search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Special Puja"

    • தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில் நடந்தது
    • பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்பட்டது

    ராணிப்பேட்டை:

    வாலாஜா அடுத்த கீழ் புதுப்பேட்டையில் உள்ள தன்வந்திரி ஆரோக்ய பீடத்தில், பீடத்தின் ஸ்தாபகர் முரளிதர சுவாமிகள் ஆசியுடன் புதிதாக அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தபட்ட வீரபத்திரர், ராஜ காளியம்மன், மூகாம்பிகை சன்னதிகளு க்கான மண்டலாபிஷேகம் ,ஸ்ரீவித்யா ஹோமம் மற்றும் அபிஷேக பூஜைகளுடன் நிறைவு பெற்றது.

    ஆடிப்பூரத்தை முன்னிட்டு 3 நாட்களாக நடைபெற்று வரும் நவ சண்டியாகம் இன்று நிறைவு பெறுகிறது. ஆடி மாத பஞ்சமியை முன்னிட்டு நேற்று வராகி ஹோமமும், பஞ்சமுக வராகிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் பஞ்சமுக வராகிக்கு தங்க கவசத்துடன் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு முரளிதர ஸ்வாமிகள் பிரசாதமும், ஆசியும் வழங்கினார். 

    • ஆடி மாத அமாவாசை தின சிறப்பு பூஜை நடைபெற்றது.
    • 12.30 மணிக்கு உச்சிகால பூஜை ஆகியவை நடந்தது.

    கடலூர்:

    மிகவும் பிரசித்தி பெற்ற திருவதிகை ஸ்ரீ சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று (17-ந்தேதி)ஆடி மாதஅமாவாசை தின சிறப்பு பூஜை நடைபெற்றது. இதனை முன்னிட்டு மூலவர் பெருமாள் பூவாலங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.உற்சவர் பெருமாள் திருக்கண்ணாடி மாளிகையில் எழுந்தருளி சேவை சாதித்தார் இதனை முன்னிட்டு காலை 6.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 7.30 மணிக்கு நித்யபடி பூஜை 9 மணிக்கு உற்சவர் கண்ணாடி அறை சேவை , 12.30 மணிக்கு உச்சிகால பூஜை ஆகியவை நடந்தது.

    இதில் ஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வேண்டுதல் நிறைவேறவும் நேர்த்தி கடனுக்காக விளக்கேற்றி வழிபாடு செய்தனர் மாலை 4 மணிக்கு நடை திறப்பு, 6 மணிக்கு நித்யபடி பூஜை, இரவு 9 மணிக்கு ஏகாந்த சேவை ஆகியவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஆலய பட்டர் ராமன்தலைமையில் விழா குழுவினர், நகரவாசிகள் செய்து வருகின்றனர்.

    • உணவு, குளிர்ந்த குடிநீர் கிடைப்பதால் அரிசிக் கொம்பன் யானை நல்ல நிலையில் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
    • அரிசிக்கொம்பன் நடமாட்டத்தை ரேடியோ காலர் சிக்னல் மூலம் கண்காணிக்கும் 2 மாவட்ட வனத்துறையினரும், யானை குடியிருப்பு பகுதிக்கு வர வாய்ப்பில்லை.

    திருவனந்தபுரம்:

    களக்காடு முண்டந்துறை வனச்சரகத்தில் விடப்பட்டுள்ள அரிசிக் கொம்பன் யானை, நமது குடியிருப்பு பகுதிக்கு வந்துவிடுமோ என்ற அச்சம் ஒருபுறம், கேரளாவுக்கு சென்றுவிடும் என்ற நம்பிக்கை மறுபுறம் என கடந்த சில நாட்களாக திருநெல்வேலி, கன்னியாகுமரி மலையோர கிராம மக்கள் உள்ளனர்.

