search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Side Dish"

    • இஞ்சி வயிற்றில் தங்கியுள்ள கொழுப்பைக் கரைக்கும்.
    • இஞ்சி துவையல் சாப்பிட மலச்சிக்கல், மார்பு வலி தீரும்.

    தேவையான பொருட்கள்

    இஞ்சி - 250 கிராம்

    வெங்காயம் - 2

    பச்சை மிளகாய் - 7

    காய்ந்த மிளகாய் - 6

    புளி - 2 துண்டு

    வெல்லம் - 1 துண்டு

    துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி

    கொத்தமல்லி இலை - 1/2 கப்

    உப்பு - தேவையான அளவு

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    தாளிக்க

    உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்

    சீரகம் - 1/4 டீஸ்பூன்

    கடுகு - 1/4 டீஸ்பூன்

    காய்ந்த மிளகாய் - 1

    பெருங்காய தூள் - 1 சிட்டிகை

    கறிவேப்பில்லை - சிறிதளவு

    எண்ணெய் - 1 டீஸ்பூன்

    செய்முறை:

    * இஞ்சி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்

    * கடாயில் இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் , புளி துண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.

    * வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் தேங்காய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.

    * இதில் உப்பு சேர்த்து கிளறி, ஆறவிடவும்.

    * ஆறிய கலவையை, மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.

    * தாளிப்பு கரண்டியில், எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காய தூள் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து சட்னி மேல் ஊற்றவும்.

    * இப்போது சுவையான இஞ்சி சட்னி தயார்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கல்லீரல் கோளாறுகளுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.
    • இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்க செய்யும்.

    தேவையான பொருட்கள்:

    பீட்ரூட் - 1 கப் (துருவியது)

    கெட்டி தயிர் - 2 கப்

    பூண்டு - 2 பல்

    காய்ந்த புதினா இலைகள் - 1½ டேபிள் ஸ்பூன்

    ஆலிவ் எண்ணெய் - 1½ டேபிள் ஸ்பூன்

    உப்பு - தேவைக்கு

    செய்முறை:

    பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு அகன்ற கிண்ணத்தில் பூண்டு, ஒரு டேபிள் ஸ்பூன் காய்ந்த புதினா இலைகள், ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், பீட்ரூட் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.

    இதை 5 நிமிடங்களுக்கு அப்படியே மூடி வைக்கவும்.

    பின்னர் இந்தக் கலவையுடன் கெட்டி தயிர் சேர்த்து நன்றாகக் கலந்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.

    ஒரு மணி நேரம் கழித்து வெளியே எடுத்து, அதன் மேலே ஆலிவ் எண்ணெய் மற்றும் காய்ந்த புதினா இலைகள் தூவி பரிமாறவும்.

    சூப்பரான பீட்ரூட் டிப் ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • சைனீஸ் உணவுகளில் மிகவும் பிரபலமான ஒன்று டிராகன் சிக்கன்.
    • குழந்தைகளுக்கு இந்த சிக்கன் மிகவும் பிடிக்கும்.

    தேவையான பொருட்கள் :

    எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ

    இஞ்சி - சிறிய துண்டு

    பூண்டு - 10 பல்

    சில்லி ப்ளேக்ஸ் - 1 1/2 டீஸ்பூன்

    தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்

    சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்

    சர்க்கரை - 1/2 டீஸ்பூன்

    கொத்தமல்லி - 1 கையளவு

    வெங்காயம் - 1

    வெங்காயத் தாள் - சிறிதளவு

    வெஜிடேபிள் ஆயில் - தேவையான அளவு

    ஊற வைப்பதற்கு…

    இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்

    மிளகுத் தூள் - 1 1/2 டீஸ்பூன்

    முட்டை - 1 (வெள்ளைக்கரு மட்டும்)

    சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்

    செய்முறை

    இஞ்சி, பூண்டு, வெங்காயம், வெங்காயத்தாள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சற்று நீளமாக வெட்டி கொள்ளவும்.

    ஒரு கிண்ணத்தில் எலும்பில்லாத சிக்கனை போட்டு அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்றாக பிரட்டி, தனியாக 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    ஊறவைத்த சிக்கனை எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

    நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, சில்லி சாஸ் சேர்த்து கிளறி, தக்காளி சாஸ், சோயா சாஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து, கலவையை கொதிக்க விட வேண்டும்.

    கலவையானது கொதிக்க ஆரம்பித்ததும், தீயை மிதமான சூட்டில் வைத்து, அதில் பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.

    இப்போது அருமையான டிராகன் சிக்கன் ரெடி!!!

