search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "snowfall"

    • ஆண்டியூர், தும்பலபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கோழிக்கொண்டை சாகுபடியில் சில விவசாயிகள் தொடர்ச்சியாக ஈடுபடுகின்றனர்.
    • தற்போது நிலவும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    உடுமலை:

    உடுமலை வட்டாரத்தில் கிணற்றுப்பாசனத்துக்கு காய்கறி சாகுபடி பிரதானமாகவும், கோழிக்கொண்டை, செண்டுமல்லி உள்ளிட்ட பூக்கள் சாகுபடி சீசன் அடிப்படையிலும் மேற்கொள்ளப்படுகிறது.குறிப்பாக ஆயுத பூஜை சீசனை இலக்காக வைத்து பூக்கள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுகின்றனர். பின்னர் முகூர்த்த சீசனில் குறைந்த பரப்பில் சாகுபடியாகிறது.முக்கோணம், பாப்பனூத்து, புங்கமுத்தூர், ஆண்டியூர், தும்பலபட்டி உள்ளிட்ட பகுதிகளில் கோழிக்கொண்டை சாகுபடியில் சில விவசாயிகள் தொடர்ச்சியாக ஈடுபடுகின்றனர்.

    தற்போது நிலவும் பனிப்பொழிவு காரணமாக பூக்கள் உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தரமான பூக்கள் கிடைக்க மருந்து தெளித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் தீவிரமாக நடக்கிறது.தும்பலபட்டியில் கோழிக்கொண்டை பூ சாகுபடி செய்து வரும் முருகேசன் கூறியதாவது:-

    கடந்த 7 ஆண்டுகளாக கோழிக்கொண்டை பூ சாகுபடியில் ஈடுபட்டு வருகிறேன். இப்பகுதியில் நாற்றுகள் கிடைப்பதில்லை. எனவே ஓசூர் சென்று நாற்று வாங்கி வந்து நடவு செய்தேன். ஏக்கருக்கு 40 ஆயிரம் நாற்றுகள் வரை பிடிக்கும். நடவு செய்த 2 மாதத்துக்கு பிறகு பூக்களை அறுவடை செய்யலாம்.தொடந்து நான்கு மாதங்கள் வரை குறிப்பிட்ட இடைவெளியில் பூக்கள் கிடைக்கும். சாகுபடியில் களைச்செடிகளை கட்டுப்படுத்த போராட வேண்டியுள்ளது. மக்காச்சோளம், உளுந்து பயிர் சாகுபடியில் களைக்கொல்லி தெளித்து கட்டு ப்படுத்துகின்றனர். ஆனால் இச்சாகுபடியில் மருந்து தெளிக்க முடியாது என்பதால் தொழிலாளர்களை கொண்டு களை பறிக்க வேண்டியுள்ளது.

    இதற்கு அதிக செலவாகிறது. சீதோஷ்ண நிலை ஒத்துப்போனால் ஏக்கருக்கு ஒன்றரை டன் வரை, மகசூல் கிடைக்கும். முகூர்த்த சீசனில் கிலோ 70 - 80 ரூபாய் வரை கோழிக்கொண்டை பூ விற்பனையாகும். பிற நாட்களில் விலை கிடைக்காது.

    தற்போது பனிப்பொழிவு அதிகரித்துள்ளதால் கருகல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகிறது. கட்டுப்படுத்த மருந்து தெளித்து வருகிறோம். இத்தகைய சீசனில் தரமான பூக்கள் உற்பத்தி செய்ய சிரமப்பட வேண்டியுள்ளது.குறித்த நேரத்தில் பூக்களை பறித்தாலும், உடுமலையில் சந்தை வாய்ப்புகள் இல்லை. எனவே திருப்பூர், திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளுக்கு பூக்களை விற்பனைக்காக கொண்டு செல்ல வேண்டியுள்ளது. சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தினால் உடுமலை பகுதியில் பூக்கள் சாகுபடி பரப்பு பல மடங்கு அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • பொதுமக்கள் பல்வேறு நோய்களால் தொடர்ந்து அவதி அடைந்து வந்தனர்.
    • வாகனங்களில் சென்ற பொதுமக்கள் குல்லா மற்றும் குளிர் தாக்காத படி முகத்தில் துணிகளை கட்டி சென்றதையும் காண முடிந்தது.

    கடலூர்:

    மார்கழி மாதம் என்றாலே மாதம் முழுவதும் பனி பொழிவு மற்றும் குளிர்ந்த காற்று வீசி வருவது வழக்கம். இந்த நிலையில் மார்கழி மாதம் தொடங்கிய நிலையில் அதிகாலையில் பனி மூட்டம், மதியம் வெயில், இரவு குளிர்ந்த காற்று மற்றும் அவ்வப்போது மழை என சீதோஷ்ண மாற்றம் இருந்து வந்த காரணத்தினால் பொதுமக்கள் பல்வேறு நோய்களால் தொடர்ந்து அவதி அடைந்து வந்தனர்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர், நெல்லிக்குப்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் காலை 7 மணி வரை வழக்கத்தைவிட அதிக அளவில் பனிப்பொழிவு இருந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 14-ந் தேதி மார்கழி மாதம் முடிந்து 2 வாரம் ஆன நிலையில் நெல்லிக்குப்பம் மேல்பட்டாம்பாக்கம் நடுவீரப்பட்டு, திருவந்திபுரம், வெல்லப்பாக்கம், நத்தப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காலையில் கடும் பனிப்பொழிவு காணப்பட்டு வந்தது இந்த கடும் பனி பொழிவு காலை 7 மணி வரை படர்ந்து காணப்பட்டது.

    இதன் காரணமாக இந்த பகுதிகளில் நள்ளிரவு முதல் வழக்கத்தை விட அதிக குளிர் காணப்பட்டது. மேலும் காலை நேரங்களில் வழக்கத்தை விட பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்ட நிலையில் இன்று முகூர்த்த நாட்கள் என்பதால் இருசக்கர வாகனங்களில் சென்ற பொதுமக்கள் குல்லா மற்றும் குளிர் தாக்காத படி முகத்தில் துணிகளை கட்டி சென்றதையும் காண முடிந்தது. 

    மேலும் ெரயில், பஸ், லாரி, கார் வாகனம் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் காலை 7 மணி வரை முகப்பு விளக்கு எரிய வைத்தபடி சென்றதையும் காண முடிந்தது. இதனைத் தொடர்ந்து வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் பனிமூட்டம் காரணமாக கடும் அவதி அடைந்தனர்.

    • நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை குறைந்த அளவே பெய்ததால் பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து இல்லை.
    • இன்று அதிகாலை நெல்லை மாநகரில் லேசான சாரல் மழை பெய்தது.

    நெல்லை:

    வடகிழக்கு பருவமழை நெல்லை மாவட்டத்தில் குறைந்த அளவே பெய்தது. இதனால் பெரும்பாலான நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து இல்லை.

    பனிப் பொழிவு

    இதற்கிடையே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கடும் பனிப் பொழிவு நிலவி வருகிறது. மாலை 7 மணிக்கு தொடங்கும் பனிப் பொழிவு காலை 7 மணிவரை இருக்கிறது.

    இதனால் காலையில் பள்ளி மற்றும் வேலைக்கு செல்வோர்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

    சாரல் மழை

    இந்நிலையில் இன்று அதிகாலை நெல்லை மாநகரில் லேசான சாரல் மழை பெய்தது. தொடர்ந்து பல்வேறு இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    பிற்பகலில் டவுன், சந்திப்பு, வண்ணார் பேட்டை, பாளை உள்ளிட்ட இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது. இந்த திடீர் சாரல் மழையால் பொது மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்தனர்.

    • வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டே செல்கின்றனர்.
    • திருப்பூரில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    அவிநாசி :

    தமிழகத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழை பெய்வது வழக்கம். இதன் பின்னர் மார்ச் மாதம் கோடை காலம் தொடங்கும். இதற்கு இடைபட்ட காலமான கார்த்திகை, மார்க ழி மாதங்களில் குளிரும், பனிப்பொழிவும் நிலவும். இந்த நிலையில் வழக்கம் போல வடகிழக்கு பருவமழை கடந்த டிசம்பர் மாதம் வரை பெய்து ஓய்ந்த நிலையில், குளிர்காலம் தொடங்கியது. ஆனால் திருப்பூர் சுற்று வட்டார பகுதிகளான அவினாசி, பெருமாநல்லூர், குன்னத்தூர், பல்லடம், மங்கலம், ஊத்துக்குளி மற்றும் திருப்பூர் மாநகர பகுதிகளிலும் கடந்த ஆண்டுகளை விட வழக்கத்திற்கு மாறாக குளிரும், பனிப்பொழிவும் மிக அதிகமாக உள்ளது.

