search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கெஜ்ரிவால்"

    • மதுபான கொள்கை முறை கேட்டை அம்பலப்படுத்தி சாய்த்தார்கள்.
    • மோடியின் மீதான நல்லெண்ணமும், நன்மதிப்பும் மக்கள் மத்தியில் அதிகரித்தது.

    நாட்டில் பல மாநிலங்களில் பிரதமர் மோடி அலை வீசிய போதும் தலைநகர் டெல்லியில் எந்த சலனமும் இல்லை என்ற நிலை தான் நேற்று வரை...

    ஆனால் தேர்தல் முடிவின் மூலம் டெல்லியை தாக்கிய மோடி அலை 48 தொகுதிகளை வாரி சுருட்டி உள்ளது.

    27 ஆண்டுகளாக டெல்லி மாநில ஆட்சியை பா.ஜனதாவால் கைப்பற்ற முடிய வில்லை. மோடியின் ஜம்பம் இங்கு பலிக்காது என்று கெஜ்ரிவாலின் பிம்பம் விசுவ ரூபமெடுத்து தடுத்து நின்றது.

    3 முறை பிரதமராக வென்று தலைநகரில் அமர்ந்து நாட்டையே ஆண்டாலும் தலைநகர் டெல்லி மாநிலத்தை பா.ஜ.க. வால் பிடிக்க முடியவில்லை என்ற குறை இருந்தது. அதை இந்த தேர்தலில் போக்கி, மோடி அலையை யாராலும் தடுக்க முடியாது என்பதையும் நிரூபித்து உள்ளார்.

    வெற்றிக்களிப்பில் இருந்த மோடியை பூ மழை தூவி கட்சி அலுவலகத்துக்கு தொண்டர்கள் அழைத்து சென்றார்கள்.

    2014-ல் தொடங்கிய மோடி அலை எப்போதும் வீசத்தான் செய்யும் என்பதை இந்த தேர்தல் மூலம் மோடி நிரூபித்துள்ளார்.

    கெஜ்ரிவால் ஊழலுக்கு எதிரானவர் என்று உருவாக்கி வைத்திருந்த பிம்பத்தை மதுபான கொள்கை முறை கேட்டை அம்பலப்படுத்தி சாய்த்தார்கள்.

    ஆனால் மோடியின் மீதான நல்லெண்ணமும், நன்மதிப்பும் மக்கள் மத்தியில் அதிகரித்தது. இதற்கு பாராளுமன்ற தேர்தலில் டெல்லியில் 7 எம்.பி.க்களை பா.ஜனதா கைப்பற்றியது ஒரு உதாரணம்.

    இதை நேற்று நடந்த வெற்றி விழா கூட்டத்திலும் மோடி நினைவுப்படுத்தி, டெல்லி மக்கள் எப்போதும் என்னை கைவிட்டதில்லை என்று உணர்ச்சி பொங்க குறிப்பிட்டார்.

    இலவசங்களை கொடுத்தும், குடிநீர் திட்டங்களை அறிவித்தும் குடிசைப்பகுதி மக்களிடம் செல்வாக்குடன் இருந்தது ஆம் ஆத்மி.

    ஆனால் இந்த தேர்தலில் நடைமுறையில் இருக்கும் இலவசங்கள் தொடரும். அதே நேரம் குடிசை மக்களுக்கு பக்கா வீடுகள் கட்டித் தரும் வாக்குறுதியையும் அளித்து குடிசைப் பகுதி வாக்குகளை மோடி அள்ளினார்.

    டெல்லியில் முஸ்லீம் வாக்காளர்கள் 13 சதவீதம் பேர் இருக்கிறார்கள். அவர்கள் மத்தியிலும் மோடி யின் செல்வாக்கு உயர்ந்து இருக்கிறது.

    முஸ்லீம்கள் நிறைந்த பகுதிகளில் பா.ஜனதா வெற்றி பெற்றுள்ளது. மோகன்சிக்பிஷ்ட், கபில் மிஷ்ரா ஆகிய 2 பேர் முஸ்லீம்கள் நிறைந்த தொகுதிகளில் அமோக வெற்றி பெற்றுள்ளார்கள்.

