என் மலர்
நீங்கள் தேடியது "ப.சிதம்பரம்"
- அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து இருக்கலாம். ஆனால், நாடு கடத்தல் மனிதாபிமான முறையில் செய்யப்பட வேண்டும்.
- அவர்கள் ஏன் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும்?. இங்கு நிலைமை மிகவும் மோசமான இருப்பதாக நினைக்கிறார்கள்.
அமெரிக்காவில் எந்தவிதமான ஆவணங்களின்றி சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்கள் அவர்களுடைய நாடுகளுக்கு நாடு கடத்தப்படுவார்கள் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வெளிநாட்டினரை அமெரிக்கா, அதனுடைய ராணுவ விமானங்கள் மூலமாக நாடு கடத்தி வருகிறது.
அந்த வகையில் 104 இந்தியர்களை நாடு கடத்தியது. அவர்கள் நேற்று பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் வந்தடைந்தனர். அவர்கள் விமானத்தில் வரும்போது விலங்குகளால் பிணைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கு எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மாநிலங்களவையில் விளக்கம் அளித்தார். அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியவர்கள் நாடு கடத்தப்படுவது இது முதல்முறை அல்ல. நாடு கடத்தப்படுபவர்களுக்கான சட்ட வழிபாட்டு நெறிமுறைப்படி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்" என விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், காங்கிரஸ் கட்சி எம்.பி.யுமான ப.சிதம்பரம் கூறியதாவது:-
இந்த பிரச்சனை இரண்டு பக்கங்களை கொண்டுள்ளது. ஒரு பக்கம் நாடு கடத்தும்போது, மனிதாபிமானமற்ற முறையில் இந்தியர்கள் நடத்தப்பட்டது. அவர்கள் அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து இருக்கலாம். ஆனால், நாடு கடத்தல் மனிதாபிமான முறையில் செய்யப்பட வேண்டும். அவர்களை சங்கிலியால் பிணைத்து ராணுவ விமானத்தில் கொண்டு செல்ல முடியாது.
மறுபக்கம்... அவர்கள் ஏன் அமெரிக்காவிற்கு சட்டவிரோதமாக நுழைய முயல்கிறார்கள். அவர்கள் ஏன் இந்தியாவில் இருந்து வெளியேற வேண்டும்?. வெளிப்படையாக, இந்தியாவில் நிலைமை மிகவும் மோசமான இருப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள். வேறு நாட்டிற்கு சட்டவிரோதமாக நுழைவதற்கு, இளைஞர்களை இந்தியாவில் இருந்து வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு இந்திய அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது.
இவ்வாறு ப.சிதம்பரம் தெரிவித்தார்.


புதுடெல்லி:
காங்கிரஸ் தோல்வி குறித்து ஆராய நேற்று டெல்லியில் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது.
சோனியா காந்தி, ராகுல் காந்தி, மன்மோகன்சிங், பிரியங்கா, மூத்த தலைவர்கள் ஏ.கே. அந்தோணி, ப.சிதம்பரம் மற்றும் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
ராகுல் காந்தி தோல்விக்கு பொறுப்பேற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இந்த முடிவை காரிய கமிட்டி ஏற்றுக் கொள்ளவில்லை.
தோல்வி குறித்து ஆராயும் போது ராகுல் காந்தி கட்சியின் கீழ்மட்ட தலைவர்களின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துள்ளார். மக்களிடம் காங்கிரஸ் கட்சியின் திட்டங்களை சரியாக பிரசாரம் மூலமாக சேர்க்கவில்லை என்று அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் பாரதிய ஜனதாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் கீழ்மட்ட தலைவர்கள் பிரசாரயுக்திகளை கையாளவில்லை. நான் மேற்கொண்ட பிரசார விஷயங்களை கூட வாக்காளர்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் உள்ள மாநிலங்களில் கூட பிரசாரம் சரியில்லை என்று அவர் குறை கூறினார்.
மத்திய பிரதேச முதல்-மந்திரி கமல்நாத், ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட், ப.சிதம்பரம் போன்றவர்கள் தனது மகன்களுக்கு டிக்கெட் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தார்கள்.
நான் எவ்வளவோ எடுத்து சொல்லியும் அதை ஏற்க மறுத்தார்கள். விட்டுக் கொடுக்கும் மனநிலையில் அவர்கள் இல்லை. இப்படி இருந்தால் எப்படி கட்சியை நடத்துவது? என்று ஆதங்கத்துடன் ராகுல் பேசினார்.
