என் மலர்
நீங்கள் தேடியது "பேட்மிண்டன்"
- பி.வி. சிந்துவிற்கும் வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் நேற்று முன்தினம் திருமணம் நடைபெற்றது.
- இன்று ஐதராபாத்தில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து.
முன்னாள் உலக சாம்பியனான பி.வி. சிந்துவிற்கும் வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் நேற்று முன்தினம் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. இன்று ஐதராபாத்தில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்நிலையில், திருமண புகைப்படங்களை பி.வி. சிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.
சிந்துவின் கணவர், போசிடெக்ஸ் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தின் செயல் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தங்களது திருமண புகைப்படங்களை பி.வி. சிந்து வெளியிடவில்லை.
- நாளை ஐதராபாத்தில் பி.வி.சிந்துவின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து.
முன்னாள் உலக சாம்பியனான பி.வி. சிந்துவிற்கும் வெங்கட தத்தா சாய் என்பவருக்கும் நேற்று ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. நாளை ஐதராபாத்தில் இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.
ஆனால் இன்னமும் தங்களது திருமண புகைப்படங்களை பி.வி. சிந்து வெளியிடவில்லை. இந்நிலையில், பி.வி. சிந்துவின் திருமண புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து மத்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் வாழ்த்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.
சிந்துவின் கணவர், போசிடெக்ஸ் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தின் செயல் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Pleased to have attended the wedding ceremony of our Badminton Champion Olympian PV Sindhu with Venkatta Datta Sai in Udaipur last evening and conveyed my wishes & blessings to the couple for their new life ahead.@Pvsindhu1 pic.twitter.com/hjMwr5m76y
— Gajendra Singh Shekhawat (@gssjodhpur) December 23, 2024
- பி.வி. சிந்து திருமணம் வரும் 22-ந்தேதி உதய்பூரில் நடைபெற உள்ளது.
- 24-ந்தேதி ஐதராபாத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.
இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து.
முன்னாள் உலக சாம்பியனான சிந்து, தெலுங்கானாவின் ஐதராபாத் நகரை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். சிந்துவின் வருங்கால கணவர், போசிடெக்ஸ் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தின் செயல் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில், இன்று சிந்துவுக்கும் வெங்கட தத்தா சாய்க்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இது தொடர்பான புகைப்படங்களை சிந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், கலீல் ஜிப்ரான் அவர்களின் கவிதையான "அன்பு உங்களை அழைக்கும் போது, அதை பின்தொடருங்கள், ஏனென்றால் அன்பு தன்னைத் தவிர வேறு எதையும் கொடுக்காது" என்று பதிவிட்டுள்ளார்.
இவர்களின் திருமணம் வரும் 22-ந்தேதி உதய்பூரில் நடைபெற உள்ளது. திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள் 20-ந்தேதியே தொடங்கி விடும் என்றும் 24-ந்தேதி ஐதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று சிந்துவின் அப்பா தெரிவித்தார்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு சிந்து திருமண அழைப்பிதழ் வழங்கியுள்ளார்.
- பேட்மிண்டன் ராக்கெட் கொண்டு சப் கலெக்டர் தாக்கியதில் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.
- இது தொடர்பான வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலத்தில் பேட்மிண்டன் வீரர்களை சப் கலெக்டர் ஒருவர் துரத்தி துரத்தி அடிக்கும் வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேட்மிண்டன் ராக்கெட் கொண்டு சப் கலெக்டர் தாக்கியதில் வீரர்களுக்கு காயம் ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக பேசிய பேட்மிண்டன் வீரர்கள், "நாங்கள் உள்விளையாட்டு அரங்கில் விளையாடி முடித்து கிளம்பும் நேரத்தில் அந்த இடத்திற்கு வந்த துணை ஆட்சியர் சிஷிர் குமார் மிஸ்ரா எங்களிடம் பேட்மிண்டன் விளையாட ஆசைப்பட்டார். ஏற்கனவே விளையாடி முடித்த களைப்பில் இருந்த நாங்கள் சோர்வாக இருக்கிறது இப்போது விளையாட முடியாது என்று கூறினோம். இதனால் ஆத்திரம் அடைந்த அவர் பேட்மிண்டன் ராக்கெட் கொண்டு எங்களை துரத்தி துரத்தி அடித்தார்" என்று தெரிவித்தனர்.