    இது தவிர டெல்லி வாசிகளில் 40 சதவீதம் பேர் நடுத்தர வர்க்கத்தினர்கள். ஆம் ஆத்மிக்கு ஆதரவா னவர்களாக இருந்தாலும் மாநிலத்தின் மோசமான உட்கட்டமைப்பு, குப்பைகள், காற்று மாசுபடுதல் போன்றவற்றால் அவர்கள் விரக்தியில் இருந்தனர்.

    இதை கையில் எடுத்த பிரதமர் மோடி ப.ஜனதா ஆட்சிக்கு வந்தால் டெல்லி யின் முகத்தை மாற்றி காட்டுவேன் என்று பிரசாரம் செய்தார். இதனால் மக்கள் ஆதரவு மோடியின் பக்கம் திரும்பியது.

    அதே போல் பெண்களுக்கு மாதம் ரூ.2100 என்று ஆம்ஆத்மி அறிவித்தது. பா.ஜனதாவும் தனது தேர்தல் அறிக்கையில் பெண்களுக்கு மாதம் ரூ.2500 வழங்கப்படும் என்று அறிவித்தது. இது பெண்கள் மத்தியில் ஆதரவை ஏற்படுத்தியது.

    அத்துடன் மாநிலத்தின் வளர்ச்சியை துரிதப்படுத்த மத்திய அரசுடன் இணைந்து செயல்படும் மாநில அரசு தேவை. இரட்டை என்ஜின் அரசாங்கத்தை நீங்கள் ஏற்படுத்த வேண்டும் என்று மோடி பிரசார கூட்டங்களில் விடுத்த வேண்டுகோள் மக்களிடம் எடுபட்டது.

    நாடு முழுவதும் செயல்படுத்தி வரும் திட்டங்களை பார்த்து மோடி மூலம் மாற்றம் வர வேண்டும் என்று மக்கள் எதிர்பார்த்தனர். இது மோடிக்கு மிகப் பெரிய வெற்றியை தேடிக் கொடுத்துள்ளனர்.

    கெஜ்ரிவால் ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு உள்ளூர் மற்றும் தொகுதி சார்ந்த பிரச்சினைகளுக்கு முன்னுரிமை கொடுத்து மோடி மேற்கொண்ட பிரசார வியூகம் வெற்றியை தேடிக் கொடுத்துள்ளது.

    அனைவரின் வளர்ச்சி, அனைவரின்ஆதரவு, அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்று தனது அணுகு முறையை கையாளும் மோடி அரசியல் ரீதியாக எதிர்கொள்ளும் சவால்களை அரசியல் ரீதியாக சாதுர்யமாக வியூகம் அமைத்து வெற்றி பெற்று வருகிறார்.

    இதற்கு முன்பு வடகிழக்கு மாநிலங்களும் சரி, இப்போது டெல்லியும் சரி தாமரை காலூன்றவே முடியாது என்று நம்பப்பட்ட மாநிலங்கள்.

    இந்த மாநிலங்களில் தன் மீதான நம்பிக்கையை வளர்த்ததுடன் எதிர்கட்சி களின் அரசியல் வியூகத்தை யும் சாதுர்யமாக வியூகம் அமைத்து உடைத்து வெற்றி கொள்வதில் மோடிக்கு நிகர் மோடிதான்.

    நாடு முழுவதும் பல கட்சிகளை களத்தில் எதிர் கொண்டாலும் மற்ற கட்சிகளை விமர்சிப்பதை விட காங்கிரசையே கடுமையாக விமர்சிப்பார். காங்கிரசின் தவறான கொள்கைகளால்தான் நாட்டின் மிகப் பெரிய வளர்ச்சி தடைப்பட்டது என்று கூறும் மோடி காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று முழங்கினார்.

    அதை உறுதிப்படுத்தும் வகையில் காங்கிரசும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. மோடி தான் ஒரு அசைக்க முடியாத தலைவர் என்பதை நிரூபித்து வருகிறார்.

