என் மலர்
நீங்கள் தேடியது "Snake"
- பாம்பு திடீரென பைக்கின் உள்பகுதிக்குள் புகுந்தது.
- பாம்பை பிடிக்க முடியாததால் அந்தப் பகுதியில் இருந்த மெக்கானிக்கை வரவழைத்து பைக்கின் பாகங்களை ஒவ்வொன்றாய் கழற்றினர்.
அரக்கோணம்:
அரக்கோணம் அம்மனூர் பகுதியை சேந்தவர் சிவா. இவரது நண்பர் ரகு. இவர்கள் இருவரும் பைக்கில் நேற்று இரவு எஸ் ஆர் கேட் பகுதிக்கு வீட்டு தேவையான பொருட்களை வாங்க சென்றனர்.
பொருட்களை வாங்கிக் கொண்டு பைக்கில் ஏற முயன்றனர். அப்போது பைக்கிற்குள் பாம்பு ஒன்று புகுந்து சென்றது. இதனை பார்த்து அவர்கள் கூச்சலிட்டனர்.
பைக்கை நிறுத்தி அதில் சோதனை செய்தனர். அப்போது பாம்பு திடீரென பைக்கின் உள்பகுதிக்குள் புகுந்தது. அதற்குள் அங்கு ஏராளமான கூட்டம் கூடியது.
கம்பு மற்றும் சில பொருட்களைக் கொண்டு பைக்கை சுற்றி தேடிப் பார்த்தனர்.
பாம்பை பிடிக்க முடியாததால் அந்தப் பகுதியில் இருந்த மெக்கானிக்கை வரவழைத்து பைக்கின் பாகங்களை ஒவ்வொன்றாய் கழற்றினர். ஆனால் பாம்பு அவர்களிடம் சிக்காமல் ஆட்டம் காட்டியது.
பின்னர் முன் பகுதியில் உள்ள கைப்பிடி நடுவில் உள்ள மேல் பாகத்தை கழட்டியபோது 2 அடி நீளமுள்ள பாம்பு அங்கு பதுங்கி இருந்தது. அதனை பிடித்து வெளியில் எடுத்தனர்.
இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- பாம்பை சமூக ஆா்வலா் பிடித்து வனப் பகுதியில் விடுவித்தாா் .
- 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா்.
அவினாசி :
சேவூா் அருகே சாலைப்பா ளையம் அரசு நடுநிலைப் பள்ளி சத்துணவுக் கூடத்துக்குள் புகுந்த பாம்பை சமூக ஆா்வலா் பிடித்து வனப் பகுதியில் விடுவித்தாா். அவிநாசி வட்டம், சேவூா் அருகே சாலையப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்நிலையில், இங்குள்ள சத்துணவுக் கூடத்துக்குள் திங்கள்கிழமை மதியம் திடீரென 3 அடி நீளமுள்ள பாம்பு புகுந்தது.
இதைப் பாா்த்த சத்துணவுப் பணியாளா்கள், சமூக ஆா்வலரும், பாம்பு பிடிப்பதில் பழக்கப்ப ட்டவருமான விஜய்க்கு தகவல் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த விஜய் பாதுகாப்பான முறையில் பாம்பை பிடித்து வனப் பகுதியில் விடுவித்தாா்.
- கிராம மக்கள் அசைவ உணவு சாப்பிட்டால் பாம்பு கடிக்கும் என்று நம்புவதாக தெரிவித்தனர்.
- கிராமத்தில் உள்ள அனைவருமே சைவ உணவையே சாப்பிடுகிறார்கள்.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம், தேன்கனல் மாவட்டத்தில் பென்டசாலியா கிராமத்தில் உள்ள மக்கள் அசைவ உணவே சாப்பிடுவதில்லை.
