search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Snake"

    • குடோனில் பதுங்கி இருந்த 4 அடி நீள கண்ணாடி வீரியன் பாம்பு லாவகமாக பிடிக்கப்பட்டது.
    • ஆள்நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார்.

    சீர்காழி:

    சீர்காழி விளந்திட சமுத்திரம் பகுதியில் தனியார் டூ வீலர் ஷோரூம் உள்ளது.

    இந்த ஷோரூமின் ஒரு பகுதியில் உள்ள குடோனில் பாம்பு ஒன்று கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள்.

    இது குறித்து சீர்காழியை சேர்ந்த பாம்பு பிடிக்கும் நபரான பாண்டி யனுக்கு தகவல் அளித்தனர்.

    அதன்பேரில் அங்கு சென்ற பாண்டியன் குடோனில் பதுங்கி இருந்த நான்கடி நீளம் உள்ள கடுமையான விஷம் கொண்ட கண்ணாடி விரியன் பாம்பை லாவகமாக பிடித்துடப்பாவில் அடைத்து ஆள் நடமாட்டம் இல்லாத வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டார்.

    தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை லாவமாக பிடித்தனர்.

    கடலூர்:

    கடலூர் புதுக்குப்பத்தில் குழந்தைகள் மையம் செயல்பட்டு வருகின்றது. இந்த குழந்தைகள் மையத்தில் 16 குழந்தைகள் படித்து வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல் குழந்தைகள் மையம் இயங்கி வந்தது. அங்கு இருந்த பணியாளர் சத்து மாவு எடுப்பதற்காக அறைக்கு சென்றுள்ளார். அப்போது திடீரென்று பாம்பு ஒன்று இருந்தது. இதனை பார்த்து அலறிய பணியாளர் "பாம்பு பாம்பு" என அலறிக்கொண்டு அங்கிருந்த குழந்தைகளை பாதுகாப்பாக மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். இதனை தொடர்ந்து அங்கிருந்து பணியாளர்கள் தங்கள் மேல் அதிகாரிக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன் பேரில் மேல் அதிகாரிகள் கடலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து பாம்பை லாவமாக பிடித்தனர். இதனை பார்த்த பிறகு தான் பணியாளர்கள் பெரும் மூச்சுவிட்டபடி அமைதி நிலைக்கு வந்தனர். தற்போது மழைக்காலங்கள் என்பதால் கட்டிடங்களுக்குள் பாம்புகள் வருவதால் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என தீயணைப்பு துறையினர்கள் அறிவுறுத்தினார்கள். இந்த சம்பவத்தால் பொதுமக்களும் பெற்றோர்களும் திரண்டதால் பரபரப்பாக காணப்பட்டது.

    • காரை பல பாகங்களாக பிரித்து, தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
    • போக்கு காட்டிய பாம்பு யாரிடமும் சிக்காமல் பதுங்கியது.

    ஆத்தூர்:

    நாமக்கல் மாவட்டம் நாரைக்கிணறு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்(45). விவசாயியான இவருக்கு சொந்தமாக ஒரு கார் உள்ளது. தனது காரை பழுது பார்ப்பதற்காக ராஜேந்திரன் மற்றும் அவரது சகோதரர் மணிகண்டன் ஆகிய 2 பேரும் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே புதுப்பேட்டை பகுதியில் உள்ள கார் பழுதுபார்க்கும் இடத்திற்கு வந்து கொண்டு இருந்தனர்.

    காரை மணிகண்டன் ஓட்டி வந்தார். கார் புதுப்பேட்டை பகுதியில் வந்தபோது காருக்குள் முன் பகுதியில் நான்கடி நீளமுள்ள பாம்பு வெளியே வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மணிகண்டன் மற்றும் ராஜேந்திரன் காரை சாலையின் ஓரத்தில் அவசரமாக நிறுத்தினர்.

    பின்னர் இதுகுறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய வீரர்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். காரை பல பாகங்களாக பிரித்து, தண்ணீரை பீய்ச்சி அடித்தும் பாம்பை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனாலும் பாம்பு சிக்கவில்லை.

