search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 260854"

    • அமைச்சர் மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார்
    • பணிகளை விரைந்து முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் கிள்ளியூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலைகள் அமைக்க திட்ட மிடப்பட்டது.

    இதற்கான பணியை அமைச்சர்மனோ தங்கராஜ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், மாவட்டத்தில் பேரூராட்சி கள், ஊராட்சிகள், மாநக ராட்சி, நகராட்சிகள் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களின் நலன் கருதி சாலைகளை சீரமைத்தல், மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியாக, கிள்ளியூர் பேரூராட்சி 7-வது வார்டுக்குட்பட்ட ஐரேனிபுரம் கூட்டுறவு வங்கி முதல் பேராலி வரையில் 15-வது நிதிக்குழு மானிய நிதியின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பில் காங்கிரீட் தளம் அமைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும், இப்பணிகளை விரைந்து முடித்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    நிகழ்ச்சியில், கிள்ளியூர் பேரூராட்சி தலைவர்சீலா சத்தியராஜ், துணைத்தலை வர் சத்தியராஜ், கோபால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
    • ஊத்துக்குளி கிளையின் ஏ.டி.எம். எந்திரத்தினை அமைச்சர் திறந்து வைத்தார்.

    ஊத்துக்குளி :

    ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊத்துக்குளி, குன்னத்தூர் பேரூராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் எஸ்.வினீத் தலைமை தாங்கினார். ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் பிரேமா ஈஸ்வரமூர்த்தி வரவேற்றார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், கலெக்டரின் வளர்ச்சி பிரிவு நேர்முக உதவியாளர் வாணி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் மதுமிதா, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர்சீனிவாசன், ஊத்துக்குளி பேரூராட்சி தலைவர் பழனியம்மாள் ராசுக்குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கலந்துகொண்டு பேசியதாவது:-

    மழை காலம் தொடங்க இருப்பதால் சாலை பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். அனைத்து பொது மக்களுக்கும் குடிநீர் வசதி தடையின்றி கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ஊராட்சிகளின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீரேற்று நிலையங்கள் குடிநீர் வடிகால் வாரியத்தின் மூலம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். கூட்டு குடிநீர் திட்டம் மூலம் முழு கொள்ளளவு தண்ணீரை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.

    கொடிவேரி மற்றும் அவினாசி -அத்திக்கடவு திட்டத்தில் கூடிய விரைவில் நேரடியாக ஆய்வு செய்து விடுபட்ட பணிகள் சரி செய்யப்படவுள்ளது. திட்டங்கள் முழுமையாக பயனடையும் வகையில் அதிகாரிகள் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் ஊத்துக்குளி கிளையின் ஏ.டி.எம். எந்திரத்தினை அமைச்சர் திறந்து வைத்தார். பின்னர் 5 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் சிறுவணிகக்கடன்களும், 1 பயனாளிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பீட்டில் முத்ரா கடனும், 3 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் மத்திய காலக்கடன்களும் என மொத்தம் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் கடனுதவிகளை அமைச்சர் வழங்கினார். மேலும் பொது மக்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

    ஆய்வுக்கூட்டத்தில் ஊத்துக்குளி தாசில்தார் சைலஜா, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சாந்தி லட்சுமி, வட்டார வளர்ச்சி அலுவலர் ஜோதிநாத், ஊத்துக்குளி பேரூராட்சி செயல் அலுவலர் இந்துமதி மற்றும் முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் ராசுகுட்டி, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் ஈஸ்வரமூர்த்தி, அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள், பணியாளர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 500-க்கும் மேற்பட்ட பனை விதைகள் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடப்பட்டிருந்தன.
    • பனை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி இல்லாத போதும் அதனை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை ஈடுபட்டு வருவதாக குற்றம் சுமத்துகின்றனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் ஆவுடையானூர் ஊராட்சி பத்மநாபபேரி குளத்தின் கரைகளில் ரூ.6.25 லட்சம் மதிப்பிலான மரக்கன்றுகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பனை விதைகள் ஊராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடப்பட்டிருந்தன.

    இந்நிலையில் ஆவுடையானூர் ஊராட்சி நிர்வாகம் சார்பில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பத்மநாபபேரி குளக்கரையில் சாலை அமைக்க அனுமதி கோரி இருந்த நிலையில் பொதுப்பணித்துறையினர் அதற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    ஆனால் தற்பொழுது அதே பொதுப்பணித்துறை சார்பில் அங்கு சாலை அமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே குளக்கரையில் நடப்பட்டிருந்த ரூ.6.25 லட்சம் மதிப்பிலான மரக்கன்றுகள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட பனை விதைகள் துளிர்விட்டு வளர்ந்து வரும் நிலையில் அவை அகற்றப்பட்டு வருகின்றன.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நடப்பட்ட மரக்கன்றுகள் மற்றும் அதற்கான செலவினங்கள் அனைத்தும் பொதுப்பணித் துறையின் இந்த நடவடிக்கையால் விைரயம் செய்யப்பட்டு வருகிறது.

    தற்போது சாலை அமைத்து வரும் குளக்கரையில் அதிகளவில் பனை மரங்கள் இருப்பதால் அவற்றை வெட்டுவதற்கு அனுமதி இல்லாத போதும் அதனை அகற்றும் பணியில் பொதுப்பணித்துறை ஈடுபட்டு வருவதாகவும் குற்றம் சுமத்துகின்றனர்.

    இதனால் மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து கவனம் செலுத்தி தன்னிச்சையாக செயல்பட்டு வரும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ×