search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sports competition"

    • இன்று நடக்கிறது
    • பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொள்ள கலெக்டர் வலியுறுத்தல்

    திருப்பத்தூர்:

    தமிழ்நாடு விளையாட்டு மேம் பாட்டு ஆணையம், திருப்பத்தூர் மாவட்ட விளையாட்டு பிரிவில், தேசிய விளையாட்டு தினத்தினை சிறப்பாக கொண்டாடிடும் பொருட்டு, இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் 19 வயதிற்குட்பட்டவர்கள், 25 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 45 வயதிற்குட்பட்டவர்கள் என 3 பிரிவுகளாக ஆண்கள் மற்றும் மகளிருக்கு தனித்தனியாக விளையாட்டுப் போட்டிகள் ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டரங்கில் நடத்தப்பட உள்ளது.

    19 மற்றும் 25 வயதிற்குட்பட்ட ஆண்கள் மற்றும் மகளிருக்கு வாலிபால் மற்றும் 100 மீட்டர் ஓட்டம், 45 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கு 100 மீட்டர் ஓட்டம், மகளிருக்கு 50 மீட்டர் ஓட்டம் ஆகிய விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.

    பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் அதிக அளவில் கலந்து கொண்டு தேசிய விளையாட்டு தினத்தை சிறப்பிக்குமாறு கலெக்டர் பாஸ்கரபாண்டியன் கேட்டுக்கொண்டுள்ளார்.

    • 100 மீட்டர் ஓட்டம்.45 வயதுக்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் 100 மீட்டர் ஓட்டம்.
    • காலை 8 மணிக்கு கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் ஆஜராகி போட்டிகளில் கலந்துகொள்ளலாம்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அருண் தம்புராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது - சர்வதேச அளவில் இந்திய தேசத்திற்கு பெருமை சேர்த்த இந்திய ஹாக்கி ஒலிம்பியன் மேஜர் தயான்சந் தை கவுரவிக்கும் வகையில், அவரின் பிறந்தநாளினை நினைவு கூறும் வகையில் இந்த ஆண்டு 29 -ந்தேதி தேசிய விளையாட்டு தினமாக கொண்டாடப்படுவதால், அதனை நினைவு கூறும் வகையில் கீழ்கண்டவாறு விளையாட்டுப் போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெறும்.

    இதில் 19 வயதுக்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் ஹாக்கி மற்றும் 100 மீட்டர் ஓட்டம்.25 வயதுக்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர்கூடைப்பந்து மற்றும் 100 மீட்டர் ஓட்டம்.45 வயதுக்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் 100 மீட்டர் ஓட்டம். போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் குழு விளையாட்டிற்கு ஒரு குழுவாகவும், தனிநபர் போட்டிக்கு தனியாகவும் தங்களது நுழைவு விண்ணப்பத்தினை 28 -ந்தேதி பிற்பகல் 5 மணிக்குள் கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலருக்கு அனுப்பிவைத்து, போட்டி நடைபெறும் அன்று காலை 8 மணிக்கு கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் ஆஜராகி போட்டிகளில் கலந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 9 மற்றும் 10-ந் தேதி நடைபெறும் மண்டல அளவிலான போட்டி நடக்கிறது
    • இறுதி கட்ட போட்டித் தேர்வு 23-ந் தேதி நடைபெறுகிறது

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டையில் உள்ள சிறு விளையாட்டு அரங்கில் தென்னிந்திய அளவிலான மாபெரும் கிராமிய விளையாட்டு திருவிழா ஈஷா புத்துணர்வு கோப்பை முதல் கட்ட போட்டிகள் நேற்று நடைபெற்றது.

    இதில் மாவட்ட முழுவதும் உள்ள கிராமப்புற இளைஞர்களுக்கு முதல் கட்ட கைப்பந்து போட்டி நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆண்களுக்கான கைப்பந்து போட்டி அணியினர் போட்டியில் பங்கேற்றனர்.

    இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்கள் வரும் செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10-ந் தேதி நடைபெறும் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி உடையவர்கள்.

    மேலும் மண்டல அளவிலான போட்டியில் பங்கேற்று வெற்றி பெறுபவர்களுக்கு இறுதி கட்ட போட்டித் தேர்வு கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் ஆதியோகி முன்பு சத்குருவும் விருந்தினர்கள் முன்னிலையில் செப்டம்பர் 23-ந் தேதி நடைபெற உள்ளது.

