search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "st anthony"

    • இந்த விழா 18-ந்தேதி வரை நடக்கிறது.
    • 17-ந்தேதி புனித அந்தோணியார் திருஉருவம் தாங்கிய தேர் பவனி நடக்கிறது.

    மதுரை கரிமேடு புனித அந்தோணியார் ஆலயத்தின் 133-ம் ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. மதுரை புனித அருளானந்தர் கல்லூரி முதல்வர் அருட்தந்தை காட்வின் ரூபஸ் திருவிழா கொடி ஏற்றி வைத்து சிறப்பு திருப்பலி நிறைவேற்றி விழாவை தொடங்கி வைத்தார்.

    இதனை தொடர்ந்து வருகிற 18-ந்தேதி வரை தினமும் மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை வழிபாடும், அதனைத் தொடர்ந்து சிறப்பு திருப்பலியும் நடைபெறுகிறது.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 17-ந்தேதி மாலை 6:30 மணிக்கு டி நோபிலி மெட்ரிக் பள்ளி முதல்வர் அருட்தந்தை அடைக்கலராஜா, பள்ளி துணை முதல்வர் அருட்தந்தை ஆனந்த் ஆகியோர் திருவிழா சிறப்பு திருப்பலி நிறைவேற்றி புனித அந்தோணியார் திருஉருவம் தாங்கிய மின் அலங்கார தேர் பவனியை தொடங்கி வைக்கின்றனர்.

    இந்த தேர், முக்கிய வீதிகளான மோதிலால்ரோடு, ஆரப்பாளையம், ஏ.ஏ.ரோடு, புதுஜெயில் ரோடு, கரிமேடு வழியாக ஆலயம் வந்தடைகிறது.18-ந்தேதி மாலை 6.30 மணிக்கு நன்றி திருப்பலியும், தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. 19-ந்தேதி காலை சமபந்தி விருந்து நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஞான ஒளிவுபுரம் புனிதவளனார் ஆலய பங்குத்தந்தை ஜோசப், உதவி பங்குத்தந்தை சின்னதுரை, கரிமேடு அந்தோணியார் ஆலய நிர்வாகிகள், ஜெபமாலைமாதா அன்பிய மண்டல இறை மக்கள் செய்து வருகின்றனர்.

    • ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கிய தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது.
    • திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

    நாகை மாவட்டம் திருப்பூண்டியை அடுத்த கருங்கண்ணியில் உள்ள புனித அந்தோணியார் ஆலய ஆண்டுப்பெருவிழா கடந்த 23-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று இரவு நடந்தது. முன்னதாக தஞ்சை மறை மாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

    இதை தொடர்ந்து மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் மிக்கேல் சம்மனசு, சவேரியார், அருளானந்தர், சூசையப்பர், மாதா, அந்தோணியார் சொரூபங்கள் வைக்கப்பட்டது. ஆலய வளாகத்தில் இருந்து தொடங்கிய தேர்பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை அடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர். இதையடுத்து வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.

    • விழாவை ஒவ்வொரு நாளும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சிறப்பிக்கிறார்கள்.
    • 12-ந் தேதி தேர்ப்பவனி நடைபெறும்.

    அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இன்று மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடக்கிறது. வடக்கன்குளம் வட்டார முதன்மைக்குரு ஜானி பிரிட்டோ தலைமை தாங்குகிறார்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் அதிகாலை 5 மணிக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு ஜெபமாலை பவனி, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர் போன்றவை நடைபெறும். விழாவை ஒவ்வொரு நாளும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் சிறப்பிக்கிறார்கள்.

    வருகிற 11-ந் தேதி காலை 8 மணிக்கு முதல் திருவிருந்து வழங்கும் திருப்பலி நடைபெறும். 12-ந் தேதி மாலை ஆராதனையை தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மைக் குரு பன்னீர் செல்வம் தலைமை தாங்கி நடத்துகிறார்கள். அன்று இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடைபெறும்.