    இதன் மேல் கொத்தமல்லி மற்றும் வெங்காயத் தாள் தூவி அலங்கரித்து பரிமாறலாம்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த சட்னி இட்லி, தோசைக்கு சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
    • இந்த சட்னி 4-6 மணிநேரம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.

    தேவையான பொருட்கள்:

    துருவிய தேங்காய் - 1 கப்

    உளுத்தம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்

    வரமிளகாய் - 2

    புளி - 2 டீஸ்பூன்

    எண்ணெய், உப்பு - தேவைக்கு ஏற்ப

    தாளிக்க

    கடுகு - 1 டீஸ்பூன்

    கறிவேப்பிலை

    செய்முறை:

    * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

    * பின்பு அதில் துருவிய தேங்காய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.

    * தேங்காய் பொன்னிறமானதும், வரமிளகாய், புளி சேர்த்து 2 நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    * வறுத்த பொருட்கள் ஆறியதும் மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைக்க வேண்டும்.

    * கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறவும்.

    * இப்போது சுவையான தேங்காய் புளி சட்னி தயார்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • வாரத்தில் இருமுறை கோவக்காய் சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
    • கோவக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.

    தேவையான பொருட்கள்:

    கோவக்காய் - 500 கிராம்

    கடுகு - 2 தேக்கரண்டி

    சீரகம் - 2 தேக்கரண்டி

    வெந்தயம் - 2 தேக்கரண்டி

    புளி - ஒரு எலுமிச்சம்பழம் அளவு

    காய்ந்த மிளகாய் - 50 கிராம்

    பெருங்காயத்தூள் - ½ தேக்கரண்டி

    இஞ்சி - சிறிய துண்டு

    பூண்டு - 10 பல்

    நல்லெண்ணெய் - தேவையான அளவு

    கல் உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    கோவக்காயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.

    புளியை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் கலந்து ஊறவைக்கவும். அடுப்பில் அடிகனமான வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றாமல் வெந்தயம், சீரகம், கடுகு ஆகியவற்றை தனித்தனியாக மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுக்கவும்.

    பின்னர் அவற்றுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, உப்பு மற்றும் 2 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.

    அடுப்பில் அடிகனமான வாணலியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், நீளவாக்கில் நறுக்கிய கோவக்காய்களை போட்டு நன்றாக வதக்கியபின் இறக்கவும்.

    மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் அரைத்த மசாலா சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.

    பின்னர் பெருங்காயத்தூள் மற்றும் வதக்கிய கோவக்காய்களை சேர்த்துக் கிளறவும்.

    அதன் பிறகு ஊற வைத்த புளிக்கரைசலை அதில் ஊற்றவும் (புளிக்கு மாற்றாக எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்க்கலாம்).

    10 முதல் 15 நிமிடங்கள் வாணலியை மூடி வைத்து மிதமான தீயில் கோவக்காய்களை வேக வைக்கவும்.

    இந்தக் கலவை ஊறுகாய் பதத்துக்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

    இப்போது 'கோவக்காய் ஊறுகாய்' தயார்.

    இது ஆறியதும் கண்ணாடி ஜாடியில் போட்டு பயன்படுத்தவும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • முள்ளங்கியில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன.
    • முள்ளங்கி நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பயனளிக்கும்.

    தேவையான பொருட்கள்:

    முள்ளங்கி (பொடிதாக நறுக்கியது) - 2 கப்

    ஓமம் - ½ டீஸ்பூன்

    பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 2

    பெருங்காயப்பொடி - 2 சிட்டிகை

    எண்ணெய் - 1½ டேபிள் ஸ்பூன்

    செய்முறை:

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஓமத்தைப் போட்டு பொரிய வைக்கவும்.

    பின்பு அதில் பச்சை மிளகாய், பெருங்காயப்பொடி சேர்த்து வதக்கவும்.

    பின்னர் நறுக்கிய முள்ளங்கியை சேர்த்து நன்றாக வதக்கவும்.

    தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

    இப்போது முள்ளங்கியில் இருந்து சாறு வெளியேற ஆரம்பிக்கும்.

    அது வற்றும் வரை நன்றாக வதக்கவும்.

    முள்ளங்கி முழுவதுமாக வெந்தபின்பு அடுப்பிலிருந்து இறக்கவும்.

    சூப்பரான முள்ளங்கி சப்ஜி ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • கேரட்டை அதிகமாக சாப்பிட்டால் இரத்தக் கொழுப்பு குறையும்.
    • வேர்க்கடலையில் அதிகமான புரோட்டீன்கள் நிறைந்துள்ளது.

