search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Speech Contest"

    • பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் இந்த போட்டியில் பங்கேற்று பயன் பெறலாம்.
    • ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் முத்தமிழறிஞர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி வருகிற 28-ந் தேதி காலை 10 மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கூட்ட அரங்கில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடத்தப்பட உள்ளன.

    இந்த போட்டியில் பங்கேற்று வெற்றி பெறும் பள்ளி மாணவர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரம், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் அரசு பள்ளி மாணவர்கள் 2 பேரை தனியாக தேர்வு செய்து ஒவ்வொருவருக்கும் சிறப்பு பரிசு தலா ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகள் இந்த போட்டியில் பங்கேற்று பயன் பெறலாம் என்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • கருணாநிதி பிறந்தநாள் விழா பேச்சுப்போட்டி நடக்கிறது.
    • மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

     மதுரை

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி வருகிற 28-ந் தேதி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சுப்போட்டிகள் நடத்தப்படுகிறது.

    இந்த போட்டிகள் காலை 9 மணிக்கு மதுரை உலகத்தமிழ்ச் சங்க வளாகத்தில் நடக்கிறது. பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நடைபெறும் இந்த பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் மாணவ, மாணவிகள் பங்கேற்கும் வகையில் முதற்கட்டமாக கீழ்நிலையில் பேச்சுப் போட்டி நடத்தி முதன்மைக்கல்வி அலுவலர் மூலம் 25 பள்ளி மாணவ, மாணவிகள் பரிந்துரை செய்யப்பெற்று மதுரை வளர்ச்சித்துறைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.

    போட்டியில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் பள்ளி தலைமை யாசிரியரின் பரிந்துரைக் கடிதத்துடன் வரவேண்டும். போட்டிக்கான தலைப்புகள், மாண வர்களுக்கு முன்னதாகத் தெரிவிக்கப்படமாட்டாது.

    சென்னை தமிழ் வளர்ச்சி இயக்கத்தில் இருந்து முத்திரையிடப்பட்ட உறைகளில் அனுப்பப்படும் தலைப்பு கள், போட்டி யின்போது நடுவர்கள் மற்றும் மாணவர்கள் முன்னி லையில் பிரிக்கப்பட்டு அறிவிக்கப்படும். போட்டி முடிவுகள் அன்றே அறிவிக்க ப்படும்.

    மாவட்ட அளவில் வெற்றிபெறும் மாணவர்க ளுக்கு முதல்பரிசாக ரூ.5,000-மும், 2-ம் பரிசாக ரூ.3,000-மும், 3-ம் பரிசாக ரூ.2,000-மும் வழங்கப்படும்.

    இந்த தகவலை மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

    ×