    பத்தாம் திருவிழாவான 13-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு பெருவிழா மற்றும் உறுதிபூசுதல் விழா, கூட்டுத் திருப்பலி நடக்கிறது. தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்குகிறார். அன்று பிற்பகல் 2 மணிக்கு தேர்ப்பவனி, இரவு 8:30 மணிக்கு தேரடி நற்கருணை ஆசீர் போன்றவை நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை அழகப்பபுரம் பங்குத்தந்தை க. செல்வராயர், உதவிப் பங்குத் தந்தை ஞா. ஜார்ஜ் ஆன்றனி, பங்கு மேய்ப்புப்பணிக்குழு துணைத் தலைவர் வி.ஏ.எம். ராஜன், செயலாளர் டி.டி. செல்லத்துரை, துணைச் செயலாளர் ஜார்ஜ் மலர்க்கொடி, பொருளாளர் ஏ. மரிய ஜார்ஜ், அருட்சகோதரிகள் மற்றும் பங்கு இறைமக்கள் செய்துள்ளனர்.

    • திருவிழா 26-ந்தேதி தொடங்கி ஜூன் 4-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • தினமும் மாலை ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடைபெறுகிறது.

    வில்லுக்குறி அருகே உள்ள அப்பட்டுவிளை புனித அந்தோணியார் ஆலய திருவிழா வருகிற 26-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம்(ஜூன்) 4-ந்தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல்நாளான 26-ந்தேதி மாலையில் 6.30 மணிக்கு நடைபெறும் கொடியேற்ற நிகழ்ச்சிக்கு அருட்பணியாளர் ரபேல் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்பணியாளர் வின்சென்ட் மறையுரையாற்றுகிறார். முன்னதாக கல்லறை மந்திரித்தல், தேமானூர் பங்குதந்தை ஆல்பின் ஜூடு தலைமையில் வாழ்வச்சகோஷ்டம் பங்குதந்தை அஜின் மறையுரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, கலைநிகழ்ச்சிகள், பொதுக்கூட்டம் ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவில் 30-ந்தேதி முளகுமூடு வட்டர முதல்வர் மரிய ராஜேந்திரன் தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றுகிறார்.

    9-ம் நாளான வருகிற 3-ந்தேதி காலை 7 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் பேரருட்பணி இயேசுரெத்தினம் தலைமை தாங்கி முதல் திருவிருந்து திருப்பலியை நிறைவேற்றுகிறர். நாஞ்சில் கத்தோலிக்க கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் அருட்பணியாளர் எக்கர்மன்ஸ் மைக்கேல் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு அருட்பணியாளர் ராயப்பன் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார். கோட்டார் மறைமாவட்ட போதை மறுவாழ்வு மைய அருட்பணியாளர் பிரான்சிஸ் சேவியர் நெல்சன் மறையுரையாற்றுகிறார். இரவு 9 மணிக்கு தேர்பவனி நடக்கிறது.

    விழாவின் இறுதிநாளான 4-ந்தேதி காலை 9.30 மணிக்கு தூத்துக்குடி முன்னாள் ஆயர் இவான் அம்புறோஸ் தலைமை தங்கி திருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றுகிறார். மதியம் அன்பின் விருந்து, மாலை 6 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டுவிழா ஆகியவை நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குதந்தை சுரேஷ் பாபு ஓ.சி.டி., பங்கு பேரவை துணைத்தலைவர் மரிய ஆன்றனி, செயலாளர் புஷ்பலதா, துணை செயலாளர் லீமாறோஸ், பொருளாளர் மரிய செபஸ்தியான் மற்றும் பங்கு பேரவையினர், பங்கு மக்கள் ஆகியோர் இணைந்து செய்து வருகின்றனர்.

    • பெருவிழா நாளை தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • விழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது.

