search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shock"

    • பவுன்ராஜ் ஏரிக்கரைக்கு சென்று அங்கிருந்த வேப்பமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்
    • பவுன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கடலூர்:

    பண்ருட்டி அடுத்த பண்டரக்கோட்டை தோப்பு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பவுன்ராஜ் (வயது 26), இன்று காலை மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் இருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டார். இதனையடுத்து ஏரிக்கரைக்கு சென்று அங்கிருந்த வேப்பமரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இதுகுறித்து புதுப்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்த புதுப்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மரத்தில் தற்கொலை செய்து கொண்ட பவுன்ராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தக்காளியின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
    • பொது மக்கள் மற்றும் இல்லத்தர சிகள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    கடலூர்:

    இந்தியா முழுவதும் தொடர் கனமழை காரண மாக தக்காளியின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. மேலும் பல இடங்களில் நகை பணம் கொள்ளை அடிப்பது போல் தற்போது விலை ஏற்றம் காரணமாக தக்காளியையும் கொள்ளை அடித்து விற்பனை செய்த சம்பவமும், அதன் மூலம் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கையும் நிகழ்ந்து உள்ளது. தமிழகத்தில் தக்காளியின் விலை 140 ரூபாய் வரை விற்பனையாகி வந்தது.

    இந்த நிலையில் தக்காளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில் தமிழக அரசு ரேஷன் கடை யின் மூலமாக 90 ரூபாய்க்கும் , அதன் பிறகு 60 ரூபாய்க்கும் தக்காளியை விற்பனை செய்து வந்தனர். இதற்கிடையில் கடலூர் மாவட்டத்தில் தக்காளியின் விலை 100 ரூபாய்க்கும், இஞ்சியின் விலை 300 ரூபா ய்க்கும், சின்ன வெங்காயம் 160- க்கும் விலை உயர்ந்து விற்பனையாகி வந்தன. இதனைத் தொடர்ந்து கடந்த 3 நாட்களுக்கு முன்பு தக்காளியின் விலை ரூ.75 முதல் ரூ.85-க்கும், இஞ்சியின் விலை ரூ.220-க்கும் விலை குறைந்து விற்பனையாகி வந்தன.

    இந்த நிலையில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநி லங்களில் தொடர் மழை இருந்து வரும் நிலையில் தமிழகத்திலும் தற்போது தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்றது. இதன் காரணமாக மீண்டும் தக்கா ளியின் விலை கடலூரில் 95 ரூபாய்க்கும், இஞ்சியின் விலை 235 ரூபாய்க்கும் விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக கிலோ ஒன்றுக்கு தக்காளியின் விலை 20 ரூபாயும், இஞ்சி யின் விலை 15 ரூபாயும் மீண்டும் விலை உயர்ந்த காரணத்தினால் பொது மக்கள் மற்றும் இல்லத்தர சிகள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

    மேலும் தங்கத்தின் விலை நாளுக்கு நாள் எவ்வ ளவு உயர்ந்து, எவ்வளவு குறைந்து உள்ளது என்ப தனை கண்காணிக்கும் வகையில் மக்களின் மன நிலை மாறிய நிலையில் தற்போது அத்தி யாவசிய பொருட்களான அன்றாட பயன்படுத்தக் கூடிய தக்காளி, இஞ்சி, சாம்பார் வெங்காயம் உள்ளிட்ட பல்வேறு காய்கறி விலை களை பொதுமக்கள் தினந்தோறும் கண்காணித்து அதன் அடிப்படையில் கிலோ கணக்கில் வாங்காமல் தேவைக்கு மிக குறைந்த அளவில் வாங்கி செல்வதை யும் காணமுடிகிறது.