கட்சிக்கு யார் வேண்டுமானாலும் தலைவராக இருக்கட்டும். நாங்கள் மட்டும் (இந்திரா காந்தி குடும்பம்)தான் தொடர்ந்து தலைவர்களாக இருக்க வேண்டுமா? என்று உணர்ச்சிவசமாக கூறினார்.

அப்போது அவரை ஏ.கே. அந்தோணி, அகமது பட்டேல், ப.சிதம்பரம் ஆகியோர் அமைதிப்படுத்தினார்கள்.
பிரியங்கா கூறும்போது, ராகுல் காந்தி தலைவராக இருக்கக்கூடாது என்று பாரதிய ஜனதா நினைக்கிறது. அவர் ராஜினாமா செய்தால் பாரதிய ஜனதாவின் எண்ணம் ஈடேறி விட்டதாக ஆகி விடும் என்றார்.
சிலர் கூறும்போது, நீங்கள் ராஜினாமா செய்தால் அடுத்து கட்சிக்கு யார் தலைவர்? என்பதை சொல்ல முடியுமா? என்று ராகுல் காந்தியிடம் கேட்டனர்.
மேலும் சிலர் கூறும் போது, பாரதிய ஜனதா, ஆர்.எஸ்.எஸ்.சை கடுமையாக தாக்கி பேசுவதால் நீங்கள் காங்கிரஸ் தலைவராக இருக்கக்கூடாது என்று அவர்கள் விரும்புகிறார்கள்.
நீங்கள் ராஜினாமா செய்வதன் மூலம் அவர்கள் விருப்பம் நிறைவேறி விடும். இதற்கு இடமளிக்க கூடாது என்று சொன்னார்கள்.
பங்கரவாதிகள் தாக்குதல், அதற்கு இந்தியா கொடுத்த பதிலடி போன்றவையால் தான் மோடியின் செல்வாக்கு திடீரென உயர்ந்து அவர் வெற்றி பெற வாய்ப்பாக ஆகி விட்டது என்று பலரும் கூறினார்கள். பலர் ஓட்டு எந்திரத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும் சொன்னார்கள்.
அப்போது ஏ.கே. அந்தோணி குறுக்கிட்டு முறைகேடுதான் காரணம் என்று நாம் பொத்தாம் பொதுவாக கூறி விட முடியாது. கட்சியை அடிப்படை ரீதியாக நாம் இன்னும் வளர்க்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம் என்று கூறினார்.
அப்போது ராகுல் காந்தி கட்சியின் எல்லா மட்டத்திலும் ஆய்வு செய்து முழுமையாக மாற்றி அமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. கட்சி பணிகளில் மாற்று முறையை கையாள வேண்டிய அவசியம் இருக்கிறது. இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்க கூடாது. அனைவரும் ஒத்துழைத்தால் தான் இதை செயல்படுத்த முடியும் என்று கூறினார்.
பிரதமர் மோடி, அமித்ஷா போன்றவர்கள் பாரதிய ஜனதாவை வளர்க்கும் பணியை கடுமையாக செய்கிறார்கள். அதே போன்று காங்கிரசிலும் பணிகள் இருக்க வேண்டும் என்று காரிய கமிட்டி உறுப்பினர்கள் ஆலோசனை தெரிவித்தனர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 2-வது முறையாக தொடர்ந்து தோல்வியை சந்தித்தது.
நாடுமுழுவதும் 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தையும் கூட பிடிக்க முடியாத பரிதாப நிலைக்கு சென்றுவிட்டது.
அதோடு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பாரம்பரிய தொகுதியான அமேதியில் தோல்வியை தழுவினார். இந்த தோல்வி காங்கிரசுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது.
தோல்விக்கு பொறுப்பேற்று கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வதாக அறிவித்தார். டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் தலைவர்கள் மத்தியில் ராகுல் காந்தி பேசும்போது தனது ராஜினாமா முடிவை கூறினார்.

ஆனால் அதை காங்கிரஸ் காரிய கமிட்டி ஒரு மனதாக ஏற்க மறுத்து நிராகரித்தது. கூட்டத்தில் பேசிய தலைவர்கள் பலரும் ராகுலின் விலகலை விரும்ப வில்லை. இதனால் ராகுல்காந்தி தனது முடிவை மாற்றிக் கொண்டார்.
இதற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தின் பேச்சும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.
ப.சிதம்பரம் பேசும்போது, ‘ராகுல் காந்தி ராஜினாமா செய்தால் தென்னிந்தியாவில் தொண்டர்கள் தற்கொலை முடிவுக்கு செல்வார்கள் என கூறினார். இதைக்கேட்டு ராகுல் காந்தி மனவருத்தம் அடைந்து தனது முடிவை மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.