    குலசேகரம் நாகக்கோடு புனித அந்தோணியார் ஆலய பங்கு குடும்ப பெருவிழா நாளை(வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் நாளை மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருவிழா கொடியேற்றம் தொடர்ந்து புனித தேவசகாயம் சொரூபம் அர்ச்சிப்பு நிகழ்ச்சி நடக்கிறது. அதைதொடர்ந்து வெட்டுவெந்நி திருத்தல அதிபர் அந்தோணிமுத்து தலைமை தாங்கி ஆடம்பர கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றுகிறார். முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்கா அதிபர் டோமினிக் கடாட்சதாஸ் மறையுரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, மறைக்கல்வி மன்ற ஆண்டுவிழா, பொதுக்கூட்டம், கலைநிகழ்ச்சிகள் ஆகியவை நடக்கிறது.

    விழாவின் 9-ம் நாள் காலையில் நோயில் பூசுதல் சிறப்பு திருப்பலியை அருட்பணியாளர் குலசை பெலிக்ஸ் நிறைவேற்றுகிறார். மாலையில் திண்டுக்கல் அருட்பணியாளர் ஸ்டீபன், மேல்புறம் பங்குதந்தை ஆல்வின் விஜய் ஆகியோர் இணைந்து திருப்பலி நிறைவேற்றுகிறார்கள்.

    விழாவின் நிறைவு நாளான 21-ந்தேதி குழித்துறை சமூக சேவைகள் நிர்வாக இயக்குனர் அருட்பணியாளர் ஜாண் மைக்கேல் ராஜ், சென்னை குட்வில் கம்யூனிகேஷன் அருட்பணியாளர் ஜெகத் கஸ்பார் ஆகியோர் இணைந்து குடும்ப பெருவிழா நிறைவு ஆடம்பர கூட்டுத்திருப்பலியை நிறைவேற்றுகிறார்கள். தொடர்ந்து கொடியிறக்கம், அன்பின் விருந்து ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குதந்தை சவுந்தர்நாதன், பங்கு அருட்பணியாளர் பேரவை துணை தலைவர் ராஜன், செயலாளர் புஷ்பராணி, பொருளாளர் சுசீலன், துணை செயலாளர் ஜெயராஜேஷ் மற்றும் அருட்பணி பேரவை உறுப்பினர்கள், திருவழிபாட்டுக்குழு, மறைக்கல்வி மன்றம், பக்த சபை இயக்கங்கள், அன்பியங்கள், பங்கு மக்கள் இணைந்து செய்து வருகிறார்கள்.

    • திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது.
    • 6-ந்தேதி அந்தோணியார் தேர்பவனி நடக்கிறது.

    சுங்கான்கடை புனித அந்தோணியார் திருத்தல திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 10 நாட்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல்நாளான இன்று மாலை 6.30 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட பொருளாளர் அருட்தந்தை அகஸ்டின் தலைமை தாங்கி திருவிழா கொடியை ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். அருட்தந்தை ஜெயா சுந்தர்சிங் மறையுரையாற்றுகிறார்.

    விழா நாட்களில் தினமும் மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, கலைநிகழ்ச்சிகள், பொதுக்கூட்டம் ஆகியவை நடக்கிறது.

    விழாவில் 30-ந்தேதி காலை 9.30 மணிக்கு திருப்பலி, பகல் 12 மணிக்கு அன்பு விருந்து, வருகிற 1-ந்தேதி அனைத்து கல்லூரி சார்பில் திருப்பலி நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து புனித சவேரியார் பொறியியல் கல்லூரி தாளாளர் மரிய வில்லியம் தலைமையில் திருப்பலி நடைபெறுகிறது. 5-ந்தேதி மாலை 6 மணிக்கு மூளகுமுடு பங்குதந்தை டோமினிக் எம்.கடாட்சதாஸ் தலைமை தாங்கி திருப்பலி நிறைவேற்றுகிறார்.

