search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special Trains"

    • ராமநாதபுரம் மாவட்டத்திற்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என்று நவாஸ் கனி எம்.பி. கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • ராமநாதபுரம் மாவட் டத்தை சேர்ந்த மக்கள் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் பணியாற்றி வருகின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் நாடாளு மன்ற உறுப்பினரும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான நவாஸ் கனி தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு விடுத்துள்ள கோரிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    ராமநாதபுரம் மாவட் டத்தை சேர்ந்த மக்கள் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் பணியாற்றி வரு கின்றனர். தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் பண்டிகைக்கு அனைவரும் சொந்த ஊருக்கு வந்து கொண்டாட வேண்டும் என்ற எண்ண த்தில் ஆண்டு தோறும் வந்து செல்கின்றனர்.

    அவர்கள் கூட்ட நெரிசலின்றி எளிதாக வந்து செல்லும் வகையில் சென்னை மற்றும் பெங்களூரில் இருந்து சிறப்பு ரெயில்கள் இயக்கிட தெற்கு ரயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை எழும்பூரில் இருந்து ராமேசுவரம் வரை யிலும், பெங்களூருவில் இருந்து சேலம் வழியாக ராமேசுவரம் வழியிலும் இரு மார்க்கமும் சிறப்பு ரெயில்கள் இயக்கிட உரிய நடவடிக்கை எடுத்திட ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கோரிக்கை விடுத்துள்ளார்.

    • ஆன்லைன் வாயிலாக ஏஜென்சிகள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்திட ஆர்வம் காட்டுகின்றனர்.
    • முன்கூட்டியே ரயிலை நாடி தேடி டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டுவதில்லை.

    உடுமலை :

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொள்ளாச்சி, உடுமலை வழியாக தென் மாவட்டங்கள் மற்றும் தலைநகர் சென்னைக்கு இந்த ஆண்டாவது சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    பொள்ளாச்சியை பிற நகரங்களுடன் இணைக்கும், ரெயில் வழித்தடம் மீட்டர் கேஜில் இருந்து அகல ரெயில் பாதையாக மேம்படுத்தப்பட்டது. ஆனால் மீட்டர் கேஜ் காலத்தில் இயங்கிய ரெயில்கள் குறைக்கப்பட்டு குறைந்த எண்ணிக்கையிலேயே தற்போது ரெயில்கள் இயங்கி வருகின்றன.

    திருவனந்தபுரம்- மதுரை அமிர்தா எக்ஸ்பிரஸ், பாலக்காடு - சென்னை எக்ஸ்பிரஸ், பாலக்காடு - திருச்செந்தூர், கோவை- - பொள்ளாச்சி, கோவை- - மதுரை பயணிகள் ரெயில்கள் மட்டுமே தற்போது இயங்குகின்றன.நிறுத்தப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க மறுப்பதுடன் பண்டிகை காலங்களில் கூட, தென் மாவட்டங்கள் மற்றும் தலைநகர் சென்னைக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே நிர்வாகம் முன்வருவதில்லை.

    கோவை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளில் வசிக்கும் தென் மாவட்ட மக்களும், சென்னையில் வசிக்கும் கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களும் பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு சென்று வர சிறப்பு ரெயில்கள் இயக்க, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தும் எந்த பலனும் இல்லை.

    இந்த ஆண்டாவது வருகிற 11ந் தேதி முதல் 14ந் தேதி வரையும், திரும்பி வருவோர் வசதிக்காக, 18ந் தேதி முதல் 21-ந் தேதி வரையும் பொள்ளாச்சி வழித்தடத்தில், கோவை - ராமேஸ்வரம் மற்றும் கோவை -தாம்பரம் இடையே 2 சிறப்பு ரெயில்களை இயக்க வேண்டும் என ரெயில் பயணியர் நலச்சங்கத்தினர் மட்டுமின்றி, அனைத்து தரப்பினரும் வலியுறுத்தி உள்ளனர். 