    தினமும் மாலை 6 மணிக்கே ஒரு குளிர்ச்சியான காலசூழ்நிலை நிலவுவதுடன், காலை 8 மணி வரை கடுங்குளிர் நிலவுகிறது. இதேபோல் பனிப்பொழிவும் வழக்கத்தை விட இந்த ஆண்டு அதிகமாக உள்ளது. காலை நேரங்களில் புறநகர் பகுதிகளில் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு அளவுக்கு அ திகமாக பனிமூட்டம் காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரிய விட்டே செல்கின்றனர். கடந்த சிலநாட்களாக வீடுகளில் இரவில் பொதுமக்கள் மின்விசிறி பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.

    மேலும் பகல் நேரம் தவிர காலை மற்றும் மாலை, இரவு நேரங்களில் வெளியே வரும்போது குழந்தைகள், பெண்கள் உள்பட பெரும்பாலானோர் சுவெட்டர், ஜர்க்கின், குல்லா போன்ற குளிர்தடுப்பு ஆடைகளை அணிந்து கொண்டே வெளியே வருகின்றனர். அதிகாலையே எழுந்து வாசல் தெளித்து, கோலம் போடும் பெண்கள் கூட அதிக குளிர், பனி காரணமாக காலையில் தாமதமாக எழும்பும் சூழ்நிலை தற்போது உள்ளது. இந்த ஆண்டு அதிக அளவில் குளிரும், பனியும் இருப்பதால் பலர் சளி, இருமல், காய்ச்சல் உள்ளிட்ட உடல் நலக்குறைவுகளால் பாதிக்கப்பட்டும் வருகின்றனர். இதன் காரணமாக திருப்பூரில் உள்ள மருத்துவமனைகளில் நோயாளிகள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

    • விவசாய நிலங்களில் பணிகளை மேற்கொள்வது போன்ற பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.
    • சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக செல்கின்றன.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கடந்த சில தினங்களாக அதிகாலை நேரங்களில் கடுமையான பனிப்பொழிவு இருப்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    விவசாயிகள் அதிகாலை நேரத்தில் எழுந்து கால்நடைகளை பராமரிப்பது, விவசாய நிலங்களில் பணிகளை மேற்கொள்வது போன்ற பணிகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

    காலை நேரங்களில் வாலி–பர் முதல் முதியோர் வரை நடைபயிற்சி மேற்கொள்வோர் நடைபயிற்சி மேற்–கொள்ள முடியாத சூழ்–நிலை ஏற்பட்டுள்ளது. காலை நேரங்களில் வீடுகளுக்கு பால் வினியோகம் செய்பவர்கள், வீதிகளில் காய்கறி கீரை விற்பனை செய்வோர் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். சாலைகளில் வழக்கமான போக்குவரத்து இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. சாலைகளில் செல்லும் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு மெதுவாக செல்கின்றன.

     இந்த கடுமையான பனிப்பொழிவு காரணமாக விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர் வகைகள் கருகி சேதம் அடைய வாய்ப்பு உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். 

    • திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிருடன் சீதோஷ்ண நிலை காணப்படுகிறது.

    காங்கயம் :

    திருப்பூர் மாவட்டத்தில் கடந்த மாதம் வரை அவ்வப்போது மழை பெய்தது. இதனால் அணைகள், குளம் மற்றும் குட்டைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மாவட்டத்தில் வறண்ட வானிலை நிலவுகிறது. காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அண்மையில் கடந்த சில நாட்களாக அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் கடும் குளிருடன் சீதோஷ்ண நிலை காணப்படுகிறது. குறிப்பாக அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவு இருந்து வருகிறது.

