என் மலர்
நீங்கள் தேடியது "சீமான்"
- ஈரோடு கிழக்கு தொகுதி புதுமாதிரி தேர்தலை சந்திக்கிறது.
- நாங்கள் உதிரிகள் அல்ல. உறுதியானவர்கள்.
ஈரோடு:
ஈரோடு பெரியார் நகரில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரி த்து, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- இதுவரை எத்தனையோ தேர்தல்கள் நடந்து இருந்தாலும், ஈரோடு கிழக்கு தொகுதி புதுமாதிரி தேர்தலை சந்திக்கிறது.
ஆளுங்கட்சியான தி.மு.க. வும், எதிர்கட்சியான அ.தி.மு.க.வும் நாம் தமிழர் கட்சியை வீழ்த்த ஒன்றி ணைகின்றன. அ.தி.மு.க வாக்காளர்களுக்கு கூடுதல் தொகை கொடுத்து, நீங்கள் தி.மு.க.விற்கு ஓட்டு போடா விட்டாலும் பரவாயில்லை, நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து விடாதீர்கள் என்று கெஞ்சுகின்றனர்.
எங்களைக் கண்டு இவ்வ ளவு பயப்படுவார்கள் என்று நான் நினைக்க வில்லை. அ.தி.மு.க, பா.ஜ.க. வினர் சில உதிரிகளை வைத்து பெரியாரை விமர்சனம் செய்கின்றனர் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறுகிறார். நாங்கள் உதிரிகள் அல்ல. உறுதியானவர்கள். நாங்கள் உறுதியாய் தனித்து தேர்தல் களத்தில் நிற்கிறோம்.
உதிரிகளை கூட்டணி சேர்த்து தி.மு.க நிற்கிறது. நாங்கள் பெரியரை விமர்சிக்கவோ, இழிவாகவோ பேசவில்லை. கடந்த 60 ஆண்டுகளாக பெரியார்தான் எங்கள் மொழியை, இனத்தை இழிவுபடுத்தியுள்ளார்.
என் கருத்துக்கு எதிர் கருத்து கூறாமல் அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். பெரியார் இல்லாமல் ஒன்றுமில்லை என்பது அவர்களின் கருத்து. பெரியாரால் ஒன்றுமில்லை என்பது எங்கள் கருத்து.
தமிழரான எங்களுக்கு திராவிடன் என பெயர் வைக்க வேண்டாம். எந்த நேரத்தில் எந்த ஆயுதத்தை பயன்படுத்த வேண்டும் என்பதை எதிரிதான் தீர்மானிக்கிறார்.
அதுபோல நான் இப்போது பெரியாரை விமர்சிக்கிறேன். சனாதனத்தை ஒழிப்பதாக சொன்ன துணை முதலமைச்சர் உதயநிதி, ஆதிதிராவிடர்களோடு அமர்ந்து உணவருந்துவதாக ஒரு விளம்பரம் வருகிறது. இதுதான் உண்மையான சனாதானம் என்பதை உணர்ந்து உங்களுக்கு கோபம் வந்தால் நீங்கள் தமிழர்கள். கோபம் வராவிட்டால் நீங்கள் திராவிடர்கள்.
தமிழக மீனவர்கள் சுடப்படும்போது, நான் இந்த நாட்டு மீனவர் இல்லையா என்று கேட்டால் அது தமிழ் தேசியம். கச்சதீவை கொடுத்தது தான் என்றால் திராவிடம். கச்சத்தீவை திரும்ப எடுப்போம் என்றால் தமிழ்தேசியம். தமிழை சனியன் என்று இழித்து பேசுவது திராவிடம். தமிழ் எங்களுக்கு உயிர், முகம், முகவரி, மூச்சு, பேச்சு என்று பேசுவது தமிழ்தேசியம்.
60 ஆண்டுகளாக இலவசங்களைக் கொடுத்து வாக்கை பறித்து மக்களின் அடிப்படை தேவைகளைக் கூட நிறைவேற்றாமல் ஏழையாய் வைத்திருப்பது திராவிடம்.
தனக்கான தேவைகளை தாங்களே நிறைவேற்றும் தற்சார்பு வாழ்க்கையைத் தருவது தமிழ் தேசியம். மதிப்புமிக்க வாக்குகளை விலைக்கு விற்கும் நாடும், மக்களும் உருப்படமாட்டார்கள்.
ஈரோடு கிழக்கு தொகு தியில் நடப்பது கடுமையான போர். இந்த போரில், எங்க ளுக்கு கை கொடுப்பது தமிழர்களின் கடமை. ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள். என் வீட்டைப்போல நாட்டை பார்த்துக் கொள்வோம். என் தாய் மண்ணை என்னை விட எவரும் நேசிக்க முடியாது.
என் மொழி, இனத்தின் மீது பெரியாருக்கு ஏன் வன்மம்? என் தாய்மொழி தமிழை சனியன் என்று சொன்ன சனியனை ஒழிக்க வேண்டும். வள்ளளார், வைகுந்தரை விட பெரியார் என்ன சீர்திருத்தம் செய்து விட்டார்? எல்லா எலியும் எழுந்து வந்து ஒரு புலிக்கு முன்னாள் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள்.
தாய்ப்பால் போல் தாய்மொழிக் கல்வி அவசி யம் என்றார் காந்தி. உன் மொழியை உலகின் மூத்த மொழியை அசிங்கமாக பேசினால் விட முடியுமா? வீட்டுக்கு தகப்பனை, நாட்டுக்கு தலைவனை கடன் வாங்க முடியாது. என் வலி உணராதவன் எனக்கு தலைவனாக இருக்க முடியாது.
