என் மலர்
நீங்கள் தேடியது "இங்கிலாந்து"
- நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறோம்.
- போட்டியில் தொடக்கத்தில் எங்களுக்கு இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அழுத்தம் கொடுத்தனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. நாக்பூரில் நேற்று இரு அணிகள் மோதிய முதல் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா தோற்கடித்தது.
முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 47.4 ஓவர்களில் 248 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 52 ரன்னும், பெத்தேல் 51 ரன்னும் எடுத்தனர். இந்தியா தரப்பில் ஜடேஜா, ராணா தலா 3 விக்கெட் கைப்பற்றினர். பின்னர் விளையாடிய இந்தியா 38.4 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 251 ரன்கள் எடுத்து வென்றது. சுப்மன் கில் 87 ரன்னும், ஸ்ரேயாஸ் அய்யர் 59 ரன்னும், அக்சர் பட்டேல் 52 ரன்னும் எடுத்தனர்.
வெற்றி குறித்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-
நீண்ட காலத்திற்கு பிறகு ஒரு நாள் போட்டியில் விளையாடுகிறோம். ஒரு அணியாக விரைவாக மீண்டும் ஒருங்கிணைந்து என்ன செய்ய வேண்டும் என்பதைப் அறிய விரும்பினோம். எனவே இப்போட்டியில் வென்றது உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது.
இந்த போட்டியில் தொடக்கத்தில் எங்களுக்கு இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அழுத்தம் கொடுத்தனர். ஆனால் நாங்கள் ஆட்டத்துக்குள் திரும்பி வந்த விதம் சிறப்பாக இருந்தது.
பந்துவீச்சாளர்கள் அனைவரும் உறுதுணையாக இருந்தனர். முக்கியமான நேரத்தில் நாங்கள் விக்கெட்டுகளை வீழ்த்தினோம். மைதானத்தில் வீரர்களிடம் உத்வேகமும் அற்புதமாக இருந்தது. அக்சர் பட்டேல் கடந்த 2 ஆண்டுகளாக ஒரு சிறந்த பேட்ஸ்மேனாக உருவெடுத்து வருகிறார். அதை இன்று பார்க்க முடிந்தது. எங்களுக்கு ஒரு பார்ட்னர்ஷிப் தேவைப்பட்டபோது சுப்மன் கில்-அக்சர் பட்டேல் ஜோடி நன்றாக பேட்டிங் செய்தது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு முன்பாக குறிப்பிட்ட எந்த இலக்கும் இல்லை. ஒட்டுமொத்தமாக ஒரு அணியாக நாங்கள் தொடர்ந்து சரியான விஷயங்களைச் செய்வதை உறுதிசெய்ய விரும்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
இரு அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி நாளை மறுநாள் ஒடிசா மாநிலம் கட்டாக்கில் நடக்கிறது.
- உள்நாட்டுச் சட்டம் மற்றும் உண்மையில் சர்வதேச சட்டத்தால் அமைக்கப்பட்டுள்ள அதன் சட்டப்பூர்வ கடமைகளுக்கு இங்கிலாந்து எப்போதும் இணங்கும்.
- நாங்கள் சட்டத்தின் கீழ் எங்கள் கடமைகளை வெளிப்படையாக நிறைவேற்றுவோம்.
லண்டன்:
பாலஸ்தீனத்தின் காசா முனையை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் தொடுத்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதில் குழந்தைகள், பெண்கள் உள்பட 44 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
இஸ்ரேல் மீது போர்க்குற்ற புகார்கள் முன் வைக்கப்பட்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. இதில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்து உள்ளது.
இந்த நிலையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இங்கிலாந்துக்கு வந்தால் அவர் கைது செய்யப்படலாம் என்று அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து இங்கிலாந்து பிரதம மந்திரி கெய்ர் ஸ்டார்மரின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இங்கு வந்தால் அவரை இங்கிலாந்து போலீசார் தடுத்து வைப்பார்களா என்பது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது.