    தேவையான பொருட்கள் :

    வேர்க்கடலை - 1/4 கப்

    கேரட் துருவல் - ஒரு கப்

    காய்ந்த மிளகாய் - 6

    கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்

    உளுத்தம்பருப்பு - 1 ஸ்பூன்

    பெருங்காயத்தூள் - 1/4 ஸ்பூன்

    எண்ணெய் - 1 ஸ்பூன்

    கடுகு - சிறிதளவு

    கறிவேப்பிலை - சிறிதளவு

    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    வேர்க்கடலையை நன்கு வறுத்துக் கொள்ளுங்கள்.

    கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை போட்டு சிவக்க வறுத்துக் கொள்ளவும்.

    இந்த எண்ணெயில் கேரட்டை போட்டு நன்கு வதக்கி வைத்துக் கொள்ளவும்.

    மிக்சியில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, மிளகாய், வேர்க்கடலையை சேர்த்து அரைக்கவும்.

    இந்த கலவையுடன் பெருங்காயத்தூள், வதக்கிய கேரட், உப்பு சேர்த்து கெட்டியான துவையலாக அரைத்தெடுக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து சட்னி சேர்த்து கலந்து எடுத்து உங்களுக்கு பிடித்த காலை உணவுடன் வைத்து பரிமாறுங்க.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • நெத்திலி கருவாடு சாப்பிட மிகவும் ருசியாக இருக்கும்.
    • நெத்திலி கருவாடு வைத்து தொக்கு, ஊறுகாய், வறுவல் என வித்தியாசமாக சமைக்கலாம்.

    தேவையான பொருட்கள் :

    நெத்திலி கருவாடு - 100 கிராம்

    தேங்காய் எண்ணெய் - 50 மில்லி

    மிளகாய் தூள் - 1 ஸ்பூன்

    மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன்

    கறிவேப்பிலை - சிறிதளவு

    உப்பு - சிறிதளவு

    செய்முறை :

    நெத்திலி கருவாடை வெந்நீரில் 5 நிமிடங்களுக்கு ஊற வையுங்கள். நன்கு ஊறிய பின்னர் அதில் இருக்கும் மண், தேவையற்ற உறுப்புகள், அதன் தலை ஆகியவற்றை நீக்கிவிடுங்கள்.

    அதன்பின் மண் இல்லாமல் சுத்தமாக கழுவங்கள். கழுவிய பிறகு அந்த கருவாட்டில் மிளகாய் தூள், கறிவேப்பிலை, மஞ்சள், உப்பு சேர்த்து நன்றாக பிரட்டி 10 நிமிடங்கள் அப்படியே வைத்து விடுங்கள்.

    கடாயை அடுப்பில்வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரட்டி வைத்த கருவாட்டை போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து 5 நிமிடங்கள் கழித்து பிரட்டி கொடுங்கள். இப்படி கருவாடு நன்கு வெந்து மொறு மொறுவென ஆகும் வரை வேக விடுங்கள்.

    கருவாடு ரெடி ஆனதும் சூடான சாதத்தில் சாம்பார் ஊற்றி இந்த நெத்திலி கருவாட்டை வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும்.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த கீரையை பச்சையாக உண்ணுதல் மிகவும் நல்லது.
    • வல்லாரைக் கீரை சமைக்கும்போது புளி சேர்த்தால், அதன் பலன் முழுமையாக கிடைக்காது.

    தேவையான பொருட்கள் :

    வல்லாரைக்கீரை - அரை கட்டு,

    தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று,

    இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்),

    தேங்காய் துருவல், - கால் கப்,

    பச்சை மிளகாய் - 5,

    கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,

    பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,

    எண்ணெய் - 2 டீஸ்பூன்,

    உப்பு - தேவைக்கேற்ப.

    செய்முறை:

    வல்லாரைக்கீரையை முள் நீக்கி விட்டு நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் வல்லாரைக்கீரை, நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய் துருவல் என ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.

    ஆறியபின் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.

    மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதில் சேர்க்கவும்.

    சத்தான சுவையான வல்லாரை சட்னி ரெடி.

    குறிப்பு: வல்லாரைக் கீரை மூளையை சுறுசுறுப்பாக்கும். நினைவாற்றலை வளர்க்கும். வல்லாரைக் கீரை சமைக்கும்போது புளி சேர்த்தால், அதன் பலன் முழுமையாக கிடைக்காது.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு மிகவும் பிடிக்கும்.
    • உருளைக்கிழங்கில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.