    மேலும் சாதாரண தொழி லாளர்கள் வீடுகளில் இது போன்ற காய்கறிகள் பயன் படுத்தப்படுகிறதா? என்ற கேள்வியும் எழுப்பி உள்ளது. இதனை தொடர்ந்து காய்கறி கடை களில் வழக்கமான கூட்டம் இல்லாமல் குறைந்த அளவி லான பொதுமக்கள் கிலோ கணக்கில் வாங்காமல் எண்ணிக்கை கணக்கில் வாங்குவது காண முடிந்தது. மேலும் தமிழக அரசு இதற்கு தனி கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மகன்கள் அனைவருக்கும் திருமண மாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
    • உறவினர்கள் ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ராவத்த நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி (வயது 65) தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி (55). இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். மகன்கள் அனைவருக்கும் திருமண மாகி தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனால் சின்னதம்பியும், லட்சுமியும் தனியாக வசித்து வந்தனர். கடந்த சில நாட்களாக சின்னதம்பி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இதையடுத்து அவர் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார். இருப்பினும் உடல் சரியாகவில்லை. இந்த நிலையில் வீட்டில் இருந்த சின்னதம்பி கடந்த 13-ந் தேதி இறந்தார்.

    கணவரின் பிரிவை தாங்க முடியாமல் வீட்டில் லட்சுமி அழுது கொண்டே இருந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறி சமாதானப்படுத்தினர். இருப்பினும் அவர் மனவருத்தத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று லட்சுமி திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதைபார்த்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள், சின்னதம்பி உடலை அடக்கம் செய்த இடத்தின் அருகிலேயே லட்சுமியின் உடலையும் அடக்கம் செய்தனர். கணவர் இறந்த துக்கத்தில் மனைவி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • குடிநீர் இணைப்பு குழாய்களில் பித்தளையிலான கான்கள் பொருத்தப்பட்டிருந்து.
    • அனைவரது வீடுகளில் இருந்த கான்கள் காணாமல் போனது தெரியவந்தது.

    கடலூர்: 

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கோடங்குடி கிராமத்தில் புதிய காலனி, பழைய காலனியில் உளள 300-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கும் கடந்த 2015-ஆம் ஆண்டு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டது. இந்த குழாய்களின் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் இணைப்பு குழாய்களில் பித்தளையிலான கான்கள் பொருத்தப்பட்டிருந்து. இந்த இணைப்புகள் அனைத்தும் அவரவர் வீடுகளின் வாசலில் இருக்கும்.

    இந்நிலையில், இன்று காலையில் குடிநீர் விநியோகிக்கப்பட்டது. அப்போது அனைத்து வீடுகளில் இருந்த குழாய்களில் இருந்து நீர் வெளியானது. இதனால் குழாய் அருகில் சென்று பார்த்த போது குடிநீர் குழாய் இணைப்பில் போடப்பட்டிருந்த பித்தளை கானை காணவில்லை. இதனை அக்கம் பக்க வீட்டில் இருந்தவர்களிடம் கூறும் போது, அனைவரது வீடுகளில் இருந்த கான்கள் காணாமல் போனது தெரியவந்தது. குடிநீர் குழாயில் இருந்த பித்தளை கான்களை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நேற்று இரவு திருடிச் சென்றுள்ளனர். இதனையடுத்து கோடங்குடி கிராம மக்கள் மாரியம்மன் கோவில் அருகில் ஒன்று கூடி இது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் ஒன்றை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர்.
    • மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே கரிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி அருள் (வயது27) இவருடைய மனைவி அமுல் (23) . இவர்களுக்கு 3 வயதில் ஒரு ஆண் குழந்தையும் ஒன்றை வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். நேற்று மதியம் அருள்வேலைக்கு சென்று குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார் குடிபோதையில் இருந்த அருள் அவரது மனைவி அமலுக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மணமுடைந்த அமுல் தனது சேலையை எடுத்து மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைப் பார்த்த அவரது கணவர் அருள் அதிர்ச்சி அடைந்து தனது உறவினர்களிடம் கூறியுள்ளார்.

    இச்சம்பவம் பற்றி தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செட்டிகுளத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அமுலின் உறவினர்கள் கொடுத்த புகாரின் பேரில் மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பாட்டிலின் உள்ளே தினசரி காலண்டர் காகிதம் பீரில் மிதந்தது.
    • அதிர்ச்சி அடைந்த அவர்கள் பார் ஊழியர்களிடம் சென்று கேட்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி-கடலூர் எல்லை பகுதியான முள்ளோடையில் தனியார் மதுபான பார் உள்ளது.