    தீயணைப்பு வீரர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. போக்கு காட்டிய பாம்பு யாரிடமும் சிக்காமல் பதுங்கியது. பாம்பு கிடைக்காத ஏமாற்றத்தில் தீயணைப்பு துறையினரும் ஏமாற்றத்துடன் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • வனத்துறையினர் பிடித்தனர்
    • ஒரு அடி நீளத்தில் மெல்லிய பாம்பு இருந்தது. உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை அவ்வை நகரில் ஒரு வீட்டின் வெளிபுற இரும்பு கிரில் கதவில் வித்தியாசமாக ஏதோ தென்பட்டது.

    உற்று நோக்கியதில் ஒரு அடி நீளத்தில் மெல்லிய பாம்பு இருந்தது. உடனே வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    ஊழியர் கண்ணதாசன் விரைந்து வந்து பாம்பை பிடித்தார். "வெள்ளிகோல் வரையன்" என்ற இந்த பாம்பு விஷத்தன்மை கொண்டதல்ல. கரப்பான் பூச்சி, பல்லிகளை மட்டும் உண்ண கூடியது.மழை காலத்தில் அதிகம் தென்படும்.

    அந்த வகையில் காலை முதல் லாஸ்பேட்டை பகுதியில் தொடர் மழை பெய்ததால் வெளியே வந்த பாம்பு பல்லியை பிடிக்க காத்திருந்த போது வனத்துறை ஊழியரிடம் சிக்கியுள்ளது.

    இதனை காட்டுப்பகுதியில் விட அவர் எடுத்து சென்றார்.

    • கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் சேவை மைய கட்டிடம் உள்ளது.
    • அந்த கட்டத்தின் அருகில் ஒரு பாம்பு இருந்தது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் சேவை மைய கட்டிடம் உள்ளது.

    இதில் மகளிர் திட்ட வாழ்வாதார இயக்கம் அலுவலகம் இயங்கி வருகிறது.

    இந்த நிலையில் நேற்று இக்கட்டிடத்தின் பின்பகுதியில் சுவரையொட்டி ஒரு பாம்பு படுத்து கிடந்ததை பார்த்து அங்குள்ள அனை வரும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து கொள்ளிடம் ஒன்றியக்குழு தலைவர் ஜெயபிரகாஷ் நடவடிக்கை எடுத்ததன் பேரில், சீர்காழியை சேர்ந்த பாம்பு பாண்டியன் என்பவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்த போது பாம்பு ஓடிவிட்டது.

    அந்த பாம்பை பாண்டியன் சுமார் 2 மணி நேரம் தேடி கண்டுபிடித்து அதனை லாவகமாக பிடித்தார்.

    பின்னர் பிடிபட்ட பாம்பு கண்ணாடி விரியன் பாம்பு என்று அவர் தெரிவித்தார்.

    அதனை தொடர்ந்து பிடிபட்ட பாம்பு கொள்ளிடம் வட்டார வளர்ச்சி அலுவலர் அருள்மொழியி டம் ஒப்படைக்கப்பட்டு, சீர்காழி வனத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

    • ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் பாம்புகள் நடமாட்டத்தால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.
    • தெருவிளக்கு அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் அரசு மருத்துவக்கல்லூரி கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் உள்ளது. இந்த மருத்துவ கல்லூரியில் ராமநாதபுரம் அரசு மருத் துவ கல்லூரி மாணவர்கள், எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி மாணவர்கள் என 500-க்கும் மேற்பட்டோர் படிக் கின்றனர்.

    இவர்கள் அனைவரும் இங்குள்ள விடுதியில் தங்கி உள்ளனர். இவர்கள் கல்லூரிக்கு வரும் சாலை யில் இரவு நேரத்தில் தெரு விளக்குகள் எரிவதில்லை. கல்லூரியை ஒட்டி உள்ள பகுதிகள் புதர்கள் நிறைந்த பகுதியாக காட்சி அளிக்கி றது.

