலை பல்கலைக்கழகங்கள், 18 தனியார் பல்கலைக்கழகங்கள் என 86 பல்கலைக்கழங்களில் அட்மிஷனுக்கு 9 லட்சத்து 50 ஆயிரத்து 804 பேர் பதிவு செய்துள்ளனர்.

    வருகிற ஜூலை மாதம் 15-ந்தேதி நுழைவுத் தேர்வு தொடங்குகிறது. தொடர்ந்து 16-ந்தேதி, 19-ந்தேதி மற்றும் 20-ந்தேதியும் மற்றும் ஆகஸ்ட் மாதம் 4-ந்தேதி முதல் 10-ந்தேதி வரை கம்ப்யூட்டர் வழியாக நடைபெற உள்ளது.

    இந்த நிலையில் மாணவ- மாணவிகள் தங்களது ஆன்லைன் விண்ணப்பத்தில் ஏதாவது தவறாக பதிவு செய்து இருந்தால் அதனை இன்று முதல் நாளை நள்ளிரவு 11.50 மணி வரை திருத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.

    இந்த இறுதி கட்ட வாய்ப்பை மாணவ- மாணவிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு தேசிய தேர்வு முகமை அறிவுறுத்தி உள்ளது.

    • ஆழ்வார்திருநகரியில் இருந்து நாசரேத் செல்லும் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு.
    • இத்திட்டத்தின் தொடக்க விழா ஆழ்வார்திருநகரியில் நடைபெற்றது.

    தென்திருப்பேரை:

    ஆழ்வார்திருநகரியில் இருந்து நாசரேத் செல்லும் வழியில் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் வரை உள்ள சாலையை சீரமைத்து புதுப்பிக்கும் பணிக்காக ரூ.186 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் தொடக்க விழா ஆழ்வார்திருநகரியில் நடைபெற்றது.

    இதில் ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தார்சாலை புதுப்பிக்கும் பணியை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

    நிகழ்ச்சியில் தி.மு.க. நகர செயலாளர் கோபிநாத், ஆழ்வார்திருநகரி காங்கிரஸ் வட்டார தலைவர் கோதண்டராமன், ஆழ்வார்திருநகரி பேரூராட்சி தலைவி சாரதா பொன் இசக்கி, துணைத்தலைவர் சுந்தர்ராஜ், முன்னாள் தி.மு.க. நகர செயலாளர் முத்துராமலிங்கம், தி.மு.க. பிரதிநிதி ஸ்ரீதர், ஆதி உடையார், மாரியப்பன், ரஞ்சித் மோகன், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட செயற்பொறியாளர் விஜய் சுரேஷ், உதவி பொறியாளர் சிபின், காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் சங்கர், மாவட்ட பொருளாளர்கள் எடிசன், மாவட்ட இளைஞரணி ஜெயசீலன், மாவட்ட காங்கிரஸ் துணை தலைவர் கருணாகரன், ஊடகப்பிரிவு மரியராஜ், நகர பொறுப்பாளர் அபுதாகிர், வட்டாரச் செயலாளர் சிவசக்தி வேல், வட்டாரச் செயலாளர் சேகர், வட்டார பொருளாளர் விஜயன், நகர துணைத் தலைவர் ஆஸ்கின், இளைஞர் காங்கிரஸ் செயலாளர் குமார், வட்டாரச் செயலாளர் மோகன்ராஜ், இளைஞர் காங்கிரஸ் வட்டார செயலாளர் ரெங்கராஜன், பொதுச் செயலாளர் ஆறுமுக நயினார், கேம்பலாபாத் கிராம கமிட்டி தலைவர் அஜிமுல்லா, ஒப்பந்ததாரர்கள் மாடசாமி, ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நெல் கொள்முதல் நிலையத்தை தங்கபாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
    • தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் சேத்தூர், மேட்டுப்பட்டி, முகவூர், வடக்கு தேவதானம் மற்றும் தெற்கு தேவதானம் என 5 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டுவருகிறது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தெற்கு தேவதானம் ஊராட்சி கோவிலூரில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள நெல் கொள்முதல் நிலையத்தை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், கடந்த ஆட்சியில் ராஜபாளையம் தொகுதியில் 2 இடங்களில் நெல்கொள்முதல் நிலையம் செயல்பட்டது. தற்போது தி.மு.க. ஆட்சி அமைந்தவுடன் சேத்தூர், மேட்டுப்பட்டி, முகவூர், வடக்கு தேவதானம் மற்றும் தெற்கு தேவதானம் என 5 இடங்களில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டுவருகிறது.

    தெற்கு வெங்காநல்லூர் மற்றும் சொக்கநாதன்புத்தூர் பகுதி விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று புதிதாக நெல்கொள்முதல் நிலையம் இந்த வாரத்தில் அமைக்கப்படும்.

    தி.மு.க. ஆட்சி அமைந்து மு.க.ஸ்டாலின் முதலமைச்சரானது முதல் தமிழ்நாடு செழிப்பான மாநிலமாக திகழ்கிறது. ராஜபாளையம் தொகுதியில் 2 வெள்ளாமை பார்க்கும் அளவிற்கு கண்மாய்களிலும் குளங்களிலும் தண்ணீர் வசதி உள்ளது. இதனால் விவசாயமும் விவசாயிகளும் வளர்ந்து வருகின்றனர் என்றார்.