    6-ந்தேதி காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, மாலையில் நடைபெறும் மாலை ஆராதனை, நற்கருணை ஆசீர், திருப்பலிக்கு குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் ஜேசு ரத்தினம் தலைமை தாங்குகிறார். இரவு 9 மணிக்கு அந்தோணியார் தேர்பவனி நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 7-ந்தேதி காலை 9 மணிக்கு புனித பவுல் இறையியல் கல்லூரி பேராசிரியர் ஆல்பர்ட் ஜார்ஜ் அலெக்சாண்டர் தலைமை தாங்கி திருவிழா சிறப்பு திருப்பலியை நிறைவேற்றுகிறார். மாலை 6.30 மணிக்கு மறைக்கல்வி ஆண்டு விழா ஆகியவை நடைபெறுகிறது.

    திருவிழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் பிறிம்மஸ்சிங், பங்கு பேரவை உதவித்தலைவர் மைக்கேல் ராஜன், பொருளாளர் ஏசுராஜன், செயலாளர் சபிதா ப்ரித்தி, உதவிச்செயலாளர் டென்னிஸ் ராஜ் மற்றும் பங்கு மக்கள், பங்கு பேரவையினர், பக்த சபைகள் இணைந்து செய்து வருகிறார்கள்.

    • திருவிழா 21-ந்தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது.
    • திருவிழா நாட்களில் தினமும் ஜெபமாலை, திருப்பலி நடக்கிறது.

    மார்த்தாண்டம் வெட்டுவெந்நியில் கோடி அற்புதர் என போற்றப்படும் தூய அந்தோணியார் திருத்தல பங்கு அமைந்துள்ளது. இந்த திருத்தல பங்கின் திருவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தொடங்கி 21-ந் தேதி வரை 8 நாட்கள் நடக்கிறது.

    திருவிழாவில் நாளை மறுநாள் மாலை 5 மணிக்கு கொடிபவனி, 6 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி நடக்கிறது. விழாவில் குழித்துறை மறை மாவட்ட தொடர்பாளர் அருட்பணியாளர் ேயசுரெத்தினம் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் டேவிட் மைக்கேல் மறையுரை நிகழ்த்துகிறார். பங்கு அருட்பணியாளர் அந்தோணி எம்.முத்து, இணைப்பணியாளர் மரிய மார்ட்டின், அருள் வாழ்வு வழிகாட்டி டென்சிங் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

    தொடர்ந்து வருகிற திருவிழா நாட்களில் தினமும் மாலை 5.30 மணிக்கு ஜெபமாலை, தொடர்ந்து திருப்பலி, இரவு 8.30 மணிக்கு பொதுக்கூட்டம், கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    வருகிற 19-ந் தேதி காலை 8.30 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. அருட்பணியாளர் அந்தோணி எம்.முத்து தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் மரிய வில்லியம் மறையுரை நிகழ்த்துகிறார். அன்று மாலை திருப்பலியை தொடர்ந்து இரவு 8 மணிக்கு புனிதரின் தேர்ப்பவனி நடக்கிறது. 20-ந் தேதி மாலையில் அருட்பணியாளர் ஜெகன் சில்வஸ்டர் தலைமையில் நடக்கும் திருப்பலியில் அருட்பணியாளர் மார்ட்டின் மறையுரை நிகழ்த்துகிறார்.

    திருவிழாவின் இறுதி நாளான 21-ந் தேதி காலை 8 மணிக்கு மலையாளத்தில் திருப்பலி நடக்கிறது. 9.30 மணிக்கு அன்பின் விருந்து தொடங்குகிறது. தொடர்ந்து குழித்துறை மறை மாவட்ட நிதி பரிபாலகர் அருட்பணியாளர் அகஸ்டின் தலைமையில் நடக்கும் திருப்பலியில் அருட்பணியாளர் பெனடிக்ட் அனலின் மறையுரை நிகழ்த்துகிறார். 11 மணிக்கு மார்த்தாண்டம் மறை மாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. 12.30 மணிக்கு அருட்பணியாளர் பென்னின் அனஸ் தலைமையில் நடக்கும் திருப்பலியில் அருட்பணியாளர் சகாயதாஸ் மறையுரை நிகழ்த்துகிறார்.

    மாலை 6 மணிக்கு திருவிழா நிறைவு திருப்பலி தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடக்கிறது.