    ஆனால் அரிசிக்கொம்பன் நடமாட்டத்தை ரேடியோ காலர் சிக்னல் மூலம் கண்காணிக்கும் 2 மாவட்ட வனத்துறையினரும், யானை குடியிருப்பு பகுதிக்கு வர வாய்ப்பில்லை. தான் விடப்பட்ட மேல்கோதையாறு பகுதியில் தான் அரிசிக்கொம்பன் சுற்றி வருகிறது. அங்கிருந்து சுமார் 5 அல்லது 6 கி.மீட்டருக்குள் தான் அதன் நகர்வு உள்ளது. முத்துக்குழிவயல், குற்றியார் பகுதிகளில் தேவையான உணவு, குளிர்ந்த குடிநீர் கிடைப்பதால் அரிசிக் கொம்பன் யானை நல்ல நிலையில் இருப்பதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையில் அரிசிக்கொம்பன் தற்போது இருக்கும் வனப்பகுதி கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயம், கேரள மாநிலம் நெய்யாறு வனவிலங்கு சரணாலயம் பகுதிகளை ஒட்டியே உள்ளது. இதனால் கேரள வனத்துறையினரும் அரிசிக்கொம்பன் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். நெய்யாறு வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் இருக்கும் அரிசிக்கொம்பன், கேரள மாநிலத்துக்குள் நுழைய வாய்ப்பு இருப்பதாக கருதும் அவர்கள், ரேடியோ காலர் சிக்னலை பெறும் ஆண்டெனாவை, பெரியார் வனச்சரக அலுவலகத்தில் கேட்டனர். அதன்படி திருவனந்தபுரம் வனவிலங்கு பிரிவுக்கு விரைவில் இந்த ஆண்டெனா கொண்டு வரப்படும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    அரிசிக் கொம்பன் யானை காட்டில் நலமாக உள்ளதாக வனத்துறையினர் கூறி வந்தாலும், யானை பிரியர்கள் அதனை நம்ப மறுக்கின்றனர். இரவும் பகலுமாக தினமும் 40 முதல் 50 கி.மீட்டர் தூரம் நடக்கும் யானை, தற்போது 6 கி.மீட்டர் தூரம் மட்டுமே நடந்துள்ளதாக தெரிகிறது. அரிசிக்கொம்பன் காலிலும், தும்பிக்கையிலும் காயத்துடன் இருப்பதால் தான் அதிக தூரம் பயணிக்கவில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

    இதற்கிடையில் அரிசிக்கொம்பன் நலம் பெறவும் நீண்ட ஆயுள் பெறவும் கேரள மாநிலத்தில் சிறப்பு பூஜைகளை சிலர் நடத்தி வருகின்றனர். அதன்படி திருச்சூர் மாவட்டம் அந்திகாடு அருகே வல்லூர் கிராமத்தில் உள்ள ஆலும்தாழம் மகாவராஹதி தேவி கோவிலில் முழுநாள் பூஜை நடத்தப்பட்டது. இதில் திரளானோர் கலந்து கொண்டனர்.

    • சாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது
    • ஏராளமான பக்தர்கள் தரிசனம்

    ஆற்காடு:

    ஆற்காடு அருகே சிவ ஆலயத்தில் வைகாசி மாத பவுர்ணமி சிறப்பு தரிசனம் நடந்தது.

    இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் பேரூராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு மரகதாம்பிகை உடனுறை ஆதி மஹாலிங்கேஸ்வரர் ஆலயத்தில் வைகாசி மாத பவுர்ணமி சிறப்பு தரிசனம் நடைபெற்றது.

    இதனை முன்னிட்டு சிவ பெருமானுக்கு வில்வ இலை, விபூதி, திரவிய பொடி, மஞ்சள், அரிசி மாவு, பழங்கள், தேன், கரும்புச்சாறு, பால், தயிர், மற்றும் சந்தனம் ஆகியவற்றால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • இன்று காலை தேருக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது.
    • உலா செல்லக்கூடிய வாகனம் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது.

    கடலூ:

    கடலூர் திருப்பாதிரி ப்புலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் வருடம் தோறும் வைகாசி பெரு விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வைகாசி பெருவிழா வருகிற 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் அடுத்த மாதம் ஜூன் 2-ந்தேதி நடக்கிறது.