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் சொந்த ஊர் செல்ல வசதியாக சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.அதன்படி எர்ணாகுளம் -சென்னை இடையே ஜனவரி 12ந் தேதி திருப்பூர் மார்க்கமாக இயங்கும் வகையில் சிறப்பு ரெயில் அறிவிக்கப்பட்டுள்ளது.டிக்கெட் முன்பதிவு துவங்கினாலும், தங்களுக்கான டிக்கெட் உறுதி செய்ய பயணிகள் ஆர்வம் காட்டவில்லை.அதாவது திருப்பூர், உடுமலையில் ரெயில் நிலைய முன்பதிவு கவுன்டர் வந்து டிக்கெட் பெற முயல்வோர் எண்ணிக்கை குறைவாக காணப்படுகிறது. ஆன்லைன் வாயிலாக ஏஜென்சிகள் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்திட ஆர்வம் காட்டுகின்றனர்.

    இது குறித்து ரெயில் டிக்கெட் முன்பதிவு மைய அதிகாரிகள் கூறியதாவது:- திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில், தீபாவளி பண்டிகைக்கு மட்டுமே அதிகமானோர் சொந்த ஊர் செல்வர். அதற்கு நிகராக பொங்கலுக்கு சொந்த ஊர் பயணிப்பதில்லை.அவ்வாறு சொந்த ஊர் செல்ல முடிவெடுத்தாலும், கடைசி நேரம் ஏதேனும் ஒரு ரெயில் பொது பெட்டியில் பயணித்துக்கொள்கின்றனர். முன்கூட்டியே ரயிலை நாடி தேடி டிக்கெட் முன்பதிவு செய்ய ஆர்வம் காட்டுவதில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர். 

    • தாம்பரத்தில் இருந்து ஜனவரி 16-ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06057) மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடையும்.
    • மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 17-ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06058) மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில் மற்றும் கேரளாவுக்கு சிறப்பு கட்டண ரெயில்கள் ஜனவரி 12-ந்தேதி முதல் இயக்கப்பட உள்ளன.

    இதுகுறித்து தெற்கு ரெயில்வே சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12-ந்தேதி இரவு 9 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06021) மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 13-ந்தேதி பகல் ஒரு மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06022) மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்றடையும்.

    இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி வழியாக இயக்கப்படுகின்றன.

    தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13-ந்தேதி இரவு 7.30 மணிக்கு புறப்படும் அதிவிரைவு சிறப்பு ரெயில் (வண்டி எண்.06041) மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். மறுமார்க்கமாக நாகர்கோவிலில் இருந்து ஜனவரி 16-ந்தேதி மாலை 5.10 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

    தாம்பரத்தில் இருந்து ஜனவரி 16-ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06057) மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடையும்.

    மறுமார்க்கமாக திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 17-ந்தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06058) மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும். இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை, வள்ளியூர் வழியாக இயக்கப்படுகின்றன.

    கேரளாவின் கொச்சு வேலியில் இருந்து ஜனவரி 17-ந்தேதி காலை 11.40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06044) மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும். மறுமார்க்கமாக தாம்பரத்தில் இருந்து ஜனவரி 18-ந்தேதி காலை 10.30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06043) கேரளாவின் கொச்சுவேலிக்கு அதிகாலை 3.20 மணிக்கு சென்றடையும்.

    இந்த ரெயில் செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் டவுண், குழித்துறை, திருவனந்தபுரம் வழியாக இயக்கப்படுகின்றன.

    கேரளாவின் எர்ணாகுளத்தில் இருந்து ஜனவரி 12-ந்தேதி இரவு 11.20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண்.06046) மறுநாள் காலை 11.30 மணிக்கு சென்னை சென்ட்ரல் சென்றடையும்.

    மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரலில் இருந்து ஜனவரி 13-ந்தேதி பகல் 2.50 மணிக்கு புறப்படும் சிறப்பு ரெயில் (வண்டி எண். 06045) மறுநாள் காலை 3.10 மணிக்கு கேரளாவின் எர்ணாகுளம் சென்றடையும். இந்த ரெயில் தமிழகத்தின் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக இயக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ரெயில்களை வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு செய்தால் பண்டிகை காலங்களில் பயணிகள் பயன்பெறுவர் என்றனர்
    • கோவை-வேளாங்கண்ணி இடையே வாராந்திர ரெயில் இயக்கலாம்.

     திருப்பூர் :

    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் பிரசித்தி பெற்ற புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம் உள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது மாநிலம் முழுவதும் பல்வேறு பகுதியில் இருந்து லட்சக்கணக்கான கிறிஸ்துவர்கள் வேளாங்கண்ணிக்கு செல்வது உண்டு. இதற்கென சிறப்பு பஸ்கள் இயக்கப்படும்.