    தொடர்ந்து இறுதி நிகழ்ச்சியாக சமய நல்லிணக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. திருவிழா ஏற்பாடுகள் திருத்தல பங்கு இறைமக்கள், அருட்பணி பேரவை, சிறப்பு நிதிக்குழு மற்றும் பங்கு அருட்பணியாளர்கள் தலைமையில் செய்யப்பட்டு வருகிறது.

    • இந்த விழா பிப்ரவரி 12-ந் தேதி வரை நடக்கிறது.
    • தினமும் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி நடக்கிறது.

    ஈத்தாமொழி அருகே உள்ள பெரியகாடு புனித அந்தோணியார் திருத்தலப் பெருவிழா நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தொடங்கி பிப்ரவரி 12-ந் தேதி வரை நடக்கிறது.

    இன்று (ஞாயிற்றுக்கிழமை)இத்தாலியில் உள்ள பதுவா நகரில் இருந்து கொண்டு வரப்படும் புனித அந்தோணியாரின் திருப்பண்டம் அமைவிடம் மந்திரிப்பு நடைபெறுகிறது. நாளை (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்கு கல்லறைத்தோட்டம் மந்திரிப்பு, 6 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலியும் நடக்கிறது. தொடர்ந்து புத்தன்துறை பங்குத்தந்தை வில்சன் தலைமையில் ராஜாக்கமங்கலம்துறை இணைப் பங்கு தந்தை அனில் ஜோசப் மறையு ரையாற்றுகிறார்.

    நாளை மறுநாள் மாலை 6 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம் மற்றும் திருப்பலி நடக்கிறது. இதற்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசேரன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார்.

    விழாவையொட்டி தினமும் மாலை ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி மற்றும் அருட்பணியாளர்களின் மறையுரை போன்றவை நடக்கிறது.

    11-ந் தேதி மாலை 6 மணிக்கு ஜெபமாலை, மாலை ஆராதனை, இரவு 9 மணிக்கு திருவிழிப்பு நற்செய்தி கொண்டாட்டம் போன்றவை நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 12-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு கோட்டார் மறை மாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார். காலை 11 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு குளச்சல் வட்டார முதன்மை அருட்பணியாளர் பிரான்சிஸ் டி சேல்ஸ் தலைமை தாங்குகிறார். கேசவன்புத்தன்துறை பங்குத்தந்தை எஸ்.பி. லாரன்ஸ் மறையுரையாற்றுகிறார். மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறுகிறது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பென்னோ ராஜ், திருத்தொண்டர் ருடால்ப் சங்கீத் மற்றும் பங்குமக்கள், பங்கு அருட்பணி பேரவையினர் செய்து வருகிறார்கள்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழகத்தில் இருந்து 3,500 பேர் பங்கேற்க அனுமதி.
    • இலங்கையில் இருந்து 5 ஆயிரம் பேர் கலந்து கொள்ள அனுமதி.

    ராமேசுவரம் :

    இந்தியாவுக்கும்-இலங்கைக்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் கச்சத்தீவு அமைந்து இருக்கிறது. இந்த கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயம் பிரசித்தி பெற்றதாகும்.

    1974-ம் ஆண்டு வரை இந்தியா வசம் இருந்த கச்சத்தீவு, பின்னர் இலங்கைக்கு கொடுக்கப்பட்டது.

    கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டாலும் ஆண்டுதோறும் அங்குள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழாவில், இருநாட்டு மக்களும் கலந்துகொள்ளலாம் என, அது சம்பந்தமான ஒப்பந்தத்தில் இடம்பெற்றுள்ளது.

    ஆண்டுதோறும் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திருவிழா பிப்ரவரி மாத இறுதியிலோ அல்லது மார்ச் மாதம் முதல் வாரத்திலோ நடைபெறும்.

    இந்த ஆண்டுக்கான திருவிழா மார்ச் 3 மற்றும் 4-ந்தேதிகளில் நடைபெறுகிறது. விழாவின் முதல் நாளான மார்ச் 3-ந்தேதி மாலையில், ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் அந்தோணியாரின் உருவம் பதித்த கொடி ஏற்றப்படுகிறது.

