என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Slokas"
- அக்னி பகவானின் அம்சம் தன்னில் சூரியனை போற்றும் மந்திரம் இது.
- சூரிய பகவானை இம்மந்திரம் கூறி துதிப்பதால் நாமும் பல நன்மைகளை பெற முடியும்.
நமது வேதங்கள் பஞ்சபூதங்களை இறைவனின் அம்சமாக கருதின. அதில் எத்தகைய தீமையாலும் மாசு பெறாத நெருப்பு எனும் அக்னியை மிகவும் உயர்ந்ததாக போற்றினர். அந்த அக்னி பகவானின் அம்சத்தை தன்னுள்ளே கொண்டிருக்கும் சூரிய பகவானை தினந்தோறும் போற்றினர். நாம் அனைவருமே வாழ்வதற்காக பல வேலைகளை செய்கிறோம். அவற்றில் வேலையிடங்களில் பலருக்கு பல விதமான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. அவற்றை நீக்குவதற்கான ஸ்ரீ அக்னி சூரிய மந்திரம் இதோ.
ஸ்ரீ அக்னி சூர்ய மந்திரம்
ஓம் பூர் புவ ஸூவஹா அக்னயே ஜாதவேத
இஹாவஹா சர்வகர்மாணி சாதய சாதய ஸ்வாஹா
அக்னி பகவானின் அம்சம் தன்னில் சூரியனை போற்றும் மந்திரம் இது. இந்த மந்திரத்தின் சிறப்பான பலனை பெற ஞாயிற்றுக்கிழமை அன்று வரும் அமாவாசை தினத்தில் சுத்தமான விளக்கேற்றி, அதற்கு முன்பாக கிழக்கு திசை பார்த்தவாறு அமர்ந்து உங்கள் குரு, குலதெய்வம் ஆகியோர்களை மானசீகமாக வணங்கி 1008 முறை இம்மந்திரம் துதித்து உரு ஜெபிக்க வேலை, தொழில், வியாபார இடங்களில் இருக்கும் பிரச்சனைகள் தீரும். ஜாதகத்தில் சூரியன் பாதகமான நிலையில் அமைய பெற்றவர்கள் நன்மையான பலன்களை பெறுவார்கள், நெருப்பினால் விபத்து ஏற்படும் ஆபத்து நீங்கும்.
பஞ்சபூதங்களில் ஒன்றானதும், இறைத்தன்மை உடையதாகவும் கருதப்படுவது நெருப்பு ஆகும். இந்த நெருப்பை வேத காலங்களில் அக்னி பகவானாக நமது முன்னோர்கள் வழிபட்டனர். ஒரு இடத்தில் இருக்கும் எதிர்மறை சக்திகளை நீங்கி, நன்மையான சக்திகள் அங்கு நிறையவே அக்காலங்களில் யாகங்கள் அதிகம் செய்து அக்னி பகவானின் அருளாசிகள் பெற்றனர். அக்னி தன்மையை கொண்ட சூரிய பகவானை இம்மந்திரம் கூறி துதிப்பதால் நாமும் பல நன்மைகளை பெற முடியும்.
ஆன்மிகம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/devotional
- தினமும் இந்த ஸ்லோகத்தை சொல்லி விரைவில் பலன் தெரியும்.
- பங்குனி மாதம் வெள்ளிக்கிழமை மட்டும் கூட செய்யலாம்.
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் குத்து விளக்கை தேய்த்து குங்குமம், பூ வைத்து கோலம் போட்ட பலகையில் குத்து விளக்கை ஏற்றி வைத்து,
ஓம் ஸ்ரீகாத்யாயினி மகாதமாயே
மகாயோகின்யை ஈஸ்வரி
நந்த கோப ஸுதம் தேவி
பதிம்தே குருவே நமஹ
என்று சொல்லிக் கொண்டே 12 முறை பிரதட்சணம் செய்தால், விரும்பிய வரன் தானாகவே அமைந்து விரைவில் திருமணம் நடக்கும்.
இதை தினமும் செய்தாலும் நல்லது. முடியாவிட்டால் பங்குனி மாதம் வெள்ளிக்கிழமை மட்டும் கூட செய்யலாம். முடிந்தால் நைவேத்தியமும் செய்யலாம்.