    வருகிற 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட உள்ள நிலையில் கோவையில் இருந்து திருப்பூர் மற்றும் பாலக்காடு வழியாக வேளாங்கண்ணிக்கு நேரடி ரெயில் இன்று வரை இல்லை.

    ஈரோடு சென்று அங்கிருந்து திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் வழியாக செல்லும் ரெயில்களில் தான் பயணிக்க வேண்டியுள்ளது என்பதால், வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க கோரிக்கை எழுந்துள்ளது.

    இது குறித்து பயணிகள் கூறுகையில், கோவை-வேளாங்கண்ணி இடையே வாராந்திர ரெயில் இயக்கலாம். வேளாங்கண்ணிக்கு அருகில் உள்ள மன்னார்குடி, நீடாமங்கலம் நிலையத்திற்கு கோவையில் இருந்து செம்மொழி எக்ஸ்பிரஸ் இயங்குகிறது. காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம் நிலையங்களுக்கு டீகார்டன் எக்ஸ்பிரஸ் தினசரி செல்கிறது. மேற்கண்ட ரெயில்களை வேளாங்கண்ணி வரை நீட்டிப்பு செய்தால் பண்டிகை காலங்களில் பயணிகள் பயன்பெறுவர் என்றனர்

    • தாம்பரத்தில் இருந்து நெல்லைக்கு இன்று இரவு சிறப்பு ரெயில் செல்கிறது.
    • சென்னை சென்ட்ரலில் இருந்து ராமேசுவரத்திற்கு நாளை இரவு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெற்கு ரெயில்வே தென்மாவட்டங்களுக்கு  சிறப்பு ரெயில்களை இயக்குகிறது. அதன்படி, தாம்பரம்- நெல்லை இடையேயான சிறப்பு ரெயில் (வ.எண்.06049) தாம்பரத்தில் இருந்து இன்று (சனிக்கிழமை) இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு நெல்லை சென்றடைகிறது.

    மறுமார்க்கத்தில் நெல்லை-தாம்பரம் சிறப்பு ரெயில் (வ.எண்.06050) நெல்லையில் இருந்து வருகிற 26-ந் தேதி மாலை 5.50 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    அதேபோல, சென்னை சென்டிரல்-ராமேசுவரம் சிறப்பு ரெயில் (வ.எண்.06041) நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11 மணிக்கு ராமேசுவரம் ரெயில் நிலையம் சென்றடையும்.

    இந்த ரெயில், சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் துறைமுகம், சிதம்பரம், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், மண்டபம் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    மறுமார்க்கத்தில் ராமேசுவரம்-தாம்பரம் சிறப்பு ரெயில் (வ.எண்.06042) ராமேசுவரத்தில் இருந்து வருகிற 24-ந் தேதி மாலை 4.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடையும். 

    இதேபோல் நாகர்கோவில்-தாம்பரம் சிறப்பு சிறப்பு ரெயில் (வ.எண்.06040) நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 25-ந் தேதி மாலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் நள்ளிரவு 3.20 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையம் சென்றடைகிறது. இந்த ரெயில் வள்ளியூர், நெல்லை, கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    • ஏற்கனவே 179 சிறப்பு ரெயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
    • இருக்கைகள் முன்பதிவின்போது முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை.

    தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் முதல் வட மாநிலங்களில் கொண்டாடப்படும் சத் பூஜை வரை, பொதுமக்கள் எளிதான, வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் 211 சிறப்பு ரெயில்கள் இயக்கப்படும் என்று இந்திய ரெயில்வே அறிவித்துள்ளது.

    தர்பங்கா, அசம்கர், சகர்சா, பகல்பூர், முசாபர்பூர், ஃபிரோஸ்பூர், பாட்னா, கதிஹார் மற்றும் அமிர்தசரஸ் உள்ளிட்ட வழித்தடங்களில் இரு புறமும் மொத்தம் 2,561 முறை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் தெற்கு ரெயில்வே மட்டும் 11 வழித்தடங்களில் 56 சிறப்பு ரெயில்களை இயக்க உள்ளது.

