search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "SRH"

    ஐபிஎல் 2019 சீசனில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரை தக்கவைத்துள்ளது. சகாவை விடுவித்துள்ளது. #IPL2019
    ஐபிஎல் 2019 சீசனுக்கு 8 அணிகளும் தயாராகி வருகின்றன. அடுத்த மாதம் 18-ந்தேதி வீரர்கள் ஏலம் நடைபெறுகிறது. அதற்கு முன் வீரர்களை மாற்றுவது, விடுவிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டு வந்தன. இதற்கான காலக்கெடு நேற்றுடன் முடிவடைந்தது.

    நேற்றைய கடைசி நாள் அன்று சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விக்கெட் கீப்பர் சகா, இங்கிலாந்து தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோடான், வெஸ்ட் இண்டீஸ் 20 கேப்டன் கார்லோஸ் பிராத்வைட் ஆகியோரை விடுவித்துள்ளது.



    அதேநேரத்தில் ஓராண்டு தடையால் கடந்த சீசனில் விளையாடாத ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னரை தக்கவைத்துள்ளது. சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி தக்கவைத்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. பாசில் தம்பி, 2. புவனேஸ்வர் குமார், 3. தீபக் ஹூடா, 4. மணிஷ் பாண்டே, 5. டி நடராஜன், 6. ரிக்கி புய், 7. சந்தீப் ஷர்மா, 8. சித்தார்த் கவுல், 9. கோஸ்வாமி (விக்கெட் கீப்பர்), 10. கலீல் அஹமது. 11. யூசுப் பதான், 12. பில்லி ஸ்டேன்லேக், 13. டேவிட் வார்னர், 14. கேன் வில்லியம்சன், 15. முகமது நபி, 16. ரஷித் கான், 17. முகமது நபி, 18. ஷாகிப் அல் ஹசன்.

    விடுவிக்கப்பட்ட வீரர்கள் விவரம்:-

    1. சச்சின் பேபி, 2. டான்மே அகர்வால், 3. விருத்திமன் சகா, 4. கிறிஸ் ஜோர்டான், 5. சகா, 6. கார்லோஸ் பிராத்வைட், 7. அலெக்ஸ் ஹேல்ஸ், 8. பிபுல் ஷர்மா, 9. மெஹிதி ஹசன்.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடி வரும் ஷிகர் தவான் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு மாற உள்ளார். அவருக்கு மூன்று வீரர்களை விடுவிக்கிறது. #IPL2019
    ஐபிஎல் 2019 சீசனுக்கான ஆயத்த பணிகளை அணிகள் மேற்கொண்டு வருகிறது. வீரர்களை டிரான்ஸ்பர் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகிறது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இடம்பிடித்திருந்த விக்கெட் கீப்பர் குயிண்டான் டி காக் மும்பை அணிக்கு செல்ல இருக்கிறார். மந்தீப் சிங் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு செல்ல இருக்கிறார்.

    இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக 2013-ல் இருந்து விளையாடி வந்த ஷிகர் தவான் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு செல்கிறார். இதற்காக டெல்லி டேர்டெவில்ஸ் அணி விஜய் ஷங்கர், அபிஷேக் ஷர்மா, ஷபாஸ் நதீம் ஆகியோரை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு கொடுக்கிறது.



    தவானை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 5.2 கோடி ரூபாய்க்கு வாங்கியிருந்தது. அதேவேளையில் டெல்லி டேர்டெவில்ஸ் விஜய் ஷங்கர், நதீம் ஆகியோரை தலா 3.2 கோடி ரூபாய்க்கும், அபிஷேக்கை 50 லட்சம் ரூபாய்க்கும் வாங்கியிருந்தது.
    ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் இன்று மோதுகின்றனர்.#IPL2018 #CSKvSRH #CSK #SRH

    மும்பை:

    11-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.

    இதில் டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ்- வில்லியம்சன் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

    ஐ.பி.எல். கோப்பை யாருக்கு?