    • இந்த வெற்றி ஊழல் மற்றும் ஆணவத்திற்கு எதிரானது.
    • ஊழல் செய்பவர்களை மக்கள் அதிகாரத்தில் இருந்து துடைத்து விடுவார்கள்.

    திருவனந்தபுரம்:

    டெல்லி சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த வெற்றியை நாடு முழுவதும் அக்கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.

    கேரளாவிலும் பா.ஜ.க.வினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கினர். இதில் பங்கேற்ற பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான முரளீதரன் கூறியதாவது:-

    'இன்று டெல்லி, நாளை கேரளா'. தேசிய தலைநகரில் நடந்த தேர்தல் முடிவுகள் ஊழல் செய்பவர்களுக்கு காத்திருக்கும் தலைவிதியின் அறிகுறியாகும்.

    ஊழல் செய்பவர்களை மக்கள் அதிகாரத்தில் இருந்து துடைத்து விடுவார்கள் என்பதை தான் இந்த தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இந்த வெற்றி ஊழல் மற்றும் ஆணவத்திற்கு எதிரானது.

    கெஜ்ரிவாலின் நெருங்கிய நண்பர் பினராயி விஜயன். டெல்லி மதுபான ஊழலில் தொடர்புடையதாக கூறப்படும் நபர்களில் ஒருவருக்கு பாலக்காட்டில் மதுபான ஆலை அமைக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.

    டெல்லி தேர்தல் முடிவுகள், ஊழல்வாதிகளுக்கு காத்திருக்கும் தலைவிதியை பற்றி பினராயி விஜயனுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். கேரளாவும் இதேபோன்ற தீர்ப்பை வழங்கும் என்பதையும் இது குறிக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாஜக 48 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 22 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.
    • கெஜ்ரிவால் பண பலத்தால் மூழ்கிவிட்டார் என்று அன்னா ஹசாரே தெரிவித்தார்.

    டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.

    ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு இன்னைக்கி தொடங்கியதில் இருந்தே பாஜக பல இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.

    தற்போதுவரை பாஜக 48 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 22 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் , மணீஷ் சிசோடியா ஆகியோர் தோல்வியை தழுவியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், ஆம் ஆத்மி கட்சியில் தோல்வி குறித்து பேசிய அன்னா ஹசாரே, "ஒரு வேட்பாளரின் நடத்தை, எண்ணங்கள் தூய்மையானதாக இருக்க வேண்டும். தியாகம் செய்ய வேண்டும். இந்த குணங்கள் தான் வாக்காளர்களை அவர் மீது நம்பிக்கை வைக்க காரணமாக இருக்கும் என்று நான் எப்போதும் சொல்வேன். நான் இதை அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சொன்னேன், ஆனால் அவர் அதை காதில் வாங்கவில்லை, கடைசியாக, அவர் மதுபானத்தில் கவனம் செலுத்தினார். ஏன் இந்தப் பிரச்சினை எழுந்தது? பண பலத்தால் அவர் மூழ்கிவிட்டார்" என்று தெரிவித்தார்.

    • பாஜக 46 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 24 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது
    • அரவிந்த் கெஜ்ரிவால், அதிஷி ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.

    ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு இன்னைக்கி தொடங்கியதில் இருந்தே பாஜக பல இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.

    தற்போதுவரை பாஜக 46 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 24 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது. குறிப்பாக ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் அதிஷி ஆகியோர் பின்னடைவை சந்தித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக எம்.பி. யோகேந்திர சந்தோலியா, "பிரதமர் மோடியின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்த டெல்லி மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். கெஜ்ரிவால் எல்லா மாடல்களிலும் சரிந்துள்ளார். கெஜ்ரிவால் திகார் சிறைக்கு செல்வது உறுதி. அவர் முதல்வர் ஆக விரும்பினார் ஆனால் இனி அவர் எம்.எல்.ஏ.வாக கூட இருக்கப் போவதில்லை. பாஜக மேலிடத்தால் தேர்ந்தெடுக்கப்படும் எந்தக் கட்சித் தொண்டனும் டெல்லியின் அடுத்த முதல்வர் ஆவார்" என்று அவர் தெரிவித்தார்.