    ஏற்கனவே மொத்தம் 179 சிறப்பு ரெயில் சேவைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சிறப்பு ரெயில்களில் இருக்கைகள் முன்பதிவின்போது முறைகேடுகளில் ஈடுபடுதல், அதிக கட்டணம் வசூலித்தல் போன்ற செயல்களை தடுக்க கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

    முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிகளை பயணிப்பதை ஒழுங்குப்படுத்தும் நடவடிக்கையில் ரெயில்வே பாதுகாப்புப் படை ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர். பண்டிகை காலங்களில் ரெயில் நிலையங்களில் கூட்டத்தை சரிசெய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக ரெயில்வேத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    • கர்நாடக மாநிலத்தில் இருந்து, மதுரை வழியாக தூத்துக்குடி, நெல்லைக்கு தீபாவளி சீசன் சிறப்பு ெரயில்கள் இயக்கப்படுகிறது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கூட்ட நெரிசலை தவிர்க்க பெங்களூரு யஸ்வந்த்பூர் - நெல்லை, மைசூர் - தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்களை இயக்கப்படுகிறது.

    யஸ்வந்த்பூர் - திருநெல்வேலி சிறப்பு ரெயில் (06565) அக்டோபர் 18 மற்றும் 25 ஆகிய செவ்வாய்க் கிழமைகளில் மதியம் 12.45 மணிக்கு புறப்படும் ரெயில் அடுத்தநாள் அதிகாலை 4.30 மணிக்கு நெல்லை செல்லும்.

    நெல்லையில் இருந்து வருகிற 19, 26-ந் தேதி புதன்கிழமைகளில் காலை 10.40 மணிக்கு புறப்படும் ரெயில், இரவு 11.30 மணிக்கு யஸ்வந்த்பூர் செல்லும். பனஸ்வாடி, கார்மேலரம், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டியில் நின்று செல்லும்.

    மைசூரில் இருந்து வருகிற 21-ந் தேதி மதியம் 12.05 மணிக்கு புறப்படும் ரெயில் அடுத்த நாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி செல்லும். தூத்துக்குடியில் இருந்து வருகிற 22-ந் தேதி மாலை 3 மணிக்கு புறப்படும் ரெயில் அடுத்த நாள் காலை 8.30 மணிக்கு மைசூர் செல்லும். யெலியூர், மாண்டியா, பெங்களூர், பெங்களூர் கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டியில் நின்று செல்லும். மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராமேசுவரத்துக்கு சிறப்பு ரெயில்கள் இயக்க வேண்டும் என எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
    • சொந்த ஊருக்கு வந்து செல்லும் வகையிலும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் இயக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் எம்.பி.யும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் மாநில துணைத் தலைவருமான கே.நவாஸ்கனி தெற்கு ரெயில்வே பொது மேலாளருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மக்கள் பலரும் வெளிமாநிலங்களிலும், வெளியூர்களிலும் பணிபுரிந்து வருகின்றனர்.

    அவர்கள் தீபாவளி பண்டிகைக்கு தங்கள் சொந்த ஊர்களுக்கு வந்து செல்ல ஏதுவாக சிறப்பு ரெயில்கள் இயக்க தெற்கு ரெயில்வே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் எளிதில் சொந்த ஊருக்கு வந்து செல்லும் வகையிலும், கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையிலும் கீழ்க்கண்ட ரெயில்களை சிறப்பு ரெயிலாக இயக்குவதத்திற்கு ரெயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும்.

    சென்னையிலிருந்து -ராமேசுவரம், கோவையிலிருந்து பழனி, திண்டுக்கல் வழியாக ராமேசுவரம், பெங்களுருவிலிருந்து கோவை, நாமக்கல், கருர், திண்டுக்கல் வழியாக ராமேசுவரம், கன்னியாகுமரியிலிருந்து ராமேசுவரம், பாலக்காட்டிலிருந்து ராமேசுவரம், சேலத்தி லிருந்து ஈரோடு, திருப்பூர், கோவை, பழனி, திண்டுக்கல், மதுரை வழியாக ராமேசுவரம், ஐதராபாத்- ராமேசுவரம் உள்ளிட்ட வழித்தடங்களில் இரு மார்க்கங்களிலும் சிறப்பு ரெயில்கள் இயக்கிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தென் மாவட்டங்களுக்கு பண்டிகை கால சிறப்பு ெரயில்கள் வருகிற 11-ந் தேதி முதல் இயக்கப்படுகிறது.
    • நாளை (1-ந் தேதி) தூத்துக்குடியில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டு 2-ந் தேதி மதியம் 12.25 மணிக்கு மைசூர் செல்லும்.

