search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Spiritual land"

    • மு.க.ஸ்டாலின் மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி பற்றி பேசியிருக்கிறார்.
    • கொள்ளையடிப்பதற்காகவே கூட்டாட்சி கொள்கை.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகரில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு வந்தது. நேற்றிரவு மாநகரம் முழுவதும் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டது. அதற்கு முன்னதாக ஆலங்காடு பகுதியில் விநாயகர் சதுர்த்தி மக்கள் எழுச்சி விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    இதில் பா.ஜ.க., மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் . அப்போது அவர் பேசியதாவது:- கேரளாவில் நடைபெற்ற தென்னிந்திய முதலமைச்சர்கள் மாநாட்டில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி பற்றி பேசியிருக்கிறார். 2004 - 2014 மத்தியில் கூட்டாட்சியின் போது இந்தியா பின்னோக்கி சென்றது .கொள்ளையடிப்பதற்காகவே கூட்டாட்சி கொள்கை.

    2014-ம் ஆண்டு முதல் 8 ஆண்டுகளில் பெரும்பான்மையோடு ஒரு கட்சி ஆட்சி செய்ததால் சுயசார்பு பாரதம் சாத்தியமானது.மாநிலத்தின் முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் மற்ற மத நிகழ்வுக்கு முதல்நபராய் வாழ்த்து சொல்லும் முதல்-அமைச்சர் இந்துக்களின் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாமல் மவுனம் காப்பதுதான் மதசார்பா ?. ஆனால் பிரதமர் இஸ்லாமிய பண்டிகை,கிறிஸ்துவ பண்டிகைக்கு என அனைத்து மதத்தினருக்கும் வாழ்த்தை சொல்லுகிறார். ஆனால் அவரைப்பார்த்து ஒரு மதத்திற்காக ஆட்சி செய்வதாக மு.க.ஸ்டாலின் கூறுகிறார்.

    இந்தியாவிலேயே ராமர் கோவிலுக்கு அதிக நிதி கொடுத்த 3 மாநிலங்களில் தமிழகம் உள்ளது . இது ஆன்மீக பூமியாகவே இருக்கிறது.மக்களுக்கான ஆட்சியாக இந்து வாழ்வியல் முறையிலான ஆட்சி தேவைப்படுகிறது . யோகா , ஆயுர்வேதம் , சித்தா என கொண்டு வந்த பிறகு நம் இந்து வாழ்வியல் முறையை முறியடிக்க ஆன்டி இந்து அலையன்ஸ் என்பது அமெரிக்காவில் உருவாக்கப்பட்டு பத்திரிகைகளில் இந்திய அரசுக்கு எதிராக எழுதி வருகின்றனர் .இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சுப்ரமணியம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதன் பிறகு திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சாமளாபுரம் குளத்தில் கரைக்கப்பட்டது.இதையொட்டி திருப்பூர் மாநகரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. 

    ×