என் மலர்
நீங்கள் தேடியது "slug 227096"
- திறந்து வைக்க தே.மு.தி.க. வலியுறுத்தல்
- மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி நிதி ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து 13 பேன்களுடன் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது.
கன்னியாகுமரி:
குமரி மாவட்டத்தில் மத்திய பகுதியில் அமைந்துள்ளது தக்கலை தாலுகா அலுவலகம்.
இந்த தாலுகா அலுவலகத்தை சுற்றி வட்ட வழங்கல் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலகம், சார் கருவூல அலுவலகம், ஆதிதிராவிடர் நல அலுவலகம், கிராம அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்த அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு ஓய்வெடுக்க போதுமான அறைகள் எதுவும் இல்லை. இதை கருத்தில் கொண்டு 2002 வருடத்தில் உள்ள அப்போைதய கலெக்டர் மாவட்ட ஆட்சியர் வளர்ச்சி நிதி ரூ.5 லட்சத்து 40 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்து 13 பேன்களுடன் கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால் இது வரைக்கும் திறக்கபடவில்லை.
வருவாய் துறை அதிகாரிகளும் கண்டு கொள்ள வில்லை. இக்கட்டிடத்தை உடனே பொதுமக்கள் நலன் கருதி திறக்க வேண்டும் என தே.மு.தி.க. முன்னாள் ஒன்றிய செயலாளர் டேவிட் மாவட்ட கலெக்டருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில் தக்கலை தாலுகா அலுவலகத்தில் உள்ள பொதுமக்கள் ஓய்வறையை திறக்காவிடில் தே.மு.தி.க. சார்பில் திறந்து வைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
- மழை சேதங்களை தடுக்க அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்
- முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டத்தில் கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா பேச்சு
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் கன மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து குமரி மாவட்டத்தில் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு உள்ளது. முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா இன்று குமரி மாவட்டம் வந்தார்.
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் கண்காணிப்பு அதிகாரி ஜோதி நிர்மலா இன்று அதிகாரிகளுடன் ஆலோ சனை மேற்கொண்டார். தென்மேற்கு பருவமழை மற்றும் தற்பொழுது பெய்து வரும் மழையின் போது செய்ய வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து கூட்டத்தில் ஆலோ சிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத், மாவட்ட வருவாய் அதிகாரி சிவப்பிரியா, நாகர்கோவில் மாநகராட்சி கமிஷனர் ஆனந்தமோகன், பத்மநாபபுரம் சப்- கலெக்டர் அலர்மேல் மங்கை, நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் மற்றும் தாசில்தார்கள் கலந்து கொண்டனர்.
மேலும் வருவாய் துறை, மீன்வளத்துறை, மின்சார வாரியம், பொதுப் பணித்துறை உட்பட அனைத்து துறை அதிகாரி களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் ஜோதி நிர்மலா பேசியதாவது-
குமரி மாவட்டத்தில் தற்பொழுது பெய்துவரும் மழை மற்றும் தென்மேற்கு பருவமழையின் போது ஏற்படும் பாதிப்புகளை தடுக்க அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கி ணைந்து பணியாற்ற வேண்டும்.
தற்பொழுது கடல் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பு அனைத்து மீனவ கிராமங்களுக்கும் தெரிவிக்கப்பட்டு சம்பந்த ப்பட்ட மீனவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். கடலுக்கு சென்ற மீனவர்கள் அனைவரும் உடனடியாக கரை திரும்பியுள்ளார்களா? என்பது குறித்த தகவல்களை மீன்வளத்துறை அதிகாரிகள் சேகரிக்க வேண்டும்.
மின்வாரிய அதிகாரிகள் தாழ்வான பகுதியில் உள்ள மின் கம்பங்களை கணக்கெடுத்து அதை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர் நிலைகளில் நீர் இருப்பு எவ்வளவு உள்ளது என்பது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.இரவு பகலாக அணைகளின் நீர்மட்டத்தை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள 4 தாலுகாக்களிலும் கண்கா ணிப்பு அதிகா ரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களுடன் அனைத்து துறை அதிகாரிகளும் ஒருங்கி ணைந்து பணியாற்ற வேண்டும் .
இவ்வாறு அவர் பேசினார்.
- இந்நிலையில்புதிதாக உருவாக உள்ள திருவோணம் தாலுகாவில் நம்பி வயல் கிராமத்தை சேர்ப்பதாக தமிழகஅரசு அறிவிப்பு வெளியானது.
- இதுபோன்று பல்வேறு துறைகள் பட்டுக்கோட்டை பகுதியை சார்ந்தே அமைந்துள்ன.