    மதுரை

    பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க பெங்களூரு அருகே உள்ள யஸ்வந்த்பூர் - நெல்லை, மைசூர் - தூத்துக்குடி இடையே சிறப்பு ரெயில்களை இயக்க தென்மேற்கு ரெயில்வே ஏற்பாடு செய்து உள்ளது.

    அதன்படி வருகிற 4 மற்றும் 11-ம் தேதிகளில் (செவ்வாய்க்கிழமை) யஸ்வந்த்பூரில் இருந்து மதியம் 12.45 மணிக்கு புறப்படும் ெரயில், அடுத்த நாள் அதிகாலை 4.30 மணிக்கு நெல்லை செல்லும். மறு மார்க்கத்தில் அக்டோபர் 5 மற்றும் 12-ம் தேதிகளில் (புதன்கிழமை) நெல்லையில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்படும் ெரயில் அடுத்த நாள் இரவு 11.30 மணிக்கு யஸ்வந்த்பூர் செல்லும்.

    இந்த ரெயில்கள் பனஸ்வாடி, கார்மேலரம், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டியில் நின்று செல்லும்.

    இதே போல மைசூர்-தூத்துக்குடி இடையே பண்டிகை கால சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில் இயக்கப்படுகிறது. இது இன்று (30-ந்தேதி) மைசூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு, நாளை அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி செல்லும். மறு மார்க்கத்தில் நாளை (1-ந் தேதி) தூத்துக்குடியில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்படும் ரெயில் 2-ந் தேதி மதியம் 12.25 மணிக்கு மைசூர் செல்லும்.

    இந்த ரெயில்கள் யெலியூர், மாண்டியா, பெங்களூர், பெங்களூர் கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய இடங்களில் நின்று செல்லும்.

    • எஸ்வந்த்பூர் - திருநெல்வேலி மற்றும் மைசூர் - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்களை இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
    • திண்டுக்கல் வழியாக சிறப்பு ரயில்கள் செல்லும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    திண்டுக்கல்:

    பண்டிகை கால கூட்ட நெரிசலை தவிர்க்க பெங்களூரு அருகே உள்ள எஸ்வந்த்பூர் - திருநெல்வேலி மற்றும் மைசூர் - தூத்துக்குடி இடையே சிறப்பு ரயில்களை இயக்க தென்மேற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

    அதன்படி எஸ்வந்த்பூர் -திருநெல்வேலி சிறப்பு ரயில் (06565) வருகிற 4 மற்றும் 11-ந்தேதிகளில் எஸ்வந்த்பூரில் இருந்து மதியம் 12.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.30 மணிக்கு திருநெல்வேலி வந்து சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - எஸ்வந்த்பூர் சிறப்பு ரயில் (06566) 5 மற்றும் 12-ந்தேதிகளில் திருநெல்வேலியில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு எஸ்வந்த்பூர் வந்து சேரும்.

    இந்த ரயில்கள் பனஸ்வாடி, கார்மேலரம், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப்பெட்டிகள் 11 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், ஒரு சமையல் பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.

    மைசூர்- தூத்துக்குடி சிறப்பு கட்டண ரயில் (06253) இன்று மைசூரில் இருந்து மதியம் 12.05 மணிக்கு புறப்பட்டு நாளை அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி வந்து சேரும். மறு மார்க்கத்தில் தூத்துக்குடி - மைசூர் சிறப்பு கட்டண ரயில் (06254) நாளை மாலை 3 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.25 மணிக்கு மைசூர் சென்று சேரும்.

    இந்த ரயில்கள் யெலியூர், மாண்டியா, பெங்களூர், பெங்களூர் கண்டோன்மென்ட், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள் இணைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • திருச்செந்தூர் - நெல்லை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் திருச்செந்தூரில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு நெல்லை செல்லும்.
    • மறுமார்க்கத்தில் நெல்லை- திருச்செந்தூர் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு திருச்செந்தூர் செல்லும்.