    இங்கு மதுபிரியர்களுக்கு சலுகை அளிக்கும் வகையில் 2 பீர் வாங்கினால் ஒன்று இலவசம் என்று அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. இதையறிந்த கிருமாம்பாக்கத்தை சேர்ந்த கூலி தொழிலாளிகள் 2 பேர் பீர் குடிக்க சென்றனர்.

    அவர்கள் பணம் கொடுத்து 2 பீர் பாட்டில்கள் வாங்கினர். அவர்களுக்கு சலுகையாக மேலும் ஒரு பீர் பாட்டில் வழங்கப்பட்டது.

    பின்னர் அவர்கள் 2 பீர் பாட்டில்களை திறந்து குடித்தனர். அதன் பின் சலுகையில் வாங்கிய 3-வது பீரை குடிப்பதற்காக பாட்டிலை கையில் எடுத்தனர். அப்போது பாட்டிலின் உள்ளே தினசரி காலண்டர் காகிதம் பீரில் மிதந்தது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் பார் ஊழியர்களிடம் சென்று கேட்டனர். ஆனால் அவர்கள் சரியான பதில் தெரிவிக்காமல் இதனை வெளியே சொல்லக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கிருமாம்பாக்கம் போலீசாரிடம் அவர்கள் புகார் தெரிவித்தனர். பீர் பாட்டி லில் காகிதம் கிடந்த வீடியோ சமூக வலைதளத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.

    • அத்தியாவசிய தேவையான குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
    • குடிநீர் வீணாகி வருவதால் அடிப்படை தேவையை பொதுமக்கள் எப்படி சமாளிப்பார்கள்?

    கடலூர்:

    கடலூர் மாநகராட்சிக்குட்பட்டு 45 வார்டுகள் உள்ளன. இங்கு பொது மக்களுக்கு கேப்பர் மலை மற்றும் திருவந்திபுரம் மலையிலிருந்து ராட்சத குழாய் மூலம் குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் சேமித்து அதன் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கடலூர் முதுநகர் சிவானந்தபுரம் மெயின் ரோட்டில் குடிநீர் குழாய் உடைந்து சாலையில் குடிநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் மூலம் கடலூர் - சிதம்பரம் சாலையில் குளம் போல் குடிநீர் தேங்கி நின்றது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் குடிநீரில் சென்றனர். மேலும் அந்த பகுதியில் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.\

    இது மட்டும் இன்றி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக 104 டிகிரி வெயில் அளவு பதிவான நிலையில் கடும் வெப்பம் காரணமாக அனைத்து தரப்பு மக்களும் பல இன்னல்களுக்கு ஆளாகியுள்ள நிலையில் அத்தியாவசிய தேவையான குடிநீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். கடலூர் மாநகராட்சி சார்பில் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளிக்க வாகனங்கள் மூலமாக இலவசமாக குடிநீர் வழங்கி வந்தாலும், இதுபோன்ற குழாய் உடைப்பு காரணமாக குடிநீர் வீணாகி வருவதால் அடிப்படை தேவையை பொதுமக்கள் எப்படி சமாளிப்பார்கள்? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். ஆகையால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குடிநீர் குழாயை சரி செய்து பெருக்கெடுத்து சாலையில் வீணாக ஓடும் குடிநீரை நிறுத்துவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    காரைக்காலில் ரூ.16 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் கேபிள் திருடியவர் கைது செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    காரைக்கால் அருகே திருநள்ளாறு பத்தக்குடி கீழத்தெருவைச்சேர்ந்தவர் நெடுஞ்செழியன். இவர், தனியார் செல்போன் டவர் கெம்பெனியில் எலக்ட்ரிக்கல் டெக்னிசி யனாக பணிபுரிந்து வரு கிறார். சம்பவத்தன்று காரைக்கால் பாரதியார் வீதியில் உள்ள செல்போன் டவரில் சில வேலைகளை நண்பர் குருநாதன் என்பவரோடு செய்து கொண்டிருந்தார். அப்போது 5ஜீஅலை கற்றைக்கான காப்பர் கேபிள் அறுந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடந்தார். அந்த கேபிளை யாரோ மர்ம நபர்கள் அறுத்து திருடி சென்றதை அவர் உறுதி செய்தார். அதன் மதிப்பு சுமார் ரூ.16 ஆயிரம் இருக்கும்.