    • வாடிப்பட்டியில் மரபு வழி விளையாட்டு போட்டிகள் மீண்டும் புத்துயிர் பெற்றுள்ளது.
    • சுதந்திர தினவிழாவையொட்டி தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு சார்பில் பல்வேறு போட்டிகள் நடந்தன.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே தெத்தூர் மேட்டுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தினவிழாவையொட்டி தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு சார்பில் காலம் மாற்றத்தால் மறக்கப் பட்டு வரும் மரபு வழி விளையாட்டுகள் அறிமுக விழாவும் மற்றும் மரபு விளையாட்டு போட்டிகள் நடந்தது. இந்த போட்டியில் மாணவர்களுக்கு பச்சை குதிரை, 7-கல், கிட்டிப்புல் போன்ற விளை யாட்டுகளும், மாணவிகளுக்கு பாண்டியாட்டம் (நொண்டி), கிச்சுகிச்சு தாம்பூலம் மற்றும் பல்லாங்குழி ஆகிய விளை யாட்டு போட்டிகளும் நடத்தப் பட்டது. இந்த விளையாட்டு போட்டிக்கு தலைமையாசிரியர் சந்திரன் தலைமை தாங்கி னார். ஊராட்சி மன்றத்தலைவர் கூடம்மாள் பழனிச்சாமி, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் ரெங்கநாயகி, பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் பரம சிவம், உணவுப்பொருள் பாது காப்பு அலுவலர் ஈஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழாசிரியர் ஆறுமுகம் வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்மரபு அறக்கட்டளை மதுரை கிளை பொறுப்பாளர் சுலேகா பானு தமிழ் மரபு அறக்கட்டளை அறிமுகவுரையாற்றினார். மரபு விளையாட்டுகள் குறித்து மதுரை டோக் பெருமாட்டி கல்லூரி பேராசிரியை பாப்பா விளக்கி பேசினார்.

    இப்போட்டியின் நடுவர்க ளாக ஆசிரியர்கள் மற்றும் தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் வெற்றியாளர் களை தேர்வு செய்தனர்.இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் தமிழ் மரபு அறக்கட்டளை உறுப்பினர்கள் சரவணக்குமார், மோசஸ், நஜ்மூதீன், பேராசிரியை.இறைவாணி, முத்துக்குமார், தாமரைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உடற்கல்வி ஆசிரியர் ராஜன் நன்றி கூறினார்.

    • 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெறயுள்ளது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள அரசு மாதிரி மேல் நிலை பள்ளி வளாகத்தில் வட்ட அளவிலான செஸ், கேரம், வாலிபால், இறகு பந்து போட்டி, கபாடி போட்டி, டென்னிஸ், கிரிக்கெட் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்ட போட்டிகள் நடைபெறயுள்ளது.

    இதில் அரசு பள்ளி, அரசு நிதியுதவி பெறும் பள்ளி தனியார் பள்ளிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட பள்ளிகள் பங்கேற்கின்றனர்.

    இப்போட்டி வருகிற செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வரை தொடர்ந்து நடைபெறுகிறது.

    நேற்று நடைபெற்ற தொடக்க விழாவில் ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் காவியா விக்டர் தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி ஆய்வாளர் குணசுந்தரி பள்ளி மாணவ, மாணவி களுக்கு இடையே நடைபெறும் செஸ் போட்டியை தொடங்கி வைத்தார்.

    பள்ளி தலைமை ஆசிரியர் ஐ.ஆஜம் அனைவரையும் வரவேற்றார். பெற்றோர் ஆசிரியர் சங்கம் தலைவர் சி.எஸ்.பெரியார்தாசன், தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழக துணை தலைவர் ம.அன்பழகன், நகர மன்ற துணை தலைவர் இந்திராபெரியார்தாசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விளையாட்டு போட்டியில் நகர மன்ற கவுன்சிலர் புன்னகை கமலசேகரன், பெற்றோர் ஆசிரியர் சங்கம் துணை தலைவர் முகிலன், சங்க இணை செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் சண்முகம், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் பொன்னேரி அரசு மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மதன் குமார் நன்றி கூறினார்.

    • விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கும் விழா சாம்பவர்வடகரை இந்து நாடார் உறவின்முறை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரகட்டு லூர்து நாடார் தலைமை தாங்கினார்.

    சாம்பவர் வடகரை:

    தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் சார்பில் பெருந்தலைவர் காமராஜர் 121-வது பிறந்தநாள் விழா, பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசளிப்பு விழா, விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கும் விழா சாம்பவர்வடகரை இந்து நாடார் உறவின்முறை திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    சாம்பவர்வடகரை இந்து நாடார் உறவின்முறை கமிட்டி நிர்வாகிகள் தலைமை தாங்கினார். தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் தலைவர் அகரகட்டு லூர்து நாடார் தலைமை தாங்கினார். சுப்ரமணியன், ஹரிஹர செல்வன், பந்தல் சேர்மன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொதுச்செயலாளர் ஆனந்த் காசிராஜன் வரவேற்று பேசினார்.