- ஒரு மண்டலம் அதாவது 48 நாள் உரு ஜெபிப்பவர்களுக்கு சித்தர்களின் தரிசனம் கிடைக்கும்.
- தாங்கள் விரும்பிய சித்தர்களின் தரிசனம் பெறுவதற்கான உச்சாடன வழிமுறையை அறிந்து கொள்ளலாம்.
சித்தர்கள் நமக்கு தந்த அற்புதமான பாடல்கள், மந்திரங்கள் போன்றவை அனைவராலும் எளிதில் புரிந்து கொள்ள முடியாத பரிபாசை பாடல்களாகவே இருக்கின்றன. சித்தர்கள் மீது தணியாத ஆர்வமும், அவர்களின் தரிசனம் பெறவும் பக்தர்கள் பலவாறான ஆன்மீக வழிகளில் முயற்சிகளை மேற்கொள்கிறார். சித்தர்களின் தரிசனம் மட்டும் கிடைத்தால் போதும் வேறு எதுவும் தேவையில்லை என்கின்ற மனோபாவம் கொண்ட உயரிய மனிதர்களும் நமது நாட்டில் இருக்கவே செய்கின்றனர். இப்படிப்பட்டவர்கள் தாங்கள் விரும்பிய சித்தர்களின் தரிசனம் பெறுவதற்கான ஒரு மந்திரம் உச்சாடன வழிமுறையை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
உதாரணமாக நீங்கள் தரிசிக்க விரும்புகின்ற சித்தர் அகத்திய சித்தர் என்றால் "ஓம் சிங் ரங் அங் சிங் அகத்தியர் மசி வசி" என்கின்ற மந்திரத்தை தினமும் அதிகாலை வேளையில் 108 முறை உரு ஜெபித்தல் வேண்டும் இப்படி மேற்கண்ட மந்திரத்தில், நீங்கள் காண விரும்பும் என்ற சித்தர்களின் பெயரை சேர்த்து உச்சாடனம் செய்ய வேண்டும்.
இவ்வாறாக ஒரு மண்டலம் அதாவது 48 நாள் உரு ஜெபிப்பவர்களுக்கு சித்தர்களின் தரிசனம் கிடைக்கும். இந்த 48 நாட்களும் உடல், மனம், ஆன்மா ஆகியவற்றில் தூய்மை கடைபிடித்து, திரிகரண சுத்தியோடு இந்த மந்திர உச்சாடனம் செய்தல் வேண்டும். புலால் உணவு, போதைப் பொருட்கள் உபயோகிப்பு, காம சிந்தனை மற்றும் செயல்கள் போன்றவற்றை அறவே நீக்கியவர்களுக்கு 48 நாட்களுக்கு முன்பாகவே சித்தர்களின் தரிசனம் பெறும் பாக்கியம் கிடைக்கும் என கூறப்படுகிறது.
மேலும் சித்தர்களின் தரிசனம் கிடைக்க பெற்றவர்கள், அந்த சித்தர்களிடமே தீட்சை பெறும் பாக்கியமும், மெய்ஞானம் அடைவதற்கான வழியும் கிடைக்க பெறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
'ஸஹஸ்ரதள பத்மஸ்த கர்ணிகா வாஸினீம் பராம்
சரத்பார்வண கோடீந்து ப்ரபாமுஷ்டிகராம் பராம்
ஸ்வதேஜஸா ப்ரஜ்வலந்தீம் ஸுகத்ருச்யாம் மனோஹராம்
ப்ரதப்த காஞ்சனநிப சோபாம் மூர்திமதீம் ஸதீம்
ரத்நபூஷண பூஷாட்யாம் சோபிதாம் பீதவாஸஸா
ஈஷத்தாஸ்ய ப்ரஸன்னாஸ்யாம்
சஸ்வத்ஸுஸ்திரயௌவனாம்
ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் ச மஹாலக்ஷ்மீம் பஜே சுபாம்''
கருத்து:
ஆயிரம் தளங்களுடன் கூடிய தாமரை மலரின் நடுவில் வசிப்பவளும் சிறந்தவளும், சரத் காலத்தில் உள்ள கோடி சந்திரனுக்கு ஒப்பான காந்தி உள்ளவளும்,
தனது காந்தியால் மிகவும் பிரகாசிக்கின்றவளும், ஆனந்தமயமாகக் காட்சி தருபவளும், பக்தர்களின் மனத்தைக் கவருகின்றவளும், உருக்கி வார்த்த தங்கத்தின் காந்தியே (பிரகாசமே) உருவெடுத்து வந்தது போன்று இருப்பவளும், பதிவிரதையும், ரத்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளும், தங்கப் பட்டாடையால் விளங்குகின்றவளும், மந்தஹாஸத்தால் பிரசன்ன முகமுடையவளும், சாஸ்வதமாய் அமைந்துள்ள யௌவனத்தை உடையவளும், பக்தர்களுக்கு சர்வ சம்பத்துக்களையும் தருபவளும், மங்கலத்தை அருள்கின்றவளுமான ஸ்ரீ மகாலட்சுமியைப் பூஜிக்கிறேன்.