ஏற்றுக் கொண்ட கொள்கைக்கு எதிராக யார் வந்தாலும் எதிரிதான். தமிழை பழித்தவனை தாயே தடுத்தாலும் விட மாட்டேன். பெரியாரால் இந்த நிலத்தில் என்ன நடந்தது? சமூகநீதி, சாதி ஒழிப்பு, பெண்ணிய உரிமை இதெல்லாம் திராவிடத்தில் வெறும் சொல். தமிழ் தேசியத்தில் அது செயல்.
பிரபாகரனை தீவிரவாதி என்று சொன்னது திராவிடம். இலங்கையில் போரை நிறுத்தவும், பிரபாகரன் உள்ளிட்டவர்களைக் காப்பாற்றவும் அமெரிக்கா விரும்பியது. ஆனால், காங்கிரஸ் குடும்பமும், தமிழக தலைவர்களும் அதனை விரும்பவில்லை.
இலங்கை போரை விரைந்து முடிக்க அவர்கள் விரும்பினார்கள் என்று முன்னாள் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரி சிவசங்கர மேனன் எழுதி இருக்கிறார்.
பிரபாகரன் இருப்பது இவர்களின் எதிர்கால அரசியலுக்கு ஆபத்தாக இருக்கும் என்று கருதினார்கள். 13 கோடி தமிழ் சொந்தம் இருக்கும்போது, இசைப்பிரியா, பாலச்சந்திரனுக்கு கொடிய நிகழ்வு நடந்தது. பிரபாகரன் மகன் ராணுவ கட்டுப்பாட்டில் இருப்பது தமிழக, இந்திய தலைவர்களுக்கு சொல்லப்பட்டது.
ஆனால், பிரபாகரன் குடும்பத்தில் ஒருவர் கூட இருக்கக்கூடாது என்று தகவல் சொல்லப்பட்டுள்ளது. அதனால் பாலச்சந்திரனைக் கொன்றார்கள். இதை மறந்து, கடந்து போக முடியுமா? இதற்கு காரணமானவர்களை வஞ்சம் வைத்து கருவருக்காமல் விடமாட்டேன்.
பேரரசுகள் சாம்ராஜ்யங்களே வீழ்ந்துள்ள போது உங்களை வீழ்த்துவது எம்மாத்திரம்? வீழ்ந்து விட்டதால் தான் இப்போது காசு கொடுத்து ஓட்டு கேட்கின்றனர். சாதி பார்க்காமல் நாம் தமிழர் கட்சியில் இணைந்துள்ளோம். ஈரோடு கிழக்கு மக்களுக்கு நான் யாருக்காக பேசுகிறேன் என்று தெரியும்.
உதட்டில் இருந்து அல்ல, உள்ளத்தில் இருந்து பேசுகிறேன். உண்மையை, உரக்கப் பேசுவோம். உறுதியாக பேசு வோம். சத்தியத்தை சத்தமாக பேசுவோம். என்னை தோற்கடிக்க துடிக்கிறது திராவிடம். நான் வீழ்வது மகிழ்ச்சி என்றால் தி.மு.க. விற்கு வாக்களியுங்கள்.
வீழ்ந்த தமிழினம் எழ வேண்டுமானால், தன்மானத்தோடு மக்கள் வாழ வேண்டுமானால் எங்களுக்கு வாக்களியுங்கள். கட்சிகளை, தலைவர்களை நம்பியது போதும். ஒருமுறை எங்களை நம்புங்கள். எங்களின் வெற்றி தமிழ் பேரினத்தின் வெற்றி. மக்களின் வெற்றி. அரசியல் புரட்சிக்கான வெற்றி.
இவ்வாறு அவர் பேசினார்.
- பெரியார் குறித்து கொச்சையாக விமர்சனம் செய்யக் கூடியவர்கள் தமிழ்நாட்டில் முளைத்திருக்கிறார்கள்.
- திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு மட்டுமே பெரியார் வழிகாட்டி அல்ல.
தந்தை பெரியார் குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.
இதனால், தந்தை பெரியார் ஆதரவாளர்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இருப்பினும், சீமான் தொடர்ந்து தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், திண்டிவனம் அருகே மறைந்த கட்சிநிர்வாகி படத்திறப்பு விழாவில் விசிக தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார்.
அந்நிகழ்வில் பேசிய திருமாவளவன், "இன்றைக்கு பெரியார் குறித்து கொச்சையாக விமர்சனம் செய்யக் கூடியவர்கள் தமிழ்நாட்டில் முளைத்திருக்கிறார்கள். அவர்களை பின் இருந்து இயக்கக் கூடியவர்கள் யார் என்பதும், அவர்கள் மூலம் அம்பலமாகி உள்ளது.
திமுக, அதிமுக போன்ற கட்சிகளுக்கு மட்டுமே பெரியார் வழிகாட்டி அல்ல. விசிகவுக்கும் அவர்தான் வழிகாட்டி. ஆகவே பெரியாரை விமர்சிப்பவர்களை கண்டு வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது" என்று தெரிவித்தார்.
- இந்தியாவில் ஏ.கே 74 துப்பாக்கியை சுட்ட முதல் ஆள் நான் தான்.