बिहार के मधेपुरा ज़िला में ADM साहेब ने बच्चों को इसलिए पीट दिया की क्योंकि वो जैसा शॉट्स चाहते थे बच्चे नहीं खेल पा रहे थे, फिर तो दौड़ा दौड़ा कर दे बैंडमिंटन #Bihar#madhepuraहद है … pic.twitter.com/IgNi4eX750
— Mukesh singh (@Mukesh_Journo) December 3, 2024
ஆனால் இந்த குற்றச்சாட்டை மறுத்த துணை ஆட்சியர் சிஷிர் குமார், "பேட்மிண்டன் வீரர்கள் என்னிடம் அநாகரீகமான மொழியில் பேசினார்கள். அதனால் தான் அடித்தேன்" என்று தெரிவித்தார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், இந்த விவகாரத்தை விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட விளையாட்டு அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளோம் என்று மாவட்ட மாஜிஸ்திரேட் தரன்ஜோத் சிங் தெரிவித்தார்.
- திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள் 20-ந்தேதியே தொடங்கி விடும்.
- 24-ந்தேதி ஐதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்று சிந்துவின் தந்தை கூறினார்.
புதுடெல்லி:
இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் பங்கேற்று 2 முறை பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து. இவருக்கு திருமணம் முடிவாகி உள்ளது. முன்னாள் உலக சாம்பியனான சிந்து, தெலுங்கானாவின் ஐதராபாத் நகரை சேர்ந்த வெங்கட தத்தா சாய் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார். சிந்துவின் வருங்கால கணவர், போசிடெக்ஸ் டெக்னாலஜீஸ் என்ற நிறுவனத்தின் செயல் இயக்குநராக பணிபுரிந்து வருகிறார்.
இதுபற்றி சிந்துவின் தந்தை பி.வி. ரமணா செய்தியாளர்களிடம் கூறும்போது, இரு குடும்பத்தினரும் முன்பே நன்கு அறிமுகம் ஆனவர்கள்தான். ஆனால், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பே, அனைத்து விசயங்களும் முடிவாகின என்றார். இதன்படி, வருகிற 22-ந்தேதி உதய்ப்பூரில் சிந்துவின் திருமணம் நடைபெற உள்ளது.
ஜனவரியில் இருந்து சிந்துவுக்கு, விரைந்து செய்வதற்கென்று நிறைய பணிகள் காத்திருக்கின்றன. அதனால், இதுவே சாத்தியப்பட்ட ஒரே வழி என ரமணா கூறியுள்ளார். இரு குடும்பங்களும் சேர்ந்து இந்த முடிவை எடுத்தோம். திருமணம் தொடர்பான நிகழ்ச்சிகள் 20-ந்தேதியே தொடங்கி விடும். 24-ந்தேதி ஐதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறும் என்றார்.
சிந்து விரைவில் பயிற்சியை தொடங்க உள்ளார். ஏனெனில் அடுத்து வர கூடிய போட்டிகள் அவருக்கு முக்கியம் வாய்ந்தவை என்றும் அவர் கூறியுள்ளார். இதுவரை 5 உலக சாம்பியன்ஷிப் பதக்கங்களை சிந்து வென்றுள்ளார். அவற்றில் 2019-ம் ஆண்டில் அவர் பெற்ற தங்க பதக்கமும் அடங்கும். இவை தவிர, ஒலிம்பிக் போட்டிகளில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களையும் வென்றுள்ளார்.