இதுபற்றிய தகவல் வெளியானதும், அந்த கிராம மக்கள் அசைவ உணவை சாப்பிடாதது ஏன்? என்று பலரும் விசாரிக்க தொடங்கினர். இதில் வெளியான தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அதற்கு காரணம் இக்கிராம மக்கள் அசைவ உணவு சாப்பிட்டால் பாம்பு கடிக்கும் என்று நம்புவதாக தெரிவித்தனர். காலம், காலமாக இதனை கடைபிடித்து வருவதாகவும் அவர்கள் கூறினர்.
கிராமத்தின் நம்பிக்கைக்கு எதிராக யாராவது அசைவ உணவு சாப்பிட்டால் அவர்களுக்கு கண்பாதிப்பு ஏற்படும், உடல் நலக்குறைபாடுகள் உருவாகும் என்றும் முன்னோர் கூறியுள்ளதாக தெரிவித்தனர்.
இதன்காரணமாக அந்த கிராமத்தில் உள்ள அனைவருமே சைவ உணவையே சாப்பிடுகிறார்கள்.
சைவ உணவை சாப்பிடுவதால் இந்த கிராமத்தில் உள்ள மக்கள் யாரும் ஆடு, கோழி போன்ற வீட்டு விலங்குகளையும் வளர்ப்பதில்லை.
இதுபற்றி அக்கிராம மக்கள் கூறும்போது, எங்கள் நம்பிக்கைக்கு எதிராக இங்குள்ள யாராவது அசைவம் சாப்பிட்டால் அவர் கண்டிப்பாக கடவுளின் தண்டனையை அனுபவிப்பார் என்றனர்.
- நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட துறைகளை சேர்ந்த அலுவலகங்கள் இயங்கி வருகிறது.
- பாம்பு கடித்த தீணணைப்பு வீரர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நெல்லை, அக்.27-
நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 10-க்கும் மேற்பட்ட துறைகளை சேர்ந்த அலுவலகங்கள் இயங்கி வருகிறது. தரைதளத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அலுவலகம் இயங்கி வருகிறது.
இங்கு 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் ேநற்று ஊழியர்கள் வழக்கம் போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அதிகாரி ஒருவரின் காலின் அருகில் ஏதோ ஒன்று ஊர்ந்து செல்வதை அறிந்தார். பின்னர் அது பாம்பு என்று அறிந்ததும் சுதாரித்து கத்தி கூச்சலிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சக ஊழியர்கள் பதறியபடி வெளியே சென்றனர். தகவலறிந்ததும் சம்பவ இடத்திற்கு பாளை தீயணைப்பு வீரர்கள் விரைந்து செனறு பாம்பை தேடும்பணியில் ஈடுபட்டிருந்தனர்.
ஆனால் அதற்குள் அந்த பாம்பு மறைவிடத்திற்கு சென்றது. எனினும் வெகுநேரமாக பல்வேறு இடங்களில் தீயணைப்பு வீரர்கள் பாம்பை தேடினர். ஆனால் அது சிக்கவில்லை.
இதனால் ஊழியர்கள் அலுவலகத்திற்கு செல்லாமல் அச்சமுடன் வாசலிலேயே வெகுநேரம் காத்திருந்தனர்.
இந்நிலையில் இன்று 2-வது நாளாக பாம்பை பிடிக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்ட னர். அப்போது அங்கு சாரைப்பாம்பு நிற்பதை பார்த்தனர். அதனை தீயணைப்பு வீரர் அமல்ராஜ் என்பவர் பிடிக்க முற்பட்டார். அப்போது அவரை பாம்பு கடித்தது. இதைத்தொடர்ந்து உடனடியாக அவர் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே சகவீரர்கள் அந்த பாம்பை பிடித்து சென்றனர்.
- பாம்பிடம் இருந்து விலகி பாதுகாப்பான இடத்திற்கு வீரர்கள் சென்றனர்.
- பாம்பு நுழைந்ததால் ஆட்டம் சிறிது நேரம் தடைபட்டது.