    • பாஜக 41 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 29 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.
    • அரவிந்த் கெஜ்ரிவால் ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்தனர்.

    டெல்லி சட்டசபைக்கு கடந்த 5-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 70 சட்டசபை தொகுதிகளிலும் மொத்தம் 699 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.

    ஆம் ஆத்மி, பா.ஜ.க., காங்கிரஸ் ஆகிய கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவியது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

    பலத்த பாதுகாப்புடன் நடந்த தேர்தலில் 60 சதவீத வாக்குகள் பதிவாகின. தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்து கணிப்புகளில், பா.ஜ.க. ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

    இந்த பரபரப்பான சூழ்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. வாக்கு இன்னைக்கி தொடங்கியதில் இருந்தே பாஜக பல இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்துள்ளது.

    தற்போதுவரை பாஜக 42 தொகுதிகளிலும் ஆம் ஆத்மி 28 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

    ஆம் ஆத்மி சார்பில் போட்டியிட்ட அரவிந்த் கெஜ்ரிவால் புதுடெல்லி முதல்வர் அதிஷி ஆகியோர் ஆரம்பகட்ட வாக்கு எண்ணிக்கையில் பின்னடைவை சந்தித்தனர். பின்னர் அடுத்தகட்ட வாக்கு எண்ணிக்கையில் அரவிந்த கெஜ்ரிவால் மற்றும் அதிஷி ஆகியோர் முன்னிலை பெற்றுள்ளனர்

    • இந்தத் தேர்தலில் ஆம் ஆத்மி, பா.ஜ.க,காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது.
    • டெல்லி முதல் மந்திரி அதிஷி மீது டெல்லி போலீஸ் வழக்குப்பதிவு செய்தது.

    புதுடெல்லி:

    டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. பிப்ரவரி 8-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகள் அறிவிக்கப்படும்.

    இந்தத் தேர்தலில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் இடையே மும்முனை போட்டி நிலவுகிறது. நேற்றுடன் தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது.

    இதற்கிடையே, விதிமீறல்களை தீவிரமாக கண்காணித்து வரும் டெல்லி போலீஸ் கல்காஜி தொகுதியில் போட்டியிடும் டெல்லி முதல் மந்திரி அதிஷி மீது வழக்குப்பதிவு செய்துள்ளது.

    இந்நிலையில், டெல்லி முதல் மந்திரி அதிஷி மற்றும் முன்னாள் முதல் மந்திரி கெஜ்ரிவால் ஆகியோர் தேர்தல் ஆணையத்துக்கு சென்றனர். அவர்கள் தேர்தல் நியாயமாக நடைபெற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    அதன்பின், செய்தியாளர்களைச் சந்தித்த கெஜ்ரிவால் கூறுகையில், இன்று எங்களை சந்திப்பதற்கு தேர்தல் ஆணையம் விதிவிலக்கு அளித்துள்ளது. அவர்களுக்கு நன்றி கூறுகிறோம். நாங்கள் சில பிரச்சனைகளை எழுப்பியதால் சில இடங்களில் வன்முறையும், குண்டர் சண்டையும் நடந்துள்ளது. கடும் நடவடிக்கை எடுப்பதாகவும், ஒழுங்கான முறையில் தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் உறுதியளித்துள்ளது. பெரிய அளவிலான வாக்காளர் அடக்குமுறை குறித்தும் அவர்களை எச்சரித்தோம் என தெரிவித்தார்.

    • சில அரசியல் தலைவர்கள் சொகுசு குளியல் தொட்டி, ஷவர்களில் கவனம் செலுத்துகின்றனர்.
    • ஏழைகளின் இல்லங்களுக்கு சென்று போட்டோ எடுப்பதை சிலர் வேலையாக கொண்டுள்ளனர்.

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஜனாதிபதி திரவுபதி முர்மு அன்று கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்.

    குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையில் நடந்த விவாதம் நடைபெற்றது.

    அதன் முடிவில் இன்று மக்களவையில் பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் நிறைய எதிர்மறை கருத்துக்கள் உள்ளன.

