search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "slogans"

    • அலங்காநல்லூர்-பாலமேட்டில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    அலங்காநல்லூர்

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் தி.மு.க. அரசின் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயர்வை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நகர் செயலாளர் அழகுராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் கல்லணை ரவிச்சந்திரன், பேரூராட்சி கவுன்சிலர் நாட்டாமை சுந்தர், துணை செயலாளர் சம்பத், பாசறை மாவட்ட இணை செயலாளர் உமேஷ் சந்தர், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அரசு வழக்கறிஞர் ராஜ்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதேபோன்று பாலமேடு பேரூர் அ.தி.மு.க. சார்பில் நகரச் செயலாளர் குமார் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. பேரூராட்சி துணை சேர்மன் ராமராஜ், ராஜவேல் பாண்டியன், சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாலமேடு பஸ் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் பணி புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.

    புதுச்சேரி:

    உள்ளாட்சி ஊழியர்க ளுக்கு அரசே நேரடியாக ஊதியம் வழங்க ஏதுவாக கமிட்டி அமைக்கவும், நிலு வையில் உள்ள ஊதியத்தை வழங்கவும் வலியுறுத்தி, காரைக்காலை அடுத்த திருநள்ளாறு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள், நேற்று பணி புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஆர்ப்பாட்டத்தில், உள்ளாட்சி ஊழியர்களுக்கு அரசே நேரடியாக ஊதியம், ஓய்வூதியம் வழங்க ஏதுவாக கமிட்டி அமைக்கப்படும் என, முதல்- அமைச்சர் அளித்த வாக்குறுதியை உடனே நிறைவேற்ற வேண்டும்.

    நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனே வழங்கவேண்டும். பொதுவான பணிநிலை அரசாணைப்படி உள்ளா ட்சி அமைப்புகளில் பணி புரியும் அனைத்து பிரிவு ஊழியர்களுக்கும் ஒருமுறை நிகழ்வாக பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. முடிவில் சகாயராஜ் நன்றி கூறினார்.

    • விழிப்புணர்வு பேரணி நடைபெற்று சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
    • மாணவர்கள் பங்கேற்று முக்கிய வீதிகளின் வழியாக கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.

    சீர்காழி:

    சீர்காழி சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியும், ரோட்டரி கிளப் ஆப் சீர்காழி டெம்பிள் டவுன், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் இணைந்து பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாவதை எதிர்த்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.சங்கத் தலைவர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.

    சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜாஜி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    முகாம் அலுவலர் முரளிதரன், டெம்பிள் டவுன் ரோட்டரி சங்கத்தினுடைய முன்னாள் தலைவர்கள், மற்றும் முன்னாள் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், என். எஸ்.எஸ் மாணவர்கள் பங்கேற்று முக்கிய வீதிகளின் வழியாக கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர்.

    முன்னதாக பொருளாளர் வினோத் வரவேற்றார்.நிறைவில் செயலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.

    • அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த வேண்டும்.
    • மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்க வேண்டும்.

    மன்னார்குடி:

    தேர்தல் நேரத்தில் கொடுத்தபடி தி.மு.க. அரசு அனைத்து வாக்குறுதிகளையும் உடனடியாக நிறைவேற்ற வேண்டும், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியர்களுக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்த வேண்டும், மாணவ- மாணவிகளுக்கு கல்வி கடனை அரசே ஏற்க வேண்டும், மகளிர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்க வேண்டும், குஜராத் மாநிலம் போல் தமிழகத்திலும் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும், கூட்டுறவு சங்கத்தில் விவசாயிகள் வாங்கிய நகைக்கடன்களை அரசே ஏற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பா.ஜ.க. சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

    அதன்படி திருவாரூர் மாவட்ட பா.ஜ.க. சார்பில் மன்னார்குடி தேரடியில் மாவட்டத் தலைவர் ச. பாஸ்கர் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. நகரத் தலைவர் ஆர். ரகுராமன் வரவேற்றார்.

    மாவட்ட பொது செயலாளர்கள் வி.கே. செல்வம், சி. செந்தில் அரசன், எஸ். ராஜேந்திரன், ஓ.பி.சி. அணி மாவட்ட தலைவர் பால பாஸ்கர், சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் கமாலுதீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சதாசிவம், அரசு தொடர்பு பிரிவு மாவட்ட தலைவர் டாக்டர் வி. பாலகிருஷ்ணன், வெளிநாடு, வெளி மாநில தமிழர் நலப் பிரிவு தலைவர் போல்ட் ராஜகோபால், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் விஜயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக திருவாரூர் மாவட்ட பார்வையாளர் பேட்டை பி. சிவா கலந்து கொண்டு பேசினார்.

    போராட்டத்தின் போது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாநில செயற்குழு உறுப்பினர்கள் எம். ராகவன், சி.எஸ். கண்ணன், பட்டியல் அணி மாநில துணைத்தலைவர் கோ. உதயகுமார், வர்த்தக பிரிவு மாநில செயலாளர் சிவ. காமராஜ், விவசாய அணி மாநில செயலாளர் கோவி. சந்துரு, ஓ.பி.சி. அணி மாநில செயற்குழு உறுப்பினர் டி.ஆர். துரையரசு, ஐ.டி. பிரிவு மாநில செயலாளர் எல்.எஸ்.பாலா ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

    இந்தப் போராட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கே. ரஜினி கலைமணி, சி. ரெங்கதாஸ், கே.டி. ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
    • பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    மதுரை

    மதுரை அண்ணா பஸ் நிலையம் திருவள்ளுவர் சிலை அருகில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. 'தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க பொதுச்செயலாளர் ஜெயராஜ ராஜேஸ்வரனுக்கு உள்நோக்கத்துடன் வழங்கப்பட்ட பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

    இதில் மாநிலத்தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச்செயலாளர் லட்சுமிநாராயணன், மாவட்டத் தலைவர் நடராஜன், செயலாளர் சுந்தன், தமிழ்நாடு வணிகவரிப்பணியாளர் சங்க முன்னாள் மாநிலத்தலைவர் கோட்டைராசு உள்பட பலர் பங்கேற்றனர்.

    ×