    இந்நிலையில் இன்று காலை தேருக்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாரதனை நடைபெற்றது. இதனை தொடர்ந்து திருவிழாவிற்கான பந்த கால் நடும் நிகழ்ச்சி நடை பெற்றன. பந்த காலுக்கு மஞ்சள், குங்குமம் பூசி சிறப்பு பூஜைகள் நடைபெற்று பந்தகால் நடப்பட்டது.இதில் பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். முன்னதாக பாடலீஸ்வரர் கோவிலில் உழவாரப்பணி தொடங்கப்பட்டு கோவில் கொடிமரம், கோவிலின் சுற்றுச்சுவர், சாமி வீதி உலா செல்லக்கூடிய வாகனம் மற்றும் கோவில் வளாகம் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. இதில் கோவில் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மேலிருப்பு முத்தாலம்மன் கோவில் செடல் திருவிழா வரும் 5-ந் தேதி வெள்ளிக்கிழமை சித்ராபவுர்ணமி அன்று நடக்கிறது.
    • இன்று முதல் 10 நாட்கள் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை ஆகியவை நடைபெற உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் மேலிருப்பு முத்தாலம்மன் கோவில் செடல் திருவிழா வரும் 5-ந்தேதி வெள்ளிக்கிழமை சித்ராபவுர்ணமி அன்று நடக்கிறது.இதனை முன்னிட்டு இன்று கொடியேற்று விழா நடந்தது. இன்று முதல் 10 நாட்கள் தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, விசேஷ பூஜை ஆகியவை நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பெண்கள் உள்பட பலர் திரளாக கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள், விழா குழுவினர், இளைஞர் மன்றத்தினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.

    • அம்மனுக்கு மலர் அலங்காரம்
    • ஏராளமானோர் தரிசனம்

    காவேரிப்பாக்கம்:

    காவேரிப்பாக்கத்தை அடுத்த கரிவேடு கிராமத்தில் உள்ள வீரமாகாளியம்மன் கோவி லில் தமிழ் புத்தாண்டை முன் னிட்டு நேற்று சிறப்பு பூஜை கள் நடந்தது.

    காலையில் அம்மனுக்கு நெய், சந்தனம், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் பக்தர்கள் அலகு குத்தி வேண்டுதல் நிறைவேற் றினர்.

    இரவு அம்மன் மலர்க ளால் அலங்காரம் செய்யப் பட்டு வீதியுலா வந்தது. விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள அம்மன் மற்றும் குலதெய்வ கோவில்களில் பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    பாண்டமங்கலம் அருகே கோப்பணம் பாளையத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், அரசாயி அம்மன், மாசாணி அம்மன் கோவில், பரமத்தியில் உள்ள அங்காளம்மன், பரமத்திவேலூரில் உள்ள மாரியம்மன், பழைய பை-பாஸ் ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன், பேட்டையில் உள்ள புதுமாரியம்மன், பகவதி அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.

    இதேபோல், நன்செய் இடையாறு, பாண்டமங்கலம், கொந்தளம், சேளூர், அ.குன்னத்தூர், அய்யம்பாளையம், ஆனங்கூர், வடகரையாத்தூர் மற்றும் பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அம்மன் மற்றும் குலதெய்வ கோவில் களில் உள்ள அம்மனுக்கு பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம், விபூதி, தேன், கரும்புச்சாறு உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.

    அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சி யளித்தார். இதில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர். 

    • மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி-அம்பாளுக்கு 4 கால சிறப்பு பூஜை நடக்கிறது.
    • இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் 1008 சங்காபிஷேக வழிபாடு நடந்தது.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மகா சிவராத்திரி விழா வருடந்தோறும் விமரி சையாக கொண்டாடப்படும். அதன்படி சிவராத்திரியான இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு சொக்கநாதர்-மீனாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

    இன்று மாலை 4 மணிக்கு சுந்தரேஸ்வரர் சன்னதி முன்பு 1008 சங்காபிஷேகமும், மீனாட்சி அம்மன் சன்னதியில் 108 சங்காபிஷேக வழிபாடும் நடக்கிறது. அதன்பின்னர் சனி பிரதோஷ வழிபாட 4.45 மணிக்கு தொடங்குகிறது.

    சிவராத்திரியை முன்னிட்டு இன்று இரவு முழுவதும் கோவில் நடை திறக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இரவு தொடங்கி அதிகாலை வரை சுவாமி-அம்பாளுக்கு 4 கால பூஜைகள் நடை பெறுகிறது. அதன்படி மீனாட்சி அம்மனுக்கு முதல் கால பூஜை இரவு 10 மணிக்கும், 2ம் கால பூஜை 11 மணிக்கும், 3ம் கால பூஜை 12 மணிக்கும், 4ம் கால பூஜை 1 மணிக்கும் நடக்கிறது.

    இதேபோல் சுவாமிக்கு முதல் கால பூஜை இரவு 11 மணிக்கும், 2ம் கால பூஜை 12 மணிக்கும், 3ம் கால பூஜை 1 மணிக்கும், 4ம் கால பூஜை 2 மணிக்கும் நடக்கிறது. அதிகாலை 3 மணிக்கு அர்த்த ஜாம பூஜையும், 4 மணிக்கு பள்ளியறை பூஜையும், 5 மணிக்கு திருவனந்தல் பூஜையும் நடக்கிறது.

    சிவராத்திரியை முன்னிட்டு சுவாமி-அம்பாளுக்கு விடிய விடிய அபிஷேக ஆராதனை நடைபெறும். அபிஷே கத்திற்கு தேவையான பால், தயிர், இளநீர், பன்னீர், பழ வகைகள், தேன் ஆகியவற்றை ஏராளமான பக்தர்கள் கோவில் அலுவலகத்தில் வழங்கினர்.

    இம்மையிலும் நன்மை தருவார் கோவில்

    இதேபோல் மதுரையில் உள்ள இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு ஸ்தல அர்ச்சகர் தர்மராஜ் சிவம் தலைமையில் 1008 சங்காபிஷேக வழிபாடு நடந்தது.

    சிம்மக்கல் ஆதி சொக்க நாதர் கோவில், செல்லூர் திருவாப்புடையார் கோவில், தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோவில், திருவாதவூர் திருமறைநாதர் சுவாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவ தலங்களில் மகா சிவராத்திரி வழிபாடு இன்று இரவு நடக்கிறது. மேலும் பல்வேறு பகுதிகளில் உள்ள குலதெய்வ கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடந்தன.

    • மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி திருக்கோவிலில், சஷ்டியை முன்னிட்டு சிறப்புபூஜை நடைபெற்றது.
    • சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி அருள் பாலித்தார் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசுவாமி திருக்கோவிலில், சஷ்டியை முன்னிட்டு சிறப்புபூஜை நடைபெற்றது. இதில் முத்துக்குமாரசுவாமிக்கு சந்தனம்,பால்,தயிர்,தேன், உள்ளிட்ட 16 வகை வாசனை திரவியங்களால், அபிஷேக அலங்காரம் நடைபெற்றது. பின்னர் சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமாரசுவாமி அருள் பாலித்தார் இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.

    • வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
    • சாமிக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் தாலுகாவில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பாண்டமங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண சுவாமி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. சாமிக்கு சிறப்பு அலங்காரமும், மகா தீபாராதனையும், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    இதேபோல் பரமத்தி வேலூரில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவில், அனிச்சம்பா ளையத்தில் உள்ள பெரு மாள் கோவில், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர் கோவிலில் உள்ள பெருமாள் கோவில், பரமத்தியில் உள்ள

    கோதண்டராம சுவாமி கோவில், வடகரை யாத்தூரில் உள்ள தேவி பூதேவி உடனுரை அஞ்சலென்ற பெருமாள் கோவில் உள்ளிட்ட பல்வேறு பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

    இதில் அந்தந்த பகுதி களைச் சேர்ந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    • அம்மன் மற்றும் குலதெய்வ கோவில்களில் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.
    • மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டாரத்தில் உள்ள அம்மன் மற்றும் குலதெய்வ கோவில்களில் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

    பாண்டமங்கலம்‌ அருகே உள்ள கோப்பணம்பா ளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன், அர சாயி அம்மன், மாசாணி அம்மனுக்கு வாசனைத் திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.அதேபோல் பரமத்தியில் உள்ள அங்காளம்மன், பரமத்திவேலூரில் உள்ள மாரியம்மன், பேட்டையில் உள்ள புதுமாரியம்மன்,‌‌ பகவதி அம்மன், கரூர் மெயின் ரோட்டில் உள்ள செல்லாண்டி யம்மன், நன்செய்இடை யாற்றில் உள்ள மாரியம்மன் மற்றும் ராஜா சுவாமி, பாண்ட மங்கலம் மாரி யம்மன், பகவதி அம்மன், கொந்தளம் மாரியம்மன், சேளூர் மாரியம்மன், அய்யம்பா ளையம் மாரியம்மன், பகவதி அம்மன், ஆனங்கூர் மாரியம்மன், பகவதி அம்மன், செல்லாண்டியம்மன், வட கரையாத்தூர் மாரியம்மன் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதி களில் உள்ள கோவில்களில் மார்கழி மாத அமாவாசையை முன்னிட்டு சிறப்பு

    அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. 

    ×