    * மற்றவர்களை போல சொகுசு மாளிகையில் தாம் வாழவில்லை. மாளிகைகளில் வசிக்காமல், ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்திருக்கிறேன்.

    * மற்றவர்களை போல் மாளிகை கட்டிக்கொள்ளாமல் ஏழைகளின் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுத்திருக்கிறேன்

    * சில அரசியல் தலைவர்கள் சொகுசு குளியல் தொட்டி, ஷவர்களில் கவனம் செலுத்துகின்றனர்.

    * நாட்டில் உள்ள ஏழை மக்களுக்காக பாஜக அரசு மிக தீவிரமாக பணியாற்றி வருகிறது

    * ஏழை மக்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வது சிலருக்கு பொழுதுபோக்காகி விட்டது.

    * ஏழைகளின் இல்லங்களுக்கு சென்று போட்டோ எடுப்பதை சிலர் வேலையாக கொண்டுள்ளனர். அவர்களுக்கு ஜனாதிபதி உரை அலுப்பூட்டுவதாக தான் இருக்கும்" என்று தெரிவித்தார்.

    ராகுல் காந்தி, கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் மீது பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

    முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி தனது பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதுபோல் பாஜகவால் நானும் கொல்லப்படுவேன் என அரவிந்த் கெஜ்ரிவால் குறிப்பிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் செய்த டெல்லி முதல் மந்திரியும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அங்கு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார்.

    டெல்லியில் நடைபெற்ற பேரணியின்போது தன்னை ஒருவர் கன்னத்தில் அறைந்ததை குறிப்பிட்டு பேசிய அவர், எனது உயிரை குறிவைத்து பாஜகவினர் தூண்டி விடப்பட்டுள்ளனர். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை அவரது பாதுகாவலர்களே சுட்டுக் கொன்றதுபோல் என்றாவது ஒருநாள் நான் சுட்டுக் கொல்லபடுவேன்.



    என்மீது கொண்ட கருத்து வேற்றுமையால் என் கட்சியை சேர்ந்த பாதுகாப்பு வீரரே என்னை சுட்டுக் கொன்று விட்டதாக போலீசார் அந்த சம்பவத்தை திசை திருப்பி விடுவார்கள்.

    இல்லையென்றால், பஞ்சாப் முதலமைச்சர் அமரிந்தர் சிங்கை ஒரு காங்கிரஸ்காரரோ, மோடியை ஒரு பாஜக தொண்டரோ தாக்கினால் போலீசார் கைகட்டி வேடிக்கை பார்ப்பார்களா? என கெஜ்ரிவால் தனது பேட்டியின்போது கேள்வி எழுப்பினார்.
    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மதஉணர்வுகளை புண்படுத்தியுள்ளார் என போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. #ArvindKejriwal
    புதுடெல்லி:

    டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி கட்சியின் தலைவராக இருந்து வருகிறார்.  இவரது கட்சியின் சின்னம் துடைப்பம்.  டுவிட்டரில் செய்திகளை வெளியிட்டு வரும் அவர் சமீபத்தில் சர்ச்சையில் சிக்கி உள்ளார்.

    அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவொன்று மதஉணர்வுகளை புண்படுத்தும் வகையில் உள்ளது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  அதில், மத சின்னத்தினை நபரொருவர் துடைப்பம் கொண்டு துரத்துவது போன்று ஓவியம் இடம்பெற்று இருந்தது.


    இதனால் கெஜ்ரிவாலுக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன், ஆம் ஆத்மி கட்சியின் மக்களவை வேட்பாளர் ராகவ் சத்தா டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், வீடு வீடாக சென்று பா.ஜ.க. பிரசாரம் செய்கிறது என பதிவிட்டு, வீடு ஒன்றின் வாசலில் பசு மற்றும் கன்று நிற்பது போன்ற புகைப்படத்தினையும் இணைத்து பதிவிட்டார்.  இதனை முதல் மந்திரி கெஜ்ரிவால் லைக் செய்துள்ளார்.