கவுகாத்தி:
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான 2-வது டி20 போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சபாரா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் களம் இறங்கி பேட்டிங் செய்து கொண்டிருந்தது. போட்டியின் 7-வது ஓவரின்போது மைதானத்திற்குள் பாம்பு ஒன்று நுழைந்தது. இதை கவனித்த தென் ஆப்பிரிக்க வீரர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக நடுவரிடம் தெரிவித்தனர்.

மேலும் பாம்பு இருந்த பகுதியில் இருந்து விலகி பாதுகாப்பான இடத்திற்கு அவர்கள் சென்றனர். இதனால் போட்டி சிறிது நேரம் தடைபட்டது. உடனடியாக விரைந்து வந்த மைதான பராமரிப்பாளர்கள், கம்பி ஒன்றின் உதவியுடன் பாம்பை பிடித்து சென்றனர். இதையடுத்து ஆட்டம் மீண்டும் தொடங்கி நடைபெற்றது.
- ஒரு வீட்டுக்குள் அழையா விருந்தாளியாக பாம்பு ஒன்று நுழைந்தது.
- போலீசார் பாம்பை உயிருடன் மீட்டு காட்டுக்குள் விட்டனர்.
வாஷிங்டன் :
அமெரிக்காவின் அலபாமா மாகாணம் யூபாலா நகரில் உள்ள ஒரு வீட்டுக்குள் அழையா விருந்தாளியாக பாம்பு ஒன்று நுழைந்தது. இதை கண்டு பதறிப்போன குடும்பத்தினர் பாம்பை அடித்து விரட்ட முயன்றனர். ஆனால் அந்த பாம்பு அவர்களிடம் சிக்காமல் மாயமாய் மறைந்தது. இதையடுத்து அவர்கள் பாம்பு எங்கே போனது என வீடு முழுவதும் சல்லடை போட்டு தேடினர். அப்போது வீட்டின் கழிவறை கோப்பைக்குள் அந்த பாம்பு பதுங்கி இருப்பதை கண்டு அதிர்ந்து போயினர். கழிவறை கோப்பைக்குள் இருக்கும் பாம்பை எப்படி வெளியே எடுப்பது என்று தெரியாமல் அவர்கள் தவித்தனர்.
பின்னர் அவர்கள் போலீசை தொடர்பு கொண்டு உதவி கேட்டனர். அதன் பேரில் விரைந்து சென்ற போலீசார் பாம்பை உயிருடன் மீட்டு காட்டுக்குள் விட்டனர். முன்னதாக கழிவறை கோப்பைக்குள் பாம்பு பதுங்கி இருந்ததை பார்த்து வியந்துபோன போலீசார் அதை புகைப்படம் எடுத்து 'பேஸ்புக்'கில் பதிவிட்டனர். அந்த பதிவு வைரலாக பரவி வருகிறது.
- அங்கன்வாடி ஊழியர்களும், பெற்றோர்களும் பாம்பை பார்த்து அலறி அடித்து ஓடினர்.
- போலீசார், தீயணைப்புத்துறையினர் பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர் .
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சி 20,30 வது வார்டு காமராஜர் நகர் 1வது வீதியில் அங்கன்வாடி பள்ளிக்கூடம் செயல்பட்டு வருகிறது .இங்கு சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து சுமார் 80க்கும் மேற்பட்ட குழந்தைகள் பால்வாடி பள்ளிக்கு வந்து செல்லும் நிலையில் இன்று காலை 9 மணி அளவில் அங்கன்வாடி ஊழியர்கள் பள்ளியை திறக்க வந்தபோது கட்டடத்தில் இருந்து பாம்பு ஒன்று வந்ததாக கூறப்படுகிறது .
அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் பள்ளியில் விட்டு செல்வதற்காக வந்திருந்த பெற்றோர்களும் பாம்பை பார்த்து அலறி அடித்து ஓடினர்.