இதேபோல தலைவர்கள் பலரும் பேசும்போது, வயநாடு தொகுதியில் மக்கள் உங்களுக்கு சாதனை வெற்றியை தந்துள்ளனர். எனவே கட்சி தலைவராக தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என ராகுல் காந்தியை கேட்டுக்கொண்டனர்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம், ஒரு தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-
தேர்தல் கமிஷன், நாட்டு மக்களை பெரிதும் ஏமாற்றி விட்டது. பா.ஜனதாவின் அத்துமீறல்கள், பிரதமர் மோடியின் உரைகள், பா.ஜனதாவால் செலவழிக்கப்படும் பெருமளவு பணம் ஆகியவற்றை தேர்தல் கமிஷன் மவுனமாக வேடிக்கை பார்க்கிறது.
எதிர்க்கட்சி வேட்பாளர்களின் சிறு செலவுகள் என்று கூறப்படுவதை எல்லாம் அவர்களின் செலவுக்கணக்கில் சேர்க்கிறது. அதே அணுகுமுறையை மேற்கொண்டால், பா.ஜனதா வேட்பாளர்கள் அனைவரும் தகுதியிழப்புக்கு ஆளாக வேண்டி இருக்கும்.
பா.ஜனதா தனது தோல்வியை மறைக்க ‘தேசியவாதம்’ என்ற கோஷத்தை எழுப்பி வருகிறது. பா.ஜனதா ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இங்கு எல்லோரும் தேசவிரோதியாகவா இருந்தார்கள்?
எல்லோரும் தேசபக் தர்கள்தான். எந்த தேசபக்தரையும் தேசவிரோதியாக கருத முடியாது. ஊடகங்களை கையில் போட்டுக்கொண்டு, இந்த பிரசாரத்தை பா.ஜனதா மேற்கொண்டு வருகிறது.
இப்போது கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால், “ஒவ்வொரு இந்தியனும் 5 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததுபோல் இப்போது மகிழ்ச்சியாக இருக்கிறானா?” என்பதுதான். என்னைக் கேட்டால் ‘இல்லை’ என்றுதான் சொல்வேன். ஒவ்வொரு இந்தியரும் அச்சத்துடனே வாழ்ந்து வருகிறார்கள். பெண்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள் உள்பட அனைவரும் அச்சத்துடனே இருக்கிறார்கள்.
பா.ஜனதா நிச்சயமாக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள முடியாது. பா.ஜனதா அல்லாத அரசே மத்தியில் அமையும். காங்கிரசும், அதன் தேர்தலுக்கு முந்தைய கூட்டணி கட்சிகளுமே முக்கிய பங்கு வகிக்கும். தேர்தலுக்கு முந்தைய கூட்டணி கட்சிகள் நிறைய தொகுதிகளை கைப்பற்றினால், 3-வது தடவையாக ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது.
சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி, திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள், நிலையான அரசு அமைய காங்கிரசை ஆதரிக்க வாய்ப்புள்ளது. எல்லா மதச்சார்பற்ற முற்போக்கு கட்சிகளும் நிலையான அரசு அமைய ஒன்று சேரும்.
இந்தியாவில், தேர்தல் சமயத்தில், சி.பி.ஐ., வருமான வரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவை இதற்கு முன்பு இப்படி பட்டவர்த்தனமாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டதே இல்லை. நாட்டில் 545 தொகுதிகள் உள்ளன. சில தொகுதிகளில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர்களிடம்தான் கணக்கில் காட்டாத பணம் இருக்கிறதா? எந்த பா.ஜனதா வேட்பாளரிடமும் கணக்கில் காட்டாத பணம் இல்லையா?
துப்பு கிடைத்ததாக கூறுகிறார்கள். எதிர்க்கட்சி வேட்பாளர்களைப் பற்றி மட்டுமே துப்பு கிடைக்குமா? பா.ஜனதா வேட்பாளர்கள் பற்றி துப்பு கிடைக்காதா? பிரதமர் மோடியின் ஒவ்வொரு கூட்டத்துக்கும் ரூ.10 கோடி செலவிடப்படுகிறது. இப்பணம் எங்கிருந்து வருகிறது? அதற்கு யார் செலவிடுகிறார்கள்? அதற்கு என்ன கணக்கு?