    இதனால் அடிக்கடி பாம்புகள் மற்றும் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ளதால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

    நேற்று முன்தினம் மருத்துவ கல்லூரி சாலை யில் 2 பாம்புகள் சென்ற தால் மாணவர்கள் அச்ச மடைந்தனர். சில நாட்க ளுக்கு முன் கொடிய விஷத்தன்மை கொண்ட கண்ணாடி விரியன் பாம்பு சென்றுள்ளது. மருத்துவ கல்லூரி பகுதியில் பாம்பு கள் படையெடுக்கும் நிலை ள்ளது.

    மேலும் விஷ பாம்பு மற்றும் ஜந்துகளால் மாண வர்களுக்கு ஆபத்து உள் ளது. அதிகாலையில் இப் பகுதியில் நடை பயிற்சி செய்வோரும் அச்சமடைந் துள்ளனர். அப்பகுதியில் மாணவர்கள் அச்சமின்றி சென்று வர தெரு விளக்கு கள் அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும். மருத்துவ கல்லூ ரிக்கு செல்லும் சாலை முழுவதும் விளக்குகள் அமைத்து உயிர் காக்கும் மருத்துவ மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று மாண வர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வேட்டமங்கலம் வீட்டுக்குள் நல்ல பாம்பு புகுந்தது
    • தீயணைப்பு துறையினர் பாம்பை பிடித்து வனப்பகுதியில் விட்டனர்

    வேலாயுதம்பாளையம்,

    கரூர் மாவட்டம் நொய்யல் அருகே வேட்டமங்கலம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் ஆனந்தராஜா. இவர் ஓட்டு வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் ஓட்டு வீட்டு விட்டத்தில் நல்ல பாம்பு ஒன்று இருந்து உள்ளது. அதை பார்த்த அனந்தராஜா இது குறித்து வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    தகவலின் அடிப்படையில் நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று வீட்டுக்கு மேலே ஏறி பாம்பை தேடி பிடித்தனர். பின்னர் பாம்பு வனப்பகுதிக்குள் விடப்பட்டது.

    • பார்சியல் ஆல்பினோ கோப்ரா வகையைச் சார்ந்த இந்த பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.
    • பாம்பை பார்த்தால் உடனடியாக வனத்துறை மற்றும் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

    கோவை,

    கோவை சுந்தராபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்தவர் வழக்கம் போல தண்ணீர் தொட்டியில் தண்ணீர் நிரப்ப சென்றார்.

    அப்போது அந்த தொட்டிக்குள் ஒரு பாம்பு பதுங்கி இருப்பது தெரிய வந்தது. எனவே அவர் உடனடியாக வனஉயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளையின் பாம்பு பிடி வீரர் மோகன் என்பவரை தொடர்புகொண்டார்.

    அவரும் உடனடியாக சம்பவ பகுதிக்குச் சென்று தண்ணீர் தொட்டியை திறந்து பார்த்து உள்ளார். அப்போது வனப் பகுதியில் அரிதாக உலா வரும் வெள்ளை நாகம் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.

    பார்சியல் ஆல்பினோ கோப்ரா வகையைச் சார்ந்த இந்த பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. கோவையில் சில மாதங்களுக்கு முன்பாக இதேபோல வெள்ளை நாகப்பாம்பு பிடிபட்டது.

    மழைக் காலம் என்பதால் இனி பாம்புகள் பொது இடங்களில் உலாவும். பாம்பை பார்த்தால் உடனடியாக வனத்துறை மற்றும் பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என வனவிலங்கு ஆர்வலர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • அப்போது வைக்கோல் போரில் இருந்த வந்த விஷ பாம்பு இவரை கடித்தது.
    • தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகம் அருகே பல்லகச்சேரி கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் மகன் நவீன் (வயது 11). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இவர் சம்பவத்தன்று மாண வர்களுடன் சேர்ந்து விளையாடிக் கொண்டி ருந்தார். அப்போது வைக்கோல் போரில் இருந்த வந்த விஷ பாம்பு இவரை கடித்தது.