    இது குறித்து, நெடுஞ்செ ழியன் மேல் அதிகாரிக்கு தகவல் கொடுத்தார். தொடர்ந்து, நெடுஞ்செழியன் காரைக் கால் பஸ் நிலையம் அருகே நண்பரோடு நடந்து சென்ற போது, சந்தேகத்திற்கு இடமாக மூட்டை ஒன்றோடு சென்ற வாலிபர் ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அப்போது, மூட்டையில், திருடப்பட்ட செல்போன் டவர் கேபிள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, நண்பர்க ளோடு சேர்ந்த மர்ம நபரை பிடித்து, காரைக் கால் நகர போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரனையில், மயிலாடு துறை மாவட்டம் தரங்கம் பாடி மடப்புரம் காந்தி ரோட்டைச்சேர்ந்த மூர்த்தி (வயது32) என்பது தெரிய வந்தது. பின்னர், போலீசார் அவரை கைது செய்து, செல்போன் டவர் கேபிளை பறிமுதல் செய்தனர். இவர், ஏற்கெனவே, காரைக்கால் மாதா கோவில் வீதியில் உள்ள அதே தனியார் செல்போன் டவரில் பேட்ரிகளை திருடி கைது செய்யப்பட்டவர் என்பது குறிபிடத்தக்கது.

    • கழிவு நீர் கால்வாயில் இரு வழிகள் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் அடைப்புகள் சரி செய்யப்பட்டு வந்தது.
    • பொதுமக்கள் மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அங்கிருந்து அலறிடித்து ஓடினார்கள்.

    கடலூர்:

    கடலூரில் பாரதி சாலை உள்ளது. இந்த சாலை பிரதான சாலையாக உள்ளதால் 24 மணி நேரமும் வாகன போக்குவரத்தும் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து வருகிறது. மேலும் இந்த சாலையில் போலீஸ் நிலைய, உணவகம், மருத்துவமனை, வணிக வளாகங்கள், மாநகராட்சி அலுவலகம் இயங்கி வருவதால் ஆயிரக்க ணக்கான பொதுமக்கள் தங்கள் தேவைகளுக்காக இந்த சாலையில் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் சாலையின் இரு புறமும் பொது கழிவுநீர் கால்வாய் உள்ளது. இந்த கழிவுநீர் கால்வாயில் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதால் இங்கு இயங்கி வரும் பெட்ரோல் பங்க் அருகில் இந்த கழிவு நீர் கால்வாயில் இரு வழிகள் ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் அடைப்புகள் சரி செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று காலையில் கழிவுநீர் கால்வாயில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது. இதனை தொடர்ந்து சிறிது நேரத்தில் தீயின் வேகம் அதிகரித்து கொழுந்துவிட்டு பல அடி உயரத்திற்கு தீ பிழம்பாக காட்சியளித்தது.

    இதனை பார்த்த பொதுமக்கள் மற்றும் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் அங்கிருந்து அலறிடித்து ஓடினார்கள். இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீப்பிழம்பாக எரிந்து கொண்டிருந்த தீயை போராடி அணைத்தனர். இதனைத் தொடர்ந்து சில நிமிடங்களில் மீண்டும் எரிய தொடங்கியது. இதனைப் பார்த்த தீயணைப்பு வீரர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு இருந்ததை அகற்றி, அதன் பிறகு தீயை அணைத்தனர். இதனால் அப்பகுதி முழுவதும் புகை மண்ட லமாக காட்சியளித்தது. கால்வாயில் எப்படி தீ எரிய தொடங்கியது என தீயணைப்பு வீரர்கள் மற்றும் பொது மக்கள் ஆச்சரி யத்துடன், பதற்றத்துடன் பார்த்தனர்.

    இதில் கழிவுநீர் கால்வாய் சரியான முறையில் அடைப்புகளை அகற்றாத தால் ஒரு விதமான வாய்வு ஏற்பட்டு அதன் மூலம் தீ ஏற்பட்டிருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரித்து வருகின்ற னர். இந்த நிலையில் கடலூர் பிரதான கிழக்கு கடற்கரை சாலையான பாரதி சாலையில் பெட்ரோல் பங்க் அருகே திடீரென்று கால்வாயில் தீ விபத்து ஏற்பட்டு தீ பிழம்பாக மாறிய சம்ப வத்தால் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.இது போன்ற சம்பவங்கள் வருங்காலங்க ளில் ஏற்படாத வகையில் சம்பந்தப்பட்ட துறை அதி காரிகள் உரிய முறையில் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • பீரோல் உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • திருட்டு சம்பவங்கள் குறித்து திருவோணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள செல்வநாதபுரம் கிராமத்தில் வசித்து வருபவர் கூலி விவசாயி செல்வராஜ் (வயது 45). இவர் மற்றும் குடும்பத்தினர் நேற்று வயலுக்குச் சென்று விவசாய பணி வேலை முடித்துவிட்டு மாலை வீடு திரும்பினர்.

    அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோதுபீரோவில் இருந்த இரண்டரை பவுன் நகை மற்றும் 25 ஆயிரம் பணம் திருடப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் இதே போல் நேற்று மதியம் திருவோணம் மேல மேட்டுப்பட்டியை சேர்ந்த விவசாயி சதாசிவம் வீட்டில் பீரோல் உடைக்கப்பட்டு வெள்ளி கொலுசு திருடப்பட்டு இருந்ததை கண்ட அதிர்ச்சி அடைந்தனர்.

    இரு திருட்டு சம்பவங்கள் குறித்து திருவோணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருவோணம் பகுதிகளில் பட்ட பகலில் நடந்த இரண்டு திருட்டு சம்பவம் பொதுமக்கள் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.

    • பீரோ உடைந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    பாபநாசம்:

    பாபநாசம் மேல ரஸ்தா மெயின் ரோட்டில் வசித்து வரும் மணிகண்டன் (வயது 34), வெளிநாடு சென்று வந்தவர், இவர் தனது வீட்டை பூட்டிவிட்டு வங்காரம்பேட்டையில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு சென்று இருந்தார்.

    பின்னர் அவர் வீட்டிற்கு வந்த பொழுது பின் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த சுமார் 9 பவுன் தங்க நகைகள் திருடப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து மணிகண்டன் பாபநாசம் போலீசில் புகார் அளித்தார்.

    உடன் சம்பவ இடத்திற்கு பாபநாசம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி, போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குமார் ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டு வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

    மேலும் தஞ்சையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டது. கைரேகை நிபுணர் கார்த்திக் கைரேகைகளை கைப்பற்றி சோதனையில் ஈடுபட்டார்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இறந்த நிலையில் தண்ணீரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை காந்தி பூங்கா அருகே உள்ள கழிவு நீர்கால்வாயில் இன்று காலை துப்புரவு தொழிலாளர்கள் பணியில் ஈடுப்பட்டனர்.

    அப்போது பிறந்து சிலமணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று இறந்த நிலையில் தண்ணீரில் மிதப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அவர்கள் இது குறித்து பட்டுக்கோட்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பட்டுக்கோட்டை டவுன் கிராமநிர்வாக அதிகாரி ஜெகதீசன் பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் இந்த குழந்தையின் தாய் தந்தை யார் என்றும், பிரசவம் பார்த்த மருத்துவர் மற்றும் மருத்துவமனை பற்றிய விபரங்களை காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

    ×