இது குறித்து உடனடியாக வடக்கு காவல் நிலையத்திற்கும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது .சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், தீயணைப்புத்துறையினர் பாம்பை பிடிக்கும் பணியில் ஈடுபட்டனர் . அங்கன்வாடி கட்டிடம் சிதிலமடைந்த நிலையில் காட்சி அளிப்பதால் கட்டிடத்திற்குள் ஏராளமான பூரான் ,பல்லி பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அவ்வப்போது மாணவர்களை அச்சுறுத்தி வருவதாக அங்கன்வாடி ஊழியர்கள் கவலை தெரிவித்தனர். உடனடியாக இந்த கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கலபுரகி மாவட்டம் மல்லாபாத் கிராமத்தில் வசித்து வருபவர் பாகம்மா.
- இவர் மீது ஒரு நாகப்பாம்பு ஏறி படமெடுத்தபடி இருந்தது.
பெங்களூரு :
கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் அப்சல்புரா தாலுகா மல்லாபாத் கிராமத்தில் வசித்து வருபவர் பாகம்மா. இவர் அப்பகுதியில் விவசாய கூலித்தொழில் செய்து வருகிறார். நேற்று காலையில் இவர் வேலை செய்த களைப்பில் விவசாய நிலம் அருகே உள்ள மரத்தின் கீழ் கட்டிலில் படுத்து இருந்தார்.
அவர் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தபோது திடீரென அவரின் காது அருகே 'புஷ், புஷ்' என்று சத்தம் கேட்டது. இதனால் அவர் கண்விழித்து பார்த்தபோது அவர் மீது ஒரு நாகப்பாம்பு ஏறி படமெடுத்தபடி இருந்தது. அதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பாகம்மா, சில நிமிடங்கள் அசைவில்லாமல் அப்படியே படுத்துக் கொண்டார்.
அதையடுத்து அந்த பாம்பு அவர் மேல் இருந்து இறங்கி புதருக்குள் சென்றுவிட்டது. இதனை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
- பவானி அருகே உள்ள குதிரைக்கல் மேடு பேரேஜ் பகுதியில் பாம்பு இருப்பதாக பவானி தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது.
- சுமார் 5 அடி நீளம் கொண்ட சாரை பாம்பை உயிருடன் பிடித்தனர்.
பவானி:
பவானி அருகே உள்ள குதிரைக்கல் மேடு பேரேஜ் பகுதியில் பாம்பு இருப்பதாக பவானி தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரி விக்கப்பட்டது.
இதையடுத்து பவானி தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) ஆறுமுகம் மற்றும் தீய ணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
அப்போது பேரேஜ் பகுதியில் தீயணைப்பு துறையினர் சோதனை செய்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள ஒரு இரும்பு குழாயின் உள்ளே பாம்பு ஒன்று இருந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் பாம்பு பிடிக்கும் சாதனத்தின் மூலம் சுமார் 5 அடி நீளம் கொண்ட சாரை பாம்பை உயிருடன் பிடித்தனர். தொடர்ந்து அந்த பாம்பை வன பகுதியில் தீயணைப்பு துறையினர் விட்டனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- பூங்குணம் ஊராட்சி அங்கன்வாடி மையத்தில் இருபதுக்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.
- குழந்தைகளின்அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து சாரைபாம்பை விரட்டினர் .
கடலூர்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் பூங்குணம்ஊராட்சி அங்கன்வாடி மையம் உள்ளது. இங்கு20-க்கும்மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இங்கே நேற்றுதிடீரென்று சாரை பாம்பு ஒன்று புகுந்தது. இதனை கண்ட குழந்தைகள் அலறிஅடித்து ஓடினர். குழந்தைகளின்புத்தகபை மீது பாம்பு புகுந்து ஓடியது. அங்கு இருந்தஅங்கன்வாடி மைய பொறுப்பாளர் குழந்தைகளை பாதுகாப்பாக வெளியே அைழத்து சென்றார். குழந்தைகளின்அலறல் சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து சாரைபாம்பை விரட்டினர் இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.அங்கன்வாடி மையத்தைஒட்டியுள்ளகுடியிருப்பில் மண்டி கிடக்கும் புதர்களைஅகற்ற வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் எடுத்துள்ளனர்.