ஸ்ரீதேவி பாகவதம் 9-வது ஸ்கந்தம், 42-வது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள இந்த ஸ்லோகம் நம் இல்லத்தில் சகல சௌந்தர்யங்களையும் கொண்டுவந்து சேர்க்கக்கூடிய சக்தி கொண்டது.
ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் சொல்லுங்கள். கந்தவேள் கருனையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும்.
ஞாயிற்றுக்கிழமை:
தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!
சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!
மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!
ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!
திங்கட்கிழமை:
துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!
சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!
சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!
திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!
செவ்வாய்க்கிழமை:
செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!
புதன்கிழமை:
மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!
வியாழக்கிழமை:
மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!
தயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!
வெள்ளிக்கிழமை:
அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!
வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!
சனிக்கிழமை:
கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்
சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!
வாழ்க வையகம்,” வாழ்க வளமுடன்”
தினமும் நீராடிய பின், “நரசிம்ம பிரபத்தி’ ஸ்லோகத்தை 3,12,24,48 என உங்களுக்கு வசதிப்படும் அளவுக்கு பாராயணம் செய்யுங்கள். அஹோபில மடத்தின் 44வது பட்டமாக வீற்றிருந்த அழகிய சிங்கர் முக்கூர் சுவாமிகளால் அருளப்பட்ட மந்திரம் இது. இந்த ஸ்லோகத்தைச் சொல்லும்போது, லட்சுமி நரசிம்மரின் முன் விளக்கேற்றி, காய்ச்சி ஆற வைத்த பசும்பால் அல்லது பானகம் நைவேத்யம் செய்ய வேண்டும். இப்பிரசாதத்தை குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வரவேண்டும்.
கைமேல் பலனளிக்கும் சக்தி வாய்ந்த ஸ்லோகம் இது. 48 நாட்களுக்குள் எண்ணிய செயல் கைகூடியபின் நரசிம்மர் கோயிலில் சுவாமிக்கு நெய்தீபம் ஏற்றி துளசிமாலை சாத்தி வழிபட வேண்டும். கடன், நோய், திருமணத்தடை, குழந்தை பாக்கியம், வேலை வாய்ப்பு, வேலையில் இடைஞ்சல் இன்னும் எந்த வித கோரிக்கைக்காகவும் இந்த பிரபத்தியைச் சொல்லலாம்.
பால், பானகம் வைக்க வசதிப்படாதவர்கள் தண்ணீரை வைத்தாலே போதும். நரசிம்மர் மனம் உவந்து ஏற்பார். “நரசிம்ம பிரபத்தி”யின் தமிழாக்கம் வருமாறு:-
நரசிம்மரே தாய், நரசிம்மரே தந்தை.
சகோதரனும் நரசிம்மரே தோழனும் நரசிம்மரே!
அறிவும் நரசிம்மரே செல்வமும் நரசிம்மரே!
எஜமானனும் நரசிம்மரே எல்லாமும் நரசிம்மரே!