    இரு அணிகளும் சமபலம் பொருந்தியவை என்பதால் ஐ.பி.எல். கோப்பையை வெல்லப்போவது யார் என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை சூப்பர் கிங்ஸ் 3-வது முறையாக ஐ.பி.எல். கோப்பையை வெல்லும் ஆர்வத்துடனும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2-வது தடவையாக கோப்பையை வெல்லும் ஆர்வத்துடனும் உள்ளன. சென்னை அணி 2010, 2011-ம் ஆண்டுகளிலும் , ஐதராபாத் 2016-ம் ஆண்டும் சாம்பியன் பட்டம் பெற்று இருந்தன.

    சென்னை அணியின் பேட்டிங்கும், ஐதராபாத் அணியின் பந்துவீச்சுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும். சென்னை அணியின் பலமே பேட்டிங் தான். கேப்டன் டோனி, அம்பதி ராயுடு, வாட்சன், ரெய்னா ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    ரஷீத்கான், சித்தார்த் கவூல், புவனேஷ்வர்குமார் ஆகியோர் ஐதராபாத் அணியின் பந்துவீச்சில் முத்திரை பதிக்க கூடிய வர்கள்.

    சென்னை அணியில் பந்துவீச்சில் தென் ஆப்பிரிக்கா வேகப்பந்து வீரர் நிகிடி மிகவும் நல்ல நிலையில் உள்ளார். தீபக் சாஹர், ‌ஷர்துல் தாகூர் ஆகியோரும் சிறப்பாக வீசக்கூடியவர்கள். ஐதராபாத் அணியின் பேட்டிங்கில் கேப்டன் வில்லியம்சன், தவான், மனீஷ்பாண்டே, யூசுப்பதான் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.


    இரு அணியிலும் விளையாடலாம் என்று எதிர்பார்க்கப்படும் 11 வீரர்கள் விவரம்:-

    சென்னை சூப்பர் கிங்ஸ்: டோனி (கேப்டன்), வாட்சன், டுபெலிசிஸ், ரெய்னா, அம்பதி ராயுடு, பிராவோ, ஜடேஜா, தீபக் சாஹர், ஹர்பஜன் சிங் அல்லது கரண் சர்மா, ‌ஷர்துல் தாகூர், நிகிடி.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத்: கேன் வில்லியம்சன் (கேப்டன்), விர்த்திமான் சஹா, ஷிகர் தவான், சகீப்-அல்-ஹசன், தீபக் ஹூடா, யூசுப் பதான், பிரத்வெயிட், ரஷித் கான், புவனேஷ்வர் குமார், சித்தார்த் கவூல், சந்தீப் சர்மா அல்லது கலீல் அகமது அல்லது பாசில் தம்பி.

    ஆடுகளத்திற்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்வதில் எங்கள் பந்து வீச்சாளர்கள் மற்றவர்களை விட சிறந்தவர்கள் என டாம் மூடி கூறியுள்ளார். #IPL2018 #SRH
    ஐபிஎல் 11-வது சீசனில் கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை அந்த அணி விளையாடியுள்ள 12 போட்டிகளில் 9-ல் வெற்றி பெற்று முதல் இடத்தில் இருக்கிறது. ஐதராபாத், புனே போன்ற கடினமான ஆடுகளத்திலும், வான்கடே, சின்னசாமி போன்ற பேட்டிங் ஆடுகளத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

    சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை விரைவாக மாற்றிக் கொண்டு பந்து வீச்சில் அசத்துகிறார்கள். ஆடுகளத்திற்கு ஏற்ப விரைவாக தங்களை மாற்றிக் கொள்வதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர் சிறந்தவர்கள் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் டாம் மூடி கூறியுள்ளார்.