    காங்கயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் காலை 8 மணி வரை மூடு பனி காணப்படுகிறது. இதன் காரணமாக அதிகாலை நேரத்தில் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் வாகனங்களை இயக்க முடியாமல் அவதிப்பட்டனர். மேலும் எதிரே வரும் வாகனம் சரிவர தெரியாத அளவிற்கு மூடுபனி காணப்படுவதால் வாகனங்களின் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகனத்தை ஓட்டிச்செல்கின்றனர். அதிகாலை நேரத்தில் நடைப்பயிற்சி செய்பவர்கள் பனிமூட்டம் காரணமாக வீட்டிலேயே நடைபயிற்சி செய்து வருகின்றனர்.

    • கடும் பனிப்பொழிவு நிலவியதால் வாகன ஓட்டிகள் அவதி.
    • சம்பா நெற்பயிர்களில் புகையான் தாக்கம் ஏற்பட வாய்ப்பு இருக்கும்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, பூம்புகார், திருவெண்காடு, கொள்ளிடம் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்யாமல் வெயில் அடித்தது. ஆனால் இரவில் பனிப்பொழிவு நிலவி வருகிறது. காலை 8 மணி வரையும் பனிப்பொழிவு நிலவி வருகிறது.

    இதனால் எதிரே வரும் வாகனங்கள் தெரியாததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக வாகனங்களில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு செல்கின்றனர்.

    பனிப்பொழிவு காரணமளாக நடைபயிற்சி செய்பவர்கள், கடைவீதிக்கு பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் குறைந்த அளவே காணப்பட்டனர். சீர்காழி சுற்றுவட்டாரப் பகுதிகளில் முழுவதுமாக கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் சம்பா நெற்பயிர்களில் புகையான் தாக்கம் ஏற்பட வாய்ப்பு அதிகமாக இருக்கும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    • கரேரி, டிரையண்ட், ஆதிஹிமானி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அதிகாரிகள் தடை விதித்தனர்.
    • மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள சிறிய மலைகளிலும் பயணிகள் யாரும் மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

    சிம்லா:

    இந்தியாவில் அழகிய மலைகளும், ஏராளமான சுற்றுலா தலங்களும் அடங்கிய மாநிலம் இமாச்சல பிரதேசம்.

    இந்த மாநிலத்தில் டிசம்பர் மாதம் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும். அதன்படி இங்குள்ள குப்ரி, மணாலி, நர்காண்டா பகுதிகளில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. கீலாங், ஹன்சா பகுதிகளில் 2 சென்டி மீட்டர் அளவுக்கு பனிப்பொழிவு காணப்பட்டது.

    சிம்லாவின் புறநகர் பகுதியில் ஒரு சென்டி மீட்டர் அளவுக்கு பனி பெய்தது. அடுத்து வரும் நாட்களில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்று கூறப்பட்டது. இதனை இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி காங்கரா மாவட்டத்தில் நேற்று வரலாறு காணாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது. மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பார்க்கும் இடமெல்லாம் பனி படர்ந்து காணப்பட்டது. சாலைகளிலும் பனி உறைந்து இருந்தது.

    பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாத நிலை காணப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது.

    இம்மாவட்டத்தின் கரேரி, டிரையண்ட், ஆதிஹிமானி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல அதிகாரிகள் தடை விதித்தனர்.

    இதற்கிடையே இம்மாவட்டத்தில் பெய்த பனிப்பொழிவு காரணமாக பல சுரங்க பாதைகளில் சுற்றுலா வாகனங்கள் சிக்கி கொண்டன. சுமார் 400 -க்கும் மேற்பட்ட வாகனங்கள் சுரங்கங்களில் சிக்கி கொண்டன. இது பற்றிய தகவல் அறிந்த மீட்பு படையினர் அப்பகுதிக்கு சென்று வாகனங்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    இதுபோல மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள சிறிய மலைகளிலும் பயணிகள் யாரும் மலை ஏறும் பயிற்சியில் ஈடுபட வேண்டாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளனர்.

    மாவட்ட நிர்வாகத்தின் முன் அனுமதி பெறாமல் யாரும் இந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

    • வாகன ஓட்டிகள் அவதி
    • முகப்பு விளக்குகளை எரிய விட்டு சென்றனர்

    ஜோலார்பேட்டை:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது.

    ஏலகிரி மலை சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஏராளாமானோர் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் ஏலகிரி மலை ஜோலார்பேட்டை நாட்டறம்பள்ளி பகுதியில் நேற்று முதல் சாரல் மழை பொழிந்து கரு மேக மூட்டத்துடன் காணப்பட்டது.

