search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "skating"

    • குழந்தைகளை திறமையானவர்களாக வளர்க்க விரும்புகிறார்கள்.
    • பள்ளிகளில் பாடத்திட்டத்துடன் பயிற்றுவிக்கப்படுகிறது.

    ஒவ்வொரு பெற்றோரும் மற்ற குழந்தைகளை விட தங்கள் குழந்தைகளை திறமையானவர்களாக வளர்க்க விரும்புகிறார்கள். படிப்பு மட்டுமின்றி நீச்சல், கராத்தே, பரதநாட்டியம், விளையாட்டு உள்ளிட்ட பிற தனித்திறன்களையும் தங்கள் குழந்தைகள் வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பதில் கூடுதல் ஆர்வம் காட்டுகிறார்கள். அது சார்ந்த பயிற்சி வகுப்புகளில் சிறு வயதிலேயே சேர்த்துவிடவும் செய்கிறார்கள். ஆனால் ஒரு சில பயிற்சிகளை குறிப்பிட்ட வயதில் மேற்கொள்வதுதான் அவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு நல்லது. எந்த வயதில் எந்த பயிற்சியை தொடங்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.

    ஸ்கேட்டிங், சிலம்பம், கால்பந்து

    3 முதல் 5 வயதுக்குள் ஸ்கேட்டிங், சிலம்பம், கால்பந்து பயிற்சி பெற தொடங்கலாம். இந்த வயதுகளில்தான் குழந்தைகள் ஓடவும், குதிக்கவும், கால்பந்து அல்லது வேறு எந்த பந்தையும் வீசி எறிந்து விளையாடுவதற்கான சமநிலையை வளர்த்துக் கொள்ளவும் முடியும். மேலும் இந்த வயதுகளில்தான் அவர்களின் பார்வை வளர்ச்சி அடையும் நிலையில் இருக்கும். கடுமையான காயங்களுக்கு கால்பந்து பெயர் பெற்றது. கால்களில் சுளுக்கு, எலும்பு முறிவு போன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். எதிர்காலத்தில் கால்பந்து வீரராக விரும்பினால் காயங்கள் விஷயத்தில் விழிப்புடன் இருக்க வேண்டும்.

     நீச்சல்

    4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் நீச்சல் பயிற்சியை தொடங்கலாம் என்று அமெரிக்க குழந்தைகள் நல மருத்துவ பயிற்சி நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. அந்த வயதுதான் நீச்சலுக்குப் பொருத்தமான உடல் வளர்ச்சி கொண்டதாக கருதப்படுகிறது. இருப்பினும் 1 முதல் 4 வயதுக்குட்பட்ட குழந்தைகள் நீரில் மூழ்கும் அபாயத்தை தடுப்பதற்கு நீச்சல் பயிற்சி உதவும் என்று சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    கராத்தே

    பெரும்பாலான குழந்தைகள் தற்காப்புக் கலை பயிற்சிகளை 3 வயதில் பழகத் தொடங்குகிறார்கள். இருப்பினும் குழந்தைகளின் உடல் திறன் மற்றும் பள்ளிகளைப் பொறுத்து மாறுபடுகிறது. சில பள்ளிகளில் பாடத்திட்டத்துடன் பயிற்றுவிக்கப்படுகிறது. சிறுவயதிலேயே பயிற்சியைத் தொடங்குவது தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், மற்றவர்களுடன் பழகுவதற்கு தடையாக இருக்கும் கூச்சத்தை போக்கவும் உதவுகிறது. மேலும் உடல் சமநிலை, கேட்கும் திறன், அடிப்படை தற்காப்பு திறன், கை, கண்கள் ஒருங்கிணைப்பு போன்றவற்றை வளர்த்துக்கொள்ள உதவுகிறது.

     இசை

    4 முதல் 7 வயது, இசைக்கருவிகளை கையாள்வதற்கும், கற்றுக்கொள்ளத் தொடங்குவதற்கும் ஏற்றது. குழந்தைகளின் கைகளும், மனமும் இசையின் அடிப்படைகளைப் புரிந்து கொள்வதற்கு ஏதுவாகவும் இருக்கும்.