- மாற்று அரசியலுக்கான போராட்டத்தை முன்னெடுக்கிறோம்.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சு மியை ஆதரித்து வீரப்பன் சத்திரம் பஸ் நிறுத்தம் அருகே நடந்த பிரசாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-
உலகு எங்கிலும் உரிமை இழந்து அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் தங்களின் இனத்தின் பாதுகாப்பு எழுச்சிக்காக விடுதலை பெற்று இருப்பது வரலாறு. அதே போல நமது நிலத்தில் உரிமைகளை இழந்தும் உடமைகளை இழந்தும் இறுதியாக உயிரை இழக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
கடந்த 14 ஆண்டுகளாக தாய் நிலத்தில் நாம் அடிமைகள். நம் நிலத்தில் தாய்மொழியிலே கல்வி கற்றால் வேலை வாய்ப்பு இல்லை. நதிநீர் உரிமை பெற முடியவில்லை.
இந்திய பெருங்கடலில் மீன் பிடித்து திரும்ப முடியவில்லை. வேளாண்மை செய்ய முடியவில்லை. வேலை செய்ய முடியவில்லை. இதனால் அதிகார வலிமை தான் என்று பேசி பேசி 36 லட்சம் வாக்குகள் பெற்று தமிழகத்தில் 3-வது கட்சியாக அங்கீகாரம் பெற்று நிற்பது தான் புரட்சி.
போராட வேண்டும், இல்லையென்றால் நீயும் நானும் பலிகடா தான். இதனால் போராடு. போராட்டத்தினால் பல மாற்றங்களை பெற்றுள்ளோம். போராட்டம் இல்லையென்றால் உலகில் பல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்காது. மாற்று அரசியலுக்கான போராட்டத்தை முன்னெடுக்கிறோம்.
ஒவ்வொருவரின் மனதில் மாற்றம் சிந்தனை வந்து விட்டால் மாற்றம் வந்து விடும். இப்படிப்பட்ட மாற்றம் வருவதற்கு அரிய வாய்ப்பு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தந்துள்ளது. நாம் தமிழர் கட்சி பயம் என்பது இல்லை என்பதால் துணிந்து நிற்கி றோம்.
நாங்கள் வீரர்கள். அதனால் துணிந்து தனித்து நிற்கிறோம். நாங்கள் கையேந்தி வாக்கு கேட்பது உங்கள் இடத்தில். எங்கள் இனத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து வருகிறோம். இந்த நிலைமை எங்கள் பின்னால் வரும் பிள்ளைகளுக்கு இருக்க கூடாது என்பதற்காக வாக்கிற்கு ரூ.500, ரூ.1000-க்கு கையேந்த கூடாது என்று கத்திக் கொண்டு இருக்கிறோம்.
நானே பீகார், கர்நாடக, கேரளாவில் இருந்து வந்து இருந்தால் 10 ஆண்டுகளுக்கு முன்பு என்னை முதல்வ ராக்கி இருப்பார்கள். இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற பழமொழியில் தான் தமிழன் தோற்று போய்விட்டான்.
ஆங்கிலம் அறிவு இல்லை, ஒரு மொழி. வெள்ளை என்பது அழகு இல்லை ஒரு நிறம், தமிழில் எல்லா சாமிகள் கருப்பு தான். முருகன் கருப்பாக தான் இருப்பான்.
பிறந்த நாட்டுக்காக பிரபாகரன் பின்னால் சென்று 50 ஆயிரம் பேர் இறந்தார்கள். பணத்தை கொடுத்து நீ பொருளை வாங்குவாய், நாங்கள் உயிரை கொடுத்து வாங்குவோம். பிரபாகரன் துப்பாக்கி ஆயுதம் தூக்கியது போல நாம் தமிழர் கட்சி பிள்ளைகள் வாக்கினை ஆயுதங்களை தூக்கி வெல்வோம்.
அப்போது சீமான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனை சந்தித்த அனுபவம் குறித்து பேசினார். சினிமாவில் என்கவுண்டர் செய்யுற இங்கே வந்து ஏன் தடுமாறுகிற என்று பிரபாகரன் என்னிடம் கேட்டார்.
அப்போது ஏ.கே 74 ரக துப்பாக்கி குறித்தும் அதன் செய்முறை குறித்தும் எனக்கு அவர் பயிற்சி அளித்தார். அப்போது ஏ.கே 74 துப்பாக்கி ரஷ்யா இடமும், நம்மிடம் (விடுதலை புலிகள்) தான் உள்ளது என்றார்.
அப்போது நான் ஏ.கே 74 துப்பாக்கியை அவரிடம் சுட்டு காண்பித்தேன். பிரபாகரன் எனக்கு துப்பாக்கி பயிற்சி அளித்தது உண்மை தான். இந்தியாவிலேயே ஏ.கே 74 ரக துப்பாக்கி சுட்ட முதல் ஆள் நான்தான். உங்களை மாதிரி பொய் சொல்லி பிழைப்பு செய்யவில்லை.
ஒருநாள் வரலாற்றில் வாழ்ந்தவர்களை உரிமையோடு பெருமையோடு நான் திட்டுவது போல நீ என்னை ஒரு நாள் திட்டுவதை கைவிட வேண்டும் என்றால் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுங்கள்.
நீ எனக்கு ஓட்டு போட்டு தான் ஆக வேண்டும், என க்கு உன்னை விட்டால் வேறு வழியில்லை, அதே போல எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் ஓட்டு போட்டால் கடைசியில் பிரச்சனை என்றால் என்னிடம் தான் வரவேண்டும்.