    தேவையான பொருட்கள்

    செட்டிநாடு மசாலா தூள் செய்ய

    உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

    சிவப்பு மிளகாய் - 5

    மிளகு - 1 தேக்கரண்டி

    உருளைக்கிழங்கு ப்ரை செய்ய

    பேபி உருளைக்கிழங்கு - கால் கிலோ

    வெங்காயம் - 2

    உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி

    கடலை பருப்பு - 1/2 தேக்கரண்டி

    சீரகம் - 1/4 தேக்கரண்டி

    கடுகு - 1/4 தேக்கரண்டி

    பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி

    கறிவேப்பிலை - சிறிதளவு

    உப்பு , எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    * பேபி உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைத்து கொள்ளவும்.

    * வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    * கடாயை அடுப்பில் வைத்து உளுத்தம் பருப்பு, சிவப்பு மிளகாய், மிளகு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்துகொள்ளவும். செட்டிநாடு மசாலா தூள் தயார்.

    * அடுத்து பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம், கடுகு, பெருங்காய தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    * வெங்காயம் வதங்கியதும், வேகவைத்த சிறிய உருளைக்கிழங்கு, உப்பு, செட்டிநாடு மசாலா தூள் சேர்த்து உருளைக்கிழங்கு மசாலா தூளுடன் நன்கு கலக்கும் வரை வதக்கவும்.

    * இப்போது சூப்பரான செட்டிநாடு உருளைக்கிழங்கு ப்ரை தயார்.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • இந்த சட்னி செய்ய 15 நிமிடங்களே போதுமானது.
    • இன்று இந்த சட்னி செய்முறையை பார்க்கலாம்.

    தேவையான பொருட்கள்

    வெங்காயம் - 1

    தக்காளி - 1

    பூண்டு - 4 பற்கள்

    காய்ந்த மிளகாய் -5

    இஞ்சி - சிறிய துண்டு

    கறிவேப்பிலை - 2 ஆர்க்கு

    புதினா - சிறிதளவு

    கொத்தமல்லி இலை - சிறிதளவு

    புளி - 1/2 தேக்கரண்டி

    துருவிய தேங்காய் - 1/4 கப்

    உப்பு - தேவைக்கேற்ப

    எண்ணெய் - 2 தேக்கரண்டி

    தாளிக்க

    எண்ணெய் - 1 தேக்கரண்டி

    கடுகு - 1/2 தேக்கரண்டி

    உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி

    செய்முறை

    வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.

    இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிகப்பு மிளகாயை போட்டு வறுத்த பின்னர் வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, புளி என்று ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் துருவிய தேங்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி பின் இறக்கி ஆற வைக்கவும்.

    அனைத்து நன்றாக ஆறிய பின்னர் மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, அரைத்த சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சூப்பரான கதம்ப சட்னி ரெடி.

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    • பன்னீரில் அதிகம் கால்சியம் இருப்பதால் பற்கள், எலும்புகளை வலுவாக்க உதவும்.
    • பன்னீரில் அதிகளவு ஊட்டச்சத்துக்களும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது.

    தேவையான பொருட்கள் :

    பன்னீர் - 200 கிராம்,

    பெரிய வெங்காயம் -3,

    தக்காளி - 4,

    இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்,

    மிளகாய்த் தூள் - 2 டேபிள் ஸ்பூன்,

    தனியா தூள் - 1 டீஸ்பூன்,

    கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்,

    வெண்ணெய் - 50 கிராம்,

    ஃப்ரெஷ் கிரீம் - 2 டேபிள் ஸ்பூன்

    காய்ந்த வெந்தயக் கீரை - 2 டீஸ்பூன்,

    உப்பு - தேவையான அளவு

    செய்முறை:

    பன்னீரை சிறு துண்டுளாக வெட்டிக்கொள்ளவும்.

    வெங்காயம், தக்காளியைத் தனித்தனியே அரைத்து கொள்ளவும்.

    வாணலியில் வெண்ணெயைப் போட்டு உருகியதும் அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, தீயை 'ஸிம்'மில் வைத்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.

    பின்னர், அதனுடன் மிளகாய்த் தூள், தனியா தூள், தக்காளி விழுது சேர்த்து, கொதிக்கவிடுங்கள்.

    கடைசியாக, பன்னீர் துண்டுகள், கரம் மசாலா, உப்பு, காய்ந்த வெந்தயக் கீரை சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்குங்கள்.

    ஃப்ரெஷ் கிரீமை மேலாக ஊற்றிப் பரிமாறுங்கள்.

    குழந்தைகள் விரும்பும் சத்தான சைடிஷ், இந்த பன்னீர் பட்டர் மசாலா!

    ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    ×