search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slug 240950"

    • இடிக்கப்பட்ட சமுதாய நலக்கூடத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
    • கருங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    கன்னியாகுமரி:

    கிள்ளியூர் அருகே உள்ள ஆப்பிகோடு பகுதியில் ஸ்ரீபத்ரேஸ்வரி அம்மன் ஆலயத்தையொட்டி அரசு சார்பில் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் செயல்பட்டு வந்தது. இதனை அப்பகுதி மக்கள் பொதுக்காரியங்களுக்கு பயன்படுத்தி வந்தனர்.

    இந்நிலையில் சம்ப வத்தன்று ஒரு மர்ம கும்பல் அந்தக் கட்டிடத்தை இடித்து தரை மட்டமாக்கி உள்ளனர். இடிக்கப்பட்ட சமுதாய நலக்கூடத்தின் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.

    இதுகுறித்து கிள்ளியூர் பேரூராட்சி செயல் அலுவலர் பதருனிஷா கருங்கல் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் ஆப்பிகோடு பகுதியை சேர்ந்த ஸ்ரீதரன், லிஜின் உட்பட 10 பேர் மற்றும் கண்டால் தெரியும் சிலர் மீது கருங்கல் போலீசார் வழக்குப் பதிவு செய்து தேடி வருகின்றனர்.

    • கடலூரில் மாநகராட்சியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு- கடைகள் இடிக்கப்பட்டது.
    • மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மஞ்சகுப்பம் பெண்ணையாறு ரோடு அருகே மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் உள்ளது. இந்த இடங்களை ஆக்கிரமித்து வீடு, கடைகள் மற்றும் தடுப்பு சுவர்களை பொதுமக்கள் கட்டியுள்ளனர். இது தொடர்பாக கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா மாநகராட்சி ஆணையாளர் நாவேந்திரன் உத்தரவின் பெயரில் அந்த ஆக்கிரமிப்பு இடத்தை காலி செய்ய வேண்டுமென அரசு சார்பில் முன்னதாகவே அறிவுறுத்தபட்டது. இதனையடுத்து இன்று காலை மாநகராட்சி நகர அமைப்பு ஆய்வாளர் அருள் செல்வம் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு சென்று ஆக்கிரமித்து கட்டப்பட்ட 3 வீடுகள், 2 கடை, 4 சுற்றுசுவர் உள்ளிட்டவைகளை ஜேசிபி எந்திரத்தின் மூலம் அதிரடியாக இடித்து தரைமட்டம் ஆக்கப்பட்டது. பின்னர் அதை அப்புறப்படுத்தினார். மேலும் இனிவரும் காலங்களில் இதுபோன்று மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் மூலம் எச்சரிக்கை விடுத்தனர்.

    • விழுப்புரத்தில் சுகாதார கேடு விளைவிக்கும் பாழடைந்த கட்டிடம் இடிக்கப்பட்டது.
    • சுற்றுப்புற சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் நிலையில் இக்கட்டிடம் காணப்பட்டது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகராட்சியில் மொத்தம் 42 வார்டுகள் உள்ளது. என் நகரம் என் பெருமை என்ற திட்டத்தின் கீழ், நகரத்தில் உள்ள அனைத்து பகுதிகளும் தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது.இதில், நகராட்சிக்கு உட்பட்ட 9-வது வார்டில் உள்ள வடக்குத் தெருவில் தனி நபருக்குச் சொந்தமான கட்டிடம் ஒன்று மிகவும் பாழடைந்த நிலையில் இருந்து வந்தது.போதிய பராமரிப்பின்றி காணப்பட்ட இந்த கட்டடப் பகுதி, புதர்கள் மண்டியும் , மேலும்விஷ பாம்புகளின் நடமாட்டமும் அதிகம் காணப்பட்டது . மேலும் சுற்றுப்புற சுகாதாரத்திற்கு கேடு விளைவிக்கும் நிலையில் இக்கட்டிடம் காணப்பட்டது.

    இதையடுத்து, இந்தக் கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் கவுன்சிலர் வக்கீல் ராதிகா செந்தில்,மற்றும் நகர சபை தலைவர் தமிழ்ச்செல்வி சர்க்கரை கோரிக்கை விடுத்தனர்.

    அதன்பேரில், நகராட்சி ஆணையாளர் சுரேந்தர் ஷா, நகர சபை உறுப்பினர் ராதிகாநகர் நல அலுவலர் டாக்டர் பாலசுப்ரமணியன்திமுக நகர செயலாளரும் முன்னாள் நகர சபை உறுப்பினருமான சக்கரை ஆகியோர் முன்னிலையில் பாழடைந்த கட்டிடத்தை பொக்லின் எந்திரத்தின் மூலம்இடித்து அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்..

    நிகழ்வின் போது முன்னாள் நகர சபை உறுப்பினர் வக்கீல் செந்தில், துப்புரவு ஆய்வாளர் ரமணன் துப்புரவு மேற்பார்வையாளர்கள் முத்துவேல், விழுப்புரம் மேல் தெரு மாரியம்மன் கோயில் அறங்காவலர் மோகன் ,திமுக பிரதிநிதி முகமது அலி,மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதி கீதாரத்தினம்,விழுப்புரம் வடக்கு தெரு குடியிருப்பு வாசிகள் பால்ராஜ்,ஆனந்த்,சீனு மற்றும் மெக்கானிக்கல் சரவணன் உடன் இருந்தனர்.

    ×