- ஹட்சன் பேட்மிண்டன் மையத்தில் ரித்விக் சஞ்சீவி பயிற்சி பெற்று வருகிறார்.
- தலைமை பயிற்சியாளர் ரஜினிகாந்த், ஹட்சன் நிறுவன தலைவர் ஆர்.ஜி.சந்திரமோகன் ஆகியோர் அவரை பாராட்டியுள்ளனர்.
தெலுங்கானாவில் நடந்த என்.எம்.டி.சி. சர்வதேச சேலஞ்ச் பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் தமிழகத்தின் இளம் நட்சத்திரமான ரித்விக் சஞ்சீவி சாம்பியன் பட்டம் பெற்றார்.
எஸ்.ஆர். எம். பல்கலைக்கழக மாணவரான அவர் ஐதராபாத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 21-11, 21-14 என்ற கணக்கில் தருண் ரெட்டி கதத்தை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றார். ஹட்சன் பேட்மிண்டன் மையத்தில் ரித்விக் சஞ்சீவி பயிற்சி பெற்று வருகிறார். தலைமை பயிற்சியாளர் ரஜினிகாந்த், ஹட்சன் நிறுவன தலைவர் ஆர்.ஜி.சந்திரமோகன் ஆகியோர் அவரை பாராட்டியுள்ளனர்.
- கடந்த முறையும் துப்பாக்கி சுடுதல் இடம் பெறவில்லை. தற்போதும் சேர்க்கப்படவில்லை.
- செலவை கட்டுப்படுத்தும் விதமாக டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ், டிரையத்லான் ஆகிய போட்டிகளும் நீக்கப்பட்டுள்ளன.
லண்டன்:
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி 1911-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது.
கடைசியாக காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் 2022-ம் ஆண்டு நடைபெற்றது.
2026-ம் ஆண்டுக்கான காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் ஜூலை 23-ந் தேதி முதல் ஆகஸ்டு 2-ந் தேதி வரை நடக்கிறது. 12 ஆண்டுகளுக்கு பிறகு அங்கு இந்தப் போட்டி நடக்கிறது. கடைசியாக 2014-ல் நடைபெற்றது.
23-வது காமன்வெல்த் விளையாட்டான இதில் இடம் பெறும் போட்டிகள் குறித்து காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பு இன்று அறிவித்தது.
ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், மல்யுத்தம், பேட்மிண்டன், கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன. கடந்த முறையும் துப்பாக்கி சுடுதல் இடம் பெறவில்லை. தற்போதும் சேர்க்கப்படவில்லை.
செலவை கட்டுப்படுத்தும் விதமாக டேபிள் டென்னிஸ், ஸ்குவாஷ், டிரையத்லான் ஆகிய போட்டிகளும் நீக்கப்பட்டுள்ளன. கடந்த முறை இடம் பெற்ற போட்டியில் 7 விளையாட்டுகள் நீக்கப்பட்டுள்ளன.
இந்த விளையாட்டுகள் நீக்கப்பட்டது இந்தியாவுக்கு மிகப்பெரிய பாதிப்பாகும். ஏனென்றால் இந்த விளையாட்டுகளில் இந்தியாவுக்கு பதக்க வாய்ப்பு இருக்கிறது. கடந்த முறை இந்தியா பதக்கம் வென்ற 6 விளையாட்டுகளும் தற்போது நீக்கப்பட்டு உள்ளன.
காமன்வெல்த் விளையாட்டு கூட்டமைப்பின் இந்த முடிவு இந்தியாவுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும்.
2022 காமன்வெல்த் விளையாட்டில் இந்தியா 22 தங்கம், 16 வெள்ளி, 23 வெண்கலம் ஆக மொத்தம் 61 பதக்கம் பெற்று பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தை பிடித்தது.