ஆனால் உள்நாட்டுச் சட்டம் மற்றும் உண்மையில் சர்வதேச சட்டத்தால் அமைக்கப்பட்டுள்ள அதன் சட்டப்பூர்வ கடமைகளுக்கு இங்கிலாந்து எப்போதும் இணங்கும். நாங்கள் சட்டத்தின் கீழ் எங்கள் கடமைகளை வெளிப்படையாக நிறைவேற்றுவோம் என்றார்.
இதன்மூலம் நெதன்யாகு இங்கிலாந்து வந்தால் அவர் கைது செய்யப்படுவார் என்று இங்கிலாந்து மறைமுகமாக தெரிவித்துள்ளது.
அதேபோல் கனடா, அயர்லாந்து, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், நார்வே, சுவீடன், பெல்ஜியம், துருக்கி உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு எதிராக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட கைது வாரண்டுக்கு இணங்கப் போவதாக தெரிவித்து உள்ளன.
முற்றிலும் இந்திய தயாரிப்பான ‘கோவேக்சின்’ கொரோனா தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பு தனது அவசர பயன்பாட்டு பட்டியலில் சமீபத்தில் சேர்த்தது.
இந்தநிலையில், இங்கிலாந்து தனது நாட்டுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கான அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகள் பட்டியலில் கோவேக்சினை சேர்த்துள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், உலக சுகாதார அமைப்பு அளித்த அங்கீகாரத்தை ஏற்று, கோவேக்சின், சினோவாக், சினோபார்ம் பீஜிங் ஆகிய தடுப்பூசிகள் 22-ந் தேதி (நேற்று) முதல் அங்கீகரிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இதனால், இங்கிலாந்து செல்ல திட்டமிட்டுள்ள 2 டோஸ் தடுப்பூசி போட்டுள்ள இந்தியர்கள் பலனடைவார்கள். அவர்கள் இங்கிலாந்து செல்வதற்கு முன்பு பி.சி.ஆர். கொரோனா பரிசோதனை செய்யவோ, இங்கிலாந்தில் தங்கும் இடத்தில் தனிமைப்படுத்திக் கொள்ளவோ தேவையில்லை.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நேற்று ஒரே நாளில் இங்கிலாந்தில் 40 ஆயிரத்து 941 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 98 லட்சத்து 6 ஆயிரத்து 34 ஆகும்.
தொற்றால் நேற்று ஒரு நாளில் 150 பேர் இறந்தனர். இதுவரை அங்கு 1 லட்சத்து 43 ஆயிரத்து 866 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். 8,079 பேர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் கொரோனாவில் இருந்து மீள்வதற்காக சிகிச்சை பெறுகிறார்கள்.
இதுபற்றி அவசர காலத்துக்கான அறிவியல் ஆலோசனை குழு உறுப்பினர் ஜான் எட்மண்ட்ஸ் கருத்து தெரிவிக்கையில், “ஐரோப்பாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவது, நிலைமை எவ்வளவு விரைவாக மோசமாகி விடும் என்பதை காட்டுகிறது” என தெரிவித்தார். மேலும் அந்த நாட்டில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு தொற்று பரவல் அதிகரித்து வருவதாக சுகாதார பாதுகாப்பு முகமை கூறுகிறது.
இதற்கிடையே அங்கு 12 வயதுக்கு மேற்பட்ட 88 சதவீத மக்கள் முதல் டோஸ் தடுப்பூசியையும், 80 சதவீதத்தினர் 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்திக்கொண்டு விட்டனர், 25 சதவீதத்தினர் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியையும் செலுத்தி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் கொரோனா தொற்று கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. வேகமாக நடைபெறும் தடுப்பூசி பணிகள் மற்றும் கொரோனாவுக்கு எதிரான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக பாதிப்பு நிலைமை மேம்பட்டு வருகிறது. அதேநேரம் பல வளர்ந்த நாடுகளிலேயே கொரோனாவின் வீரியம் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதில் இங்கிலாந்து முக்கிய இடம் பெற்று இருக்கிறது.