    மேலும் தற்போது வரை யிலும் கருமேகத்துடனும் கடுமையான பனிப் பொலிவுடன் காட்சியளிக்கிறது. மேலும் எதிரே வரும் வாகன ஓட்டிகள் கண்ணுக்கே தெரியாத அளவிற்கு பனிப்பொழிவு பெய்து வருகிறது.

    இதன் காரணமாக வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி சென்றனர். மேலும் ஊட்டியில் இருக்கும் பருவநிலை போல் தற்போது ஏலகிரி மலையிலும் கடும் பனிப்பொழிவுடன் காணப்படுகிறது.

    இன்று காலை விடிந்தும் வெகு நேரமாகியும் பனிப்பொழிவு இருந்ததால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களின் முகப்பு விளக்குகள் போட்டுக் கொண்டு செல்கின்றனர்.

    கடும் பனிப்பொழிவில் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    • குளிர், மின்தடை, போக்குவரத்து பிரச்சினை போன்றவற்றை மக்கள் சந்தித்து வருகிறார்கள்.
    • அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நியூயார்க்கில் மீட்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

    அமெரிக்காவை பனிப்புயல் கடுமையாக தாக்கியது. அந்நாடு முழுவதும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. வெடிகுண்டு சூறாவளி என்று அழைக்கப்படும் அந்த பனிப்புயலால் பல மாகாணங்களில் மக்கள் முடங்கி போய் கிடக்கிறார்கள்.

    இடைவிடாது பனிப்பொழிவு உள்ளதால் சாலைகளில் பல அடி உயரத்துக்கு பனி குவிந்து இருக்கிறது. அதனை அகற்ற நடவடிக்கை எடுத்தாலும் தொடர்ந்து பனி கொட்டுவதால் மீட்பு பனிகளும் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மார்பளவுக்கு பனி கிடக்கிறது.

    இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர முடியாமல் தவிக்கிறார்கள். குளிர், மின்தடை, போக்குவரத்து பிரச்சினை போன்றவற்றை மக்கள் சந்தித்து வருகிறார்கள். இந்த பனிப்புயலால் பலியானவர்களின் எண்ணிக்கை 60-ஆக உயர்ந்துள்ளது.

    சிலர் காருக்குள்ளேயே உறைந்து உயிரிழந்துள்ளனர். அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நியூயார்க்கில் மீட்பு பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

    • கடந்த மாதங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கருப்பட்டியை சிலர் தங்களது வீடுகளில் இருப்பு வைத்திருக்கிறார்கள்.
    • இருப்பு கருப்பட்டிக்கு விலை அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வைத்தோம் என்று உற்பத்தியாளர் ஒருவர் கூறினார்.

    உடன்குடி:

    உடன்குடி வட்டார பகுதியில் கருப்பட்டி உற்பத்திக்கு ஒரு தனி சிறப்பு உண்டு. தமிழகம் மட்டுமல்ல இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளில் தமிழர்கள் எங்கெல்லாம் வாழ்கிறார்களோ அங்கெல்லாம் உடன்குடி கருப்பட்டி இங்கு கிடைக்கும் என விளம்பர போர்டு வைத்து விற்பனை செய்வார்கள். அவ்வளவு சிறப்பு வாய்ந்தது உடன்குடி கருப்பட்டி.

    தற்போது கருப்பட்டி உற்பத்தி சீசன் இல்லை. கடந்த ஏப்ரல், மே, ஜூன், ஜூலை மாதங்களில் உற்பத்தி செய்யப்பட்ட கருப்பட்டியை சிலர் தங்களது வீடுகளில் இருப்பு வைத்திருக்கிறார்கள். தற்போது உட ன்குடி வட்டார பகுதியில் மழை குறைந்து, இரவு-பகலாக பனிப்பொழிவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இதனால் இருப்பு வைத்த கருப்பட்டியில் பூஞ்சை என்ற வெள்ளை நிறத்தில் நூல் போன்றபாசி படிகிறது. இதை தடுக்க கருபட்டிக்கு புகைமூட்டம் போடுகிறார்கள், அப்படி இருந்தும் சில இடங்களில் கருப்பட்டி கசிந்து தண்ணீராக வெளி வருகிறது. இது பற்றி கருப்பட்டி உற்பத்தியாளர் ஒருவர் கூறியதாவது:-