    நிகழ்ச்சியில் மதுரை தமிழ் இலக்கிய மன்ற தலைவர் அவனி மாடசாமி சிறப்புரை ஆற்றினார். தட்சணமாற நாடார் சங்க தலைவர் ஆர்.கே. காளிதாசன் நாடார், வேலன் காபி காமராஜ், ஜெயச்சந்திரன், திருமலைசாமி, சேவியர் ராஜன், அம்மையப்பன் மற்றும் தேவைப்பட்டணம், ராயகிரி, கொட்டாக்குளம், குத்துக்கல்வலசை, பால மார்த்தாண்டபுரம், அய்யாபுரம், சுரண்டை, சிவகிரி, தெற்குசத்திரம், கடையநல்லூர், விந்தங்கோட்டை ஆகிய நாடார் உறவின்முறைகள் நிர்வாகிகள் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    முடிவில் தமிழ்நாடு நாடார் உறவின் உறவினர்கள் கூட்டமைப்பின் தலைவர் லூர்து நாடார் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் முருகேசன், மோகன், மாரியப்பன், பரமசிவன், விஜயன் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • பங்கேற்க 650 பேர் சென்னை பயணம்
    • கலெக்டர் வழியனுப்பி வைத்தார்

    ராணிப்பேட்டை:

    மாணவிகள், பொதுமக்கள் ஜூன்.30- மற்றும் மாற்றுத்திறனாளிகள் என 12,943 பேர் கலந்து 2,079 பேர் வெற்றி பெற்றனர். இதில் மாவட்ட அளவில் பள்ளி, கல்லூரி மாணவ- சென்னையில் இன்று ராணிப்பேட்டைமாவட்டத் தில் கடந்த 15.2.2023 முதல் கொண்டனர். அவர்களில் 3.3.2023 வரை முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளை யாட்டு போட்டிகள் நடை பெற்றது. இப்போட்டிகளில் தேர்வு செய்யப்பட்ட 650 பேர் வெள்ளிகிழமை முதல் 14-ந் தேதி வரை நடைபெறும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளார்கள்.

    அவர்களை ராணிப் பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி வாழ்த்தி, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து பஸ் மூலம் கொடியசைத்து வழியனுப்பி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு மற் றும் இளைஞர் நல அலுவலர் ஞானசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • வெற்றி பெற்ற 2.79 ஆயிரம் பேருக்கு பரிசு, சான்றிதழ்
    • அமைச்சர் ஆர்.காந்தி வழங்கினார்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மாவட்டத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதல் அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பள்ளி, கல்லூரி மாணவ,மாணவிகள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் என 5 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி கலந்து கொண்டு, போட்டிகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த 2 ஆயிரத்து 79 வீரர் வீராங்கனைகளுக்கு பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் ஆற்காடு ஜெ.எல்.ஈஸ்வரப்பன்.எம்.எல்.ஏ, மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் ஜெயந்தி திருமூர்த்தி, ஒன்றிய குழு தலைவர் வெங்கட்ரமணன், நகரமன்றத் தலைவர்கள் சுஜாதா வினோத்.தேவி பென்ஸ் பாண்டியன், முகமது அமீன், துணைத் தலைவர் ரமேஷ் கர்ணா, ஒன்றிய குழு துணை தலைவர் ராதாகிருஷ்ணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஞானசேகரன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முடிவில் உடற்கல்வி ஆசிரியர் பாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    • 5 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது.
    • 13 விளையாட்டு போட்டிகள் ஆண்கள், பெண்களுக்கு நடத்தப்பட்டன.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை தாங்கினார். திருப்பூர் சுப்பராயன் எம்.பி., தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ., மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். பொதுப்பிரிவு, மாற்றுத்திறனாளிகள், அரசு ஊழியர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் என 5 பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றது. தடகளம், குழு விளையாட்டு போட்டிகளான கபடி, சிலம்பம், இறகுபந்து, கையுந்துபந்து, கூடைப்பந்து, ஆக்கி, மேஜைப்பந்து, நீச்சல் என 13 விளையாட்டு போட்டிகள் ஆண்கள், பெண்களுக்கு நடத்தப்பட்டன.

    இந்த போட்டிகளில் மொத்தம் ஆண்கள் 10 ஆயிரத்து 359 பேரும், பெண்கள் 4 ஆயிரத்து 596 பேரும் என மொத்தம் 14 ஆயிரத்து 955 பேர் பங்கேற்றனர். முதல்பரிசாக ரூ.3 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.2 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.1,000 வழங்கப்பட்டது. மாவட்டத்தில் ரூ.34 லட்சத்து ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. மொத்தம் 1,675 பேருக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது. தேர்வு செய்யப்பட்டவர்கள், மாநில அளவிலான போட்டிக்கு அழைத்து செல்லப்பட உள்ளனர்.

    விழாவில் துணை மேயர் பாலசுப்பிரமணியம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லட்சுமணன், கோவை மண்டல முதுநிலை மேலாளர் சுஜாதா, மாவட்ட விளையாட்டு அதிகாரி ராகோபால், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.

    • பொதுப் பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியா்கள் என மொத்தம் 5 பிரிவுகளாக நடைபெற்றன.
    • பரிசளிப்பு விழா திருப்பூா் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 10 -ந் தேதி மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது.

    திருப்பூர்:

    திருப்பூா் மாவட்டத்தில் நடைபெற்ற முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற வீரா், வீராங்கனைகளுக்கான பரிசளிப்பு விழா ஜூன் 10-ந் தேதி நடைபெறுகிறது.

    இதுகுறித்து திருப்பூா் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் முதல்வா் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் பொதுப் பிரிவு, பள்ளி, கல்லூரி, மாற்றுத் திறனாளிகள், அரசு ஊழியா்கள் என மொத்தம் 5 பிரிவுகளாக நடைபெற்றன. இதில், தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் கபடி, சிலம்பம், இறகுப்பந்து, வாலிபால், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, மேசைப்பந்து மற்றும் நீச்சல் என 25 வயதுக்கு உள்பட்ட ஆண்கள், பெண்கள் என இருபாலருக்கும் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டன.

    இதில் முதல் இடம் பிடித்தவா்களுக்கு தலா ரூ.3 ஆயிரம், இரண்டாம் இடம் பிடித்தவா்களுக்கு ரூ.2 ஆயிரம், மூன்றாம் இடம் பிடித்தவா்களுக்கு ரூ.1000 என மொத்தம் 1,675 வீரா், வீராங்கனைகள் வெற்றி பெற்றுள்ளனா். இதில், வெற்றி பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா திருப்பூா் ஜெய்வாபாய் மாநகராட்சிப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜூன் 10 -ந் தேதி மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது.

    இந்த பரிசளிப்பு விழாவில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், திருப்பூா் தெற்கு சட்டப் பேரவை உறுப்பினா் க.செல்வராஜ், மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் வக்கீல் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.
    • மாவட்டம் முழுவதும் உள்ள 32 அணிகள் பங்கேற்கின்றன.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி, கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் தொடங்கியது. இதன் தொடக்கவிழா நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவர் வக்கீல் பாஸ்கரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

    கடலூர் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியை தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, சிதம்பரம், உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் உள்ள 32 அணிகள் பங்கேற்கின்றன. மேலும் இந்த போட்டிகள் அனைத்தும் நாக்-அவுட் முறையில் நடத்தப்படுகிறது. இறுதி போட்டி வருகிற 4-ம் தேதி நடைபெறுகிறது. போட்டிகளுக்கான ஏற்பாடுகளை கடலூர் மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் கூத்தரசன் செய்திருந்தார்.

    • தமிழ்நாடு ஊர்க்காவல் படை சார்பில் ஊர்க்காவல் படை விளையாட்டு போட்டிகள் நடந்தது.
    • இந்த போட்டிகள் ராஜபாளையம் பி.ஏ.சி.எம். மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.

    ராஜபாளையம்

    தமிழ்நாடு ஊர்க்காவல் படை சார்பில் அடுத்த மாதம் திருவண்ணாமலை மாவட்டத்தில் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இதையொட்டி மதுரை சரக அளவிலான விளையாட்டுப் போட்டி மற்றும் பணி திறன் போட்டிகளுக்கான தேர்வு ராஜபாளையம் பி.ஏ.சி.எம். மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மதுரை சரக துணை தளபதி ராம்குமார் ராஜா தலைமை தாங்கினார்.

    இந்த போட்டி தேர்வில் விருதுநகர் மாவட்ட ஊர்க்காவல் படை வட்டாரத் தளபதி அழகர்ராஜா, மதுரை மாவட்ட ஊர் காவல் படை வட்டார தளபதி ஆனந்த் வெங்கடேஷ், மதுரை மாநகர வட்டார தளபதி வெங்கடேஷ், விருதுநகர் மாவட்ட ஊர்க்காவல் படை வட்டார துணை தளபதி அருள் செல்வி, மதுரை மாவட்ட வட்டார துணை தளபதி இந்திராகாந்தி, மதுரை மாநகர வட்டார துணை தளபதி சகாயஜென்சி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விளையாட்டுப் போட்டி தேர்வை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகளும், பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடந்தது.

    ×