    நிகழ்ச்சியில் அலுவலர் செந்தில்குமார், அவைத்தலைவர் மிசா நடராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    வைகை அணை பூங்காவில் 3 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது.
    ஆண்டிப்பட்டி:

    தேனி மாவட்டத்தில் உள்ள பல்வேறு சுற்றுலா இடங்களில் வைகை அணை முக்கிய இடமாக உள்ளது. இங்குள்ள பூங்கா பகுதியில் பல்வேறு பொழுது போக்கு அம்சங்கள் இருப்பதால் தினமும் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

    ஆனால் பூங்கா பகுதியில் பொழுதுபோக்கு அம்சங்களை மேம்படுத்தும் பணி கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு ஆமை வேகத்தில் நடந்து வந்தது. புல்தரைகள், கண்கவர் பொம்மைகள், செயற்கை நீரூற்றுகள், வண்ண விளக்குகள், படகு குழாம் மேம்படுத்தும் பணிகள் நடந்து வந்தன. முதல் கட்டமாக ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் படகு குழாம் கட்டும் பணி நிறைவடைந்தது.

    இதனையடுத்து 5 பெடல் படகுகள் இயக்கி ஒத்திகை பார்க்கப்பட்டது. வைகை அணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் படகு சவாரியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    அதன்படி 3 ஆண்டுகளுக்கு பிறகு படகு சவாரி செயல்பாட்டுக்கு வந்தது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில் படகு குழாமில் 2 பேர் செல்லும் 3 பெடல் படகுகளும், 4 பேர் செல்லும் 2 பெடல் படகுகளும் உள்ளன. 4 பேர் அமர்ந்து செல்ல ½ மணி நேரத்துக்கு கட்டணமாக ரூ.170-ம், 2- பேர் அமர்ந்து செல்ல ½ மணி நேரத்துக்கு ரூ.90-ம் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. படகு சவாரி செய்யும்போது பாதுகாப்புக்காக லைப் ஜாக்கெட் வழங்கப்பட உள்ளது.

    பாதுகாப்பு பணிக்கு இன்னும் ஊழியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. தற்காலிக பணியாளர்களை கொண்டே பராமரித்து வருகிறோம். தற்போது வாரத்திற்கு 2 நாட்கள் (சனி, ஞாயிறு) இயக்க முடிவு செய்துள்ளோம். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் முழு நேரம் இயக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றனர்.

    குமரி மேற்கு கடற்கரையில் இன்று முதல் மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. இதனால் மாவட்டத்தில் மீன்களின் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.
    நாகர்கோவில்:

    மீன்களின் இனப்பெருக்கத்தை அதிகரிக்க ஆண்டுதோறும் விசைப்படகுகள் குறிப்பிட்ட காலத்தில் கடலுக்கு செல்லக்கூடாது என மீன்வளத்துறை அறிவித்துள்ளது.

    அதன்படி, குமரி மாவட்டத்தில் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்படும். கிழக்கு கடற்கரை பகுதியில் தடைக்காலம் ஏப்ரல் 15-ந்தேதி முதல் ஜூன் 15-ந்தேதி வரையும், மேற்கு கடற்கரை பகுதியில் ஜூன் 1-ந்தேதி முதல் ஜூலை 30-ந்தேதி வரையும் தடைக்காலம் அமலில் இருக்கும்.

    அரசின் அறிவிப்புப்படி குமரி மாவட்ட கிழக்கு கடற்கரையில் கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வந்தது. வருகிற 15-ந்தேதி வரை இந்த தடைக்காலம் முடிவுக்கு வரும்.

    மேற்கு கடற்கரையில் இன்று முதல் தடைக்காலம் அமலுக்கு வந்தது. இனி ஜூலை 30-ந்தேதி வரை மேற்கு கடற்கரை மீனவர்களின் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல முடியாது.

    இதன் மூலம் குமரி மாவட்டத்தில் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதிகளில் ஒரே நேரத்தில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    குமரி மாவட்டத்தில் இதற்கு முன்பு கிழக்கு கடற்கரை பகுதியில் தடைக்காலம் அமலில் இருக்கும்போது, மேற்கு கடற்கரை மீனவர்கள் கடலுக்கு செல்வார்கள். அவர்கள் பிடித்து வரும் மீன்கள் மார்க்கெட்டில் விற்பனைக்கு வருவதால் குமரி மாவட்ட மக்களுக்கு மீன்கள் தட்டுப்பாடின்றி கிடைக்கும்.

    அடுத்து மேற்கு கடற்கரையில் தடைக்காலம் தொடங்கும்போது, கிழக்கு கடற்கரை மீனவர்கள் கடலுக்கு செல்ல தொடங்குவார்கள். இதனால் மீன்களுக்கு எப்போதும் தட்டுப்பாடு இருக்காது.

    ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் குமரி மாவட்டம் முழுவதும் 15 நாட்கள் கிழக்கு மற்றும் மேற்கு கடற்கரை பகுதியில் ஒட்டு மொத்தமாக யாரும் மீன்பிடிக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இந்த நேரத்தில் கட்டுமரங்கள், வள்ளங்களில் குறிப்பிட்ட தூரத்திற்கு மட்டுமே சென்று மீனவர்கள் மீன்பிடித்து வருவார்கள்.

    இதில் குறைந்த அளவே மீன்கள் கிடைக்கும். இதனால் மாவட்டத்தில் மீன்களின் விலை கடுமையாக உயரும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ×