search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shrine"

    • லக்ஷ்மி நரசிம்மரும், கோதண்டராமர் சாமியும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி உள்ளனர்.
    • புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆக்ஞா கணபதி, ஸ்ரீராம பாதுகா சன்னதிகளின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

    நீடாமங்கலம்:

    திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா ஆலங்குடி அருகே உள்ள ஞானபுரி சித்திரக்கூட சேத்திரம் ஸ்ரீசங்கரஹர மங்கல மாருதி ஆஞ்சநேய சுவாமி கோவிலில் 33 அடி உயர விஸ்வரூபமாக அருள்பாலித்து வரும் ஆஞ்சனேயர் சுவாமிக்கு அருகே ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மரும், ஸ்ரீகோதண்டராமர் சுவாமியும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி உள்ளனர்.இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவில் வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ ஆக்ஞா கணபதி, ஸ்ரீராம பாதுகா சன்னதிகளின் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.

    ஸ்ரீ ஜகத்குரு சங்கராச்சாரியார் சமஸ்தானம் சகடபுரம் ஸ்ரீ வித்யா பீடம் ஸ்ரீவித்யா அபிநவ ஸ்ரீ ஸ்ரீ கிருஷ்ணா நந்த தீர்த்த சுவாமிகள் கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • பெரியநாச்சி அம்மன்கோவிலில் உள்ள செந்தில் ஆண்டவர் தனிசன்னதியில் வைகாசி விசாக விழா நடந்தது,
    • 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டது.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள குறிச்சி வழிவிடு பெரியநாச்சி அம்மன்கோவிலில் உள்ள செந்தில் ஆண்டவர் தனிசன்னதியில் வைகாசி விசாகவிழா நடந்தது. இதில் 16 வகையான அபிஷேகம் செய்யப்பட்டது. சிறப்பு தீபாராதனை, அன்னதானமும் மாலையில் கோவிலில் உள்ள காசிவிஸ்வநாதர்-காசிநந்திக்கு பிரதோஷ வழிபாடு, பூஜைகள் நடந்தன.

    ஏராளமான பக்தர்கள் கங்கை நீரால் அபிஷேகம் செய்து வழிபட்டனர். இதேபோல் தாயமங்கலம் ரோட்டில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோவிலிலும், இடைக்காட்டூர் பாலமுருகன், வைகைஆற்றுகரையில் உள்ள சிருங்கேரி சங்கரமடத்திலும் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

    ×