என் மலர்
நீங்கள் தேடியது "ஹேமமாலினி"
- கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாள் நடக்கிறது.
- கும்பமேளா நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகினர்.
புதுடெல்லி:
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்து வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.
கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகினர். மாநில அரசின் நிர்வாகம் சரியில்லை என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
இதற்கிடையே, நடிகையும், பா.ஜ.க. எம்பியும் ஆன ஹேமமாலினி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், கும்பமேளா கூட்ட நெரிசல் ஒரு பெரிய சம்பவம் இல்லை. அது மிகைப்படுத்தப்படுகிறது என தெரிவித்தார்.
இந்நிலையில், சமூக வலைதளங்களில் சுறுசுறுப்பாக இருப்பவர்கள், மக்களின் வலியையும், விரக்தியையும் பார்த்து புரிந்து கொண்டு பேச வேண்டும் என காட்டமாகத் தெரிவித்தார்.
- கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா பிப்ரவரி 26-ம் தேதி வரை 45 நாள் நடக்கிறது.
- கும்பமேளா நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகினர்.
புதுடெல்லி:
உலகின் மிகப்பெரிய ஆன்மிக சங்கமமான மகா கும்பமேளா உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடந்து வருகிறது. கடந்த 14-ம் தேதி தொடங்கிய கும்பமேளா அடுத்த மாதம் 26-ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ளது.
கும்பமேளா நிகழ்ச்சியில் உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இதற்கிடையே, கும்பமேளா நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலியாகினர். மாநில அரசின் நிர்வாகம் சரியில்லை என எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், நடிகையும், பா.ஜ.க. எம்பியும் ஆன ஹேமமாலினி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
நாங்கள் கும்பமேளா போயிருந்தோம். நன்றாகக் குளித்தோம். எல்லாம் நன்றாக நிர்வகிக்கப்பட்டது. கூட்ட நெரிசல்) நடந்தது சரிதான்.
இது ஒரு பெரிய சம்பவம் இல்லை. அது எவ்வளவு பெரியது என எனக்குத் தெரியவில்லை. இது மிகைப்படுத்தப்படுகிறது.
கும்பமேளா நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டது, மேலும் அனைத்தும் மிகச் சிறப்பாக செய்யப்பட்டது.
நிறைய பேர் வருகிறார்கள், அதை நிர்வகிப்பது மிகவும் கடினம். ஆனால் நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம் என தெரிவித்தார்.
பாலிவுட் சினிமாக்களில் 1970 மற்றும் 1980-களில் பிரபல முன்னணி கதாநாயகியாக திகழ்ந்த நடிகை ஹேமமாலினி உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள மதுரா பாராளுமன்ற தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யாக உள்ளார்.
முன்னர் இந்திப்பட ரசிகர்களால் ‘கனவுக் கன்னி’ (டிரீம் கேர்ள்) என்றழைக்கப்பட்ட ஹேமமாலினி(70) இந்த தேர்தலிலும் மதுரா தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில், சமீபகாலமாக பொது நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா சார்ந்த விழாக்களில் அதிகம் பங்கேற்பதை தவிர்த்துவந்த பிரபல முன்னாள் அதிரடி பாலிவுட் கதாநாயகனும் ஹேமமாலினியின் கணவருமான தர்மேந்திரா(83) இன்று அவரை ஆதரித்து மதுரா தொகுதிக்கு உட்பட்ட சில பகுதிகளில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். #Dharmendracampaigns #HemaMalini #Mathuracampaign #LSpolls
பா.ஜனதா சார்பில் மதுரா தொகுதியில் பிரபல இந்தி நடிகையும் தற்போதைய எம்.பி.யுமான ஹேமமாலினி போட்டியிடுகிறார். தீவிர பிரசாரத்தில் குதித்துள்ள ஹேமமாலினி மிகவும் பந்தாவாக அந்த தொகுதியை வலம் வந்துகொண்டிருக்கிறார்.
சுமார் 75 லட்சம் மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ் காரை தான் பிரசாரத்துக்கு பயன்படுத்தி வருகிறார்.

இதற்கிடையே கோவர்தன் என்ற இடத்தில் விவசாயிகளிடையே டிராக்டரில் சென்று பிரசாரம் செய்வதுபோல போஸ் கொடுத்த ஹேமமாலினியை கிண்டல் செய்து காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் உமர் அப்துல்லா தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.
இதனால் ஹேமமாலினியின் பிரசார முறை மேலும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக மாறியுள்ளது. 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஹேமமாலினி ராஷ்ட்ரிய லோக்தள் கட்சி வேட்பாளர் ஜெயந்தி சவுத்ரியை வீழ்த்தி வெற்றி பெற்றார். #LokSabhaElections2019 #HemaMalini

இந்நிலையில் ஹேமமாலினி அளித்த சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:-
நான் மும்பையில் தான் வசிக்கிறேன். அதனால் எதிர்க்கட்சிகளுக்கு என்ன பிரச்சினை?. எனக்கு மதுராவிலும் வீடு இருக்கிறது. மதுராவுக்கும் எனக்கும் தெய்வீக உறவு உள்ளது. நான் எம்.பியாக அறிவிக்கப்பட்டபோது கோவிலில் தான் இருந்தேன். கடந்த 5 ஆண்டுகளில் எம்.பி.யாக இருந்த போது இங்கு 250 முறை வந்துள்ளேன். இந்த தொகுதிக்கு நான் என்ன செய்தேன் என சிலர் கேள்வி எழுப்புகின்றனர். முதல் 2 ஆண்டுகள் எனக்கும், இந்த தொகுதி மக்களுக்கும் சரியான தகவல் தொடர்பு இல்லை என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் கடைசி 2 ஆண்டுகளில் மத்திய, மாநில அரசுகளின் உதவியுடன் இந்த தொகுதிக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன். இதை வரும் தேர்தலில் வெற்றி பெற்றும் தொடருவேன். எனக்கு மந்திரி ஆகும் ஆசை கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019 #HemaMalini