    செங்கோட்டை:

    நெல்லை - செங்கோட்டை மற்றும் நெல்லை- திருச்செந்தூர், மதுரை - செங்கோட்டை இடையே வருகிற 1-ந் தேதி முதல் கூடுதல் முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    நெல்லை பகுதிக்கு 2 ஜோடி சிறப்பு விரைவு ரெயில்கள் இயக்கப்பட இருக்கின்றன. அதன்படி நெல்லை- செங்கோட்டை முன்பதிவில்லா சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து காலை 9.10 மணிக்கு புறப்பட்டு காலை 11.25 மணிக்கு செங்கோட்டை செல்லும்.

    இதே மார்க்கத்தில் மற்றொரு நெல்லை-செங்கோட்டை முன்பதிவில்லா சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து மதியம் 1.50 மணிக்கு புறப்பட்டு மாலை 4.15 மணிக்கு செங்கோட்டை செல்லும்.

    மறுமார்க்கத்தில் செங்கோட்டை - நெல்லை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் செங்கோட்டையில் இருந்து மதியம் 2.55 மணிக்கு புறப்பட்டு மாலை 5.20 மணிக்கு நெல்லை செல்லும். இதே மார்க்கத்தில் மற்றொரு செங்கோட்டை - நெல்லை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் செங்கோட்டையில் இருந்து காலை 10.05 மணிக்கு புறப்பட்டு மதியம் 12.25 மணிக்கு நெல்லை செல்லும்.

    இந்த ரெயில்கள் நெல்லை டவுன், பேட்டை, சேரன்மகாதேவி, காருக்குறிச்சி, வீரவநல்லூர், கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழாம்பூர், ஆழ்வார்குறிச்சி, ரவணசமுத்திரம், கீழக்கடையம், மேட்டூர், பாவூர்சத்திரம், கீழப்புலியூர், தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    திருச்செந்தூர் - நெல்லை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் திருச்செந்தூரில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மதியம் 12 மணிக்கு நெல்லை செல்லும். மறுமார்க்கத்தில் நெல்லை- திருச்செந்தூர் முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் நெல்லையில் இருந்து மாலை 4.05 மணிக்கு புறப்பட்டு மாலை 5.45 மணிக்கு திருச்செந்தூர் செல்லும்.

    இந்த ரெயில்கள் காயல்பட்டினம், ஆறுமுகநேரி, குரும்பூர், கச்சினாவிளை, நாசரேத், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம், தாதன்குளம், செய்துங்கநல்லூர், பாளையங்கோட்டை ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.

    மதுரை - செங்கோட்டை முன்பதிவில்லாத சிறப்பு விரைவு ரெயில் மதுரையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்பட்டு மாலை 3.20 மணிக்கு செங்கோட்டை செல்லும். மறுமார்க்கத்தில் செங்கோட்டை - மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் காலை 11.50 மணிக்கு புறப்பட்டு மாலை 3.35 மணிக்கு மதுரை செல்லும்.

    இந்த ரெயில்கள் திருப்பரங்குன்றம், திருமங்கலம், கள்ளிக்குடி, விருதுநகர், திருத்தங்கல், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சங்கரன்கோவில், பாம்புகோவில் சந்தை, கடையநல்லூர், தென்காசி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும் என தென்னக ரெயில்வே அறிவித்துள்ளது.

    • வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது.
    • பக்தர்களின் வசதிக்காக நெல்லை போக்குவரத்துக்கழக பணிமனை சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது.

    நெல்லை:

    வைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு தென்னக ரெயில்வே சார்பில் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. நெல்லை சந்திப்பில் இருந்து காலை 11.15 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்பட்டது. பிற்பகல் 12.45 மணிக்கு திருச்செந்தூருக்கு சென்றது. பின்னர் திருச்செந்தூரில் இருந்து இரவு 8.30 மணிக்கு சிறப்பு ரெயில் புறப்படுகிறது. இரவு 10.10 மணிக்கு நெல்லைக்கு வரும். இந்த ரெயில் பாளையங்கோட்டை, செய்துங்கநல்லூர், ஸ்ரீவைகுண்டம், நாசரேத், ஆறுமுகநேரி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று சென்றது. இதில் ஏராளமான பக்தர்கள் சென்றது.

    பக்தர்களின் வசதிக்காக நெல்லை போக்குவரத்துக்கழக பணிமனை சார்பில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டது. நெல்லை, தூத்துக்குடி, ராஜபாளையம், ராமநாதபுரம், பரமகுடி, சங்கரன்கோவில், கழுகுமலை, தென்காசி, அம்பை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 155 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இவற்றில் பக்தர்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    ×