அங்கு நேற்று முன்தினமும் 46,807 பேர் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 97 லட்சத்து 21 ஆயிரத்து 916 ஆக உயர்ந்திருக்கிறது. இதைப்போல கொரோனாவால் மேலும் 199 பேர் உயிரிழந்து இருக்கிறார்கள். இது மொத்த கொரோனா பலி எண்ணிக்கையை 1,43,559 ஆக உயர்த்தி இருக்கிறது.இங்கிலாந்தில் 5 முதல் 9 வயது வரையிலான குழந்தைகளிடம் அதிக அளவில் தொற்று காணப்படுவதாக சமீபத்தில் தகவல் வெளியாகி இருந்தது. குறிப்பாக 1 லட்சம் குழந்தைகளில் 700 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டு இருக்கிறது.இந்த சூழலில் நாடு முழுவதும் தொடர்ந்து கொரோனாவின் பாதிப்பு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.


உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று தொடங்கியது.

அதன்பின்னர் மற்றொரு துவக்க வீரர் ஜேசன் ராயுடன், ஜோ ரூட் இணைந்து நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அடிக்க வேண்டிய பந்துகளை மட்டும் அடித்து ஆடினர். 9-வது ஓவரில் 50 ரன்னை எட்டியது.
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இதன்படி 12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் இன்று தொடங்கி ஜூலை 14-ந்தேதி வரை 11 இடங்களில் நடைபெறுகிறது. உலக போட்டியை இங்கிலாந்து நடத்துவது இது 5-வது முறையாகும்.
2015-ம் ஆண்டு உலக கோப்பை போட்டியில் 14 அணிகள் கலந்து கொண்டன. ஆனால் சுவாரஸ்யத்தையும், விறுவிறுப்பையும் அதிகரிக்க செய்யும் வகையில் இந்த உலக கோப்பையில் அணிகளின் எண்ணிக்கை 10 ஆக குறைக்கப்பட்டு விட்டது. சிறிய அணிகள் அதாவது ஐ.சி.சி. உறுப்புநாடுகள் எதுவும் இடம் பெறாத ஒரு போட்டியாக இது நடக்கிறது.
இதில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய 10 அணிகள் பங்கேற்கின்றன. 1992-ம் ஆண்டு உலக கோப்பை பாணியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங் களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்குள் நுழையும்.
முதல் நாளான இன்று போட்டியை நடத்தும் இங்கிலாந்து அணி, தென்ஆப்பிரிக்காவை லண்டன் ஓவலில் சந்திக்கிறது. அசுர பலம்வாய்ந்த அணியாக உருவெடுத்துள்ள இங்கிலாந்து அணி கடைசியாக ஆடிய 6 ஒரு நாள் தொடர்களில் 5-ஐ (மற்றொரு தொடர் சமன்) கைப்பற்றி அசத்தி இருக்கிறது. அண்மைகால இங்கிலாந்து அணியின் செயல்பாட்டை பார்த்தால், சகட்டுமேனிக்கு அதிரடி காட்டி எதிரணி பவுலர்களை திக்குமுக்காட வைத்து விடுகிறார்கள்.
குறிப்பாக ஜோஸ் பட்லர், கேப்டன் மோர்கன், ஜாசன் ராய் ஆகியோர் சந்திக்கும் முதல் பந்தில் இருந்தே ‘கதகளி’ ஆடத் தொடங்கி விடுவார்கள். முதலில் பேட் செய்தால் 300 ரன்கள் மேல் எடுத்து விட வேண்டும் என்பது அவர்களது இலக்கு. அதுவும் இது சொந்த ஊர் என்பதால் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களின் ‘ராஜ்ஜியம்’ தூக்கலாகவே இருக்கும்.
தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை கேப்டன் பிளிஸ்சிஸ், குயின்டான் டி காக், வான்டெர் துஸ்சென் மட்டுமே பேட்டிங்கில் திருப்திகரமான பார்மில் உள்ளனர். அதற்காக மற்றவர்களையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. காஜிசோ ரபடா, இம்ரான் தாஹிர், நிகிடி உள்ளிட்டோர் சாதுர்யமாக பந்து வீசி நெருக்கடி கொடுக்கக்கூடிய திறமை சாலிகள். மூத்த வீரர் ஸ்டெயின் தோள்பட்டை காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் ஆடவில்லை. இந்த உலக கோப்பைக்கு முன்பு கடைசியாக விளையாடிய மூன்று ஒரு நாள் தொடர்களையும் (ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கைக்கு எதிராக) வென்றுள்ள தென்ஆப்பிரிக்க அணி கூடுதல் உத்வேகத்துடன் களம் காணும்.
இங்கிலாந்து அணி மூன்று முறை இறுதி சுற்றுக்கு வந்தும் உலக கோப்பையை வென்றதில்லை. தென்ஆப்பிரிக்க அணியோ அரையிறுதியை தாண்டியதில்லை. தங்களது உலக கோப்பை கனவுக்கு அச்சாரம் போட தொடரை வெற்றியோடு தொடங்குவது மனரீதியாக நம்பிக்கையை அளிக்கும். இரு அணி வீரர்களும் களத்தில் ‘நீயா-நானா’ என்று ஆக்ரோஷமாக ஆடுவார்கள் என்பதால் அனல் பறக்கும். ரசிகர்களுக்கோ குதூகலமான விருந்து கிடைக்கும்.
போட்டிக்கான இரு அணி வீரர்களின் உத்தேச பட்டியல் வருமாறு:-
இங்கிலாந்து: ஜாசன் ராய், ஜானி பேர்ஸ்டோ, ஜோ ரூட், மோர்கன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, அடில் ரஷித், கிறிஸ் வோக்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர், லியாம் பிளங்கெட் அல்லது மார்க் வுட்.
தென்ஆப்பிரிக்கா: குயின்டான் டி காக், அம்லா, பாப் டு பிளிஸ்சிஸ் (கேப்டன்), டுமினி, டேவிட் மில்லர், வான்டெர் துஸ்சென், பிரிட்டோரியஸ் அல்லது கிறிஸ் மோரிஸ், பெலக்வாயோ, ரபடா, நிகிடி, இம்ரான் தாஹிர்.
இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
முன்னதாக நேற்று லண்டனில் அரண்மனை அருகே உள்ள திறந்தவெளிப்பகுதியில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தொடக்க விழா கோலாகலமாக நடந்தது. இதில் முன்னாள் வீரர்கள் ஜாலியாக சிறிது நேரம் கிரிக்கெட் ஆடினர். ஆடல், பாடல், இசை நிகழ்ச்சியை 4 ஆயிரம் ரசிகர்கள் கண்டுகளித்தனர்.


2019 மார்ச் இறுதிக்குள் ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து வெளியேற இங்கிலாந்து அரசு முடிவு செய்தது. ஆனால், ‘பிரெக்ஸிட்’ தொடர்பாக ஐரோப்பிய கூட்டமைப்புடன் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே ஏற்படுத்திய ஒப்பந்தத்தை அந்நாட்டு எம்.பி.க்கள் ஏற்க மறுத்துவிட்டனர். இதனால் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தம் 3 முறை பெருவாரியான ஓட்டுவித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில், ‘பிரெக்ஸிட்’ ஒப்பந்தத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை கொண்டுவந்துள்ள தெரசா மே, அடுத்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி 4-வது முறையாக அந்த ஒப்பந்தத்தின் மீது ஓட்டெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளார். இந்த ஓட்டெடுப்பும் தோல்வியில் முடிந்தால், ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து ஒப்பந்தம் இன்றி வெளியேற வேண்டிய நெருக்கடி நிலைக்கு இங்கிலாந்து தள்ளப்படும்.

‘பிரெக்ஸிட்’ விவகாரத்தில் தெரசா மே ஏற்கனவே நெருக்கடியான சூழலில் இருக்கும் நிலையில், மூத்த மந்திரி பதவி விலகி இருப்பது அவருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.