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார். #PChidambaram #ElectionCommission #Congress

ரபேல் விமான ஒப்பந்தம் குறித்து தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அறிக்கையில் கூறியிருப்பது பற்றி முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியதாவது:-
தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி அதனை ஏற்றுக்கொண்டது ஒரு நகைச்சுவையாக ஆகிவிட்டது. வருங்காலத்தில் அமையும் அரசு அந்த அமைப்பின் பெருமையையும், ஸ்திரத்தன்மையையும் மீட்கும். ஒப்பந்தத்தில் மறைக்கப்பட்டுள்ள எண்ணிக்கை தொடர்பான பிரச்சினைகள், விலை நிர்ணயம், ஒப்படைத்தல் போன்ற பல பிரச்சினைகள் குறித்து அந்த 33 பக்க அறிக்கை விளக்கும் என்றும், அதில் சரியானது, ஏற்றுக்கொள்ளக்கூடிய வெளிப்படைத்தன்மை ஆகியவை பற்றி கருத்து வெளியிடும் என்றும் நீங்கள் எதிர்பார்த்தீர்களா? அப்படி என்றால் நீங்கள் ஏமாந்துபோவீர்கள்.
இதுவே இறுதியானது என்று சொல்வதற்கு தலைமை கணக்கு தணிக்கையர் ஒன்றும் கடவுள் அல்ல.
இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார். #Rafale #CAG #Joke #Chidambaram
ஏழையிலும் ஏழைக்கு ஒதுக்கீடு என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் எல்லோரும் ஏழை என்றால் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது
— P. Chidambaram (@PChidambaram_IN) January 11, 2019
தமிழகத்தை கஜா புயல் தாக்கியது தொடர்பாக முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பதிவில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கிற்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். #GajaCyclone #Chidambaram
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
தமிழகத்தில் கஜா புயல் தாக்கியதால் ஏற்பட்டுள்ள சேதத்தை மதிப்பீடு செய்ய 2 உயர் அதிகாரிகள் கொண்ட மத்திய குழுவை உடனடியாக அனுப்பி வைக்கும்படி ராஜ்நாத் சிங்கை வேண்டுகிறேன். அப்போதுதான் இவர்களால் நேரடியாக பார்வையிட்டு முழுமையாக வெள்ளச் சேதத்தை அறிந்திட முடியும்.

மாநில அரசின் அறிக்கையை பெற்ற பிறகே மத்திய குழுவை வெள்ளச் சேத பகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் நடைமுறை தற்போது பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தக் குழு சேத பகுதிகளுக்கு வருவதற்கு 2-3 வாரங்கள் ஆகிவிடும். இதற்குள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பழுது மற்றும் மீட்பு பணிகள் நடந்து விடும் என்பதால் புயலால் ஏற்பட்ட தாக்கத்தை மத்திய குழுவால் முழுமையாக கண்டறிய இயலாது. எனவே மத்திய உள்துறை அமைச்சகம் வழக்கத்தில் உள்ள இந்த நடைமுறையை மாற்றியமைக்கும்படியும் வேண்டுகிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
மத்திய அரசு நிதி பற்றாக்குறையில் சிக்கி தவிப்பதாகவும், இதை சமாளிப்பதற்காக ரிசர்வ் வங்கியில் இருந்து ரூ.3.6 லட்சம் கோடி நிதி கேட்டு இருப்பதாகவும் சமீபத்தில் தகவல் வெளியானது. ஆனால் அரசிடம் போதுமான நிதி கையிருப்பு உள்ளதாக கூறிய மத்திய அரசு, ரிசர்வ் வங்கியின் பொருத்தமான பொருளாதார மூலதன கட்டமைப்பை வரையறுப்பது தொடர்பான பரிந்துரை மட்டுமே தற்போது விவாதிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தது.
இந்த விவகாரத்தில் முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் மத்திய அரசுக்கு பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளார். இந்த நிதியாண்டில் மத்திய அரசுக்கு நிதி தேவைப்படவில்லை என்றால், அரசின் பதவிக்காலம் இன்னும் 4 மாதமே இருக்கும் நிலையில் ரிசர்வ் வங்கி மீது அழுத்தத்தை கொடுப்பது ஏன்? என அவர் வினவினார்.
இது தொடர்பாக தனது டுவிட்டர் தளத்தில் மேலும் அவர் கூறுகையில், ‘தேசிய ஜனநாயக கூட்டணி அரசு 4½ ஆண்டுகளை கடந்து விட்டது. அதற்கு மேலும் 4 மாதங்கள் மட்டுமே உண்மையான பதவிக்காலம் உள்ளது. அப்படியிருக்க ரிசர்வ் வங்கியின் மூலதன கட்டமைப்பை வரையறுப்பதில் தற்போது அவசரம் காட்டுவதேன்? இந்த விவகாரத்தில் 4½ ஆண்டுகள் அமைதியாக இருந்தது ஏன்?’ என கேட்டுக்கொண்டு உள்ளார்.