தலை நிமிர்ந்து தமிழ் இனம் சிறந்து வாழ கடைசி விடுதலை அரசியல் விடுதலை தான் என்பதை சிந்தித்து மக்கள் மைக் சின்னத்திற்கு வாக்கு அளியுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- அண்ணா பல்கலைக்கழத்தின் பாலியல் வன்கொடுமை நிகழ்வு தமிழ்நாட்டிற்கே தலைக்குணிவு.
- மறைந்த தலைவர் பெரியார் 100 சதவீதம் எவ்வளவோ நல்ல விஷயங்களை சொல்லி இருக்கிறார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சீமானை கேட்கிறேன் நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு. விலைவாசிகள் உயர்ந்து இருக்கு அதைப்பற்றி பேசுங்க. சட்டம் ஒழுங்கு மோசமாக இருக்கு, மின்சார கட்டணம் மூன்று முறை உயர்த்தி இருக்கிறார்கள், சொத்து வரி ஏற்றி இருக்கிறார்கள், வீட்டு வரி ஏற்றி இருக்கிறார்கள், பால் வரி ஏற்றி இருக்கிறார்கள், தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமை தலைதூக்கி இருக்கு அதைப் பற்றி பேசுங்க.
அண்ணா பல்கலைக்கழத்தின் பாலியல் வன்கொடுமை நிகழ்வு தமிழ்நாட்டிற்கே தலைக்குணிவு.
நாட்டில் தேனும், பாலும் ஆறாக ஓடுகிறதாம். அதனால், வேறு எதுவும் பேச இல்லை என்று சீமான் பெரியார் பற்றியே பேசுகிறார் என்றால், எதையோ திசை திருப்பவே அவர் முயற்சிக்கிறார் என்றே அரசியல் ஆர்வலர்கள், அரசியல் நோக்கர்கள் எல்லோரும் கருதுகின்றனர்.
இனிமேலாவது சீமான் பெரியார் பற்றி பேசுவதை நிறுத்திவிட்டு, பசியும் பட்டினியுமாக இருக்கும் மக்கள், விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள் பற்றி பேசி இந்த ஆட்சிக்கு பெரிய அளவில் கவனத்தை கொண்டு போக செய்வது நல்ல விஷயம்.
மறைந்த தலைவர் பெரியார் 100 சதவீதம் எவ்வளவோ நல்ல விஷயங்களை சொல்லி இருக்கிறார். அவர் சொல்லாததை எல்லாம் சொல்லி இப்போது மக்களை திசைத்திருப்ப வேண்டிய அவசியம் சீமானுக்கு ஏன் வந்தது. அதுதான் இன்றைக்கு மக்களின் கேள்வியாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது கடுமையான, மோசமான வார்த்தைகளை சீமான் பேசுகிறார்.
- அமைதியாக தேர்தல் நடத்த முயலும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக சீமானின் செயல்கள் உள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதில் ஆளும் கட்சியான திமுக சார்பில் சந்திரகுமார் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சார்பில் சீதா லட்சுமி போட்டியிடுகிறார். மற்ற முன்னணி கட்சிகள் தேர்தலை புறக்கணித்துள்ளன.
பெரியார் குறித்து சீமான் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலுக்கான பிரசாரத்திலும் பெரியார் குறித்து பேசி வருகிறார். மேலும், கட்சித் தலைவர்கள் கருத்துகளுக்கு கடுமையான வகையில் பதில் அளித்து வருகிறார்.
இந்த நிலையில் சீமானின் நாம் தமிழர் கட்சியை தடை செய்யக்கோரிய தேர்தல் ஆணையத்தில் அதிமுக ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த புகழேந்தி மனு கொடுத்துள்ளார்.
அந்த மனுவில் புகழேந்தி கூறியிருப்பதாவது:-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரசாரத்தின்போது கடுமையான, மோசமான வார்த்தைகளை சீமான் பேசுகிறார். திராவிட இயக்கத்தின் ஒப்பற்ற தலைவர்களை கொச்சைப்படுத்தி ஏராளமாக பேசுகிறார்.
பிரச்சாரத்தின்போது சாதி, மதம், இனம் தொடர்பாக சர்ச்சை கருத்துகளை பேசி கலவரத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார். அமைதியாக தேர்தல் நடத்த முயலும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகளுக்கு எதிராக சீமானின் செயல்கள் உள்ளன.
கட்சியின் அங்கீகாரத்தை திரும்பப்பெற்று நாம் தமிழர் கட்சியை தடை செய்து சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் புகழேந்தி குறிப்பிட்டுள்ளார்.
- தூய அரசியல் அமைய 14 ஆண்டுகளாக போராடி வருகின்றோம்.
- இளைஞர்கள் எல்லோரும் மாற்றத்தை விரும்புகிறார்கள்.
ஈரோடு:
ஈரோடு அக்ரஹாரம் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதா லட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நீண்ட நாட்களாக இந்த நிலத்தில் நிலவி வரக்கூடிய தீய அரசியலை மாற்றி தூய அரசியல் அமைய செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நாம் தமிழர் கட்சி 14 ஆண்டுகளாக போராடி வருகின்றோம்.
குன்றக்குடி அடிகாளர் மக்களின் அடிப்படை தேவைகளை அரசு நிறைவேற்றி கொடுக்க வேண்டும், இல்லையென்றால் அந்த நாடு குற்றம் சமூகமாக மாறும், அப்படி குற்ற சமூகமாக இல்லாத வகையில் இருக்க மாற்ற துடிக்கக் கூடியவர்கள் நாம் தமிழர் பிள்ளைகள்.