    இதுபற்றி டெல்லி சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான பா.ஜ.க.வை சேர்ந்த விஜேந்தர் குப்தா கூறும்பொழுது, இந்திய தேர்தல் ஆணையத்திடம் சந்தித்து பேச நேரம் கேட்டுள்ளோம்.  பசு நல்லிணக்கத்தின் அடையாளம்.  இதனை ஆம் ஆத்மி அரசியலாக்குகின்றது.  சமூகத்தில் பதற்றத்தினை ஏற்படுத்த முயற்சிக்கின்றது.  இதுபற்றி ஆணையத்திடம் எடுத்து கூறுவோம் என கூறினார்.

    இந்த டுவிட்டர் பதிவு தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறுவது ஆகும்.  இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் டெல்லி பா.ஜ.க. புகார் அளிக்கும் என்றும் கூறினார்.

    இந்த நிலையில், மதஉணர்வுகளை புண்படுத்தும் வகையில் கெஜ்ரிவால் டுவிட்டர் பதிவினை வெளியிட்டு சர்ச்சை கிளப்பி உள்ளார். #ArvindKejriwal
    தேசிய அளவில் பிரதமர் மோடிக்கு எதிராக 15 கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளதை அடுத்து சரத்பவார் வீட்டில் ராகுல் -மம்தா, கெஜ்ரிவால் ஆகியோர் கூட்டாக ஆலோசனை நடத்தினார்கள். #modi #rahulgandhi #mamata #parliamentelection

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்த எதிர் கட்சிகள் ஓரணியில் திரள நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றன. பிரதமர் மோடிக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு, மம்தா பானர்ஜி தீவிரமாக இறங்கி உள்ளனர். இதற்காக சந்திரபாபு நாயுடு, டெல்லியில் எதிர்க்கட்சி தலைவர்களை ஒன்று திரட்டினார்.

    இதேபோல திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்காள முதல்- மந்திரியுமான மம்தா பானர்ஜி கடந்த மாதம் கொல்கத்தாவில் பிரமாண்ட கூட்டத்தை நடத்தினார். இதில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் பங்கேற்றன.

    இதன் தொடர்ச்சியாக டெல்லி ஜந்தர்மந்தரில் நேற்று பிரமாண்ட பொதுக்கூட்டம் நடந்தது. ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்- மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் ஏற்பாடு செய்த இந்த கூட்டத்தில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. எதிர்க்கட்சிகள் நடத்திய 3-வது பிரமாண்ட பேரணி இதுவாகும்.

    இந்த கூட்டத்தில் பேசிய அனைவரும் “பிரதமர் மோடி பாராளுமன்றத்தில் பேசிய கடைசி நாள். இத்துடன் அவரது அரசின் ஆயுட்காலம் முடிந்து விட்டது” என்று தெரிவித்தனர்.

    இந்த கூட்டம் முடிந்த பிறகு எதிர்க்கட்சியினர் முன்னாள் மத்திய மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான சரத்பவார் வீட்டில் ஆலோசனை செய்தனர்.

    இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா உள்ளிட்ட 15 கட்சிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.


    சுமார் 1 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் பா.ஜனதாவுக்கு எதிராக மாநில கட்சிகளை பலப்படுத்துவது, 15 நாட்களுக்கு ஒருமுறை எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடி வியூகம் அமைப்பது, மாநிலங்கள் தோறும் பொதுக் கூட்டங்களை நடத்துவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டன.

    இந்த கூட்டத்துக்கு பின்பு ராகுல் காந்தி நிருபர்களிடம் கூறும்போது, “இந்திய அமைப்புகள் மீது தாக்குதல் நடத்தும் பா.ஜனதாவுக்கு எதிராக போராடுவது என்ற பிரதான இலக்குடன் அனைவரும் இணைந்து செயல்படுவோம்” என்றார்.

    குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்கி தேர்தலுக்கு முந்தைய கூட்டணியை அமைக்க உள்ளோம். இனிவரும் நாட்களில் நாங்கள் ஒன்று பட்டு செயல்படுவோம்.