இவ்வுலகத்திலும் நரசிம்மரே! அவ்வுல கத்திலும் நரசிம்மரே!
எங்கெங்கு செல்கிறாயோ அங்கெல் லாம் நரசிம்மரே!
நரசிம்மரைக் காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை
அதனால், நரசிம்மரே! உம்மைச் சரணடைகிறேன்.
பால், பானகம் வைக்க வசதிப்படாதவர்கள் தண்ணீரை வைத்தாலே போதும். நரசிம்மர் மனம் உவந்து ஏற்பார்.
ஓம் ஹ்ரீம் யோகின்யை நம:
ஓம் ஹ்ரீம் யோகேஸ்வர்யை நம:
ஓம் ஹ்ரீம் பயங்கர்யை நம:
ஓம் ஹ்ரீம் பந்தூக வர்ணாயை நம:
ஓம் ஹ்ரீம் ஸுகாத்ராயை நம:
ஓம் ஹ்ரீம் அம்போஜருத்யை நம:
ஓம் ஹ்ரீம் அபிலாஷ தாத்ர்யை நம:
ஓம் ஹ்ரீம் நிர்ஜாதாரு கல்பாயை நம:
ஓம் ஹ்ரீம் ஹ்ரீம் மந்த்ராண்யை நம:
ஓம் ஹ்ரீம் காமாயை
நம: (10)
ஓம் ஹ்ரீம் க்ஷேமங்கராண்யை நம:
ஓம் ஹ்ரீம் பால்யாவஸ்தாயை நம:
ஓம் ஹ்ரீம் லலிதாயை நம:
ஓம் ஹ்ரீம் பவத்யை நம:
ஓம் ஹ்ரீம் ஸ்ரீகண்டபாமின்யை நம:
ஓம் ஹ்ரீம் ப்ரபதீன வேண்யை நம:
ஓம் ஹ்ரீம் நவயெளவனாயை நம:
ஓம் ஹ்ரீம் ஸ்ரீ துர்க்காயை நம:
ஓம் ஹ்ரீம் விலாச பயாக்ஷிண்யை நம:
ஓம் ஹ்ரீம் க்ருச்சாயை
நம: (20)
ஓம் ஹ்ரீம் விலக்ராயை நம:
ஓம் ஹ்ரீம் பர்யுஸ்த்ரிதாயை நம:
ஓம் ஹ்ரீம் குசபராயை நம:
ஓம் ஹ்ரீம் ஜகன்யை நம:
ஓம் ஹ்ரீம் ஜனகாயை நம:
ஓம் ஹ்ரீம் ப்ரசுர பக்த்யை நம:
ஓம் ஹ்ரீம் கிரிசாயை நம:
ஓம் ஹ்ரீம் பரிசாரிண்யை நம:
ஓம் ஹ்ரீம் அனுகூலாயை நம:
ஓம் ஹ்ரீம் ஈச்வர்யை
நம: (30)
ஓம் ஹ்ரீம் க்ரியாட்ஹ்யஜாயை நம:
ஓம் ஹ்ரீம் பஞ்ச ஹுதாசனாயை நம:
ஓம் ஹ்ரீம் ஸதாசிவாயை நம:
ஓம் ஹ்ரீம் வித்ராச தாத்ர்யை நம:
ஓம் ஹ்ரீம் வர்ணதாமல ஸத்கராயை நம:
ஓம் ஹ்ரீம் மந்தஹாஸாயை நம:
ஓம் ஹ்ரீம் மோஹாவஹாயை நம:
ஓம் ஹ்ரீம் பவான்யை நம:
ஓம் ஹ்ரீம் பத்ராயை நம:
ஓம் ஹ்ரீம் ப்ரமோத ஜனன்யை
நம: (40)
ஓம் ஹ்ரீம் நந்தானுபூதி ரஸிகாயை நம:
ஓம் ஹ்ரீம் கல்யாண்யை நம:
ஓம் ஹ்ரீம் மஹேஸ்வர்யை நம:
ஓம் ஹ்ரீம் சம்முக்த மன்மத சராசன
சாருரூபாயை நம:
ஓம் ஹ்ரீம் அம்பிகாயை நம:
ஓம் ஹ்ரீம் புவன ஸுந்தர்யை நம:
ஓம் ஹ்ரீம் தீஷ்ணாம்பராலாயை நம:
ஓம் ஹ்ரீம் ஸுந்தர்யை நம:
ஓம் ஹ்ரீம் ருத்ரப்ரியாயை நம:
ஓம் ஹ்ரீம் கஸ்தூரிகா திலகின்யை
நம: (50)
ஓம் ஹ்ரீம் ரக்தாம்பராபரண
மால்யதராயை நம:
ஓம் ஹ்ரீம் நவகுங்கும மாத்ராயை நம:
ஓம் ஹ்ரீம் சாருரூபாயை நம:
ஓம் ஹ்ரீம் கிரிஜாயை நம:
ஓம் ஹ்ரீம் கனகமங்கள சூத்ர சோபாயை நம:
ஓம் ஹ்ரீம் சந்த்ரார்த்த சாரு மகுடாயை நம:
ஓம் ஹ்ரீம் நவபத்ம ஸம்ஸ்த்தாயை நம:
ஓம் ஹ்ரீம் த்ரிநேத்ராயை நம:
ஓம் ஹ்ரீம் கதம்ப வன வாஸின்யை நம:
ஓம் ஹ்ரீம் உத்வேலமத்ய வஸத்யை
நம: (60)
ஓம் ஹ்ரீம் மதுராங்காயை நம:
ஓம் ஹ்ரீம் மாயாயை நம:
ஓம் ஹ்ரீம் தத்வாத்மிகாயை நம:
ஓம் ஹ்ரீம் பகவத்யை நம:
ஓம் ஹ்ரீம் சம்பு ப்ரியாயை நம:
ஓம் ஹ்ரீம் சசிகலா வதம்ஸாயை நம:
ஓம் ஹ்ரீம் பாசபாண்யை நம:
ஓம் ஹ்ரீம் ஸம்பத்ப்ரதான நிரதாயை நம:
ஓம் ஹ்ரீம் புவனேச்வர்யை நம:
ஓம் ஹ்ரீம் அபாக்ருபாயைக்ஷ
நம: (70)
ஓம் ஹ்ரீம் ஆருட துங்க துர்காயை நம:
ஓம் ஹ்ரீம் ம்ருது பாஹுவல்யை நம:
ஓம் ஹ்ரீம் ப்ரகல்பாயை நம:
ஓம் ஹ்ரீம் மனோஞாயை நம:
ஓம் ஹ்ரீம் காமாத்மிகாயை நம:
ஓம் ஹ்ரீம் அகில தர்ம மூர்த்யை நம:
ஓம் ஹ்ரீம் ஜயாயை நம:
ஓம் ஹ்ரீம் த்ரிகுணஸ்வரூபாயை நம:
ஓம் ஹ்ரீம் கருணாம்ருதாயை நம:
ஓம் ஹ்ரீம் சமஸ்த மூர்த்யை
நம: (80)
ஓம் ஹ்ரீம் விஸ்வஜன மோஹன
திவமாயாயை நம:
ஓம் ஹ்ரீம் ஜகதீஸ்வர்யை நம:
ஓம் ஹ்ரீம் கர்த்யை நம:
ஓம் ஹ்ரீம் பர்த்ர்யை நம:
ஓம் ஹ்ரீம் ஹர்த்ர்யை நம:
ஓம் ஹ்ரீம் விதிஹராத்ம சக்த்யை நம:
ஓம் ஹ்ரீம் புக்த்யை நம:
ஓம் ஹ்ரீம் அமிதப்ரஸூத்யை நம:
ஓம் ஹ்ரீம் பக்தானுகம்பின்யை நம:
ஓம் ஹ்ரீம் ஸ்வாஹாயை
நம: (90)
ஓம் ஹ்ரீம் ஸாகர ஸுதாயை நம:
ஓம் ஹ்ரீம் முனிமண்டல
த்ருச்யமூர்த்யை நம:
ஓம் ஹ்ரீம் ஸுராபகாயை நம:
ஓம் ஹ்ரீம் வ்யாஹாரரூப கக்ஷமாயை நம:
ஓம் ஹ்ரீம் ஹரிப்ரியாயை நம:
ஓம் ஹ்ரீம் நீஹாரசைல தனயாயை நம:
ஓம் ஹ்ரீம் ப்ருஹத் ப்ரகாச ரூபாயை நம:
ஓம் ஹ்ரீம் பரேச மஹிஷ்யை நம:
ஓம் ஹ்ரீம் ஹரஜீவ நாதாயை நம:
