என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிமுக நிர்வாகி கொலை"

    • தமிழ்நாட்டை படுபாதாளத்திற்கு தள்ளியுள்ள ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம்.
    • தி.மு.க. பிரமுகர் கருணாகரன் உள்ளிட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் அ.தி.மு.க. நிர்வாகி முத்துபாலகிருஷ்ணனை, தி.மு.க. நிர்வாகி கருணாகரன் உள்ளிட்டோர் லாரி ஏற்றி படுகொலை செய்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

    இக்கொலைக்கு உள்ளாட்சி தேர்தல் போட்டியும் ஒரு காரணம் என்று செய்திகள் வருகின்றன.

    இதையும் "தனிப்பட்ட கொலை" என்ற அளவோடு தான் ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசு கடந்து செல்ல முனையுமா?

    தி.மு.க. ஆட்சியில் உள்ளாட்சி தேர்தல் என்பது இவர்களின் அராஜகத்திற்கு இடையில் தான் நடைபெறும் என்பது நாடறிந்த உண்மை. ஆனால், அதற்காக, எதிர்க்கட்சியைச் சார்ந்தோரை கொலை செய்யும் அளவிற்கு தி.மு.க.-வினருக்கு பதவி வெறி தலைக்கேறிவிட்டதா?

    சட்டம் ஒழுங்கை அடியோடு சீர்குலைத்துவிட்டு, அதை தட்டிக் கேட்கும் இடத்தில் இருக்கும் எதிர்க்கட்சியினரின் உயிருக்கே பாதுகாப்பற்ற நிலையில், தமிழ்நாட்டை படுபாதாளத்திற்கு தள்ளியுள்ள ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனம்.

    முத்துபாலகிருஷ்ணன் கொலை வழக்கில் தொடர்புள்ள தி.மு.க. பிரமுகர் கருணாகரன் உள்ளிட்ட அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன்.

    சிவகங்கை அதிமுக நிர்வாகி கதிரேசன் கொலை வழக்கில் 11 பேருக்கு கீழ் நீதிமன்றம் விதித்த 3 ஆயுள் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. #MadrasHighCourt #SivagangaMurderCase
    சென்னை:

    சிவகங்கை மாவட்ட அதிமுக மாணவரணி செயலாளர் கதிரேசன், அவரது மகன் பிரசன்னா, கார் டிரைவர் பூமிநாதன் ஆகியோர் கடந்த 2012ம் ஆண்டு நவம்பர் மாதம் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக முன்னாள் ஊராட்சி தலைவர் அர்ச்சுனன் மற்றும் அவரது மகன்கள் உள்ளிட்ட 21 பேர் கைது செய்யப்பட்டனர். விசாரணையில், தேர்தல் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்தது.

    இந்த வழக்கை விசாரித்த சிவகங்கை அமர்வு நீதிமன்றம் 2015-ல் தீர்ப்பு வழங்கியது. அப்போது, 11 பேர் மீதான குற்றச்சாட்டு நிரூபணமானதால், அவர்களுக்கு தலா 3 ஆயுள் தண்டனை விதித்தது. 10 பேர் விடுவிக்கப்பட்டனர்.

    தண்டனையை எதிர்த்து 11 பேர் சார்பிலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, குற்றவாளிகள் தரப்பு வாதங்களை நிராகரித்த நீதிமன்றம், அவர்களுக்கு கீழ் நீதிமன்றம் விதித்த 3 ஆயுள் தண்டனையை உறுதி செய்தது. #MadrasHighCourt #SivagangaMurderCase
    ×