இந்த ஆட்சியாளர்கள் எப்படியாவது மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். வெற்றி பெற்ற பிறகு தொகுதி பக்கம் வராமல் இருப்பது, மக்களை பற்றி கவலை படாமல் இருப்பது, தேர்தல் வரும் போது ஓட்டுக்கு காசு கொடுத்து வாக்கு பெறுவது, ஓட்டை விற்றுக் கொண்டு இருக்கிறோம். அவர்கள் ஓட்டை வாங்கி கொண்டு நாட்டை விற்கிறார்கள்.
அடுத்த தேர்தல் வரும் போது சிந்திப்பார்கள். ஆனால் மக்களை பற்றி சிந்தித்து கொண்டே இருப்பது கட்சி அரசியல். தேர்தல் அரசியலில் பெண்கள் ஓட்டை வாங்குவது என தி.மு.க. நினைத்தது, பெண்கள் ஓட்டை தி.மு.க. வுக்கு போடுவது இல்லை என்றும் அதனை எப்படி வாங்குவது என்று சிந்தித்து குடும்பத் தலைவிக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கொடுப்பது என்று நினைத்தது தான் தேர்தல் அரசியல்.
அதே போன்று மாணவர்கள் நாம் தமிழர் கட்சிக்கு ஓட்டு போடுகிறார்கள். இளைஞர்கள் எல்லோரும் மாற்றத்தை விரும்புகிறார்கள். ஏன் என்றால் எங்கு பார்த்தாலும் ஊழல், சுற்றுச்சூழல் பாதிப்பு, இதையெல்லாம் பார்த்து இளைஞர்கள் சீமான் பின்னால் செல்கிறார்கள்.
சீமான் பின்னால் இருப்பவர்கள் எந்த அரசியல் பின்னணி கொண்டவர்கள் இல்லை. 60 ஆண்டுகால திராவிட ஆட்சியில் தாய்மார்கள் ஆயிரம் ரூபாய்க்கு கையேந்தி நிற்கிறார்கள். ஆயிரம் ரூபாய்க்கு பெண்கள் கையேந்தினால் அது புரட்சி பெண்ணா வறட்சி பெண்ணா.
திராவிடம் என்று எந்த வழியில் பொருள் கொண்டாலும் திருடன் என்று தான் பொருள் வருகிறது. திராவிடம் தீராத கொடிய விஷம். நூறு ரூபாய் முதல் 2 ஆயிரம் ரூபாய் வரை பணம் கொடுப்பது தான் தேர்தல் அரசியல்.
45 ஆயிரம் கோடி சாராய விற்பனை தேர்தல் அரசியல், தாலிக்கு தங்கம் தேர்தல் அரசியல், இந்த தேர்தல் அரசியலை தீ வைத்து கொளுத்தி விட்டு கட்சி அரசியல் நோக்கி மக்கள் செல்வது தான் இந்த மண்ணுக்கு தேவையான தூய்மையான அரசியல்.
அண்ணா பல்கலைக்கழகம் மாணவி எப்படியெல்லாம் பாலியல் கொடுமை குறித்து அளித்த வாக்கு மூலம் மாணவி எப்.ஐ.ஆர் குறித்து வெளியிட்டது தான் திருட்டு திராவிடம். இத்தனை எப்.ஐ.ஆர் இருக்கும் நிலையில் மாணவி நகல் மட்டும் இணையதளத்தில் இருந்து கசிந்து வெளியானது எப்படி?
அந்த சார், எந்த சார் என்று ஏதாவது விசாரித்து இந்த அரசு வெளியிட்டுள்ள தா? போராட வந்த பா.ம.க சுற்றுச்சூழல் அமைப்பாளர் சவுமியா, பா.ஜ.க குஷ்பு ஆகிய பெண்கள் கைது செய்யப்பட்டது ஏன்? அப்போது ஞானசேகரன் குற்றவாளியா? அரசு குற்ற வாளியா? என் வீட்டை 15 நாட்களுக்கு முற்றுகை செய்ய அனுமதி அளித்தது ஏன்? பெரியாரை வேண்டு மென்று விமர்சனம் செய்ய வில்லை. பெரியார் வேண்டாம் என்று தான் விமர்சனம் செய்கின்றேன்.
பெரியார் பெரியார் என்று பேசுகிறார்கள். ஆனால் பெரியார் பேசியதை பேச மறுக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ் தென் மாநில கிளையை பெரியார் தலை மையில் உருவாக்கியது. சிறையில் இருந்த முத்துராமலிங்கத் தேவர், நல்லகண்ணு போன்ற தலைவர்கள் போல பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ், பெரியார் ஆகியோர் சிறையில் இல்லை.
என்னை ஒன்று தான் செய்ய முடியும். வழக்கை போடலாம். சிறையில் போடலாம் தவிர வேறு ஒன்றும் செய்ய முடியாது. கூட்டத்தில் தொடர்ந்து சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்தை பார்த்து ஆம்புலன்ஸ் வாகனத்தில் பாதிக்க ப்பட்டவன் போறானா? பணம் போகிறதா என்று தெரியவில்லை.
இப்போது தமிழகத்தில் பணம் இப்படி தான் போகி றது. இன்னும் ஒன்றை ஆண்டுகளில் 2026-ம்ஆண்டு புதிய அரசியல் படைப்போம். இனி என்னி டம் இருந்து தப்பிக்க முடியாது. சட்ட நகல் எரித்த பெரியார் நவம்பர் 26-ம் தேதி தி.மு.க சட்ட நகல் எரிப்பு நாள் என்று கொண்டாடி பிரபாகரன் பிறந்தநாளை கொண்டாடு வதை திசை மாற்றுகிறார்கள்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என வரும் போது தி.மு.க. குதிப்பது என்ன? இந்த நடைமுறையை ஆதரித்து பேசியது தி.மு.க.வின் தலை வராக இருந்த 1971ம் ஆண்டு கருணாநிதி தான் ஓரே நாடு ஓரே தேர்தல் வரவேற்று பேசினார். ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வின் ஒரே நாடு, ஓரே மதம், கட்சி ஆகிய கோட்டுப்பாடுகளை வரவேற்று பேசியவர் பெரியார்.
ஓரே நாடு, ஓரே கட்சி, ஓரே மதம், வேண்டும் என்று பெரியார் எழுதியது இருக்கிறது. பா.ஜ.க. பி டீம் நாம் தமிழர் கட்சி என்றால், அப்போது ஏ டீம் யாரு, அது தி.மு.க. தான். அதனால் அதை ஒழிக்க வேண்டும்.
5 நேரம் தொழும் இஸ்லாமிய மக்கள் தொழும் போது ஒருமுறை ஒரு நொடியில் எங்களுக்காக வெற்றி பெற துவா செய்யுங்கள் என்று கேட்டு கொள்கின்றேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- தென்காசி மாவட்டத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்ட திமுக எம்பி கனிமொழி சீமான் பேச்சுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்திருந்தார்.
- ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட சீமான் கனிமொழிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
ஈரோட்டில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமிக்கு ஆதரவு திரட்டி பேசினார்.
சீமான் பேசுகையில், உன் பெரியாரிடம் வெங்காயம் தான் உள்ளது. என் தலைவனிடம் வெடிகுண்டு உள்ளது. நீ வெங்காயத்தை என் மீது வீசு, நான் வெடிகுண்டை உன் மீது வீசுவேன்.
வெடிகுண்டை வைத்திருக்கிறேன், இன்னும் வீசவில்லை. நான் வெடிகுண்டை வீசினால் உன்னை புதைத்த இடத்தில் புல் கூட முளைக்காது என்று பேசி உள்ளார்.
இதனையடுத்து, அரசியல் தலைவர்கள் பலரும் சீமான் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசி வருகிறார்கள்.
அந்த வகையில், தென்காசி மாவட்டத்தில் விழா ஒன்றில் கலந்து கொண்ட திமுக எம்பி கனிமொழி சீமான் பேச்சுக்கு மறைமுகமாக பதிலடி கொடுத்திருந்தார். அதில் பேசிய அவர் " மக்களுக்காக போராடி எத்தனை முறை சிறை சென்றாலும் நீதி மன்றத்தில் பெரியார் ஒரு முறை கூட மன்னிப்பு கேட்டது இல்லை.

நான் செய்தது தவறு இல்லை எனக்கு கொடுக்கப்படும் தண்டனையை கொடுங்கள் என கர்ஜித்த ஒரு மனிதர். தமிழ் தமிழ் எனக் கூறிக்கொண்டு தமிழையும் தமிழர்களையும் கொச்சைப்படுத்தக் கூடிய, பெரியாரை இழிவுபடுத்தக்கூடிய சில கூலிக்காரர்களை எதிர்த்து அரசியல் செய்ய வேண்டிய சூழல் உள்ளது" எனவும் சீமானின் பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக கனிமொழி பேசியிருந்தார்.
அதனைத்தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட சீமான் கனிமொழிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசியுள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் "
சும்மா கூலி காலினுலாம் பேசக்கூடாது.. எனக்கு தெரிந்து கனிமொழி அவர்களுடைய அப்பாவையும், பேரறிஞர் அண்ணாவையும் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.
ஏனென்றால், நான் பெரியாரை இழிவுபடுத்தி பேசவில்லை பெரிய பேசிய கருத்துக்களை பற்றி தான் பேசுகிறேன். பெரியார் பற்றி மட்டும் தான் மற்றவர்கள் பேசுகிறார்கள். ஆனால், பெரியார் என்ன எழுதி வைத்தார்? என்ன பேசினார் என்பது பற்றி யாரும் பேசமாட்டிக்கிறார்கள். இதனை எடுத்து பேசுவதற்கு உங்களுடைய யாருக்கும் துணிவு இல்லை. பெரியார் யார் தெரியுமா? என்று கேட்கிறீர்கள் யார் என்று கேட்டல் சொல்லமாட்டிக்கிறீர்கள்.
திமுக அளவிற்கு பேரறிஞர் அண்ணா, கருணாநிதி, அவர்களைவிட யாரவது இழிவா பேசியிருக்கிறார்களா? கனிமொழி சொல்லும் பெரிய கூலி அவருடைய அப்பா தான். அப்போ நீங்க உங்களுடைய தந்தையை தான் எதிர்த்து பேசிக்கொண்டு இருக்கிறீர்களா? தமிழகத்தில் இத்தனை தொகுதி இருந்தும் நீங்கள் ஏன் தூத்துக்குடிக்கு சென்று போட்டியிட்டீர்கள் என்ற காரணத்தை சொல்ல முடியுமா?. தூத்துக்குடி மக்களை நம்ப வைத்து ஏமாற்றியவர் நீங்கள். அதனைவிட்டுவிட்டு சும்மா சும்மா கூலி காலினுலாம் சொல்லாதீங்க..உங்க அப்பா தான் பெரிய கூலி" எனவும் சீமான் சற்று ஆவேசத்துடன் பேசினார்.
- அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் படிக்கும் மாணவிக்கு பாதுகாப்பு இல்லை.
- தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தில் இரண்டு முறை எம்.பி.யான கனிமொழி என்ன நடவடிக்கை எடுத்தார்.
ஈரோடு:
ஈரோடு பெருமாள் மலைப்பகுதியில் பட்டாவுக்காக போராடும் மக்களை இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரடியாக சந்தித்து அவர்களது குறைகளை கேட்டு அறிந்தார். பின்னர் நிருபர்களுக்கு சீமான் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நான் பெரியாரை இழிவுபடுத்தவில்லை. பெரியார் என்ன பேசி இருந்தாரோ எழுதியிருந்தாரோ அதை எடுத்து பேசினேன். பெரியாரைப் பற்றி அனைவரும் பேசுகிறார்கள் கனிமொழி உட்பட. பெரியார் என்ன பேசினார்? பெரியார் என்ன எழுதினார் என்று எடுத்துப் பேச உங்களுக்கு யாருக்கும் துணிவு இல்லை. பெரியார் யார் தெரியுமா என்று கேட்கிறீர்கள் தெரியவில்லை சொல்லுங்கள் என்றால் சொல்ல மறுக்கிறீர்கள்.
பெரியாரை தமிழ்நாட்டில் பேரறிஞர் அண்ணா, கருணாநிதி அளவுக்கு யாராவது இழிவு படுத்தி பேசி உள்ளார்களா? பெரியார் எங்கு சாதி ஒழிப்பை நீக்கினார். பெரியார் பற்றி பேச உங்களுக்கு என்ன தகுதி உள்ளது.
பெரியாரை பற்றி பேசும் பெருமக்கள் பெரியார் பேசியது எழுதியதை பேச துணிவில்லை.
கனிமொழி பெரியாரிஸ்டா? கடவுள் மறுப்பிலா? சமூக நீதி, பெண்ணிய உரிமை? திமுக கொடுத்த பெண்ணிய உரிமையை பேச முடியுமா? பெரியார் எங்கு சாதி ஒழிப்பு நிலையம் கட்டியுள்ளார்?
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லையென்பதை பெண்ணிய உரிமை நிலை நாட்டிய பெரியாரிய பெருமக்களிடம் கேட்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் படிக்கும் மாணவிக்கு பாதுகாப்பு இல்லை. ஈசிஆர் சாலையில் பயணித்த திமுக கட்சி கொடியுடன் வந்த காரில் குறுக்காட்டி தடுத்துள்ளனர். கேட்டால் இடித்துவிட்டது என பொய் பேசுகின்றனர்.
பொள்ளாச்சியில் கூட்டு பாலியல் வன்கொடுமை விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த நிலையில் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.
தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தில் இரண்டு முறை எம்.பி.யான கனிமொழி என்ன நடவடிக்கை எடுத்தார். அருணா ஜெகதீசன் தாக்கல் செய்த அறிக்கைக்கு நடவடிக்கை என்ன?
எம்ஜிஆர் கடைசியில் தனது சொத்தை காது கேளாதோர், வாய் பேச முடியாதவர் அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார். பெரியார் என்ன செய்தார்?
உங்கள் வீட்டில் கை கட்டி நிற்கிறேனா? கூலி என்கிறாய்?
500 ஆயிரம் ரூபாய் கொடுத்து வாக்குகளை பறிக்கிறார் நீதான் கூலி. வாக்கிற்கு பணம் கொடுக்காமல் நின்று காட்டு.
இவ்வாறு அவர் கூறினார்.
- ஒரு வாக்குக்கு ரூ.3 ஆயிரம் கொடுக்க தி.மு.க முடிவு செய்துள்ளதாக தகவல்.
- திராவிடம் என்பது கட்டுக்கதை.
ஈரோடு:
ஈரோடு, குமலன்குட்டை பகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து நடந்த பிரசார கூட்டத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அப்போது சீமான் கூறியதாவது:-
ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு ஒரு வாக்குக்கு ரூ.3 ஆயிரம் கொடுக்க தி.மு.க முடிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
வாக்கினை தி.மு.க.விற்கு செலுத்தி அதனை புகைப்படம் எடுத்து வந்து காட்டினால் தான் பணம் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழகத்தில் நல்ல ஆட்சி நடக்கிறது என்று மக்கள் சொல்ல வேண்டும். ஆனால் முதலமைச்சர் தனக்குத்தானே நல்லாட்சி நடப்பதாக சான்று கொடுக்கிறார்.
நல்லாட்சி நடக்கிறது என்றால், ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கிற்கு எதற்கு பணம் கொடுக்க வேண்டும்? முதலமைச்சர், அமைச்சர்களைப் பார்க்க மக்கள் தானாக வரவில்லை என்றால், அந்த அளவுக்கு ஆட்சியின் தரம் உள்ளது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
முதலமைச்சர், துணை முதலமைச்சர் கூட்டங்களுக்கு பணம் கொடுத்து கூட்டம் சேர்க்கப்படுகிறது. தி.மு.க.விற்கு வாக்களிக்காவிட்டாலும் பரவாயில்லை, நாம் தமிழருக்கு வாக்களித்து விடாதீர்கள் என்ற பிரசாரம் நடக்கிறது.