    கடந்த காலங்களில் உற்பத்தி செய்த கருப்பட்டியை வீடுகளில் பரன்களில் போட்டு பாதுகாப்பாக வைத்துள்ளோம். இருப்பு கருப்பட்டிக்கு விலை அதிகம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் வைத்தோம். ஆனால் தற்போது மழைக்காலத்தில் மழை பெய்யாமல் இரவு-பகலாக பனிப்பொழிவு அதிகமாக உள்ளது.

    மழை பெய்தால் கூட கருப்பட்டிக்கு பாதிப்பு அதிகம் இருக்காது. ஆனால் பனிப்பொழிவு கருப்பட்டியை பதம் பார்த்துவிடும். இந்த பனிப்பொழிவால் எல்லா கருப்பட்டியிலும் பூஞ்சை பிடிக்கிறது. புகை போட்டாலும் அதை மீறி பூஞ்சை பிடிக்கிறது. கூடுதல் விலைக்கு ஆசைப்பட்டு இருப்பு வைத்தோம்.ஆனால் பனிப்பொழிவில் எல்லாம் கசிந்து விடும் போல தெரிகிறது என்று கவலையுடன் கூறினார்.

    • டெல்லியில் 20 மீட்டர் தொலைவுக்குள் வருபவர்களை மட்டுமே லேசாக காண முடிந்தது.
    • டெல்லியில் பல்வேறு இடங்களில் வெண் புகை மூட்டம் சூழ்ந்திருந்தது.

    புதுடெல்லி:

    வடமாநிலங்களில் கடந்த சில தினங்களாக மிக கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. உத்தரபிரதேசத்தில் நேற்று பனி பொழிவு புகைமூட்டத்தால் 2 இடங்களில் வாகன விபத்துக்கள் ஏற்பட்டு 5 பேர் பலியானார்கள்.

    இன்று (செவ்வாய்க்கிழமை) பஞ்சாப், அரியானா, சண்டிகர், டெல்லி, ராஜஸ்தான், உத்தரபிரதேச மாநிலங்களில் மிக கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது.

    பனிப்பொழிவு நீடித்ததால் வட மாநிலங்களில் இன்று காலை பல முக்கிய நகரங்களில் நீண்ட நேரத்துக்கு புகைமூட்டம் காணப்பட்டது. டெல்லியில் 20 மீட்டர் தொலைவுக்குள் வருபவர்களை மட்டுமே லேசாக காண முடிந்தது. அந்த அளவுக்கு டெல்லியில் பல்வேறு இடங்களில் வெண் புகை மூட்டம் சூழ்ந்திருந்தது.

    இதன் காரணமாக வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். அனைத்து வாகனங்களும் முன் விளக்குகளை எரிய விட்டபடி சென்றாலும் கூட மெல்ல ஊர்ந்தபடிதான் செல்ல முடிந்தது. அமிர்தசரஸ், கங்கா நகர், பாட்டியாலா, லக்னோ நகரங்களிலும் பனிப்பொழிவும், புகைமூட்டமும் இன்று காலை மக்களை திணற வைத்தது.

    இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கை தகவலில் பனிப்பொழிவு மேலும் சில நாட்களுக்கு நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பஞ்சாப், டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய 4 மாநிலங்களிலும் காலை மிக மிக கடுமையான பனிப்பொழிவு இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

    அதிகாலை நேரங்களில் வட மாநிலங்களில் உள்ள முக்கிய நகரங்களில் வாகன போக்குவரத்து முடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் வாகனங்களில் பயணிப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

    கடும் பனிப்பொழிவு காரணமாக வட மாநிலங்களில் சில இடங்களில் விமான சேவை ஒத்திவைக்கப்பட்டது. சில விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

    டெல்லி, பஞ்சாப் இரு மாநிலங்களிலும் தெருக்களில் மக்கள் நடமாட முடியாத அளவுக்கு பனிப்பொழிவு இருந்தது. இதனால் காலை நீண்ட நேரம் வரை மக்கள் வீடுகளுக்குள் முடங்கி கிடந்தனர்.

    ×