    இதைத்தொடர்ந்து ஆலயத்தை சுற்றி 11 இடங்களில் சிலுவைப்பாதை திருப்பலி நடைபெற்று, சிறப்பு பிரார்த்தனை நடைபெறும். இரவில் தேர் பவனி நடைபெற்று முதல் நாள் திருவிழா நிறைவுபெறும்.

    2-வது நாளான மார்ச் 4-ந்தேதி காலை 7 மணி அளவில் 2-வது நாள் திருவிழா திருப்பலி பிரார்த்தனை யாழ்ப்பாணம் மறைமாவட்ட ஆயர் தலைமையில் நடைபெறுகிறது. இதில் இருநாட்டு பங்கு தந்தையர்களும், இருநாட்டு மக்களும் கலந்து கொள்கிறார்கள். சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக நடைபெறும் இந்த திருவிழா திருப்பலிக்கு பின்னர் கொடி இறக்கம் நடைபெற்று திருவிழா நிறைவடைகிறது.

    கச்சத்தீவில் இந்த ஆண்டு நடைபெறும் புனித அந்தோணியார் ஆலய திருவிழா ஏற்பாடுகள் குறித்து நேற்று இலங்கை யாழ்ப்பாணத்தில் கலெக்டர் சிவபாதசுந்தரம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நெடுந்தீவு பங்குத்தந்தை, கடற்படை அதிகாரிகள் மற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

    இந்த கூட்டத்தில், இந்த ஆண்டு கச்சத்தீவு ஆலய திருவிழாவில் தமிழகத்தில் இருந்து 3,500 பேரும் இலங்கையில் இருந்து 5 ஆயிரம் பேரும் கலந்து கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    கடந்த ஆண்டு திருவிழாவில் இந்தியாவில் இருந்து 100-க்கும் குறைவானவர்களும், இலங்கையில் இருந்து 300 பேரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

    • விழா நாட்களில் தினமும் திருப்பலி, நற்கருணை ஆசிர் நடக்கிறது
    • 6-ந்தேதி தேர்பவனி நடக்கிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் கிறிஸ்துவ ஆலயங்களில் புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலயம் மிகவும் புகழ்பெற்ற திருத்தலமாகும். இத்திருத்தலத்தை தென்னகத்து பதுவை என்று அழைக்கப்படுகிறது. புளியம்பட்டி புனித அந்தோணியார் ஆலய தை திருவிழா இன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. மாலை 5.30 மணிக்கு சிவகங்கை முன்னாள் மறை மாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் தலைமையில் செபமாலை நிகழ்ச்சியும், தொடர்ந்து 6 மணிக்கு கொடி ஏற்றம் நடக்கிறது. பின்னர் சிறப்பு திருப்பலி நடைபெறும்.

    விழா நாட்களில் தினமும் காலை 6 மணி மற்றும் மாலை 6 மணிக்கு திருப்பலி மற்றும் நற்கருணை ஆசிர் நடக்கிறது. 6-ந்தேதி காலை 6 மணிக்கு திருப்பலியும், மாலை 6 மணிக்கு தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் திருப்பலி மற்றும் தேர்பவனியும் நடக்கிறது.

    7-ந்தேதி பாளையங்கோட்டை மறைமாவட்ட பொருளாளர் அந்தோணிசாமி, பாளையங்கோட்டை பங்குத்தந்தை சந்தியாகு, மறை மாவட்ட செயலாக முதல்வர் ஞானபிரகாசம் ஆகியோர் தலைமையில் அதிகாலை 4.30 மணி, 6 மணி, 7.30 மணிக்கு திருவிழா திருப்பலியும், பகல் 11.45 மணிக்கு திருவிழா கூட்டுத் திருப்பலி நடக்கிறது.