    மாநிலத்தில் பிரச்சினை இருந்தாலும் தேசிய அளவில் ஒன்றுபட்டு தேர்தலை சந்திப்போம். நாட்டின் நலனுக்காகவே தனது வாழ்க்கையை தியாகம் செய்து விட்டேன். அதற்காக எதையும் தியாகம் செய்ய தயாராக இருக்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    காங்கிரஸ் கட்சியுடன் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு உள்ளது. மாநிலத்தில் அந்த கட்சியை எதிர்த்துதான் ஆட்சி செய்கிறது. தேசிய அளவில் மோடிக்கு எதிராக ஒன்று சேர்வது தொடர்பாக அவர்கள் தற்போது ஆலோசனை நடத்தியுள்ளனர்.

    தேர்தலுக்கு முந்தைய கூட்டணி அமைப்பது தொடர்பாக அவர்கள் முடிவு செய்துள்ளனர். இந்த கூட்டணியில் 15 கட்சிகள் இணைந்து செயல்பட இருக்கின்றன. #modi #rahulgandhi #mamata #parliamentelection

    வாரணாசி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியில்லை என்று ஆம் ஆத்மி கட்சி அறிவித்துள்ளது. #AamAadmi #Kejriwal

    லக்னோ:

    டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தொகுதியான வாரணாசியில் போட்டியிடுவார் என்று தகவல் வெளியானது.

    இதை ஆம் ஆத்மி கட்சி மறுத்துள்ளது. அந்த கட்சியின் செய்தி தொடர்பாளர் சஞ்சய்சிங் இது தொடர்பாக கூறியதாவது:-


    கெஜ்ரிவால் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட மாட்டார். உத்தரபிரதேச மாநிலத்தில் அவர் தீவிர கவனம் செலுத்துவார். வாரணாசி தொகுதியில் பலம் வாய்ந்த வேட்பாளரை நிறுத்துவோம்.

    பாராளுமன்ற தேர்தலில் டெல்லி, பஞ்சாப், அரியானா, கோவாவில் போட்டியிடுவோம். உத்தரபிரதேசத்தில் சில தொகுதிகளில் நிற்போம். அடுத்த மாதம் எத்தனை தொகுதிகளில் போட்டியிடுவோம் என்பது பற்றி இறுதி முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #AamAadmi #Kejriwal

    மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பேரிடரை சந்தித்துள்ள கேரள மாநிலத்தின் துயர் துடைப்பு பணிகளுக்கு 10 கோடி ரூபாய் நிவாரணத்தொகையாக டெல்லி அரசு அறிவித்துள்ளது. #KejriwalannouncesRs10cr #floodhitKerala
    புதுடெல்லி:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்த மழை காரணமாக பல்வேறு மாவட்டங்கள் நீரில் மூழ்கி, சூனியமாக காட்சியளிக்கிறது. மழை மற்றும் நிலச்சரிவு போன்ற சம்பவங்களால் கேரளாவில் உயிரிழக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    மழை பாதிப்பால் இதுவரை 324 பேர் உயிரிழந்துள்ளதாக பிணராயி விஜயன் தெரிவித்துள்ளார். மேலும், 100 வருடங்களில் இல்லாத இந்த மிகப்பெரும் இயற்கை பேரழிவை கேரளா சந்தித்து வருவதாகவும் பிணராயி விஜயன் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    கேரளாவில் ஏற்பட்டுள்ள இந்த இயற்கை சீற்றத்தில் இருந்து மீட்க, மத்திய அரசு உட்பட பல்வேறு மாநிலங்களும் கேரள மாநிலத்துக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

    இந்நிலையில், மழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பேரிடரை சந்தித்துள்ள கேரள மாநிலத்தின் துயர் துடைப்பு பணிகளுக்கு 10 கோடி ரூபாய் நிவாரணத்தொகையாக டெல்லி அரசு அறிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, தனது டுவிட்டர் பக்கத்தில் டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள பதிவில், கேரள மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சகோதர-சகோதரிகளுக்கு அனைவரும் தாராளமாக நிதியுதவி அளிக்குமாறு கேட்டு கொண்டுள்ளார். #KejriwalannouncesRs10cr #floodhitKerala
    ×