அவரது கணவர் தர்மேந்திராவின் சொத்து மதிப்பையும் சேர்த்து மொத்தம் ரூ.123.85 கோடி என கூறப்பட்டுள்ளது. 2013-14ல் ஹேமமாலினியின் வருமானம் ரூ.15.93 லட்சம் என குறிப்பிட்டுள்ளார். 2017-18ல் வருமானம் ரூ.1.19 கோடி என தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #HemaMalini
பிரபல இந்தி நடிகை ஹேமமாலினி கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது பா.ஜனதா சார்பில் மதுரா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள அந்த தொகுதி பா.ஜனதாவின் செல்வாக்கு மிக்க தொகுதிகளில் ஒன்றாகும்.
ஹேமமாலினி மீண்டும் இந்த தடவையும் பா.ஜனதா சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளார். அவர் மதுரா தொகுதியிலேயே மீண்டும் போட்டியிட விரும்புகிறார்.
கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலின்போது அவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ராஷ்டீரிய லோக்தள வேட்பாளர் ஜெயந்த் சவுத்திரியை 3 லட்சத்து 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். இந்த தடவையும் அதே போன்று அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற முடியும் என்று ஹேமமாலினி நம்புகிறார்.
ஆனால் உத்தரபிரதேசத்தில் உள்ள பா.ஜனதா மூத்த தலைவர்கள் ஹேமமாலினியை வேறு ஒரு தொகுதியில் நிறுத்த ஆலோசனை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக பதேபூர்சிக்ரி தொகுதியில் ஹேமமாலினியை போட்டியிட வைக்க ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
பதேபூர்சிக்ரி தொகுதியில் பா.ஜனதா எம்.பி.யாக இருக்கும் பாபுலால் சவுத்திரி மீது அந்த தொகுதி மக்களிடம் அதிருப்தி நிலவுகிறது. அந்த தொகுதியில் உள்ள பா.ஜனதா நிர்வாகிகளிடமும் பாபுலால் சவுத்திரி மீது நல்ல அபிப்பிராயம் இல்லை.
இந்த நிலையில் பதேபூர்சிக்ரியில் மீண்டும் பாபுலாலை நிறுத்தினால் சிக்கல் ஏற்பட்டு விடும் என்று உத்தரபிரதேச பா.ஜனதா தலைவர்கள் கருதுகிறார்கள். எனவே பதேபூர்சிக்ரி தொகுதியில் பா.ஜனதா வெற்றியை உறுதி செய்ய ஹேமமாலினியை களம் இறக்க நினைக்கிறார்கள்.
ஆனால் ஹேமமாலினிக்கு பதேபூர் சிக்ரி தொகுதியில் போட்டியிட விருப்பம் இல்லை. அவர் மதுரா தொகுதியிலேயே போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.
மதுரா தொகுதி மக்களிடம் அவருக்கு நல்ல ஆதரவு இருக்கிறது. எனவே அவர் அந்த தொகுதியில் எளிதாக வெற்றி பெற முடியும் என்று பா.ஜனதா மூத்த தலைவர்களிடம் தெரிவித்து இருக்கிறார். #ParliamentElection #HemaMalini
உத்தரபிரதேச மாநில அரசு பசுக்களை பாதுகாப்பதற்காக ‘கவ் சேவா ஆயோக்’ என்ற பசு பாதுகாப்பு அமைப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தனி அதிகாரம் கொண்ட அமைப்பாகும். பசுக்களை பாதுகாப்பது தொடர்பான ஆலோசனைகளை அரசுக்கு வழங்கும்.
இந்த அமைப்பு செயல்பட ரூ.647 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. தற்போது இதன் பிரசார தூதராக நடிகையும், மதுரா தொகுதி எம்.பி.யுமான ஹேமமாலினியை மாநில அரசு நியமனம் செய்துள்ளது.
பசுவை பாதுகாப்பது தொடர்பாக விழிப்புணர்வு பிரசாரத்தில் ஹேமமாலினி ஈடுபடுவார். இந்த நியமனத்தை ஏற்றுக்கொண்ட ஹேமமாலினி பசுபாதுகாப்பு தொடர்பாகவும், விழிப்புணர்வு தொடர்பாகவும் தனது திட்டங்களை பசு பாதுகாப்பு அமைப்பின் தலைவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். #HemaMalini
கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் புழுதி புயல் வீசி வருகிறது. இந்த புழுதி புயலினால் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளதோடு, பலர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் நேற்று கனமழையுடன் கூடிய புழுதி புயல் ஏற்படுத்திய பாதிப்பில் நேற்று குழந்தைகள் உட்பட பலர் உயிரிழந்துள்ளனர். உ.பி.யில் மட்டும் 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே உள்ள ஒரு கிராமத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக அத்தொகுதியின் பா.ஜ.க நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமமாலினி தனது ஆதரவாளர்ளுடன் சென்றார். அப்போது, அந்த சாலையில் திடீரென ஒரு மரம் சாய்ந்து விழுந்தது.

எனினும், ஹேமமாலினி உட்பட அவருடன் பயணம் செய்தவர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால் ஹேம மாலினியின் பயணம் சற்று தாமதம் ஆனது. #UPDustStorm #HemaMalini