    இதுகுறித்து டாம் மூடி கூறுகையில் ‘‘நீங்கள் அனைத்து அணியின் பந்து வீச்சாளர்களை ஒப்பிட்டு பார்த்தீர்கள் என்றால், எங்களுடைய பந்து வீச்சாளர்கள் மற்றவர்களை விட ஆடுகளத்திற்கு ஏற்றபடி அதிக அளவில் மாறியிருப்பார்கள். சின்ன மைதானம் என்றால் கூட சூழ்நிலையை தங்களுக்க சாதகமாக்கி 140 முதல் 150 டார்கெட்டிற்குள் எதிரணியை மடக்கி விடுவார்கள்.

    எங்களுடைய பந்து வீச்சாளர்கள் தொடர்ந்து சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி வருகிறார்கள். நாங்கள் வலுவான பந்து வீச்சு யுனிட்டை கட்டமைத்துள்ளோம்’’ என்றார்.
    ஐபிஎல் போட்டிகள் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற மும்பை - ராஜஸ்தான் - கொல்கத்தா அணிகளிடையே கடும் போட்டி நிலவுகிறது. #IPL2018 #MIvRR #CSKvSRH
    மும்பை:

    ஐபிஎல் தொடரின் லீக் ஆட்டங்கள் இறுதி கட்டத்தை எட்டிவிட்டன. ஐதராபாத் அணி பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், பஞ்சாப் மற்றும் சென்னை அணி பிளேஆப் சுற்றை உறுதி செய்துள்ளன. டெல்லி, பெங்களூர் அணிகள் லீக் சுற்றுடன் வெளியேற உள்ளன.

    மும்பை, கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கிடையே பிளேஆப் சுற்றுக்கு செல்வது யார் என்பது? முடிவு செய்ய முடியாத ஒன்றாகவே உள்ளது. அடியில் கிடந்த மும்பை அணி எதிர்பாராத விதமாக அடுத்தடுத்து வெற்றி பெற்று ஆச்சரியப்படுத்தியுள்ளது.



    கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளும் பிளேஆப் சுற்றுக்குள் நுழைவதில் தீவிரமாக உள்ளது. இந்நிலையில், மும்பை - ராஜஸ்தான் அணிகள் இன்று 8 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளது. இரு அணிகளும் 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்றுள்ளன. ரன்ரேட்டில் சிறப்பாக இருப்பதால் மும்பை 5-வது இடத்திலும், ராஜஸ்தான் 6-வது இடத்திலும் உள்ளன.

    பிளேஆப் வாய்ப்பில் நீடிக்க இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி இருக்கிறது. வெற்றி பெறும் அணி தொடர்ந்து வாய்ப்பில் நீடிக்கும். தோற்கும் அணிக்கு வாய்ப்பு குறையும். இதனால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். ஏற்கனவே மோதிய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெற்றி பெற்று இருந்தது.

    4 மணிக்கு புனேவில் நடக்கும் மற்றொரு போட்டியில் சென்னை - ஐதராபாத் அணிகள் மோத உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் 7 வெற்றி, 4 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    ‘பிளே ஆப்’ சுற்று வாய்ப்பை பெற எஞ்சிய 3 ஆட்டத்தில் ஒன்றில் வெல்ல வேண்டும். ஐதராபாத் அணி பலம் பொருந்தியதாக இருப்பதால் அந்த அணியை வீழ்த்துவது சவாலானது. தொடர்ச்சியாக 6 வெற்றிகளை பெற்று வலுவானதாக திகழும் அந்த அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் தடுத்து நிறுத்துமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.



    ஐதராபாத்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி இருந்ததால் 8-வது வெற்றியை பெற்று பிளேஆப் சுற்றுக்குள் நுழையும் நம்பிக்கையுடன் இருக்கிறது. சென்னை அணியின் பேட்டிங் பலமாக உள்ளது. ஆனால் பந்து வீச்சுத்தான் கவலை அளிக்கும் வகையில் இருக்கிறது.

    பேட்டிங்கில் கேப்டன் டோனி, அம்பதி ராயுடு, வாட்சன், ரெய்னா ஆகியோர் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளனர். பந்துவீச்சு அபாரமாக அமைந்தால் தான் ஐதராபாத்தை வீழ்த்த இயலும். கடந்த ஆட்டத்தில் ஏற்பட்ட தோல்வியால் பவுலர்கள் மீது டோனி அதிருப்தி அடைந்தனர். இதனால் இன்றைய போட்டிக்கான அணியில் மாற்றம் இருக்கும்.

    சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 9 வெற்றி, 2 தோல்வி யுடன் 18 புள்ளிகள் பெற்று ஏற்கனவே ‘பிளேஆப்’ சுற்றுக்கு முன்னேறி விட்டது. தொடர் வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் ஆர்வத்துடனும் பதிலடி கொடுக்கும் வேட்கையுடனும் அந்த அணி உள்ளது.

    பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் ஐதராபாத் அணி திகழ்கிறது கேப்டன் வில்லியம்சன், தவான், யூசுப்பதான், மனிஷ் பாண்டே ஆகியோர் பேட்டிங்கிலும், ரஷித்கான், புவனேஸ்வர் குமார், சித்தார்த், கவுல் ஆகியோர் பந்துவீச்சிலும் நல்ல
    நிலையில் உள்ளனர். சகீப் அல்-ஹசன் ஆல் ரவுண்டரில் முத்திரை பதித்து வருகிறார்கள்.

    இரு அணிகளும் 7 ஆட்டத்தில் மோதியுள்ளன. இதில் சென்னை -5ல், ஐதராபாத்-2ல் வெற்றி பெற்றுள்ளன.
    சன்ரைசர்ஸ் ஐதராபாத் வீரர்கள் ரோட்டின் விளையாடவில்லை. கடினமான ஆடுகளத்தில் விளையாடுகிறார்கள் என டாம் மூடி குறிப்பிட்டுள்ளார். #IPL2018 #SRH
    ஐபிஎல் 2018 சீசனில் யாரும் எதிர்பார்க்காத வகையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 10 ஆட்டத்தில பங்கேற்று 8-ல் வெற்றி வகை சூடியுள்ளது.

    சொந்த மைதானமான ஐதராபாத் ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் ஜொலித்து வருகிறது. இங்கு 6 போட்டிகளில் விளையாடி ஐந்தில் வெற்றி பெற்றுள்ளது. இந்த ஐந்து போட்டிகளிலும் அதிரடியாக விளையாடி பெரிய ஸ்கோர் ஏதும் எடுக்கவில்லை. 150 முதல் 160 ரன்களுக்குள் எடுத்து எதிரணியை சிறப்பாக மடக்கி வெற்றி பெற்றுள்ளது. அல்லது எதிரணியை 150-க்குள் மடக்கி சேஸிங் செய்துள்ளது.

    மும்பை வான்கடே மைதானத்தில் 118 ரன்னில சுருண்டது. ஆனால், மும்பையை 87 ரன்னுக்குள் சுருட்டி 31 ரன்னில் அசத்தல் வெற்றி பெற்றது. அந்த அணி குறைவான ஸ்கோர்தான் அடிக்கிறது. பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடுவதில்லை என்ற விமர்சன் வந்து கொண்டுதான் இருக்கிறது.



    இந்த விமர்சனத்திற்க அந்த அணியின் தலைமை பயிற்சியாளரான டாம் மூடி தக்க பதிலடி கொடுத்துள்ளார். ‘‘நாங்கள் ரோட்டின் மீது விளையாடவில்லை. கடுமையான ஆடுகளத்தில் விளையாடுகிறோம். மோசமானதாக கருதப்படும் 20 முதல் 30 ரன்கள் மதிக்கத்தக்க ஸ்கோர்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

    சென்னைக்கு எதிராக 183 ரன்னை சேஸிங் செய்யும்போது 178 ரன்கள் எடுத்து 4 ரன்னில் தோல்வியை சந்தித்தது. கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கெதிராக 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி 178 ரன்கள் சேர்த்து 15 ரன்னில் தோற்றது. சேஸிங்கில்தான் இரண்டு தோல்விகளையும் சந்தித்துள்ளது.
    ×