    திருவிழாவில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். திருவிழாவின் போது தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    • இந்த விழா பிப். 5-ந்தேதி வரை 13 நாட்கள் விழா நடக்கிறது.
    • திருவிழா நாட்களில் தினசரி திருப்பலி, திவ்ய நற்கருணை ஆசீர் நடக்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் திசையன்விளை அருகே உள்ள உவரி புனித அந்தோணியார் ஆலயமும் ஒன்றாகும். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக நடைபெறும். அதுபோல் இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று இரவு கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    பாளையங்கோட்டை மறைமாவட்ட முன்னாள் ஆயர் ஜூடுபால்ராஜ் தலைமை தாங்கி, கொடியேற்றி வைத்து மறையுரையாற்றினார். தொடர்ந்து வருகிற 5-ந்தேதி வரை 13 நாட்கள் விழா நடக்கிறது. திருவிழா நாட்களில் தினசரி காலை திருயாத்திரை திருப்பலி, மறையுரை, மாலையில் ஜெபமாலை, மறையுரை, திவ்ய நற்கருணை ஆசீர் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    வருகிற 4-ந் தேதி (சனிக்கிழமை) திருவிழா மாலை ஆராதனையையும், மறுநாள் காலை திருவிழா கூட்டு திருப்பலியையும் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார்.

    நேற்று இரவு நடந்த கொடியேற்று விழாவில் உவரி பஞ்சாயத்து தலைவர் தேம்பாவணிபவர் சிங், ராதாபுரம் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அந்தோணி அமலராஜா, ராதாபுரம் ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், ராதாபுரம் யூனியன் முன்னாள் துணைத்தலைவர் லெரின்ஸ், ஒன்றிய கவுன்சிலர் ராஜன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை தோமினிக் அருள்வளன் மற்றும் ஊர்மக்கள் செய்துள்ளனர்.

    • திருவிழா பிப்ரவரி 5-ந்தேதி வரை நடக்கிறது.
    • பிப்ரவரி 4-ந்தேதி புனிதரின் திருவுருவ சப்பரப்பவனி நடக்கிறது

    ஈத்தாமொழி அருகே உள்ள பொழிக்கரை புனித அந்தோணியார் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று காலை 6.15 மணிக்கு திருப்பலி, மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம் மற்றும் திருப்பலி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கன்னியாகுமரி வட்டார முதன்மை அருட்பணியாளர் எஸ்.பி. ஜான்சன் தலைமை தாங்கினார். மறவன்குடியிருப்பு பங்குத்தந்தை எம். ஜோசப் அருள் ஸ்டாலின் மறையுரையாற்றினார். இதில் பங்கு மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். திருவிழா அடுத்த மாதம் (பிப்ரவரி) 5-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் திருப்பலி, ஜெபமாலை, மறையுரை போன்றவை நடைபெறும்.

    வருகிற 3-ந் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் திருப்பலிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரையாற்றுகிறார்.

    4-ந் தேதி இரவு 9 மணிக்கு புனிதரின் திருவுருவ சப்பரப்பவனி நடக்கிறது. விழாவின் இறுதி நாளான 5-ந் தேதி அதிகாலை 5.45 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட முதன்மை அருட்பணியாளர் ஹிலாரியுஸ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. காலை 8 மணிக்கு நடைபெறும் திருவிழா திருப்பலியில் முட்டம் வட்டார முதன்மை அருட்பணியாளர் டி. ஜான் ரூபஸ் தலைமை தாங்குகிறார். அருட்பணியாளர் தனிஸ்லாஸ் மறையாற்றுகிறார்.

    11 மணிக்கு புனிதரின் தேர் பவனி, மாலை 6 மணிக்கு நற்கருணை ஆசீர், கொடி இறக்கம் போன்றவை நடைபெறும். நிகழ்ச்சிக்கு பள்ளவிளை பங்குத்தந்தை எல்.பெஞ்சமின் தலைமை தாங்குகிறார். இரவு 9 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஞானசேகரன், பங்கு பேரவை துணைத் தலைவர் எம். சேவியர் மனோகரன், செயலாளர் ஜான் போஸ்கோ, பொருளாளர் சூசை, பங்கு பேரவை உறுப்பினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து செய்துள்ளனர்.

    ×