பட்டுக்கோட்டை:
புதிதாக துவங்கப்பட உள்ள திருவோணம் தாலுகாவில் நம்பிவயல்கிராமத்தை இணைப்பதை எதிர்த்து நம்பிவயல் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நம்பிவயல் கிராமத்தின் மொத்த பரப்பளவு 881 ஹெக்டர், கிராமத்தின் மொத்த மக்கள்தொகை 2500 பேர், விவசாய பரப்பளவு 650 ஹெக்டர், நம்பிவயலின் இரண்டு பக்கத்திலும் சரியாக பத்து கிலோமீட்டர் தொலைவில் பட்டுக்கோட்டை மற்றும் திருவோணம் எதிரெதிர் திசையில் இருக்கிறது. நம்பிவயல் பிரசிடெண்ட் ஊராட்சி மன்ற தலைவராக கல்யாண சுந்தரம் என்பவர் இருக்கிறார்.
இந்நிலையில்புதிதாக உருவாக உள்ள திருவோ ணம் தாலுகாவில் நம்பி வயல் கிராமத்தை சேர்ப்பதாக தமிழகஅரசு அறிவிப்பு வெளியானது. அதனடிப்படையில் திருவோணத்துடன் சேர்த்தால் தங்கள் கிராம மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாவார்கள் என போராட்டக்காரர்கள் கூறினர். இந்த நம்பிவயல் கிராமத்தின் எம்எல்ஏ பேராவூரணி தொகுதியை சேர்ந்தவர்.
ஊராட்சி ஒன்றியமோ பட்டுக்கோட்டையை சேர்ந்தது, வட்டாட்சியர் அலுவலகம், பட்டுக்கோ ட்டையிலும்காவல் நிலையமோ, திருவோணத்தி லும், இருக்கிறது. அதேபோல் கோட்டாட்சியர் அலுவலகம், பத்திர பதிவுத்துறை பட்டுக்கோட்டையிலும், மின்வாரிய அலுவலகம், கலியராயன் விடுதியிலும், வேளாண்மைத் துறை, வட்டாரப் போக்குவரத்து அலுவலகம், பட்டுக்கோ ட்டையிலும் இருக்கிறது.
இதுபோன்று பல்வேறு துறைகள் பட்டுக்கோட்டை பகுதியை சார்ந்தே அமைந்துள்ன. இந்நிலையில் புதிதாக உருவாக உள்ள திருவோணம் தாலுக்காவில் நம்பிவயல் கிராமத்தை சேர்ப்பதை எதிர்த்து பட்டுக்கோட்டை - திருச்சி சாலையில் இன்று காலை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களுடன் பட்டுக்கோட்டை தாசில்தார் ராமச்சந்திரன், ஒரத்தநாடு டி.எஸ்.பி பிரவீன், பட்டுக்கோட்டை ஆர்.டி.ஓ பிரபாகர் ஆகியோர் போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
- ரிஷிவந்தியத்தை: தாலுகாவாக அறிவிக்க கோரி பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
- அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை ரிஷிவந்தியத்தில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் ரிஷிவந்தியத்தை தாலுகாவாக அறிவிக்கவும், அரசு கல்லுாரி அமைக்கக் கோரியும் பா.ம.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ரிஷிவந்தியத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட செயலாளர் டாக்டர் ராஜா தலைமை தாங்கினார்.
முன்னாள் மாவட்ட செயலாளர் அமுதமொழி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக, மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார், விழுப்புரம் மத்திய மாவட்ட செய லாளர் பாலசக்தி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், ரிஷிவந்தியத்தை தலைமையிடமாகக் கொண்டுதனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும். அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியை ரிஷிவந்தியத்தில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
- பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் ரஞ்சித், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மூர்த்தி ,மாரியப்பன், கருணாநிதி, ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
- 12-ம் வகுப்பில் 500 மதிப்பெண்ணுக்கு மேல் எடுக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
கபிஸ்தலம்:
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் தாலுகா, ஆலங்குடி ஊராட்சியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கல்வி ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தன் தலைமையில் நடைபெற்றது.
பெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் ரஞ்சித், செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் மூர்த்தி ,மாரியப்பன், கருணாநிதி, ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவரும், ஆலங்குடி ஊராட்சி மன்றத் தலைவருமான வழக்கறிஞர் மோகன் கலந்து கொண்டு பள்ளியில் படித்த 10 மற்றும்
12-ம் வகுப்பில் முதல் 3 இடம் பிடித்த மாணவ-மாணவிகளுக்கு கல்வி ஊக்கத் தொகைகளை வழங்கி பேசியதாவது:-
வருகின்ற 2022-ம் ஆண்டு நம் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 400 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கும் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் ஊக்கத் தொகையாக தலா ரூ.50,000 வழங்கப்படும்.
12-ம் வகுப்பில் 500 மதிப்பெண்ணுக்கு மேல் எடுக்கும் அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற துணை தலைவர், உறுப்பினர்கள், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மாணவ- மாணவிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.