நீக்கப்பட்ட போட்டிகளில் இருந்து இந்தியாவுக்கு 30 பதக்கங்கள் 2022-ல் கிடைத்துள்ளது. 2022-ல் பங்கேற்ற 210 இந்திய விளையாட்டு வீரர் வீராங்கனைகளில் 98 பேர் நீக்கப்பட்ட விளையாட்டுகளில் பங்கேற்றவர்கள். இதனால் 2026 காமன்வெல்த் போட்டியில் இவர்களின் நிலை கேள்விகுறியாகி உள்ளது.
- கருணாகரன் தாய்லாந்தை சேர்ந்த கன்ட்போன் வாங்சரோயனை 24-22, 23-21 என வீழ்த்தினார்.
- சங்கர் சுப்ரமணியன் பின்லாந்தைச் சேர்ந்த ஜோகிம் ஓல்டோர்ஃப்-ஐ 21-12, 19-21, 21-11 என வீழ்த்தினார்.
தைபே ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீரர்களான சதீஷ் குமார் கருணாகரன் மற்றும் சங்கர் சுப்ரமணியன் ஆகியோர் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முன்னேறினர். அதவேளையில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் வீராங்கனைகள் ஏமாற்றம் அடைந்தனர்.
காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கருணாகரன் தாய்லாந்தை சேர்ந்த கன்ட்போன் வாங்சரோயனை எதிர்கொண்டார். இதில் கருணாகரண் 24-22, 23-21 என வெற்றி பெற்றார்.
சங்கர் சுப்ரமணியன் பின்லாந்தைச் சேர்ந்த ஜோகிம் ஓல்டோர்ஃப்-ஐ எதிர்கொண்டார். இதில் முதல் கேம்-ஐ சுப்ரமணியன் 21-12 என எளிதில் கைப்பற்றினார். ஆனால் 2-வது கேம்-ஐ 19-21 என இழந்தார். இருந்தபோதிலும் வெற்றிக்கான 3-வது கேமில் சிறப்பாக விளையாடி 21-11 எனக் கைப்பற்றினார்.
மற்றொரு வீரரான கிரண் ஜார்ஜ் இந்தோனேசியாவின் யோகனஸ் சாயுட்டிடம் 21-15, 8-21, 16-21 என தோல்வியடைந்தார்.
பெண்களுக்கான ஒற்றையர் பிரிவில் ஆகார்ஷி காஷ்யப் 19-21, 18-21 என தாய்லாந்து வீராங்கனையிடம் தோல்வியடைந்தார்.
தனியா ஹேமந்த் 11-21, 10-21 என எளிதில் தோல்வியடைந்ததார். சீன தைபே வீராங்கனை தை டிசு யிங் 27 நிமிடத்தில் வீழ்த்தினார்.
அனுபமா உபத்யாயாவை அமெரிக்க வீராங்கனை 17-21, 21-19, 21-11 என வீழ்த்தினார். முதல் கேம்-ஐ அனுபமா கைப்பற்றினாலும் அடுத்த இரண்டு கேம்களையும் இழந்தார்.
- விளையாட்டில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது.
- அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி உள்ளிட்டவை நம்பமுடியாத இந்த சாதனைக்கு வழிவகுத்துள்ளது.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. மகளிர் பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர், எஸ்யு 5 பிரிவின் இறுதிப் போட்டி மற்றும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி இன்று நடைபெற்றது.
இதில் தமிழகத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன் மற்றும் மனிஷா ராமதாஸ் ஆகியோர் முறையே வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். இவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
A moment of immense pride as Thulasimathi wins a Silver Medal in the Women's Badminton SU5 event at the #Paralympics2024! Her success will motivate many youngsters. Her dedication to sports is commendable. Congratulations to her. @Thulasimathi11 #Cheer4Bharat pic.twitter.com/Lx2EFuHpRg
— Narendra Modi (@narendramodi) September 2, 2024
இதுதொடர்பான பதிவுகளில், "பாரா ஒலிம்பிக்ஸ் 2024 இல் பெண்களுக்கான பேட்மிண்டன் எஸ்யு 5 போட்டியில் துளசிமதி வெள்ளிப் பதக்கம் வென்றது பெருமையான தருணம். அவரது வெற்றி பல இளைஞர்களை ஊக்குவிக்கும். விளையாட்டில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. அவளுக்கு வாழ்த்துக்கள்," என்றார்.
An outstanding effort by Manisha Ramadass to win the Bronze Medal in the Women's Badminton SU5 event at the Paralympics! Her dedication and perseverance have led to this incredible achievement. Congrats to her. #Cheer4Bharat pic.twitter.com/Tv6RYZTqKN
— Narendra Modi (@narendramodi) September 2, 2024
"பாரா ஒலிம்பிக்ஸில் பெண்களுக்கான பேட்மிண்டன் SU5 போட்டியில் வெண்கலப் பதக்கம் வெல்ல மனிஷா ராமதாஸின் சிறப்பான முயற்சி, அவரது அர்ப்பணிப்பு மற்றும் விடாமுயற்சி உள்ளிட்டவை நம்பமுடியாத இந்த சாதனைக்கு வழிவகுத்துள்ளது. அவளுக்கு வாழ்த்துக்கள்," என்று குறிப்பிட்டுள்ளார்.
- இறுதிப் போட்டி மற்றும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி இன்று நடைபெற்றது.
- துளசிமதி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றி உள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது. மகளிர் பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர், எஸ்யு 5 பிரிவின் இறுதிப் போட்டி மற்றும் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டி இன்று நடைபெற்றது.
இதில் இறுதிப் போட்டியில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த துளசிமதி முருகேசன் சீனாவின் கியு ஹ்யா யங்-ஐ எதிர்கொண்டு விளையாடினர். இந்த போட்டியில் துளசிமதி முருகேசன் 17-21, 10-21 என்ற செட் கணக்கில் க்யு ஹ்யா யங்கிடம் தோல்வி அடைந்தார். இதனால் துளசிமதி வெள்ளிப் பதக்கம் கைப்பற்றி உள்ளார்.
இதே பிரிவில் (பெண்கள் ஒற்றையர் எஸ்.யு. 5 பிரிவு) வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியில் இந்தியாவின் மனிஷா ராமதாஸ், டென்மார்க்கின் கேத்ரின் ரோசன்கிரென் உடன் மோதினார். இந்தில் அபாரமாக செயல்பட்ட மனிஷா ராமதாஸ் 21-12, 21-8 என்ற செட் கணக்கில் கேத்ரின் ரோசன்கிரெனை வீழ்த்தினார்.
இதனால் தமிழகத்தை சேர்ந்த மனிஷாவுக்கு வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். இந்த இரு பதக்கங்களை சேர்த்தால் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. இந்தியா இதுவரை 2 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் என 11 பதக்கங்களை வென்றுள்ளது.
- பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இன்று நடைபெற்றது.
- பிரிட்டன் வீரரை 21-14, 18-21, 23-21 என்ற செட் கணக்கில் நிதேஷ் குமார் வீழ்த்தினார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இன்று நடைபெற்றது. அதில், பிரிட்டன் வீரர் டேனியல் பெத்தேலை வீழ்த்தி இந்திய வீரர் நிதேஷ் குமார் தங்க பதக்கம் வென்றார்
பிரிட்டன் வீரரை 21-14, 18-21, 23-21 என்ற செட் கணக்கில் நிதேஷ் குமார் வீழ்த்தினார்.
பாரா ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இந்திய அணி 2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
- பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி இதுவரை 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
- பேட்மிண்டனில் இந்தியாவின் நிதேஷ குமார் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
பாரீஸ்:
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் பாரா ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா சார்பில் 32 பெண்கள் உள்பட 84 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.
பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களைப் பெற்றுள்ளது.
இதற்கிடையே, பேட்மிண்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிப் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்தியாவின் நிதேஷ் குமார் ஜப்பான் வீரரை 21-16, 21-12 என வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.