    பரத நாட்டியம்

    பெரும்பாலான குழந்தைகள் 5 முதல் 6 வயதில் பரத நாட்டியம் கற்கத் தொடங்குகிறார்கள். ஏனெனில் அந்த வயதுகளில் எலும்புகள் உருவாகிக்கொண்டுதான் இருக்கும். எலும்பு அமைப்பு முழு வலிமை அடைந்திருக்காது என்ற கருத்து நிலவுகிறது. பரத நாட்டிய நடன வடிவத்தில் கடினமான தோரணைகள் இருப்பதால் அதற்கேற்ப உடல்வாகு அமையும் வரை காத்திருப்பது நல்லது என்பது பரதநாட்டிய கலைஞர்களின் கருத்தாக இருக்கிறது.

    • அதிராம்பட்டினத்தில் இருந்து 15 கி.மீட்டர் தூரம் வரை நடைபெற்றது.
    • சேதுரோடு சாலை வழியாக மல்லிப்பட்டினத்தை சென்றடைந்தது.

    அதிராம்பட்டினம்:

    கடல்பசு தினத்தை முன்னிட்டு பான் செக்கர்ஸ் பப்ளிக் மற்றும் ஓம்கார் பவுண்டேசன் மற்றும் கிங்ஸ் ரோட்டரி சங்கம் இணைந்து நோபல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ் ரோலர் ஸ்கேட்டிங் உலக சாதனை நிகழ்ச்சி இன்று காலை அதிராம்பட்டினத்தில் நடைபெற்றது.

    இந்த ரோலர் ஸ்கேட்டிங் உலக சாதனை நிகழ்வை பட்டுக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு பிரித்திவிராஜ் சௌகான் தொடக்கி வைத்தார்.அதிராம்பட்டினத்தில் இருந்து தொடர்ந்து 15 கிலோமீட்டர் மேலாக நடைபெற்ற இந்த உலக சாதனை ரோலர் ஸ்கேட்டிங் நிகழ்வில் 7 மாணவர்கள், பள்ளியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள் நிர்வாகிகள் உள்ளிட்ட நூற்று கணக்கானோர் கலந்து கொண்டனர் .இந்த ஸ்கேட்டிங் அதிராம்பட்டினம் சேதுரோடு சாலை வழியாக மல்லிப்பட்டினத்தை சென்றடைந்தது.

    • 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • சுழற்சி அடிப்படையில் இந்த ஸ்கேட்டிங் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட ரோல்பால் சங்கம் சார்பில் புகையிலைக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் 24 மணி நேர தொடர் ஸ்கேட்டிங் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியை தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் சுகபுத்ரா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். ஒவ்வொரு மணி நேர சுழற்சி அடிப்படையில் இந்த ஸ்கேட்டிங் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், மகாராஜா ரெடிமேட்ஸ் உரிமையாளர் ஆசிப் அலி, தென்னிந்திய ரோல்பால் சங்க பொதுச்செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு ரோல்பால் சங்க துணை தலைவர் சரவணன், பொதுச்செயலாளர் கோவிந்தராஜ், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி துணை சேர்மன் பொறியாளர். முத்துக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    நிகழ்ச்சி ஏற்பாடுகளை தஞ்சாவூர் மாவட்ட ரோல்பால் சங்க செயலாளரும், சாய் ஜி ரோலர் ஸ்கேட்டிங் அகாடமி பயிற்றுனருமான மணிகண்டன் செய்திருந்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மூதாட்டிகள் ஸ்கேட்டிங் செய்வது போன்ற புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது.
    • ஆஷிஷ் என்பவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களில் வயதான பெண்கள் ஸ்கேட்டிங் செய்வது போல் உள்ளது.

    ஏ.ஐ. எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் வரையப்பட்ட புகைப்படங்கள் தான் சமீப காலமாக இணையத்தில் டிரெண்டிங் ஆகி வருகிறது. பில்கேட்ஸ், போப் ஆண்டவர், டிரம்ப் என பல்வேறு பிரபலங்கள் குறித்த ஏ.ஐ. படங்கள் ஏற்கனவே வைரலாகி இருந்தன.

    இந்நிலையில், மூதாட்டிகள் ஸ்கேட்டிங் செய்வது போன்ற புகைப்படங்கள் தற்போது இன்ஸ்டாகிராமில் பரவி வருகிறது. 'கிராண்ட்மாஸ் ஸ்கேட்டிங்' என்ற தலைப்புடன் ஆஷிஷ் என்பவர் பகிர்ந்துள்ள இந்த புகைப்படங்களில் வயதான பெண்கள் ஸ்கேட்டிங் செய்வது போல் உள்ளது. அந்த புகைப்படத்தில் சிலர் கேரள பெண்கள் போன்று சட்டை, வேட்டி அணிந்திருந்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவி லைக்ஸ்களை குவிக்கிறது.

    ×