தமிழ்தேசம் பேசுவது பிரிவினை வாதம் என்றால் ஆந்திராவில் என்.டி.ராம ராவ் தெலுங்கு தேசம் ஆரம்பித்தபோது ஏன் மவுனமாக இருந்தீர்கள்? ஒவ்வொரு மாநிலத்தவரும் அந்த மாநிலத்தவராக இருக்கும் போது, தமிழர்கள் மட்டும் திராவிடர்களாக சித்தரிக்கப்படுவது ஏன்? திராவிடம் என்பது கட்டுக்கதை.
நம்ப வைத்த போலி கோட்பாடு. திராவிட முன்னேற்றம் என்பது திருடர்கள் முன்னேற்றம் தான். தமிழர் அல்லாதவர் வசதியாக வாழவும், ஆளவும் கொண்டு வரப்பட்ட ஏற்பாடுதான் திராவிடம். இதை சகித்துக் கொள்ள முடியாது. இதனை அம்பலப்படுத்துவதே எங்களின் நோக்கம்.
50 ஆயிரம் ஆண்டுகளுக்கு மூத்த மொழியான தமிழை நாங்கள் தான் செம்மொழி ஆக்கினோம் என்று திராவிடம் கூறுகிறது. உலகின் மூத்த மொழியான தமிழை, அவதூறாகப் பேசியவர் பெரியார். பெரியார் பேசியதை, எழுதியதை நான் எடுத்து பேசுகிறேன். பெரியார் குறித்து நாங்கள் முன் வைக்கும் கேள்விகளுக்கு பதில் இல்லை.
அதற்கு பதிலாக அவதூறுகளை அள்ளி வீசுகின்றனர். அநீதி எந்த வடிவத்தில் வந்தாலும் தமிழர்கள் எதிர்த்து போராடுவார்கள். இது பரம்பரை குணம். தமிழ்நாடு என நாங்கள் தான் பெயர் சூட்டினோம் என்று திராவிடர்கள் பொய் பரப்புகின்றனர். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மறுக்கும் இவர்களால் எப்படி சமூகநீதியை, இட ஒதுக்கீட்டை பெற்றுத் தர முடியும்?
இவ்வாறு அவர் பேசினார்.
- பெரியாரை கொஞ்சம் சிறியோர் ஆக்குவதற்கு சீமானுக்கு எதாவது ஒரு காரணம் இருக்கலாம்
- பெரியார் எவ்வளவு பெரிய பெரியாராக இருந்தால் இன்றைய அரசியலுக்கும் அவர் தான் தேவைப்படுகிறார்.
தந்தை பெரியார் குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.
இதனால், தந்தை பெரியார் ஆதரவாளர்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இருப்பினும், சீமான் தொடர்ந்து தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பார்த்திபனிடம், பெரியார் குறித்து சீமான் சர்ச்சையாக பேசி வருவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், "பெரியாரை கொஞ்சம் சிறியோர் ஆக்குவதற்கு சீமானுக்கு எதாவது ஒரு காரணம் இருக்கலாம். இந்த விவகாரத்தை பற்றி நாம் பேசாமல் விட்டுவிடுவது நல்லது என்று நினைக்கிறேன்.
பெரியார் எவ்வளவு பெரிய பெரியாராக இருந்தால் இன்றைய அரசியலுக்கும் அவர் தான் தேவைப்படுகிறார். சீமான் இன்று அரசியல் செய்வதற்கே தந்தை பெரியார்தான் தேவைப்படுகிறார்" என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சீமான் மீது சேலம் சூரமங்கலம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- சமூக நீதிப் பேரவை என்ற அமைப்பு சார்பில் அளித்த புகாரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தந்தை பெரியார் குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.
இதனால், தந்தை பெரியார் ஆதரவாளர்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இருப்பினும், சீமான் தொடர்ந்து தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், தந்தை பெரியார் குறித்து இழிவாக பேசிய புகாரில், நாம் தழிமர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சீமான் மீது சேலம் சூரமங்கலம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சமூக நீதிப் பேரவை என்ற அமைப்பு சார்பில் அளித்த புகாரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- ஈழத்தில் தன் இன மக்கள் சாவதை சகிக்காது, உள்ளத்தில் எரிந்த நெருப்பை தனது உடலிலே கொட்டிய தற்கொடையாளன்!
- வீரத்தமிழ்மகன் அன்புத் தம்பி முத்துக்குமார் நினைவைப் போற்றுவோம்!
சென்னை:
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
ஈழத்தில் தன் இன மக்கள் சாவதை சகிக்காது, உள்ளத்தில் எரிந்த நெருப்பை தனது உடலிலே கொட்டிய தற்கொடையாளன்! வீரத்தமிழ்மகன் அன்புத் தம்பி முத்துக்குமார் நினைவைப் போற்றுவோம்!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஈழத்தில் தன் இன மக்கள் சாவதை சகிக்காது, உள்ளத்தில் எரிந்த நெருப்பை தனது உடலிலே கொட்டிய தற்கொடையாளன்! வீரத்தமிழ்மகன்அன்புத் தம்பி முத்துக்குமார் நினைவைப் போற்றுவோம்!நாம் தமிழர்! pic.twitter.com/ovKknMrCH2
— செந்தமிழன் சீமான் (@Seeman4TN) January 29, 2025