    இதனையடுத்து நவீனை கள்ளக்குறிச்சி அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனு மதித்தனர். தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு மாணவன் நவீன் இறந்து போனார். இது குறித்து தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • பாம்பு பீடி வீரரான சஞ்சய் என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
    • பிடிபட்ட 2 பாம்புகளும் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    கோவை,

    கோவை 100 அடி ரோடு, 9-வது வீதியில் உள்ள சுப்ரமணி என்பவர் வீட்டின் தண்ணீர் மீட்டர் பாக்ஸில் 4 அடி நீள சாரை பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. இதுபற்றி பாம்பு பீடி வீரரான சஞ்சய் என்பவருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து, பெட்டியில் பதுங்கி இருந்த பாம்பை லாவகமாக பிடித்தார்.

    இதேபோல், ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கி இருந்த 6 அடி நீள சாரை பாம்பையும், பாம்பு பிடி வீரர் சஞ்சய் பிடித்தார்.

    பிடிபட்ட 2 பாம்புகளும் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டது. வனத்துறையினர் பாம்புகளை மீட்டு மதுக்கரை வனப்பகுதியில் விட்டனர்.

    • மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
    • வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மில்லத் நகர் பகுதியை சேர்ந்தவர் அம்ஜத்( வயது 37), கூலி தொழிலாளி. இவரது வீட்டின் அருகே ஒரு குட்டி நாக பாம்பு ஊர்ந்து சென்றது.

    அப்போது குடிபோதையில் இருந்த அம்ஜத், நாக பாம்பு குட்டியை கையில் பிடித்தார். அப்போது பாம்பு அம்ஜத் கையை கடித்ததில் அவர் மயங்கி கீழே விழுந்தார்.

    இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் உடனடியாக அவரை மீட்டு, கடித்த பாம்பை பாட்டிலில் அடைத்து எடுத்துக் கொண்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    அங்கு அம்ஜத்க்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

    அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வாணியம்பாடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாட்டிலில் பாம்புடன் சிகிச்சைக்கு வந்த சம்பவத்தால் வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • காலையில் மாணவர்கள் வகுப்பறையில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் அவற்றை சரி செய்து கொண்டிருந்தனர்.
    • அலமாரியில் இருந்த 4 அடி நீள நல்ல பாம்பு பிச்சம்பட்டியை மாணவனின் கையில் சுற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆண்டிபட்டி;

    தேனி மாவட்டம் ஆண்டி பட்டி அருகே கன்னியப்ப பிள்ளை பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.இப்பள்ளியில் காலையில் மாணவர்கள் வகுப்பறையில் புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தில் அவற்றை சரி செய்து கொண்டிருந்தனர். அப்பொழுது அலமாரியில் இருந்த 4 அடி நீள நல்ல பாம்பு பிச்சம்பட்டியை சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் மாணவன் விக்னேஷ் (வயது 14) கையில் சுற்றி கொண்டது.

    இதனால் அலறியடித்த மாணவன் பதட்டத்தில் கையை உதறினார். இதனால் பாம்பு கையில் இருந்து கீழே விழுந்து ஓடிவிட்டது. இதனை அக்கம் பக்கத்தில் இருந்த மாணவர்கள் பார்த்து கூச்சலிட்டனர். இதனால் விக்னேஷ் மயங்கி கீழே விழுந்தார். உடனே அங்கு வந்த ஆசிரியர்கள் மாணவனை தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பாம்பு கடித்ததற்கான எந்தவித தடயங்களும் இல்லாத நிலையில் மாணவனுக்கு ரத்த பரிசோதனை செய்து தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

    இதுகுறித்து பள்ளி நிர்வாகத்தினர் கூறிய தாவது:-

    மாணவர் விக்னேஷ் பாம்பு கடித்து விட்டதாக பதட்டத்தில் அலறியதால் உடனடியாக ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றோம். ஆனால் பாம்பு கடித்ததற்கான எந்தவித தடயங்களும் இல்லை என உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் 24 மணி நேர பாதுகாப்பில் அவர் வைக்கப்பட்டுள்ளார் என்றனர்.

    தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவ லாக மழை பெய்து வருகிறது. பல அரசு பள்ளிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மேலும், சுகாதாரமற்ற காரணங்களால் இது போன்ற விஷ சந்துக்கள் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து விடுகின்றன. எனவே பள்ளி வளாகங்கள் தூய்மையாக இருப்பதை கல்வித்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×