ஓம் ஹ்ரீம் ஹரிப்ர முகாபி வந்த்யாயை நம: (100)
ஓம் ஹ்ரீம் ஹேரம்ப சக்திதர நந்தின்யை நம:
ஓம் ஹ்ரீம் ஹேம வாண்யை நம:
ஓம் ஹ்ரீம் சண்டிகாயை நம:
ஓம் ஹ்ரீம் ஹேமவத்யை நம:
ஓம் ஹ்ரீம் தேவ்யை நம:
ஓம் ஹ்ரீம் மதுகமலாயை நம:
ஓம் ஹ்ரீம் ச்யாமாயை நம:
ஓம் ஹ்ரீம் த்ரைலோக்ய ஸமயோகின்யை நம:
ஓம் ஹ்ரீம் பரதேவதாயை நம:
ஓம் ஹ்ரீம் ஜகன்மோஹின்யை
நம: (110)
ஓம் ஹ்ரீம் அத்ரிஸுதாயை நம:
ஓம் ஹ்ரீம் இஷ்டார்தததாயை நம:
ஓம் ஹ்ரீம் தேவ முனீந்த்ர வந்தித
பதாயை நம:
ஓம் ஹ்ரீம் பார்வத்யை நம:
ஓம் ஹ்ரீம் வரப்ரதாயை நம:
ஓம் ஹ்ரீம் தரா தரேந்த்ர கன்யகாயை நம:
ஓம் ஹ்ரீம் ஹரித்ரா ஸமன்விதாயை நம:
ஓம் ஹ்ரீம் ஸ்வயம்வரா பார்வத்யை
நம: (118)
மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்யமான்யா!
விதீந்த்ராதிகம் ருக்யா கணேஸாபிதானா
விதத்தாம் ஸ்ரியம் காபி கல்யாணமூர்த்தி!!
குழந்தை வடிவமானவரே!
தடைகளாகிய மலையை பிளக்கும் வலிமை கொண்டவரே!
பரமேஸ்வரன் என்னும் சிங்கத்தின் அபிமானத்திற்குரியவரே!
பிரம்மா, இந்திரன் போன்ற தேவர்களால் போற்றப்படுபவரே!
கணங்களின் அதிபதியான விநாயகரே! மங்களமூர்த்தியே! அருள் புரிவீராக.
- ஆதி சங்கரர் அருளிய கணேச ஸ்தோத்திரம். புஜங்க' சந்தத்தில் உள்ளது.
காலாப்ரகாந்தி கரளாங்கித கந்தராய
பூதேஸ்வராய புவனத்ரய காரணாய
ஹாலாஸ்யமத்யநிலயாய நமஸ்ஸிவாய
(மீனாட்சி ஸுந்தரேச்வர ஹாலாஸ்யநாத ஸ்தோத்திரம்)
பொதுப்பொருள்:
பக்தர்களுடைய மனக் கவலையைப் போக்கி அருள்பவரே, மீனாட்சி சுந்தரேஸ்வரா, நமஸ்காரம். பிரம்மாதி தேவர்களுக்கெல்லாம் மேற்பட்டவரே, பிரளயகால மேகம் போன்ற அருட்திரட்சி கொண்டவரே, காலகூட விஷத்தை அருந்தியதன் அடையாளமாக கழுத்தை உடையவரே, பிர மதகணங்களுக்கு ஈச்வரரானவரே, மூவுலகங்களையும் படைத்தவரே, ஹாலாஸ்ய ஷேத்திரம் எனப்படும் மதுரையம்பதியில் வசிப்பவரே, மீனாட்சி சுந்த ரேஸ்வரா, நமஸ்காரம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்